இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 28, 2008

அல்-உம்மா பாட்ஷா மகள் திருமணம்

பாட்ஷாவின் மகள் முபக்தீராபானுவுக்கும், பொள்ளாச்சி- கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஜபருல்லாவின் மகன் ஜாகிர்உசேனுக்கும் திருமணம் நடந்தது. நேற்று இத்திருமணம் போத்தனூர் ரோடு பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, நேற்று காலை கோவை சிறையிலிருந்து பாஷாவும், அவரது மகன் சித்திக் அலியும் போலீஸ் பாதுகாப்புடன், உக்கடம்-பிலால் நகர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து போத்தனூர் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மணமக்களை வாழ்த்தினர். இத்திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். மகள் திரு மணத்திற்காக பாட்ஷாவுக்கு வழங்கப்பட்ட நான்கு நாள் பரோலில், மூன்று நாட்கள் நேற்றுடன் முடிந்தது.

No comments: