இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

December 18, 2010

குவைத் சிறையில் சிக்கி சீரழியும் தமிழர்கள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க குவைத் தமுமுக வலியுறுத்தல்:

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் தமிழர்கள் அங்கு போலி விசா மூலம் வந்தவர் என்று கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவ்வாறு ஆண்டுக் கணக்கில் சிறையில் வாடும் தமிழர்களை காவலர்கள் சித்ரவதை செய்கின்றனர். இவர் களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குவைத் தமுமுக வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து அரேபியர்களின் வீடுகளில் வேலை பார்ப்பதற்காக டிரைவர்கள், தோட்டத் தொழிலாளர்கள், சமையல்காரர் கள், வீட்டுபணிப் பெண் கள் என பல்வேறு வேலைகளுக்கு தமிழர்கள் குவைத், துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்கின்றனர்.


இவர்கள் அங்கு நிம்மதியாக வேலை பார்க்க முடிவதில்லை. பல லட்சம் கடன் வாங்கி வெளிநாட்டில் வேலைக்கு வரும் இவர்கள் இன்னும் சில வருடங்களில் கடனை அடைத்து வீடு வாங்கி, மகள் திருமணம், மகன் கல்வி என செட்டிலாகி விடலாம் என கனவுகளில் இருக்கும் போதே வேலையை விட்டு துரத்தப்படுகின்றனர்.


வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் ஏஜென்ட்களால் டூரிஸ்ட்விசாக்களில் அனுப்பப்படுவதால் சம்பந்தப் பட்டக் அரசுகளால் கைது செய்யப்பட்டு சிறையில் வாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதுதவிர வேலைக்கு சேர்ந்த இடத்தில் முதலாளியின் கொடுமை தாங்க முடியாமல் வெளியே ஓடி வரும் தொழிலாளர்கள் மீது அவர்கள் போலீசில் புகார் கொடுக்கின்றனர். இதில் உடனே நடவடிக்கை எடுக்கும் போலீசார் அவர்களை சிறையில் அடைத்து விடுகின்றனர். இதுபோல் சம்பளம் போதா மல் ஒரு முதலாளியிடமிருந்து இன்னொரு முதலாளியிடம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் சிறையிலடைக்கப்படுகின்றனர்.


பெரும்பாலான வழக்குகள் பொய் வழக்குகள் ஆகும். தமிழர்கள் மட்டுமல்லாது, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சிறையில் வாடி வருகின்றனர். இந்திய சிறைகளில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகளை குடும்பத்தினர் பார்த்து செல்லும் வாய்ப்பு இருப்பதால் அவர்கள் ஓரளவு மனஆறுதல் அடையும் வாய்ப்பு உள்ளது.


ஆனால் வெளிநாட்டில் அபாண்ட பழிசுமத்தி சிறையிலடைக்கப்படுபவர்கள் அனா தையாக, ஆதரவற்றவர்களாக, யாரும் உதவி செய்ய முடியாதவர்களாக திண்டாடி வருகின்றனர். தமுமுக, பிரன்ட்லைனர் உள்ளிட்ட அமைப்புகள் உதவி செய்தாலும் முழுமையாக உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.


தமிழகத்தில் அண்ணா பிறந்தநாள், காந்திஜெயந்தி ஆகிய நாட்களில் நன்னடத் தை காரணங்களுக்காக கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். குவைத் நாட்டில் பிப்.25,26 தேதிகளில் சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது.


அதையொட்டி பல ஆண்டுகள் சிறையில் வாடும் தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்வியின்மையால் பலர் போலி விசாக்களை ஏஜன்ட்கள் கொடுப்பதை அறியாமல் இங்கு வந்து அல்லல்படுகின்றனர்.


எனவே விசாவை பரிசோதனை செய்ய தனி அலுவலகத்தை தமிழகத் தின் முக்கிய நகரங்களில் அமைக்க வேண்டும். வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் அமைத்த அரசு அதனை முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தள்ளாத வயதில் தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு கேரளாவில் இருப்பது போன்று தனிநல வாரியம் அமைக்க வேண்டும்.


தஞ்சை, காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் தான் அதிகமானோர் குவைத், துபாய் சிறைகளில் வருடக் கணக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக வின் குவைத் மண்டல நிர்வாகி பீர்மரைக்காயர் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

November 02, 2010

தீண்டாமைச் சுவர் என்ற பெயரில் அரசியல்

திருச்சி மாநகராட்சி 40வது வார்டு எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள பழைய சக்திவேல் காலனியில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுவர் என்று கூறப்படும் வீட்டிற்கு உரிமையாளரான நல்லமுஹம்மதுவின் தந்தை 1964ம் ஆண்டு இந்த காலனியைச் சுற்றி பாதுகாப்பு கருதி சுமார் 10 அடி உயர சுவர் எழுப்பி இருக்கிறார். அந்த காலனியில் அங்கு வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே சாலையும் அமைத்துள்ளார்கள். சாலை முடியும் இடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் சுமார் 20 அடி நீளத்தில் ஆஸ்பெடாஸ் வீட்டைக் கட்டி தனது தங்கைக்கு வழங்கி உள்ளார்.

தற்பொழுது இந்த காலனிக்குப் பின்புறம் முத்து மாரியம்மன் கோவில் தெரு என்ற பெயரில் வீடுகள் உருவாகி அங்கு அனைத்து சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகள், முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தலித் மக்கள் பழைய சக்திவேல் காலனியில் வரக்கூடாது என வேண்டுமென்றே தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது என பொய்க் கதை புனைந்து 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் நவம்பர் 9ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் சுவரை இடிக்காவிட்டால் நாங்களே இடிப்போம் என கூறியுள்ளனர் வலது கம்யூனிஸ்ட்கள்.

இந்நிலையில் 28ம் தேதி சர்ச்சைக்குள்ளான பகுதியைப் பார்வையிட வந்த இடது கம்யூனிஸ்ட் எம்.பி திரு.லிங்கம் அவர்கள், இந்த சுவர் தீண்டாமை சுவர் அல்ல எனவும், மனிதாபிமானத்துடன் பேசி இப்பிரச்சனையை இருவரும் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 29ம் தேதி சர்ச்சைக்குள்ளான பகுதியை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் எஸ். முஹம்மது ஜெய்னுலாபுதீன் பார்வையிட்டு அப்பகுதி மக்களை சந்தித்தார். அவருடன் தமுமுக, மமக மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தார்கள். அங்கு வந்த பத்திரிக்கை நிருபர்களிடம் மாநில அமைப்பு செயலாளர், ‘‘இது ஒருபோதும் தீண்டாமைச் சுவர் ஆகாது. எனவே அரசியல் ஆதாயத்துக்காக விளம்பரம் தேட முயற்சிக்கும் கட்சிகள் மீது அரசும் காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
‘‘மெயின் ரோட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள பழைய சக்திவேல் காலனியில் உள்ள ஆஸ்பெடாஸ் வீட்டையும் இடித்து விட்டால் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டு மனைகளுக்கு விலை உயரும் அதனால் தாங்கள் அதிகம் பயன் அடையலாம் என நினைக்கும் சில நபர்களுக்காக ஒரு தூய்மையான நேர்மையான அரசியல் கட்சி வாதாடுவது உகந்தது அல்ல என்பதை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சொல்லிக் கொள்கிறோம்’’ என்றும் அவர் மேலும் கூறினார்.

October 29, 2010

தமுமுக குவைத் மண்டலத்தின்

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் தமுமுக குவைத் மண்டலத்தின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..,

தமிழகத்தில் எதிர்வரும் 2011 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக்கட்சிகளும் தயாராகி வரும் தருணத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மிகுந்த உற்சாகத்தோடு தமுமுக மற்றும் மமகவின் நிர்வாக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. முறையாக அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் மூலம் நடைபெற்று வரும் தேர்தல்; தமிழகத்தில் இருக்கும் பிற அரசியல் கட்சிகளுக்கும், இந்தியா முழுதும் இருக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் ஒரு முன் மாதிரி என்றால் அது மிகையல்ல. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல்கள் மூலம் கிளை அமைப்புகள் புனரமைக்கப்பட்டு, மழையில் நனைந்த தாவரங்களைப் போன்ற புத்துணர்வுடன் தொண்டர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.
அதையொட்டிய நிகழ்வாக தமுமுகவின் குவைத் மண்டலத்திலும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு குவைத்தின் முக்கிய பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்குகளும், மார்க்க பிரச்சாரங்களும், சமூக விழிப்புணர்வு சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கிறது இன்ஷாஅல்லாஹ். அந்தந்த வார நிகழ்ச்சிகளை அந்தந்த கிளை நிர்வாகிகளிடமும், வெளியிடப்படும் பிரசுரங்களிலும், வலைப்பதிவிலும் அறிந்து கொள்ளலாம். சமூக எழுச்சிக்காகவும், மறுமை வெற்றிக்காகவும் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அனைவரும் தவறாது கலந்து கொண்டு விழிப்புணர்வு பெறும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், குவைத்தில் கிளைகள் இல்லாத பகுதிகளிலும், கேம்ப்களிலும், மாவட்ட, ஜமாஅத் வாரியாகவும் தமுமுகவுடன் தங்களை இணைத்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். மேலும், தமுமுக தாயகத்தில் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளின் வீடியோ தொகுப்புகளும், மக்கள் உரிமை வாரஇதழும் தேவைப்படுவோரும் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்கள்:
97493869 - 99851036 - 97428835 - 99369743 - 99178911

மின்னஞ்சல்:
tmmkkwt@gmail.com

வலைப்பதிவு:
www.q8tmmk.blogspot.com

October 28, 2010

பேசியதில் குற்றம் எதுவும் இல்லை : அறிக்கை



காஷ்மீர் குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜ.க.வை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.

அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி தலைமையில் காஷ்மீருக்கு சென்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் நானும் இடம் பெற்று, காஷ்மீரின் நிலைமையை நேரில் கண்டறிந்தேன்.

`இந்திய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்' என்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் எங்களிடம் வெளிப்படையாக பேசினர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, சோனியாகாந்தி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நடத்திய 2 கூட்டங்களில், காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பதையும், அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.

காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவுமில்லை. யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மவுனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன். அவருக்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம். ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து, பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
.

பாபர் மஸ்ஜித் - காஷ்மீர்






October 19, 2010

திருச்சி தமுமுகவிற்கு இரத்ததான விருது


தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு தமிழ் நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டு பாட்டு சங்கம் நடத்திய இரத்ததான விழாவில் அதிக முறை இரத்ததானம் செய்த தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது. .அதில் திருச்சி மாவட்டத்தில் அதிக முறை இரத்ததானம் செய்ததற்காக திருச்சி தமுமுகவிற்கு விருது வழங்க பட்டது.

July 21, 2010

திருச்சி 28&வது வார்டுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம்


தமிழகத்தில் காலியாக இருக்கும் உள்ளாட்சி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருச்சி 28&வது வார்டுக்கான தேர்தலில் திமுகவும், மனிதநேய மக்கள் கட்சியும் நேரடியாக மோதுகின்றன. அங்கு மனிதநேய மக்கள் கட்சியினர் வெற்றிபெறும் நிலையில் உள்ளதால், ஆளும் திமுக வினரால் அதை ஜீரணிக்க முடியவில்லை.அமைச்சர் நேரு களத்துக்கு நேரடியாக வரக்கூடிய அளவுக்கு நிலை ஏற்பட்டுவிட்டதால், திமுகவினர் வழக்கம்போல் குறுக்கு வழியில் செயல்படுகின்றனர். ஜூலை 18 அன்று இரவு சுமார் 200 திமுகவினர், ரவுடிகளின் துணையோடு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து வேட்டி, புடவை, பணம் என வினியோகிக்க முயன்றபோது, அப்பகுதி பொது மக்கள் திமுகவினரை ஓட, ஓட விரட்டியுள்ளனர். இதனால் கொதித்துப்போன திமுகவினர், அப்பகுதி முஸ்லிம்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

அப்பகுதி ஜமாத்தினரே அரண்டு போகும் அளவுக்கு திமுகவினரின் செயல்பாடுகள் இருந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனிடையே திருச்சி ஏர்போர்ட் பகுதி மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி பகுருதீன் அவர்கள் மீது திமுகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி, அவரது காரை உடைத்துள்ளனர். படுகாயமடைந்த பகுருதீனை அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அங்கு பிரச்சார களத்தில் இருந்த மாநில த.மு.மு.க துணைச் செயலாளர் கோவை.சாதிக் தலைமையில் த.மு.மு.க, மற்றும் ம.ம.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். ம.ம.கவின் திருச்சி மாவட்ட செயலாளர் பஷீரின் வீட்டுக் கதவையும் திமுகவினர் தட்டி பெண்களை மிரட்டியுள்ளனர். திமுகவினர் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை செய்த செய்தி பரவியதால் திருச்சி பதற்றமானது. பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. உடனடியாக உதவி ஆணையாளரிடம் சென்று மமகவின் சார்பில் முறையிடப்பட்டது. அதை பட்டும்படாமல் கேட்டுக்கொண்டவர், எந்த பதிலும் சொல்லாமல், அமைச்சர் நேருவுக்கு விசுவாசம் காட்டும் விதமாக, விடைபெற்று சென்றிருக்கிறார். பகுருதீனை தாக்கிய திமுகவினர் கைது செய்யப்படவில்லை.

ஆனால் மமக மாவட்ட செயலாளர் பஷீர், த.மு.மு.க மாவட்ட செயலாளர் ஃபைஸ், தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர் இப்ராஹிம் ஷா உள்ளிட்ட 75 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நிலைமையை நேரில் அறிய மமக பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது திருச்சிக்கு சென்றார். தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்த திமுகவினரை அடையாளம் காட்டியும் கூட அவர்கள் மீது நடவடிக்கை இல்லை.

நல்ல தேர்தல்! நல்ல ஜனநாயகம்! நல்ல போலீஸ்!

July 20, 2010

ராசிபுரத்தில் மமக வேட்பாளர் கடத்தல்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 1-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ம.ம.க சார்பில் மஹாலெட்சுமி என்ற பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அவருக்கு அமோக ஆதரவு பெருகியது. இங்கு இவருக்கும், திமுக வேட்பாளருக்கும் இடையேதான் போட்டியாக இருந்தது.

இந்நிலையில் பயந்துபோன திமுகவினர், கோழைத்தனமாக மஹா லெட்சுமியையும், அவரது கணவரையும் இரவோடு இரவாக கடத்தி சென்றனர். இச்செய்தியறிந்த நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட ம.ம.க நிர்வாகிகள் ராசிபுரம் சென்று மறியலில் ஈடுபட்டனர்.

மஹாலெட்சுமியையும், அவரது கணவரையும் கொலை மிரட்டல் விட்ட திமுகவினர், கடைசி நேரத்தில் அவர்களை மிரட்டி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, யாருக்கும் தெரியாமல் கூட்டி சென்று வேட்பு மனுவை வாபஸ் வாங்க வைத்திருக்கின்றனர்.தேர்தல் களத்தை நேரடியாகவும், நேர்மையாகவும் சந்திக்க திராணியற்ற திமுக கோழைகள் குறுக்கு வழியில் கோழைத்தனமாக செயல்படுகின்றனர். இதுதான் நெஞ்சுக்கு நீதியோ... www.tmmk.in

28-வது வார்டு இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் 22-ந்தேதி ஓட்டுப்பதிவு

திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு கவுன்சிலராக இருந்த சுப்பையா (அ.தி.மு.க.) இறந்ததை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இன்று மாலை 5மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதைத் தொடர்ந்து அங்கு இறுதிகட்ட பிரசாரம் களை கட்டி உள்ளது. தி.மு.க.வை எதிர்த்து பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. போட்டியிட வில்லை. தேமுதிகவும் போட்டியிடவில்லை. எனவே இடைத்தேர்தல் விறுவிறுப்பு இருக்காது என கூறப்பட்டது.

ஆனால் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக த.மு.மு.கவினரும் தீவிரமாக ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வதால் கடைசி கட்ட பிரசாரம் களை கட்டியது.

நாளை மறுநாள் (22-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக அரியமங்களம் மாநகராட்சி காமராஜர் நடுநிலைப்பள்ளியிலும், எஸ்.ஐ.டி. பள்ளியிலும் 8 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆண்களுக்கு 3 வாக்குச்சாவடிகளும் பெண்களுக்கு 3 வாக்குச்சாவடியும், 2 பொது வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 7095 வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள். காலை 7மணி முதல் மாலை 5 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் வைக்கப் படுகிறது. 24-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இடைத்தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி த.மு.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவின் போது வன்முறை நடக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே வாக்குச்சாவடிகளில் முக்கிய பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாள் தலைமையில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்படுகிறார்கள். ஓட்டுப்பதிவு ரகசிய கேமராவில் பதிவு செய்யப்படுகிறது.

July 17, 2010

திருச்சி 28வது வார்டு இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டி

திருச்சி மாநகராட்சி 28வது வார்டுக்கு எதிர் வரும் 22ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக மீராமைதீன் (45) அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி 28வது வார்டு பகுதியில் காமராஜர் நகரில் வகித்து வரும் மீரா மைதீன் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார்.

குடிநீர் பிரட்சினையை தீர்ப்பது, இலவச பட்டா வழங்குவது முதலியவற்றை தனது பிராதான தேர்தல் வாக்குறுதிகளா களத்தில் மீரா மைதீன் இறங்கியுள்ளார்.


May 09, 2010

சபீருல்லா ஐஏஎஸ் தேர்வில் வெற்றி

சேலம்,​​ மே 7: சேலத்​தைச் சேர்ந்த ஆசி​ரி​யர் தம்​ப​தி​ய​ரின் மகன் சபீ​ருல்லா ​(30) ​ ஐஏ​எஸ் தேர்​வில் வெற்றி பெற்​றுள்​ளார்.​
÷ஐ​ஏ​எஸ் தேர்வு ​(2009) முடி​வு​கள் வியா​ழக்​கி​ழமை வெளி​யி​டப்​பட்​டன.​ இதில் நாடு முழு​வ​தும் ​ 875 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​னர்.​ இதில் தமி​ழ​கத்​தில் இருந்து 127 பேர் தேர்வு பெற்​றுள்​ள​னர்.​ சேலம் அம்​மாப்​பேட்டை வித்யா நக​ரைச் சேர்ந்​த​வர் ஐ.கரா​மத்​துல்லா ​(67).​ கன்​னங்​கு​றிச்சி உயர்​நி​லைப் பள்​ளி​யில் ஆசி​ரி​ய​ரா​கப் பணி​யாற்றி ஓய்வு பெற்​ற​வர்.​ இவ​ரது மனைவி மெஹ​தாப் பேகம் ​(65).​ சேலம் சாரதா கல்​லூ​ரி​யில் வேதி​யி​யல் துறைத் தலை​வ​ராக பணி​யாற்​றி​ய​வர்.​
÷இ​வர்​க​ளுக்கு அமெ​ரிக்​கா​வில் மென்​பொ​ருள் பொறி​யா​ள​ரா​கப் பணி​யாற்​றும் இப்​ரா​ஹிம் ​(32),​ பெத்​த​நா​யக்​கன்​பா​ளை​யத்​தில் ஆசி​ரி​யை​யா​கப் பணி​யாற்​றும் ஆயிஷா ​(33),​ பெங்​க​ளூர் ஐ.பி.எம்.​ நிறு​வ​னத்​தில் பணி​யாற்​றும் முக​மது ஒய்.சபீ​ருல்லா ​(29) ஆகிய மூன்று குழந்​தை​கள் உள்​ள​னர்.​
÷ச​பீ​ருல்லா சேலம் செயின்ட் ஜான்ஸ் பள்​ளி​யில் 1998-ல் பள்​ளிப் படிப்பை முடித்​து​விட்டு கோவை பிஎஸ்ஜி கல்​லூ​ரி​யில் பி.இ.​ ​(எலெக்ட்​ரி​கல் மற்​றும் எலெக்ட்​ரா​னிக்ஸ்)​ படித்​துள்​ளார்.​ படிப்பை முடித்த பிறகு டாடா கன்​சல்​டன்ஸி நிறு​வ​னத்​தில் வேலைக்கு சேர்ந்​தார்.​
÷ஆ​னால் அதை ராஜி​நாமா செய்​து​விட்டு எம்.பி.ஏ.​ படிப்​ப​தற்​காக கர்​நா​ட​கத்​தின் மணிப்​பால் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் சேர்ந்​துள்​ளார்.​ எம்.பி.ஏ.​ முடித்த இவர் இப்​போது பெங்​க​ளூ​ரு​வில் ஐ.பி.எம்.​ கணினி நிறு​வ​னத்​தில் நிதி ஆலோ​ச​க​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​
÷வே​லைக்​குச் சென்று விட்டு வந்து பகுதி நேர​மா​கப் படித்து முதல் முயற்​சி​யி​லேயே ஐ.ஏ.எஸ்.​ தேர்​வில் நாட்​டில் 55-வது இடம் பிடித்து சபீ​ருல்லா வெற்றி பெற்​றுள்​ளார்.​ சபீ​ருல்​லா​வுக்கு ஆசியா யாஷ்​மின் ​(25) என்​ப​வ​ரு​டன் திரு​ம​ணம் நடை​பெற்​றுள்​ளது.​ பி.இ.,​​ எம்.எஸ்.​ படித்​துள்ள இவர் தனி​யார் கல்​லூ​ரி​யில் விரி​வு​ரை​யா​ள​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​
÷இது குறித்து சபீ​ருல்​லா​வின் தந்தை கரா​மத்​துல்லா கூறும்​போது,​​ டாடா நிறு​வ​னத்​தில் நல்ல வேலை​யில் இருந்த சபீ​ருல்லா மேலும் படிக்க வேண்​டும் என்ற ஆவ​லில் ராஜி​நாமா செய்​து​விட்டு வந்​து​விட்​டார்.​ பின்​னர் எம்.பி.ஏ.​ படித்து ஐ.பி.எம்.​ நிறு​வ​னத்​தில் பணி​யில் சேர்ந்​தார்.​
÷தி​ன​மும் வேலை விட்டு வந்​த​தும் அதி​காலை 2 மணி வரை கண்​வி​ழித்து படித்து வந்​தார்.​ இப்​போது பெங்​க​ளூ​ரு​வில் இருக்​கும் அவர்,​​ ஐ.ஏ.எஸ்.​ தேர்​வில் வெற்றி பெற்​றது குறித்து மகிழ்ச்சி தெரி​வித்​துள்​ளார்.​ அவ​ரது வெற்​றிக்கு பெற்​றோ​ரா​கிய நாங்​க​ளும்,​​ அவ​ரது மனை​வி​யின் ஒத்​து​ழைப்​புமே கார​ணம் என்று தெரி​வித்​துள்ள அவர்,​​ மக்​கள் சேவை புரி​வதே இனி தலை​யாய கடமை என்​றார் அவர்.​

May 02, 2010

எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்?

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரம்பலூர் நிஸ்வான் மஹாலில் 24.10.2010 அன்று என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்னும் தலைப்பில் சமூகத்தில் குவிந்து கிடக்கும் அறிவு மற்றும் மதிப்புகளை பரப்பும் விதமாக மாபெரும் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

மாவட்ட தலைவர் மீராமைதீன் தலைமை வகிக்க, மருத்துவர் தங்கராசு, டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் ஹக்கீம் மற்றும் அற்புதரோச் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெறியாளர்களாக இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் முனைவர் ஆபிதின் அவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர் காமரர்சு அவர்கள், மற்றும் அக்ரி ஆறுமுகம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

முன்னதாக லெப்பைகுடிக்காடு மாணவரணி செயலாளர் சபீர் அஹமது வரவேற்க்க, இறுதியாக மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது இலியாஸ் அலி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உட்பட 300-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட பொருளாளர் முஹம்மது இலியாஸ், மாவட்ட செயலாளர் தாஹிர்பாஷh மேலும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் ரசீதுஅகமது, மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் தௌ.முஹம்மது ஜகரிய்யா ஆகியோர் உட்பட திரளாக பங்கேற்றனர். மற்றும் மாற்று மத சகோதரர்களும் திரளாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

April 26, 2010

உண்டு உறைவிடப்பள்ளி அமைக்க விருப்பமா?: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி: 'பள்ளி செல்லாக்குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப்பள்ளி அமைத்து செயல்பட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என திருச்சி கலெக்டர் சவுண்டையா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக 2010-2011ஆம் ஆண்டில் முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியாபுரம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, மணிகண்டம் ஆகிய ஒன்பது வட்டார வளமையங்களில் பள்ளி செல்லாக்குழந்தைகளுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களுடைய முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான தணிக்கை அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் அறிக்கை ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகம், மதுரை ரோடு, திருச்சி-8 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ.தேர்வுக்கு பயிற்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஆர்வமுடையோர் tmmk@tmmk.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

April 24, 2010

அல்லாஹ்வின் பெயரால் அணிதிரள்வோம்

வாழ்க்கை முழுவதும் போராடிய குனங்குடி ஹனிபா அவர்களுக்காக அல்லாஹ்வின் பெயரால் அணிதிரள்வோம் தலைநகர் சென்னையிலே..!


April 06, 2010

பாலிடெக்னிக் கல்லூரிகள் விவரம்: இணையதளத்தில் வெளியீடு

தமிழகத்தில் 383 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 22 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்; 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள். மீதமுள்ளவை தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள். பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர முடியும். எந்தக் கல்லூரியிலும் சேருவதற்கு முன், அக்கல்லூரியில் உள்ள வசதிகளை மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. ஒரு கல்லூரியில் சேருவதற்கு முன், மாணவர்கள் நேரடியாக அக்கல்லூரிக்கு சென்று அங்குள்ள வசதிகள் குறித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகள் பற்றிய விவரங்களை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தனது இணையதளத்தில் (
www.tndte.com) வெளியிட்டுள்ளது. இதில், கல்லூரியில் பெயர், முதல்வர் பெயர், விலாசம், தொலைபேசி எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கல்லூரி எவ்வளவு பரப்பளவில் அமைந்துள்ளது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெயர், அவர்களது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகிய விவரங்களும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் கல்லூரியில் இணையதள வசதி உள்ளதா, நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள் உள்ளன, விடுதி வசதி உள்ளதா, என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., வசதிகள் உள்ளனவா என்ற விவரங்களும் இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அக்கல்லூரியில் படித்த மாணவர்களில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, எத்தனை நிறுவனங்கள் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு வளாக நேர்காணலுக்கு வந்துள்ளன என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அக்கல்லூரியில் பாடப் பிரிவு வாரியாக தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதம்: தமிழக பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீத விவரமும், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் (
www.tndte.com) வெளியிடப் பட்டுள்ளன. இதில், எந்தெந்தக் கல்லூரியில் எந்தெந்த பாடப்பிரிவுகளில் எவ்வளவு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் அக்கல்லூரியில் பயிற்சி எவ்வாறு உள்ளது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். கடந்த 2007, 08, 09ம் ஆண்டுகளில் பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களில், ஒவ் வொரு கல்லூரியிலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரங்களும், 2009 - 10ம் கல்வியாண்டில், 2, 4, 6, 8வது செமஸ்டர் தேர்வுகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

March 25, 2010

காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்


காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம். காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.
இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” (நூல்: புகாரி 6243)
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும் இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றபோது. பெற்றோரும் சேர்ந்துகொண்டு தான் அதை பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும். செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

March 23, 2010

March 08, 2010

மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்: மதுகடைகள் மூடக்கோரி மறியல்; 300 பேர் கைது

தமிழகத்தில் மதுக்கடைகளை அரசே டாஸ்மாக் மூலம் நடத்துவதால் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் குடும்பங்கள் சீரழிகிறது. எனவே மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்து இருந்தது.

அதன்படி மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

திருச்சியிலும் மறியல் போராட்டம் நடந்தது. மத்திய பஸ் நிலையம் அருகே நடந்த இந்த பேராட்டத்துக்கு போராட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜவாகிருல்லா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பஷீர் அகமது, பொருளாளர் உபயதுல்லா, துணை செயலாளர்கள் நியாசின், முகமது, தி.மு.க. மாவட்ட தலைவர் அப்துல்ஹக்கீம், செயலாளர் பயஸ்அகமது மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் காஜாமைதீன், கமருதீன், அப்தலகாதர், அமீர்பாஷா, இம்தியாஸ் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் திரளான பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் மறியலுக்கு முயன்றபோத போலீசார் அவர்களை கைது செய்தனர். 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறியலை முன்னிட்டு மத்திய பஸ் நிலையத்தில் காலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர். துணை கமிஷனர் ராஜசேகரன், இன்ஸ்பெக்டர் டென்னிஸ் இளங்கோவன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்கு வரத்தும் மாற்றி விடப்பட்டது.

February 22, 2010

அதிக பயணிகள் செல்வதால் திருச்சி விமான நிலையம் இந்தியாவிலேயே முதலிடம்


திருச்சி விமான நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். முதலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இந்தியன் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் விமான சேவையை இயக்க தொடங்கின. தற்போது கிங்பிஷர், பாரமவுண்ட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா போன்ற விமான நிறுவனங்கள், விமான சேவையை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்தில் திருச்சி விமான நிலையம் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. பல விமானங்களை ரத்து செய்துள்ள நிலையிலும் திருச்சி விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் போக்கு வரத்தை பயணிகள் பொறுத்தவரை இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் 2008 வரை, சர்வதேச விமான பயணிகள் போக்குவரத்து 1 கோடியே 78 லட்சத்து 23 ஆயிரத்து 936 ஆக உள்ளது. உள்நாட்டு போக்குவரத்தில் 4 கோடியே 55 லட்சத்து 70 ஆயிரத்து 969 பயணிகள் சென்றனர். 2009-ம் ஆண்டு ஏப்ரல்-அக்டோபரில் சர்வதேச விமான பயணி களின் எண்ணிக்கை 1 கோடியே 90 லட்சத்து 3 ஆயிரத்து 688 ஆகும். இது 6.6. சதவீத வளர்ச்சியாகும்.

உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்தை பொறுத்தவரை 4 கோடியே 98 லட்சத்து 94 ஆயிரத்து 894 பேர் பயணம் செய்துள் ளனர். இது 9.5 சதவீத வளர்ச்சியாகும்.

இதில் திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2008 ஏப்ரல் -அக்டோபரில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 99 லட்சத்து 171 ஆகவும், உள்நாட்டு பயணிகள் 52 ஆயிரத்து 838 ஆகவும் உள்ளது. இதே போன்று 2009-ல், சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 232 ஆகவும், உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து 63 ஆயிரத்து 81 ஆகவும் உள்ளது. இது 55.7 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களிலேயே திருச்சி விமான நிலையம் தான் அதிகபட்ச வளர்ச்சியை பெற்றுள்ளது. இதே போல விமான போக்குவரத்தை பொறுத்த வரை 28.2 சதவீத வளர்ச்சியை திருச்சி பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே பயணிகள் போக்குவரத்தில் முதலிடம் பிடித்துள்ளது திருச்சிக்கும், திருச்சி பகுதி பயணிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

மேலும் அபரிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் திருச்சி விமான நிலையத்திற்கு, சர்வதேச அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று பயணிகள்-பொதுமக்களின் நீண்ட கால விருப்பமாகும்.

கோவையில இருந்து டெல்லிக்கு கூடுதலாக விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோவை-திருச்சி -டெல்லி என்று விமான சேவை தொடங்க வேண்டும் என்றும், நிறுத்தப்பட்ட சார்ஜா விமான சேவையையும் தொடர வேண்டும் என்று வர்த்தகர்கள், பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

February 01, 2010

ஆர்.எஸ்.எஸ்.சின் புது அவதார்

ஆர்.எஸ்.எஸ். எனும் ஆக்டோபஸ், அதைப் போன்று சுமார் 4 மடங்கு தன் கொடிய
கரங்களை நீட்டி இந்திய மக்கள் சமூகத்தைச் சீரழிக்க முயல்கிறது என்பதை அறிவோம். அண்மையில், ஓர் ஆய்வாளர் அதன் புதிய அவதாரத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

கணினித் துறையிலும் மென்பொருள் துறையிலும் இந்தியர்கள் பெரும் அளவில்
பங்கேற்று உலக அளவில் உயர்ந்து நிற்கிறார்கள் என்பது பெருமைப்படத் தக்க விசயம். அந்த பெருமைக்குச் சிறுமை தேடும் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டு உள்ளது என்பதை ஆய்வாளர் மீரா நந்தா அம்பலப்படுத்தியிருக்கிறார். கடவுள் சந்தை (The God Market) என்ற நூலில் இத்தகவலைத் தந்துள்ளார்.

மென்பொருள் பணியாளர்களின் மத்தியிலும், மனதிலும், இந்துமத வெறியை விதைத்துப் பரப்புவதற்காகப் புதிய கிளை ஒன்றினை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ளது. இக்கிளையின் பொறுப்பாளர்கள் இத்துறையில் இருக்கும்
பணியாளர்களுடன் அடிக்கடிச் சந்தித்துப் பேசும் நிகழ்ச்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். கீ போர்டையே நாள் முழுவதும் கட்டி அழுது கொண்டிருக்காமல்
வேறொன்றைக் கட்டி அழலாம் வாருங்கள் என்று பணியாளர்களைப் பக்தியின் பக்கம் இழுக்கிறார்கள். இதற்கு கர்மா முதலாளித்துவம் (Karma Capitalism) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இதன் முக்கிய சூத்திரதாரி, நம் பாபநாசம் பார்ப்பனர் ரவிசங்கரன். ஆம், சிறீ சிறீ ரவிசங்கர்தான். திருடிவிட்டு, உதை வாங்கி, வீட்டை விட்டு ஓடிப்போனஅதே பார்ப்பனர்தான். தொலைக்காட்சி கடவுள் மனிதன் என அவதாரம் எடுத்து வாழும் கலையைக் கற்றுக் கொடுக்கும் ஆளேதான். நாராயணமூர்த்திப் பார்ப்பனர் முதல் எல்லா முதலாளிகளும் 3 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டி வாழும் கலையைக் கற்று வருமாறு தன் அலுவலர்களை இவரிடம்தான் அனுப்புகிறார்கள். ரவிசங்கர்
செய்யும் பணி ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆள் பிடிக்கும் பணிதான்.

இந்த வகையில் ரவிசங்கரின் சீடர்கள் எண்ணிக்கை 20 மில்லிய-னாம். அதாவது 2 கோடியாம்! விஷம் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது, பார்த்தீர்களா! இந்த ரவிசங்கருக்கு 200 கோடி ரூபாய்க்கான சொத்து. இவருடைய ஆசிரமம் நூற்றுக்கணக்கான ஏக்கரில்! நிலம் உபயதாரர், பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலம்!

கடவுள் வியாபாரம்

19 ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் விளைவாக விவசாயத்தையும் கிராமங்களையும் விட்டுவிட்டுத் தொழிலாளர்களாக நகரங்களை நாடி வந்தவர்கள் கடவுளைச் சாகடித்துவிட்டார்கள். ஆம், மதம் தன் பிடிப்பை நழுவவிட்டு, கடவுளின் கோயிலுக்குச் செல்வோரின் தொகை படிப்படியாகக் குறைந்து, அற்றே போய்விட்டது. ஆனால், தெற்கு ஆசியாவின் நிலைமை நேர் மாறானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதிலும் இந்தியாவின் நிலைமை மிகவும் மோசம். இந்தியாவில் தற்போது 15
லட்சம் பள்ளிக் கூடங்கள் உள்ளன. 75 ஆயிரம் மருத்துவ மனைகள் உள்ளன. ஆனால்
25 லட்சம் கோயில்கள் உள்ளன.

மக்கள் நிறையப் பேர் சென்று பார்க்கும் இடமாக தாஜ்மகால் இருந்து வந்தது. இப்போது, திருப்பதி கோயிலுக்குப் போகும் மக்களின் எண்ணிக்கை 230 லட்சம். மலையில் இருக்கும் மற்றொரு கோயிலான வைஷ்ணவிதேவி கோயிலுக்குப் போகும் ஆள்களின் எண்ணிக்கை 172 லட்சம். கடந்த 5 ஆண்டுகளில் 30 விழுக்காடு மத நம்பிக்கை கூடி விட்டதாக ஓர் ஆய்வு 2007 இல் தெரிவித்தது. இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு நடத்திய ஆய்வு என்கிற காரணத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலாது என்றாலும் ஓரளவு உண்மை இருக்கத்தானே, செய்யும்!

இதற்கு என்ன காரணம்? அரசுகளின் மதப் பிரச்சாரம், மத நடவடிக்கைகள், மதச் சடங்குகள் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் மத ஆதரவு, அரசியலில் மதத்தைக் கலப்பது, மத அடிப்படையில் அரசியலை நடத்துவது போன்ற பல காரணங்கள். மதவெறிக் கட்சியான பா.ஜ.க. மட்டுமா இதற்குக் காரணம்? அல்ல, காங்கிரசுக் கட்சியும்தான் காரணம்.

அணைக்கட்டுகளும், தொழிற்சாலைகளும் தான் மக்களுக்கான கோயில்கள் என்றார் நேரு. அவரது கொள்கைகளைத் தூக்கி எறிந்தது போலவே, இதனையும் தூரத் தூக்கிப் போட்டுவிட்டனர் அவரது கட்சியினரும் அவரது குடும்பத்தினரும்!

ராஜஸ்தான் மாநிலத்தில், இந்து மதக் கோயில் பூசாரிகளுக்குப் பயிற்சி தரவும், கோயில்களைப் புதுப்பிக்கவும் ஆண்டுதோறும் 26 கோடி செலவிடப்படுகிறது. அரசு - கோயில் கூட்டுத் தொழில் இந்த மாநிலத்தில் கனஜோராக நடைபெற்று வருகிறது. யாகங்கள், ஜபதபங்கள் ஏராளம் நடத்தப்படுகின்றன. அரசுகளும் அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு நடத்துகின்றன. இவர்களின் கட்சி வளர வேண்டும். மக்கள் பாழாய்ப் போவதைப் பற்றி இவர்களுக்குக்கவலை இல்லை.

சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் போன்ற பெரும் கடவுள்களை வணங்கும் பழக்கம் குறைகிறதாம். சிறுசிறு தெய்வங்களையும், பெண் கடவுளச்சிகளையும் வணங்கும் பழக்கம் பெருகி வருகிறதாம். நாட்டார் வழிபாடு என்று சிலர் இங்கே கூறுவார்கள். சாலை ஓர சிறு தெய்வங்களைக் கண்டு நடுங்கி ஓடினேன் என்பார் வடலூர் ராமலிங்கர். இப்படிப்பட்ட பெண் கடவுளச்சிகளைத் தேடித் தேடிக் காட்டுவதற்கு ஒருவர், கும்பிட்டு வருவதற்கு ஒருவர் என இருவர் உண்டு, அண்ணா பெயரில் நடத்தப்படும் கட்சியில்! பிறகு ஏன், தெற்கு ஆசியா பின்நோக்கிப் போகாது?

மீண்டும் பேஷ்வா ராஜ்யமா?

பாரதீய ஜனதா கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்து எடுத்துள்ளார்-கள்.
எப்பொழுது தேர்தல் நடந்தது என்றெல்லாம் கேட்காதீர்கள். இது என்ன
தி.மு.கழகமா தேர்தல் நடத்துவதற்கு? எல்லாம் நியமனம்தான். நியமித்தது
ஆர்.எஸ்.எஸ். அல்ல, என்கிறார் கட்காரி. நம்புங்கள்.

இவரைப் பரிந்துரைத்தது அத்வானியாம். சரி. நியமித்தது யார் என்பதுதானே,
இங்கே உள்ள கேள்வியே! பரிந்துரைத்தவர் பெயரைச் சொல்லி விட்டுத்
தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். நெருப்புக் கோழிபோல தலையை மறைத்துக்
கொண்டு முழுவதையும் மறைத்துக் கொண்டது போல் பேசுகிறார். இவரின் உடம்பு
என்ன சிறியதா, நம் பார்வையில் படாமல் தப்பித்துக் கொள்ள?

சிபாரிசு செய்தவரைப் போலவே இவரும் பான்ட், சட்டை போடுபவராம். பழைய தலைவர்
களைப் போல பைஜாமா குர்தா போட மாட்டாராம். இதுவெல்லாமா செய்தி?

பழைய தலைவர் ராஜ்நாத் சிங் உதவியாளர் ஒருவரைப் பக்கத்தி-லேயே
வைத்திருப்பாராம். மிகமிக முக்கிய உதவியாளராம். இவர் பார்த்த மிகமிக
முக்கிய வேலை என்ன தெரியுமா? ஜோசியம் பார்த்துச் சொல்லு வதுதான்.
சிறுநீர் கழிக்கக் கூட சிதான்சு திரிவேதிதான் நேரம் பார்த்துக்
கூறவேண்டுமா? ஆம், சிதான்சு திரிவேதிதான் அந்த ஜோசியரின் பெயர். மூன்று
வேதம் படித்தவர். நான்காம் வேதம் அதர்வண வேதத்தையும் ஏன் படிக்கவில்லை?
படித்திருந்தால், மந்திர, தந்திரங்களும் அத்துபடியாயிருக்குமே!

மீண்டும் மராத்திப் பார்ப்பனர் தலைமைப் பொறுப்பில் வந்துள்ளார். பேஷ்வா
ராஜ்யம் அமைக்கும் முயற்சியா?

இடஒதுக்கீடு இல்லையாம்!

புதுடில்லியில் இருக்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 149
பேராசிரியர் பணியிடங்க ளுக்கான தெரிவு நடைபெறவேண்டும். இட ஒதுக்கீடு
தராமல் இந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று 30 பேர் மனு
கொடுத்துள்ளார்கள். இவர்கள் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். பல்கலைக்
கழக விளம்பரத்தில் இட ஒதுக்கீடு விகிதப்படி பேராசிரியர்கள்
நியமிக்கப்படுவார்கள் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டப்படி தந்து தீர வேண்டிய இட ஒதுக்கீட்டைத் தரலாம் என்று
பல்கலைக் கழகச் செயற்குழு (Executive Council) 2007 ஆம் ஆண்டிலேயே
தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. ஆனாலும் சிலர் எதிர்க்கிறார்கள். யார்
இந்தச் சிலர்? அந்தச் சிலர்தான்.

தரம் போய்விடுமாம். போய்விட்டால் பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள்இங்கு
படிக்க வரமாட்டார்களாம். மற்றைய பிள்ளைகள் படிக்க இடம் இல்லாது
போய்விடுமாம். என்னென்னவோ காக்கா- நரி கதை விட்டிருக்கிறார்கள்.
செயற்குழு உறுப்பினரும் நேரு பல்கலைக் கழக முன்னாள் மாணவருமான
பி.சாய்நாத் 30 பேர் முயற்சியை எதிர்க்-கிறார். இந்திய அரசமைப்புச்
சட்டத்திற்கு எதிர்ப்பாக எதையும் முடிவு செய்யமுடியாது என்று சுட்டிக்
காட்டியுள்ளார். 11.1.2010 இல் நடந்த செயற் குழுக் கூட்டத்தில்!

கல்வியாளர் குழு (Academic
Council) என்ற பெயரில் 3 விழுக்காடு இனத்தைச் சேர்ந்த 30 பேர் எதிர்க்க
முடியாது என்று பல பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

நேரு பல்கலைக் கழகம் முன்பு உலகின் சிறந்த 100 பல்கலைக் கழகங்களில்
ஒன்றாக இருந்தது. இப்போது அந்த இடம் பறிகொடுத்தாகிவிட்டது. இட ஒதுக்கீடு
இல்லாத நிலையில் நியமிக்கப்பட்ட கல்வியாளர்கள்தான் இருந்தனர்!
இருக்கின்றனர்! தரம்தான் காணோம்! இதற்கு யார் காரணம்?

3 விழுக்காடைப் பிரதிபலிக்கும் 30 பேர் கூறுவார்களா?


------------------ சு. அறிவுக்கரசு அவர்கள் 30-1-2010 “விடுதலை” யில்
எழுதிய கட்டுரை

January 31, 2010

முத்துப்பேட்டையில் வன்முறை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ளது பேட்டை.இந்த பகுதியைசேர்ந்தவர் பேட்டை சிவா(35). இவர் மாவட்ட பா.ஜனதா செயலாளராக உள்ளார்.

இவர் வீட்டில் இருந்து காரில் முத்துப்பேட்டைக்கு சென்றார். அப்போது இருட்டில் பதுங்கி இருந்த மர்ம கும்பல் ஒன்று அவரது கார்மீது கற்களைவீசியது.

இந்த சம்பவம் குறித்துபேட்டை சிவா முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சமரசம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் அங்கு இருபிரிவினர் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.இருபிரிவினரும் அடிதடி மோதலில் இறங்கினர்.

இந்த மோதல் தொடர்பாக பழையபஸ் நிலையம் அருகில்உள்ள ஒருகாய்கறி கடைக்கும் ஒரு மெக்கானிக் கடைக்கும் பைபாஸ் அருகே டூவிலர் ஒர்க்ஷாப்புக்கும் தீவைக்கப்பட்டது.

மோதலில் ஈடுபட்டவர்கள் பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டை வந்த அரசு பஸ்,மற்றும் மினிடோர் ஆட்டோ,ஆட்டோவை ஆகியவற்றைஅடித்து உடைத்தனர்.

மோதலில் நடராஜன் என்பவருக்கு மண்டை உடைக்கப்பட்டது. தங்கராஜிக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டது.அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து முத்துபேட்டையில் பதட்டம் ஏற்பட்டது. கடைகளுக்கு தீவைத்தல், பஸ் உடைப்பு போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக முத்துப்பேட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம் (42,), சாகுல் அமீது(28) திராஜீதீன் (32), சேக் தாவூது (20) வாசிம்கான்(17) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டையில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள் ளதால் அங்கு திருச்சி டி.ஐ.ஜி ராமசுப்பிரமணியன், தஞ்சை எஸ்.பி. செந்தில்வேலன், திருவாரூர் எஸ். பி. பிரவின் குமார் அவி நவ், அரியலூர் எஸ். பி. நஜ்மல்ஹோடா, ஆகியோர் தலைமையில் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் தொடர்பாக திருவாரூர் எஸ்.பி. பிரவின்குமார் அவிநவ் கூறியதாவது:-

முத்துப்பேட்டையில் நடந்த கலவரத்தில் உண்மையான குற்றவாளிகள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் அஞ்சவேண்டாம் என்றார்.

January 21, 2010

திருவாரூர் மாவட்ட மமக மாநாடு

வேலூர் கோட்டை மசூதியை மீட்க தடையை மீறி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் உள்பட 682 பேர் கைது



காவல் துறையின் தடையை மீறி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 682 பேர் கைது செய்யப்பட்டனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மசூதி மீட்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் திருமாளவன் பேசியது:

இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. கட்டுப்பாட்டை கடைபிடிப்பவர்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் வேலூர் கோட்டைக்குள் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும். வழிபாடு உரிமை ஜனநாயக உரிமை. அதனால் வேலூர் கோட்டையில் உள்ள மசூதி முஸ்லிம்கள் தொழுகைக்காக திறக்கப்பட வேண்டும். அது வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 80 பெண்கள் உள்பட 682 பேரை போலீஸôர் கைது செய்தனர். கைதான திருமாவளவன் உள்ளிட்ட 682 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

January 05, 2010

தொல்.திருமாவளவன் கவிதைகள் வெளியீட்டு விழா

நேரலை - சனவரி 05,

எழுச்சித்தமிழர தொல்.திருமாவளவன் கவிதைகள் வெளியீட்டு விழா சென்னையிலிருந்து இந்திய நேரம் மாலை 5:00 முதல் உங்கள் thiruma.netல் நேரடி ஒலிபரப்பு.

மாநகராட்சி மேயர்-கமிஷனரிடம் த.மு.மு.க. புகார்

திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் அப்துல் ஹக்கீம் திருச்சி மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் பால்சாமி ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சி 7-வது வார்டில் அரியமங்கலம் கோட்டத்துக்குட்பட்ட உக்கடை, ரகமத் பள்ளிவாசல் மற்றும் ஹலிபா பள்ளிவாசல் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.


இப்பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. பன்றிகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் உக்கடை, ஜோதி நகர், வடக்கு உக்கடை, மலையடிவாரம் ஆகிய பகுதிகளில் குழந்தைகளை கடித்துள்ளது.

ஏராளமான பன்றிகள் இப்பகுதியில் இருப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தற்போது பன்றி காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில் பன்றிகள் தொல்லையால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே 7-வது வார்டு பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பிடித்து அவற்றை வெளியூருக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பைஸ் அகமது, பொருளாளர் பெரோஸ்கான், துணை செயலாளர் இப்ராகிம்ஷா, கிளை செயலாளர் ஜஹா¢ங்கீர், தமீம் அன்சாரி, மாலிக், ஜமால் ஆகியோர் உடன் இருந்தனர்.

மனுவை பெற்று கொண்ட மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

January 04, 2010

தலித் வரலாற்று நூல் வரிசை வெளியீட்டு விழா

1. தலித் மக்களும் கல்வியும்,
2. எம்.சி.ராசா சிந்தனைகள்,
3. தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்
4. பஞ்சமி நில உரிமை மீட்பு ஆகிய நூல்களை எழுச்சித்தமிழர் வெளியிட்டார் அதனை முஸ்லீம் முன்னேற்றக்கழக தலைவர் ஜவாஹிருல்லா பெற்றுக் கொண்டார்.