இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

October 29, 2008

தமிழன் தொலைக்காட்சியில் தமுமுக நிகழ்ச்சிகள்


தமிழன் தொலைக்காட்சியில் பிளாக் அண்ட் ஒயிட் கம்யூனிகேஷன்ஸ் நிகழ்ச்சிகள்
திங்கள்: மார்க்க அரங்கம்
செவ்வாய்: மார்க்க அரங்கம்
புதன்: சமுதாய அரங்கம்
வியாழன்: வரலாற்று அரங்கம்
வெள்ளி: சென்ற வாரம்
இந்திய நேரம்: இரவு 10:30 முதல் 11:00 வரை
குவைத், சவுதி நேரம்: இரவு 8:00 முதல் 8:30 வரை
துபை, மஸ்கட் நேரம்: 9:00 முதல் 9:30 வரை
(குறிப்பு: நிகழ்ச்சிகள் இறுதிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது)

Channel Details : Tamilan channel
FREQUENCY: 3845 MHZ
SYMBOL RATE : 26043msps

POLORIZATION:Vertical

FEC : 3/4
Satellite: Insat 2E 83* east
(Asianet dish ) C band –Wide Beam

சேலம் மாவட்ட தமுமுக அழைக்கின்றது

மும்பையில் திருக்குர்ஆன் மாநாடு

October 23, 2008

திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம்..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்டம், ஏர்போர்ட் கிளை சார்பாக கடந்த 19-10-2008 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் ஒரிஸ்ஸாவில் கிருஸ்த்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், இஸ்லாமியர்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பாஸிஸ சக்திகளை கண்டித்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கண்டன உரையாற்றும் சகோ. புளியங்குடி சையது அலி (தலைமைக்கழக பேச்சாளர்)
கண்டன உரையாற்றும் சகோ. கோவை. சையது (தலைமைக்கழக பேச்சாளர்)

October 15, 2008

Notice _ Invitation


மன்னிப்பு கேட்டார் காதர் மைதீன்!

பாசிச ஏடான `துக்ளக்’ வார இதழுக்கு முஸ்லிம் லீக் தலைவரும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான கே.எம். காதர் மைதீன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். தமிழக முஸ்லிம்களின் மாபெரும் இயக்கமான தமுமுகவை தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஒப்பிட்டு, காழ்ப்புணர்ச் சியுடன் கூடிய காதர் மைதீனின் நேர்காணல் 27.8.08 தேதியிட்ட இதழில் வெளியானது.இது சமுதாயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை உண்டாக்கியது.பல தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.எனினும் தனது கருத்துக் களுக்கு காதர் மைதீன் விளக்கமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. எனவே தமுமுக சார்பில் வழக்கறிஞர்கள் காஞ்சி ஜைனுல் ஆபிதீன் (மாநில மாணவரணிச் செயலாளர்), கே.விஜயகுமார் ஆகியோர், தமுமுக பற்றிய கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்குமாறும் இல்லையேல் அவதூறு வழக்கு தொடரப்படும் என காதர் மைதீனுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.இதையடுத்து காதர் மைதீன் தனது வழக்கறிஞர் மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், "நான் கூறிய கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. நான் எந்த நிலையிலும் தமுமுக குறித்து தவறாகக் கூறவில்லை, அப்படி ஏதேனும் கருத்துக்கள் தமுமுக வினரை பாதித்திருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்’’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதால் அவர் மீது தொடர இருந்த அவதூறு வழக்கு நிறுத்தப்பட்டது. எனினும் பொது ஊடகங்களில் பேட்டி அளிக்கும் சமுதாயத் தலைவர்கள் சகோதர அமைப்புகள் பற்றி கண்ணியத் துடன் பேச வேண்டும். நமது வார்த்தைகள் எதிரிகளுக்கு ஊக்கம் அளித்து விடக் கூடாது என்பதை உணர்ந்தால் சரி.

அம்கராவில் மார்க்க சொற்பொழிவு




தமுமுகவின் ரமழான் நிகச்சிகளில் ஒன்றாக. தமிழகத்திலிருந்து வருகைதந்த சிறந்த பேச்சாழறும் இஸ்லாமிய அழைப்பாலருமான எம்.சி.முஹம்மத் அவர்களின். மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. மிகவும் எளுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு அம்கரா கிளைத்தலைவர். முஹமது அலி ஜின்னா சிறப்பாக செயதிருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நோன்பாளிகள் கலந்துபயனடைந்தனர்