இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 30, 2008

சத்தியம் வருகிறது. அசத்தியம் அழிகிறது

உலகத் தமிழ் வலைப்பூ வரலாற்றிலேயே முதன் முறையாக...

ஏகத்துவ பிரச்சாரத்தில் பல வருடங்கள் பணியாற்றிய...

மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களின் பொறுமையின் எல்லையாக...

இதுவரை தமிழ் முஸ்லிம்களுக்கு பீஜெயே சொல்லியிராத...

அரிய பல உண்மைகளைத் தாங்கி மலர்கிறது...
இன்ஷா அல்லாஹ்

www.tmpolitics.net

விரைவில் எதிர் நோக்குங்கள்...

சில நாட்களிலேயே...

பி.ஜே மற்றும் ததஜ வின் முகத்திரையை கிழிக்கும்,

உண்மைகளை அம்பலப்படுத்தும்,

ததஜ வின் மூலை மழுங்கிய கூட்டத்தினருக்காக

மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களின் அறிவுரைகள் அடங்கிய பதில்.
விரைவில் எதிர் நோக்குங்கள்...

உண்மைகள் என்றும் உரங்குவதில்லை....

பொய்யர்களின் கூற்றுக்களை தவிடு பொடியாக்க வருகின்றது...

மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவாக்ளின் அறிவுரைகள்...
இதன் பின்னரும் சிந்தனை உள்ள சகோதரர்கள் இப்பரிவினைவாதக் கும்பலோடு நீடிப்பரா???

கல்வியில் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!

மாணவர்களுக்கு தற்போது விடுமுறைக் காலம். குறிப்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவர்கள், மற்ற மாணவர்களைப் போல் இந்த கோடை விடுமுறையை நிம்மதியாக கழிக்க முடியாது. அதற்கு காரணம், வரவிருக்கும் தேர்வு முடிவுதான். எழுதிய தேர்வை மாற்றமுடியாது. எதிர்பார்த்தது கிடைக்கலாம். அல்லது ஏமாற்றமாகக்கூட முடியலாம்.


நீங்கள் நினைத்தால் உங்கள் எதிர்காலத்தை வளமானதாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு இப்போதும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்எடுக்க வேண்டும். அதில் தவறும் பட்சத்தில், அடுத்தடுத்த ஆண்டுகளில்மிகச்சிறப்பாக படித்து மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நீங்களேஉறுதி கொள்ளுங்கள். இனி வரும் இரண்டு ஆண்டுகள்தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயம் செய்யப் போகின்றன. எல்லா விஷயமும் எளிதாக நடக்க, வேலை கிடைக்க அதிக மதிப்பெண்கள் உங்களுக்கு உதவும்.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வாழ்க்கையின் திருப்பு முனைதான் இல்லை என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் நம்வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிட்டோமோ... இனி எந்த வாய்ப்பும் இல்லையோ என்ற கவலை மாணவர்களுக்கு எழக்கூடாது. அப்படி எழுந்துவிட்டால், நீங்கள் வாழ்க்கையில் எழ முடியாது.


இன்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ள அனைவரும் பனிரெண்டாம் வகுப்பில் 99 சதவீதம் எடுத்தவர்கள் என்று கூறிவிடமுடியாது. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கல்வி மிகவும் உதவியாக இருக்கும். அந்த கல்வியால் கிடைத்த அறிவை நீங்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டியது உங்கள் கைகளில் உள்ளது. மிக நன்றாக படித்தும் வேலைக்கு செல்ல முடியாமல் சிலர் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். பெற்ற கல்வியை பயன்படுத்தாமல் அவர்கள் இருக்கலாம். உங்களால் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும், ஏதாவது துறையில் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உங்கள் திறமையை மீட்டெடுக்க முடியும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், கல்லூரி வாழ்க்கைக்கு செல்ல விருக்கும் நீங்கள் அதற்கான இலக்கை இப்போதே நிர்ணயம் செய்யுங்கள். மூன்று அல்லது நான்கு ஆண்டு கல்லூரி படிப்பு சில மாதங்களைப் போல் ஓடிவிடும். அதுவரை நீங்கள் கொண்டிருக்கும் லட்சியத்துக்கு துளியளவும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் முடிவு செய்யுங்கள். நான்கு பேரிடம் கலந்து ஆலோசியுங்கள். முடிவு எடுப்பதற்கு முன் எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் யோசனை கேட்கலாம். முடிவு எடுத்த பின், அதைப் பற்றி மீண்டும் யோசித்து குழம்புவதை இவையெல்லாம் தவிர்க்கும்.
புதிய வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்த்துக்கள்!

மொபைல் போன்களின் கோட் எண்கள்

மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில கோட் எண்களை வகுத்து தந்துள்ளன. இது மொபைல் போனின் பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.

எல்.ஜி. போன்களின் கோட் எண்கள்
போனின் டெஸ்ட் மோடுக்குச் செல்ல –– 2945#*#
எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர – 2945*#01*#
மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய – *8375#
மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை அறிய –*#06# (இது எந்த போனுக்கும் பொருந்தும்.)
போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட–2945#*70001#
எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 1945#*5101#
எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2945#*5101#
எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2947#*


நோக்கியா போன்களுக்கான ரகசிய கோட் எண்கள்
இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும்.

*#7780# –பேக்டரி செட்டிங்ஸை போனில் மீண்டும் அமைக்க
*#3283# போன் தயாரான தேதியை அறிந்து கொள்ள
*#746025625# – சிம் கடிகாரத்தை நிறுத்த
*#67705646# ஆப்பரேட்டர் லோகோவை நிறுத்த
*#73# – கேஸ் ஸ்கோர் மற்றும் போன் டைமரை ரீசெட் செய்திட
*#0000#–மொபைல் சாப்ட்வேர் பதிப்பு குறித்து அறிய
*#92702689# – மொபைல் வாரண்டி குறித்த செட்டிங்ஸ் அறிய(சீரியல் எண், எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி, ரிப்பேர் செய்த தேதி, போன் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாங்கும் போன்ற தகவல்கள்)


சாம்சங் போன்களுக்கான குறியீடு எண்கள்
சாம்சங் தந்த பழைய போன்களுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம்.

*#9999# – மொபைல் சாப்ட்வேர் பதிப்பு எண் அறிய
#*3849#– சாம்சங் போனை ரீ பூட் செய்திடும்
#*2558# – மொபைல் டைமை ஆன் / ஆப் செய்திட
#*7337# – அண்மைக் காலத்தில் வெளியான சாம்சங் போன்களை அன்லாக் செய்திட
#*4760# – போனின் ஜி.எஸ்.எம். வசதிகளை ஆப் / ஆன் செய்திட
*#9998*246# – மெமரி மற்றும் பேட்டரி குறித்த தகவல்களை அறிய
*#7465625# –– மொபைலின் லாக் எந்நிலையில் உள்ளது என்று அறிய
*#0001# – மொபைலின் சீரியன் எண்ணை அறிய
*2767*637# – மொபைலின் கோட் எண்ணை அன்லாக் செய்திட
*#8999*636# –மொபைலின் ஸ்டோரேஜ் திறனைக் காட்ட
*2562#– சாம்சங் மொபைல் போன்களை ரீ பூட் செய்திட.

இதுவரை இன்று போதும்.

பாத்ரூமில் வேண்டாமே மொபைல்

நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களைக் கடந்துச் சென்ற ஒரு மனிதர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபி(ஸல்)அவர்கள் பதில்(ஸலாம்) கூறவில்லை. இப்னுஉமர்(ரலி) முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூத், அஹமத், இப்னுமாஜா


இரண்டு மனிதர்கள் மலஜலம் கழிக்கச் சென்று தங்களின் மர்மஸ்தானங்களைத் திறந்த நிலையில் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அல்லாஹ் இந்தக் காரியத்திற்காகக் கோபப் படுகிறான். அபூஸயீதுல் குத்ரி (ரலி) - அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா

மொபைல் போனை குளியல் அறைக்கு எடுத்துச்செல்லாதீர்கள். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் நீர் உள்ள வாளி அல்லது கழிவுத் தொட்டியில் விழ வாய்ப்பு உள்ளது. எலக்ட்ரானிக் சாதனங்களுக்குத் தண்ணீர் பெரிய எமன் என்பது நினைவிற்கு இருக்கட்டும். குளியலறையில் கூட போன் வரும் என்றால் அந்த அழைப்பினை பேசிய பின்னர் குளிக்கச் செல்லவும். சிறுவர்களிடம் தர வேண்டாம். அவர்களுக்கு அதன் செயல்பாடு தெரியாது. கீகளைத் தாறுமாறாக அழுத்தி செட்டிங்ஸ் மாறலாம். பிடித்தமான படங்கள் மாறலாம். கோபத்தில் அவர்கள் போனை கீழே எறிந்தால் அப்போதைக்கு உங்களுக்கு போன் இல்லையே. போனோடு கயறு இணைத்து சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கலாம். இது நீங்கள் குனிந்து எதனையாவது எடுக்கையில் போன் கீழே விழுவதனைத் தடுக்கிறது. இதனால் போன் உடையும் வாய்ப்பு நீங்குகிறது. பேன்ட் பாக்கெட்டில் போனை வைக்காதீர்கள். உங்கள் கால் மேல் பாகம் கதவு அல்லது தூண் போன்ற கனமான ஏதாவது ஒன்றின் மீது மோதுகையில் உங்கள் காலைப் போன் பாதுகாக்கும். ஆனால் போனுக்குத் திரையை ரூ.5,000 அல்லது ரூ.8,000 செலவழித்து மாற்ற வேண்டியதிருக்கும். பரவாயில்லையா? இரண்டு தலையணை வைத்து படுக்கிறீர்கள். இரவில் யாராவது அழைத்தால் பேச போனை இரண்டிற்கும் நடுவே பாதுகாப்பாக வைக்கிறீர்கள். சரி. காலையில் நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கச் செல்கையில் உங்கள் மனைவி, குழந்தை அல்லது வேலைக்காரி தலையணைகளுக்கிடையில் போன் இருப்பது தெரியாமல் இரண்டு தலையணைகளையும் தூக்கி சற்று தள்ளி ஷெல்பில் போடலாம். ஏன் இந்த வீண் விளையாட்டு? தூங்கச் செல்கையிலும் போன் அருகே வேண்டுமென்றால் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். எழுந்தவுடன் போனை எடுத்து வழக்கம்போல் பயன்படுத்தவும். பாக்கெட் மற்றும் டைனிங் டேபிளில் போனை வைக்கையில் உங்களுக்கு இடது புறம் போனை வைத்திடுங்கள். அப்போதுதான் சாப்பிடும்போது போன் வந்தால் அடுத்தவரை அழைத்து பாக்கெட்டிலிருந்து போனை எடுக்கச் சொல்லும் நிர்ப்பந்தம் இருக்காது. டைனிங் டேபிளிலும் இடது பக்கம் இருந்தால் எடுத்துப் பேசுவது எளிது.

கம்ப்யூட்டரில் டேட்டா அளவு – புதிய கோணத்தில்

1 கிலோ பைட் – 1000 கேரக்டர்கள் – ஒரு ஸ்கிரீன் நிறைய செய்தி என வைத்துக் கொள்ளுங்கள்.

1 மெகா பைட் – பத்து லட்சம் எழுத்துக்கள் – சராசரியாக என்றால் 300 பக்கங்கள் அடங்கிய ஒரு நூல்.

1 கிகா பைட் –– நூறு கோடி எழுத்துக்கள் – ஓராயிரம் நூல்கள்.

1 டெரா பைட் ––ஒரு ட்ரில்லியன் எழுத்துக்கள் (அதாவது லட்சம் கோடி எழுத்துக்கள) பத்து லட்சம் நூல்கள்.

1 பீடா பைட் –– குவாட்ரில்லியன் எழுத்துக்கள் (பத்துகோடியே கோடி 10 பவர் ஆப் 15, அதாவது 15 முறை பத்து போட்டு பெருக்கவும். நூறு கோடி நூல்கள்.

1 எக்ஸா பைட் –– குயின்டில்லியன் ( 10 பவர் ஆப் 18 ) லட்சம் கோடி நூல்கள்.

கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை இவ்வளவு தான் இப்போது புழக்கத்தில் சொல்லப்படுகிறது. டெராபைட்டோடு தற்போதைக்கு நிற்கிறோம். ஆனால் நிச்சயம் உயரும் என எதிர்பார்க்கிறோம். எண்களின் பெரிய எண் குறித்து தலை சுற்றுகிறதா? இன்னும் உயரச் செல்லும் எண்களின் பெயர் தெரிய வேண்டுமானால்
http://en.wikipedia.org/wiki/Quintillion என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று அங்குள்ள பட்டியலை காப்பி செய்து வைத்துக் கொள்ளவும்.

கல்வி உரிமை

சமமான சமுதாயம் உருவாக இன்றும் நம்மால் உணரப்படவேண்டிய காரணியாக இருப்பது கல்வி உரிமை தான். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 60 ஆண்டுகளுக்கு முன்பே இலவச மற்றும் கட்டயாக் கல்வியை வலியுறுத்தியது. கல்வியை ஒரு உரிமையாக ஏற்றுக் கொள்ளும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டே 6 ஆண்டுகள ஆகிவிட்டன. ஆனால் கல்வியை உரிமையாக நடைமுறைப்படுத்துவதில் இன்னமும் தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. கல்வியில் பலர் சேருவது பெரிய சாதனையல்ல. ஆனால் சேருபவர்களில் பாதிப் பேர் பாதியில் அல்லது தொடக்கத்திலேயே விலகுவதும் சாதனையல்ல அல்லவா? இது தான் இன்றைய இந்திய கல்வியின் நிலை.

தரமான கல்வியை பெரும்பாலான இந்திய குழந்தைகள் பெறவில்லை என்று 11வதுஐந்தாண்டுத் திட்டம் மதிப்பிடுகிறது. செகண்டரி கல்வி நிலை வரையிலாவது அனைவரும் மிகத் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதே இன்று பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

மிகச் சிறப்பான கல்வி தரும் நாடுகளாக 2005ம் ஆண்டில் பின்லாந்து, கனடா, கியூபா மற்றும் கொரியா நாடுகள் யுனெஸ்கோவால் பட்டியலிடப்படுகின்றன. மிகத்தரமான ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வியைத் தருவதில் முனைப்புடன் இந்தநாடுகள் தொடர்ந்து செயல்படுவதே இவற்றின் வெற்றிக்குக் காரணம். இந்த நாடுகள் தரமான கல்வியை எந்த பாகுபாடும் இன்றி சமமாக அனைவரும் பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன.

வளர்ந்த நாடுகள் என கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இன்னமும் பொருளாதார ரீதியான சமமில்லாத சூழல் நிலவுவதால் இந்த நாடுகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு தாங்க முடியாத மனப் பிறழ்வு இருப்பதாக அறியப்பட்டுள்ளது. எனவே தரமான கல்வியை பாகுபாடின்றி அனைவரும் பெற வேண்டும் என்பதே நமது அரசுக்கும் இந்த நாடுகளின் கல்வித்துறை சுட்டிக்காட்டும் உண்மை. அரசுப் பள்ளிகளை தரத்தில் மேம்படுத்துவதும், சிறப்பான தனியார் பள்ளிகளில் அனைவராலும் சேர முடிய வேண்டும் என்பதே நமது அரசின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்.


இது போலவே மற்றொரு முக்கியமான அம்சம் தாய்மொழி புறக்கணிப்பு. கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் தாய்மொழிக்கு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை. எனவே உண்மையான அறிவை மாணவர்கள் பெறுவதில் பெரும் தடைகள் இருக்கின்றன. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய கல்வித்துறை கூடுதல் முனைப்புடனும் நோக்கத்தோடும் செயல்பட்டால் தான் கல்வியை உரிமையாக வரையறுக்கும் நமது நோக்கம் நிறைவேறும்.
இன்ஷா அல்லாஹ்

விண்டோஸ் எக்ஸ்பிக்கு அளிக்கும் சப்போர்ட்

புதிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தியவுடன் பழைய தொகுப்புகளுக்கு அளித்துவரும் உதவிக் குறிப்புகளை நிறுத்திவிடுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வாடிக்கை. அதாவது அது குறித்த புதிய பிரச்னைகளுக்கு எந்தவித தீர்வுகளையும் மைக்ரோசாப்ட் எடுக்காது என்பது முடிவு. ஆனால் இணைய தளத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் சிஸ்டத்துடன் வந்துள்ள உதவிக் குறிப்புகள் அப்படியே தான் இருக்கும். தொகுப்பைப் பயன்படுத்துவதற்கான லைசன்ஸ் புதுப்பிக்கப்பட மாட்டாது. நீங்கள் புதிய தொகுப்பிற்குத்தான் அப்கிரேட் செய்திட வேண்டும். இனி பிரச்னைக்கு வருவோம். இரண்டு வாரங்களுக்கு முன் வரும் ஜூன் 2008 உடன் விண்டோஸ் எக்ஸ்பிக்கான ஆதரவை நிறுத்தப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்தது. ஆனால் ஏப்ரல் 3 அன்று இன்னொரு அறிவிப்பினை வெளியிட்டது. இன்னும் சிறிது காலத்திற்கு எக்ஸ்பி தொகுப்பிற்கான உதவியை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் 30, 2010 வரை இதற்கான உரிமத்தை புதுப்பிக்கலாம். ஆனால் இதிலும் ஒரு சிறு கண்டிஷனை மைக்ரோசாப்ட் விதித்துள்ளது. மார்க்கட்டில் விற்பனை செய்யப்படும் குறைந்த விலைக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே இந்த சலுகை என அறிவித்துள்ளது. எனவே நீங்கள் எக்ஸ்பி கட்டாயம் லைசன்ஸுடன் வேண்டும் என்றால் குறைந்த விலைக் கம்ப்யூட்டரையே வாங்குங்கள். மைக்ரோசாப்ட் இன்னொரு அறிவிப்பினையும் தந்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பிக்கான தொழில் நுட்ப உதவியினை வரும் ஏப்ரல் 2009 வரை தரும் என தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் நீங்கள் நீட்டிப்பு காலம் வரை தேவை என ஒத்துக் கொண்டிருந்தால் இந்த உதவி ஏப்ரல் 2014 வரை கிடைக்குமாம். எனவே கவலைப்படாமல் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துங்கள்.

April 28, 2008

வீடியோ இமெயிலுக்கு...

www.eyejot.com

`நலம், நலமறிய ஆவல். சுகம்... சுகம் அறிய ஆவல்!' - இப்படி எத்தனை நூற்றாண்டுகளாகத்தான் கடிதம் எழுதுவது என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு உதவும் தளம் இது. இமெயில் மூலம் வெறும் எழுத்துகளாக தகவல்களை அனுப்புபவர்கள், வீடியோவாக பேசி சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். இந்த இணையதளத்தில் இலவச உறுப்பினராவதன் மூலம் இலவசமாக வீடியோ இமெயில்களை அனுப்பலாம். நமது கம்ப்ïட்டரில் வெப்கேம் இருக்க வேண்டியதும் அவசியம். வெப்கேமை ஆன்செய்து விட்டு, நாம் தகவல்களை பேசினால் அப்படியே பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட வீடியோவை, மற்றவர்களின் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இதன்மூலம் நமது முக பாவனைகளுடன் நமது தகவல்களை மற்றவர்கள் பெற முடியும்.

ஆன்லைன் பாதுகாப்பிற்கு...

www.getnetwise.org

இன்டர்நெட் என்ற ஊடகம் கைப்பிடி இல்லாத கத்தி போன்றது. அதை சரியாக உபயோகிக்கவில்லை என்றால், நம்மையே `பதம்' பார்த்து விடும். எனவே இன்டர்நெட்டை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் இன்டர்நெட்டை பாதுகாப்பாக பயன்படுத்தவும், தேவையற்ற ஸ்பாம் இமெயில்களை தவிர்க்கவும், நமது கம்ப்ïட்டரை `காலி' செய்யும் வைரஸ் மற்றும் ஹாக்கர்களிடம் இருந்து தப்பவும், தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும் வழி சொல்லும் இணையதளம் இது. ஒவ்வொரு தலைப்பாக எடுத்துக் கொண்டு, விலாவாரியாக விளக்கி கூறி உள்ளனர். குழந்தைகளுக்கான இணையதளங்கள், ஆபாச இணையதளங்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் அளித்து உள்ளனர். ஸ்பாம் இமெயில்களிடமிருந்து தப்புவதற்கான வழிமுறைகள், அதற்கு உதவும் இணையதளங்கள் பற்றிய தகவலும் உண்டு. முகமறியாத நபர்களுக்கு நம்மைப்பற்றிய தகவல்கள் சென்று சேராமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் அளித்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இணையதளத்தை பாதுகாப்பாக சிக்கலின்றி பயன்படுத்த உதவும் நோக்கத்துடன் இந்த இணையதளத்தினர் செயல்படுகிறார்கள். இன்டர்நெட் பாதுகாப்பை விரும்புபவர்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

விதவிதமான எழுத்துருக்களுக்கு

www.dafont.com

அரதப்பழசான பாண்ட்-களை இன்னும் வைத்துக்கொண்டு உபயோகிப்பவர்கள் பலர் உண்டு. விதவிதமான, ரகரகமான வகைகளில் எழுத்துருக்கள் எனப்படும் பாண்ட்-களை இலவசமாக வழங்கும் இணைய தளம் இது. பேன்சி, காதல், டெக்னாலஜி என பல்வேறு தலைப்புகளில் ஏராளமான எழுத்துருக்களை அளித்துள்ளனர்.


தொழில் தொடர்பான உபயோகத்திற்கு தெளிவான எழுத்துருக்களும், காதலிக்கு கடிதம் எழுத ஸ்டைலான எழுத்துருக்களையும் அளித்துள்ளனர். நமக்கு தேவைப்படும் எழுத்துருக்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். நாம் விருப்பப்பட்டால் நம்மிடம் இருக்கும் எழுத்துருக்களை இலவசமாக, இங்கு இடம் பெற செய்யலாம். வித்தியாசமான எழுத்துருக்கள் மூலம் மற்றவர்களை அசத்த நினைப்பவர்கள் தாராளமாக உபயோகிக்க வேண்டிய இணையதளம்.

April 26, 2008

சிறுவர்களுக்கான பயனுள்ள இணைய தளங்கள்

நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கின்ற இணையத்தில் குழந்தைகளுக்கான, அறிவுபூர் வமாகவும் கல்வி சார்ந்ததாகவும் இயங்குகின்ற தளங்கள் குறித்து சிலவற்றை இங்கு காணலாம். சிறுவர்களை அவர்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் இழுத்துப் பிடித்து வேடிக்கை காட்டி அதே நேரத்தில் மூளைக்கும் வேலை தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன.

1) Starfall: இத்தளம் இளம் சிறுவர்களுக்கானது. ஆங்கிலத்தை இரண்டரை வயதிலிருந்தே திணிக்க முயற்சிக்கும் நமக்கு இது ஒரு பயனுள்ள தளம். ஆங்கிலத்தை இரண்டரை வயதிலிருந்தே திணிக்க முயற்சிக்கும் நமக்கு இது ஒரு பயனுள்ள தளம். ஆங்கில எழுத்துக்களில் தொடங்கி அவற்றை எப்படி உச்சரிப்பது குழந்தைக்குக் கொடுத்து வாங்கிக் கற்றுக் கொடுக்கிறது. சொற்கள் புதிர், சொல் விளையாட்டு என அத்தனையும் இலவசமாகக் கிடைக்கின்றன. இதனைப் பயன்படுத்திக் கற்றுக்கொடுக்க நினைக்கும் பெற்றோருக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் கற்றுக் கொடுப்பது பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன. www.starfall.com என்ற முகவரியில் இதனைக் காணலாம்.

2) Kids.gov சிறுவர்களை மனதில் கொண்டு அவர்களுக்குத் தகவல்களைத் தரும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வயது சிறுவனுக்கும் இது உகந்தது. இதில் பெரும்பாலும் அமெரிக்க அரசின் தளங்கள் குறித்த தகவல்கள் இருந்தாலும் இது தரும் 1200 தளங்களின் தகவல்கள் எந்த சிறுவனின் அறிவுப்பசிக்கும் தீனி போடுகிறது. டெக்னாலஜி, உடல் நலம் மற்றும் நலம் காத்தல், அறிவியல் எனப் பல பிரிவுகளில் தகவல்கள் உள்ளன. பள்ளிகளில் குழந்தைகளை புராஜக்ட் செய்திட வற்புறுத்தினால் இத்தளத்தில் தகவல்களைப் பெற்று திட்டங்களை வடிவமைக்கலாம். இதன் முகவரி www.kids.gov

3) Homework Spot இந்த தளம் பள்ளிமாணவர்களின் ஹோம் ஒர்க் வேலைகளுக்கும் உதவுகிறது. அனைத்து வயது சிறுவர்களுக்கும் உகந்தது. ஆங்கிலம், மேத்ஸ், சயின்ஸ், ஆர்ட்ஸ், மியூசிக், ஹெல்த், லைப் ஸ்கில்ஸ், எக்ஸ்ட்ரா கரிகுலர் செயல்பாடுகள் என இன்னும் எவ்வளவோ பிரிவுகளில் உதவிடுகிறது. எனவே ஹோம் ஒர்க் செய்வதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்ததளத்தை அணுகுமாறு குழந்தைகளை வழி நடத்தலாம். முகவரிwww.homeworkspot.com

4) Family Fun குழந்தைகள் என்றாலே அங்கு வேடிக்கையும் விளையாட்டும் கட்டாயம் வேண்டும் அல்லவா! இந்த தளம் வேடிக்கை காட்டுவதோடு பள்ளிக்கூடப் பாடங்கள் சாராத சில விஷயங்களிலும் சிறுவர்களை ஈடுபடுத்துகிறது. எடுத்துக் காட்டாக சமைப்பதற்கு, சிறிய சுற்றுலா செல்ல எப்படி திட்டமிடுவது என்றெல்லாம் கேட்டு வழி நடத்துகிறது. சில விஷயங்களை மேற்கொள்வது எப்படி என்பதற்கு சிறு சிறு வீடியோ காட்சிகளுடன் வழி நடத்துகிறது. இத்தள முகவரி http://familyfun.go.com/recipes/kids/

5) SciVee: உங்களுடைய குழந்தைகள் அல்லது பேரக் குழந்தைகள் சயின்ஸ் குறித்து அறிய ஆவலுடையவர்களாக இருக்கிறார்களா! அந்தப் பசிக்கு சரியான தீனி போடும் தளம் இது. அமெரிக்காவில் இயங்கும் நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் சென்டர் ஆகியவற்றின் துணையுடன் இந்த தளம் படு பிரமாதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் தாங்கள் தயாரிக்கும் அறிவியல் சார்ந்த கட்டுரைகள், பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மற்றும் இதில் பதிந்து வைக்கவும் வசதி தரப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறார்கள். தள முகவரி www.scivee.tv

6) Creating Music மியூசிக்கை விரும்பாத குழந்தைகள் உண்டோ! இந்த தளம் குழந்தைகளை மியூசிக் டைரக்டர்களாக உருவாக்குகிறது. ஆம், மியூசிக்கைத் தாங்களே கம்போஸ் செய்திடும் வழி தருகிறது. வெவ்வேறு மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட்களை இயக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. சிறுவர்கள் தங்களுக்குப் பிடித்த இன்ஸ்ட்ருமெண்ட்டைத் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். இத்தளத்தின் முகவரி: www.creatingmusic.com

7) KidsClick: கொஞ்சம் வளர்ந்த சிறுவர்களுக்கானது. எந்த சப்ஜெக்ட் குறித்து தகவல்கள் வேண்டுமோ அதனைத் தேடித்தரும் சர்ச் இஞ்சின் போன்ற தளம். ஏறத்தாழ 600 தளங்களிலிருந்து தகவல்களைத் தருகிறது. சிறுவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறதா! இந்த தளங்களைக் காட்டிப் பழக்குங்கள். பின் அவர்கள் தேவையற்ற டிவி சீரியல்களிலும் வீடியோ கேம்களிலும் தங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். இத்தளத்தின் முகவரி: www.kidsclick.com

ஐ.டி. வாய்ப்புகள் I.T Oppertunity

வாய்ப்புகள்-1: எம்.சி.ஏ., எம்.எஸ்சி., தகுதிக்கான வாய்ப்புகள்

கேரளாவில் உள்ள அலுவாவில் இயங்கும் ஐ.டி. நிறுவனம் அதீவா டெக்னாலஜிஸ். மல்டிமீடியா இன்ஜினியரிங் தொழில் நுட்பத்தில் பணி புரிவதற்கான புரொகிராமர் டிரெய்னி வேலைக்கான காலியிடங்களை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தகுதிகள்: பி.டெக்./எம்.எஸ்சி./எம்.சி.ஏ.

மேலே கண்ட தகுதிகளுடன் சி, சி++ ஆகியவற்றில் சிறப்புத் திறன் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: உங்களைப் பற்றிய முழு விபரங்களடங்கிய பயோ டேட்டாவை உடனடியாக இமெயில் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: atheeva.fresher@gmail.com

வாய்ப்புகள்-2: பி.எஸ்சி., பி.சி.ஏ., தகுதிக்கு வாய்ப்புகள்

மியூசிரிஸ் சாப்டெக் என்னும் ஐ.டி. நிறுவனத்திற்கு உடனடியாகத் தேவைப்படும் சாப்ட்வேர் புரொகிராமர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ.பி.எஸ்சி.தகுதியுடன் பி.ஜி.டி.சி.ஏ. முடித்திருக்க வேண்டும்.

2007 அல்லது அதற்குப் பின் இந்தத் தகுதிகளைப் பெற்றிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முகவரி: உடனடியாக பயோடேட்டாவை இமெயிலில் அனுப்பவும்.

முகவரி: HO@muziris.co.in

அஜ்மீர் ரயில்வே பணி வாய்ப்புகள்:

சமீப காலமாக அதிக அளவில் நமது இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருப்பது அடிக்கடி அறிவிக்கப்படும் பல்வேறு ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டுகளின் பணி வாய்ப்புகள்தான். இந்த வரிசையில் இப்போது அஜ்மீர் ஆர். ஆர்.பி. பல்வேறு பணி வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இது பற்றிய விபரங்கள் இதோ..

அசிஸ்டன்ட் ஸ்டேஷன் மாஸ்டர்:
காலியிட எண்ணிக்கை- 80 வயது- 18 முதல் 33க்குள் தகுதி- பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரயில் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் டிப்ளமோ தகுதி பெற்றவருக்கு முன்னுரிமை. தேர்வு- இதற்கு ஒரு கட்ட எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். பின்பு தனியாக ஆப்டிடியூட் தேர்வும் நடத்தப்படும்.

அசிஸ்டன்ட் லோகோ பைலட்:
காலியிட எண்ணிக்கை - 122வயது - 18 முதல் 30க்குள் தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ஆட்டோமொபைல் பிரிவுகளில் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் அல்லது டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும். பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்ஸ், மில்ரைட், மெக்கானிக் ரேடியோ "டிவி', எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக் டீசல், டர்னர், மெஷினிஸ்ட், ரெப்ரிஜரேஷன் மெக்கானிக் இவற்றில் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு - ஒரு கட்ட எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு, ஆப்டிடியூட் தேர்வு நடத்தப்படும்.

ஜூனியர் ஒர்க்ஸ் இன்ஜினியர்:
காலியிட எண்ணிக்கை - 27வயது - 18 முதல் 33க்குள் தகுதி - சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தகுதி. தேர்வு - ஒரு கட்ட எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.

ஜூனியர் இன்ஜினியர் (இன்ஜினியரிங்/டிராயிங்):
காலியிட எண்ணிக்கை - 20வயது - 18 முதல் 33க்குள்தகுதி - சிவில் டிப்ளமோ தேர்ச்சிதேர்வு - ஒரு கட்ட எழுத்துத்தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.

சிக்னல் மெயின்டெயினர்:
காலியிட எண்ணிக்கை - 29வயது - 18லிருந்து 30க்குள்தகுதி - பி.எஸ்சி. இயற்பியலில் முதலாமாண்டு முடித்திருக்க வேண்டும்.தேர்வு - ஒரு கட்ட எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.

டெக்னீசியன் 3 (பிட்டர்/சி அண்ட் டபிள்யூ.):
காலியிட எண்ணிக்கை - 66 வயது - 18 முதல் 30க்குள் தகுதி - 10ம் வகுப்பு தகுதி மற்றும் ஐ.டி.ஐ. பிட்டர் தகுதி.தேர்வு - ஒரு கட்ட எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு.

டெக்னீசியன் 3 (வெல்டர்):
காலியிட எண்ணிக்கை - 56, வயது - 18 முதல் 30க்குள், தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வெல்டிங் ஐ.டி.ஐ. தகுதிதேர்வு - ஒரு கட்ட எழுத்துத் தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வு.

டெக்னீசியன் 3 (சிக்னல்):
காலியிட எண்ணிக்கை - 33, வயது 18 முதல் 30க்குள், தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எலக்ட்ரீசியன்/எலக்ட்ரிகல்/பிட்டர்/ஒயர்மேன்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஐ.டி./ டிவி/ ரேடியோ/ கம்ப்யூட்டர் போன்றவற்றில் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவை தவிர வேறு பல பணிகளுக்குமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இவற்றை எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் தவறாது பார்த்துக் கொள்ளவும்.

ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:
முழு விபரங்களையும் படிவத்தையும் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் ஏப்ரல் 19-25 இதழில் பார்த்துக் கொள்ளவும். மேலும் இவற்றை ஆர்.ஆர்.பியின் இன்டர்நெட் தளத்திலும் பார்த்துக் கொள்ளலாம். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.rrbajmer.org இன்டர்நெட் தளத்துக்குச் சென்று ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கேற்ப செலுத்த வேண்டிய கட்டணத்துடனும் ஆன்லைன் விண்ணப்ப நகலுடனும் பிற சான்றிதழ் நகல்களை இணைத்து சாதாரண தபால் மூலமாக அனுப்ப வேண்டும். கட்டணத்தை டிடியாகவோ போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பலாம். இவை "The Assistant Secretary, Railway Recruitment Board, Ajmer" என்ற பெயருக்கு அஜ்மீரில் மாற்றத்தக்கதாக எடுக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பும் முகவரி:
The Assistant Secretary,
Railway Recruitment Board 2010,
Nehru Marg,
Near Ambedkar Circle,
Ajmer 305028.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் மே 19, 2008.

மத்திய அரசு நிறுவனத்தில் பி.இ.,/எம்.பி.ஏ., தகுதிக்கான பணிவாய்ப்பு

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடட் இது மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனம். இதில் காலியாகவுள்ள 100 எக்சிகியூடிவ் டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


காலியிடங்கள்: டெக்னிகல் 90, நிதி 5 மற்றும் பர்சானல் 5.


தகுதிகள்:

டெக்னிகல் பிரிவு: ஏ.ஐ.சி.டி.இயால் அங்கீகரிக்கப்பட்ட பி.இ./பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பைனான்ஸ்: பட்டப்படிப்புக்குப் பின் சி.ஏ./ ஐ.சி.டபிள்யூ.ஏ. அல்லது நேரடி படிப்பாக எம்.பி.ஏ. பைனான்ஸ் முடித்திருக்க வேண்டும்.


எச்.ஆர்.: பட்டப்படிப்புக்குப் பின் எச்.ஆர். பிரிவில் எம்.பி.ஏ. முடித்திருக்க வேண்டும். அல்லது சமூகவியலில் பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


முக்கியக் குறிப்பு: இவற்றில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருப்பது மிக முக்கியம். தற்போது இவற்றில் இறுதியாண்டு படிப்பவரும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள இமெயில் முகவரியைப் பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இது டிடியாக அனுப்பப்பட வேண்டும். தேசிய மயமாக்கப் பட்ட வங்கி ஒன்றிலிருந்து இதைப் பெற வேண்டும். ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடட் என்ற பெயரில் ராஞ்சியில் மாற்றத்தக்கதாக இதை எடுத்து ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கிடைக்கும் பதிவுத் தாளுடன் இணைத்து அனுப்ப வேண்டும். ஆன்லைனில் மே 3ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இன்டர்நெட் முகவரி: www.epostindia.org

இந்தப் பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜூன் 8 அன்று நடத்தப்படும்.

TNPSC: குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 முதல் நிலை தேர்வு, சென்ற ஆண்டு டிசம்பர் 23ம் தேதி நடந்தது. இதில், 85ஆயிரத்து 913 பேர் தேர்வு எழுதினர். முதல் நிலை தேர்வு முடிவுகள், 25ம் தேதி(நேற்று) டி.என்.பி. எஸ்.சி., இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியவர்கள், இணைய தளத்தின் மூலம் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். இதில், ஆயிரத்து 796 பேர் தேர்வு செய்யப்பட்டு முதன்மை எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப்பிரிவு: 210 மதிப்பெண் (பெண்கள் 195 மதிப்பெண்),

பி.சி: 201 மதிப்பெண் (பெண்கள் 187.50 மதிப்பெண்),

எம்.பி.சி மற்றும் டி.சி: 196.50 மதிப்பெண் (பெண்கள் 180 மதிப்பெண்),

எஸ்.சி: 195 மதிப்பெண் (மகளிர் 178.50 மதிப் பெண்),

எஸ்.டி: 156 மதிப்பெண் பெற்றவர்கள் (கட்-ஆப் மதிப் பெண் கள்) முதன்மை எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதன்மை எழுத்து தேர்வு வருகிற ஆகஸ்ட்

16ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுஅறிவு முதல் தாளும்,

17ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுஅறிவு 2ம் தாளும் நடைபெறும்.

முதன்மை எழுத்து தேர்வு, சென்னை மையத்தில் மட்டுமே நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆன்-லைனில் வேலைவாய்ப்பு பதிவு

மேல்நிலை கல்வி பயின்ற மாணவர்கள், வேலைவாய்ப்பை தேர்வு செய்து கொள்வதற்காக, ஆன்-லைனிலும், வீடியோ-கான்பரன்சிங் முறையிலும் வழிகாட்டும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் தொழிலாளர், வேலைவாய்ப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:-

தற்போது, பட்டமேல்படிப்பு, தொழிற்சார் கல்வி மற்றும் நிர்வாக தகுதிக்கான பட்டம் பெற்றவர்கள், பதிவு செய்யவும், அவர்களை வேலைகளுக்காக பரிந்துரை செய்யவும், மாநில அளவில் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களின் துயர் துடைக்கும் நோக்கில், தென் மாவட்டங்களில் உள்ள மனுதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மதுரையில் கிளை அலுவலகம் தொடங்கப்படும்.

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான முக்கிய தகவல்கள் குறித்த தொழில் நெறிவழி காட்டுதல் நிகழ்ச்சி, ஆன்-லைன் (இன்டர்நெட்) மற்றும் தொலைக்காட்சி வழி கலந்தாய்வு (வீடியோ கான்பரன்சிங்) முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்படும்.

2007-ல் பதிவு புதுப்பிக்காதவர்களுக்கு....
வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு பதிவு செய்ய வருவதில் ஏற்படும் போக்குவரத்து செலவு மற்றும் இதர செலவுகள் போன்ற சிரமங்களைக் குறைக்கும் நோக்கத்தில், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் பதிவுப்பணி மேற்கொள்ளப்படும். 2007-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு, சிறப்புப் புதுப்பிப்பு சலுகை வழங்கப்படும். இதனால் சுமார் 40 ஆயிரம் மனுதாரர்கள் பயன்பெறுவார்கள்.

முடிதிருத்தும் தொழிலாளர்கள்
தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு உதவிட தற்போது வழிவகைகள் இல்லை. எனவே, முன்னோடி திட்டமாக, சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகத்தில் பணியமர்த்தும் பிரிவு தொடங்கப்படும்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுனர்களுக்கு தற்போது நல்லாசிரியர் விருதுடன், ரூ.500 ரொக்கப்பரிசும், பாராட்டு பத்திரமும் வழங்கப்படுகிறது. இது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். கட்டுமான தொழிலாளர்கள் திறனை அதிகரிக்க, கட்டுமான கலைக்கழகம் ஒன்று நிறுவப்படும். பதிவு செய்யப்பட்ட உடலுழைப்பு தொழிலாளர்கள் 100 பேருக்கு நவீன அச்சுப்பயிற்சி அளிக்கப்படும். முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நபருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் அழகுப்பயிற்சி அளிக்கப்படும். தையல் தொழிலாளர்களுக்கு பூத்தொழில் பயிற்சி அளிக்கப்படும்.

தொழிலாளர் குழந்தைகளுக்கு...
இளநிலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சிக் கல்வி, உடற்பயிற்சி பட்டப்படிப்பு ஆகியவற்றை கற்கும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய தொழிலாளர்களின் 25 குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,400-ம், ஆசிரியர் பயிற்சி பட்டய கல்வி கற்கும் 150 குழந்தைகளுக்கு வருடத்துக்கு ரூ.1,440-ம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கான செலவை வாரியம் ஏற்கும்.
முன்னாள் குழந்தைத் தொழிலாளர் 250 பேருக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.250 உதவித்தொகை வழங்கப்படும்.

சிறுதொழிற்சாலைகளுக்கு விருது
குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற, கண்காணிப்பு முறையினை செயல்படுத்துவதற்கு உணர்வூட்டல் மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி திட்டம் மேற்கொள்ளப்படும். விபத்துக்களை குறைப்பதற்கு ஊக்கப்படுத்தும் மாநில விருதுகள், இனி மற்ற ஆலைகளைப் போல் மிகச்சிறிய தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படும்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இ.எஸ்.ஐ.) மருந்தகங்கள் கம்பம் நகராட்சி, முத்தல்லாபுரம், புதுக்கோட்டை (தூத்துக்குடி), சின்னமனூர், நாகர்கோவில் புறநகர், கன்னியாகுமரி மற்றும் உத்தமபாளையம் நகராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும். மேலும், சிவகாசி, ஓசூர் மற்றும் திருச்சியில் இ.எஸ்.ஐ. ஒப்புதலுடன் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்படும். கோவை மற்றும் மதுரை இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் யோகா மருத்துவப்பிரிவு தொடங்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் தொழிலாளர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, ஒரு மருத்துவர் வகையில் இருந்து 3 மருத்துவர் வகையாக உயர்த்தப்படும்.

தேயிலை தொழிலாளர்கள்
தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.101.50 ஆக உயர்த்தி அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 60 நாட்கள் வரை இது தொடர்பான கருத்துகள் பெறப்பட்டு, அதன் பின்னர் இறுதியாக ஆணை வெளியிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.

April 22, 2008

அறியாமையிலிருக்கும் அபுநூரா அவர்களுக்கு..,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அன்பு நண்பர் அபுநூரா அவர்களுக்கு, தங்களது கற்பனை மிக்க தமாசாக இருந்தது. இன்னும் ஏதும் அதுபோல் இருந்தால் அனுப்பி வைக்கவும். அன்றைய பொழுது தமாசாக கழிந்தது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல பீஜெ வழுக்கி விழுந்தாலும் தமுமுக, ஒன்னுக்கு மஞ்சளா போனாலும் தமுமுக, தாடி வெளுத்தா தமுமுக, தொப்பி கழண்டாலும் தமுமுக....
அடப்போங்கயா...ஏதாவது தவ்ஹீத் சொல்லுவீங்கன்னு பாத்தா தமாசு பண்ணிகிட்டு இருக்கிறீங்களே.
நண்பரே... உண்மையிலேயே TNTJவை விட்டு வெளியே வந்தவர்கள் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் குவைத்திலும் இருக்கின்றார்கள். இது உண்மை. நீங்கள் கனவு கண்டு கொண்டிருப்பதைப்போல் பீஜெ உங்களுக்கு ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார். கண் திறந்து பாருங்கள் சிறிதேனும் ஆராய்ந்து பாருங்கள்.
பெருந்தலைவர் பிஜேயில ஆரம்புச்சு கடைக்குட்டி கடையநல்லூர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி வரைக்கும் பாலியல் புகார்கள் இருந்தாலும், அதுக்கு வலுவான ஆதாரம் இருந்தாலும் உங்கள மாதிரி ஆளுங்க திருந்தாததற்கு காரணம் வெளியில இருந்து ஒரே ஒரு உண்மையான தவ்ஹீதுவாதி உங்களோட நிர்வாகத்துக்குள்ள இருந்திருந்தா இந்நேரம் உங்களோட அத்தன ஊழல்களும் அடிச்ச கொள்ளையும் வெளிய வந்திருக்கும் என்பதை விளங்கியவர்கள் வெளியேறியிருக்கிறார்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் தனது அருள்மறையிலே கூறுகின்றான்
"ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன இன்னும் அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்." (23:63)
என்பதாக மேலும் கூறுகின்றான்.
"பிறகு நிச்சயமாக உம் இறைவன் - எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) தவ்பா செய்து தங்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்) நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்." (16:119) - என்பதாக. பின்னரும்...
"முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள் (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம் பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்." (49:6)
நீங்கள் கைசேதப்படாமல் இருக்க தீர விசாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவசரப்பட்டு தமுமுக மீது பழி சுமத்தி அனுப்பிய மின்னஞ்சல்களை உங்களால் திரும்ப பெற முடியுமா. அந்த நோட்டீஸ் வெளியிட்டவர்கள் பின்னர் வந்து நின்றால் உங்களால் சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்க முடியுமா. எத்தனை பேரிடம் கேட்க முடியும். அதில் எத்தனை பேர் உங்களை மன்னிப்பார்கள். பெருமானார்(ஸல்) அவர்கள் கூறியது போல மனிதர்கள் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான் - என்பது மறந்து விட்டதா. இருந்தாலும் அல்லாஹ் அவனது மறைவேதத்தில் கூறியது போல
"அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்(சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள். எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக, அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக, தவிர சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான் " (3:159)
எனவே நாங்கள் இறைவனுக்கு நேசமானதையே நாங்கள் செய்து விடுகின்றோம்.
வஸ்ஸலாம்
தேழமையுடன்
தமுமுக - குவைத் மண்டலம்

April 21, 2008

புதுவை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் மாபெரும் வெற்றி

புதுச்சேரி மாநிலத்தில், முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என அதன் அரசு அறிவித்துவிட்டுப் பின்னர் செயல்படுத்தாமல் இருப்பதைக் கண்டித்து, புதுச்சேரி சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தியது. தமுமுகவின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி போராட்டப் பேரணியை ஒழுங்கமைத்தார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு உட்பட ஊர்களில் இருந்து கடல் கொந்தளித்த வெள்ளம் போல மக்கள் திரண்டு வந்தனர். பேருந்துகளிலும், வாகனங்களிலும் காரைக்கால் தமுமுகவினர் மக்களை அள்ளிக் கொண்டு வந்து புதுச்சேரி தலைநகரில் கொட்டினர். பேரணியில் திரண்ட மக்கள் ஐந்தாயிரத்திற்கும் கூடுதலாக இருந்தனர். பச்சிளம் குழந்தைகளை சுமந்து வந்த தாய்மார்கள், கால் கடுக்க 3.கி.மீக்கும் கூடுதலான தூரத்தை, பேரணியில் கடந்தனர். சுமார் 4.30 மணியளவில் புதுச்சேரி இரயில் நிலையத்திறகு எதிர்புறம் ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் சிறுமியர்களும் திரண்டனர். பேரணியின் துவக்கத்தில் பெண்கள் சென்றனர். அவர்களை தொடர்ந்து ஆண்களின் அணிவகுப்பு தமுமுக தலைவா பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்வை பின் தொடர்ந்து சென்றது.
புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமியை கண்டித்து மக்கள் ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்பினர். ''ரங்கசாமி அண்ணாச்சி, இடஒதுக்கீடு என்னாச்சி'' என்று கேள்வி எழுப்பினர்.
பேரணி மிக்க கண்ணியமாகவும், அதே நேரம் கோரிக்கையை வலியுறுத்தும் வேகத்தையும், ஆவேசத்தையும் குறைத்து விடாமலும் முக்கிய சாலைகளை கடந்து சென்றது, 'பழைய பேருந்து நிலையம், அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியே பொது மருத்துவ மனையை அடைந்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் கூடுதலாகவே பேரணி நகரத்தை கடந்து சென்றது. காவல்துறையினருக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. இது தமுமுக நடத்தும் போராட்டம். பயப்படத் தேவையில்லை என்ற காவல்துறையினரின் உள் உணர்ச்சியை அவர்களது பதற்றமற்ற நடவடிக்கைகள் வெளிப்படுத்தின. பேரணியினருக்கு எந்த இடையூறும் தராமலும், மனதளவில் கூட காயங்களை ஏற்படுத்தா வண்ணமும் நட்பியல் முறையில் புதுச்சேரி காவல்துறை தமுமுகவின் உணர்வுப் பூர்வமான போராட்டத்திற்கு ஒத்துழைப்புத் தந்தது.
பேரணி புதுச்சேரி சட்டமன்றத்தின் சற்று முந்தி தொலைவில் காவல்துறையின் தடுப்பு அணைகளால் நிறுத்தப்பட்டது. அதுவே பேரணி முற்றுப்பெறும் எல்லையாக இலக்கு வைக்கப்பட்டிருந்தது.
பாண்டிச்சேரி வீதிகள் அத்தனையும் மிக அழகானவை. அதனால் பேரணியின் நெடிய தூரம் கடந்த வந்த ஆண்களும், பெண்களும் சாலையில் அமர தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் உணர்ச்சி மிக்க உரை ஒன்றை நிகழ்த்தினார். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அடுத்த திட்டமிட்டபடி காவல்துறை போராட்டக்காரர்களை கைது செய்யத் தொடங்கியது. காவல்துறை வாகனங்களில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். பின்னர் இந்த சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் சுமார் இரவு 8 மணி அளவில் முற்றுப்பெற்றது. இந்தப் போராட்டம் பாண்டிச்சேரியை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் முதல்வர் ரெங்கசாமிக்கும் முஸ்லிம் தனி ஒதுக்கீடு பற்றி நினைவூட்டுவதோடு மட்டுமின்றி எச்சரிக்கும் செயலாகவே நடத்தப்பட்டது. தொடர்ந்து மௌனம் காக்கப்படுமானால் வேறுவிதமான நெருக்கடி போராட்டங்களை புதுச்சேரி சந்திக்கும் நாள் தொலைவில் இல்லை என்று எச்சரிக்கையும் இந்தப் பேரணி போராட்டம் விடுத்து வந்துள்ளது. புதுவை முஸ்லிம்களின் உரிமை குரலுக்கு வலுசேர்க்க சகோதர அமைப்பினர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வரவேற்றனர்.
பெரியார் தி.கவின் புதுவை மாநில தலைவர் லோகு ஐயப்பன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் அமுதவன், பாவணன், புஸ்ஸி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்து மக்கள் குடிமையியல் உரிமை கழகத்தின் சுகுமாரன் ஆகியோர் வரவேற்று ஆதரவு தந்தனர்.
மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைது, மாநில துணைச் செயலாளர் ஜெ. ஹாஜாகனி, மாநில உலமாக்கள் அணிச் செயலாளர் யூசுப் எஸ்.பி., காரைக்கால் மாவட்டத் தலைவர் லியாக்கத் அலி, பாண்டிச்சேரி மாவட்டப் பொறுப்பாளர் ஜலால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்தப் போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியோடு நடந்து முடிந்தது. இன்னும் சில நாட்கள்ல அல்லது சில வாரங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டத்தை அறிவிப்போம் என புதுவை தமுமுக கூறியுள்ளது.
பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் டி.ஆர். பட்டணம், நிரவி இன்னும் பல இடங்களில் இருந்தும் முஸ்லிம்களின் வங்கக்கடலென அலை நுரைத்து வந்தனர்.

April 17, 2008

வசைபாடும் வாலிபர் சங்கத்தினரின் நிகழ்ச்சி


ததஜவின் அரசியல் பரிணாமம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. .
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது பிரபலமான பழமொழி. தேர்தல் வரும் பின்னே, மாநாடுகள் வரும் முன்னே என்பது தற்கால புதுமொழி. போட்டி போட்டுக் கொண்டு பலரும் பல பெயர்களில் மாநாடுகள் நடத்தத் துவங்கி விட்டனர்.
இளைஞர் மாநாடு என்றும், மாநில மாநாடு என்றும், பெண்கள் மாநாடு என்றும் ஒன்றன்பின் ஒன்றாக ஒலிபெருக்கிகள் உரத்து ஒலிக்க தேர்தல் திருவிழா துவங்கி விட்டது போல் தான் தோன்றுகிறது.
அரசியல் மாநாடுகள் மட்டுமின்றி, ஆன்மீக மாநாடுகள் கூட ஆதரவு பலத்தைக் காட்டி அரசியல் கட்சிகளிடம் ஆதாய பேரத்தை நடத்துவதற்காக ஆங்காங்கே நடத்தப் போகின்றன. அப்படிப்பட்ட ஒரு மாநாட்டிற்கான அழைப்பைப் பாருங்கள்.
'தங்களின் அரசியல் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளவும், பலப்படுத்திக் கொள்ளவும் அல்லது அரசியலில் அடியெடுத்து வைக்கவும் மாநாடுகள் நடத்தப் படுகின்றன. ஆனால் இவைகளில் முற்றிலும் மாறுபட்ட இதுவரை சமுதாயமே கண்டிராத வகையில் படைத்த இறைவனையே வணங்க வேண்டும், படைப்புகளை வணங்கக் கூடாது என்ற ஓர் இறை மந்திரம் உலகமெங்கும் பரவுவதற்காக நடத்தப்படுகிறது இந்த மாநாடு' – என்ற முன்னறிவிப்புடனும் ஒரு மாநாடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்குறிப்பிட்ட வாசகத்தை எழுதியிருப்பவர் உலக மகா அயோக்கிய சிகாமணி சாட்சாத் பிஜே தான். இவரிடத்தில் ஒரு பண்பு உள்ளது. அதாவது தான் நாடியுள்ள அயோக்கியத்தனத்தை பிறர் செய்வதாக குற்றம் சுமத்தி மக்கள் முன்னால் தான் ஒரு நியாயவான் போல பறைசாற்றிக் கொண்டு விட்டு, பிறகு மெதுவாக தான் எவற்றையெல்லாம் எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டாரோ அவற்றை செயல்படுத்த துவங்கி விடுவார். இவரின் இந்த குணத்தை அறிந்தவர்களுக்கு இந்த அழைப்பின் மூலம் இவர் விடுத்திருக்கும் செய்தி தான் - ததஜ அரசியல் பரிணாமம் எடுக்கப் போகிறது.
நாம் இப்படி எழுதியதும், ஓய்ந்து போய்விட்ட உமரோ, அடங்கிப் போன அஹமது அலியோ அல்லது அவ்வப்போது பிஜேவிற்கு வால் பிடித்து சூடு பட்டுக் கொள்ளும் அதிரை ஃபாரூக்கோ ஆவேசமாக வெளிவரலாம். என்றாலும் கூட நாம் எழுதியுள்ளது வாஸ்தவம் தான் என அவர்களும் கூட உள்ளூர ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.
ஏனெனில்,
ஏப்ரல் 2004 இல், இனி தான் நினைத்த படி தமுமுக தலைமையை ஆட்டுவிக்க முடியாது என்ற நிலை வந்ததும், தமுமுகவின் சொத்துக்களை சுருட்டிக் கொண்டு தமுமுகவிலிருந்து ஓடினாரே.. .. அன்று அவர் கூறியது என்ன தெரியுமா?
பலர் மறந்திருப்பார்கள், பலர் அவ்வாறு கூறியதை நம்பி தமுமுகவிலிருந்து வெளியேறி அவருடன் கைகோர்த்து நின்ற சில நாட்களிலேயே அவரது சிந்தனை, சீர்கேட்டின் பக்கம் செல்வதை உணர்ந்து சப்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டனர். இவை எல்லாவற்றையும் புரிந்து கொள்ள இயலாத சிலரும், தனது சொந்த நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாதென்ற எண்ணம் கொண்ட சில சுயநலமிகளும் தான் மிஞ்சி இருக்கின்றனர். எனவே தான் மீண்டும் மக்களை திரள வைக்க வேண்டுமென்றால் அன்று சொன்னதையே இன்றும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினால் தான் தவ்ஹீத் எழுச்சி மாநாடு என்ற பெயரில் அரசியல் பரிணாமத்திற்கான அடிக்கல் நாட்ட முயற்சிக்கிறார்.
அன்று தமுமுகவிலிருந்து விலகி ஓடிய போது சொன்ன காரணம், 'தமுமுக – தவ்ஹீது கொள்கைக்கு எதிராக செயல்படுகிறது. அதனால் அதிலிருந்து வெளியேறி விட்டேன். இனி தவ்ஹீது கொள்கையை உயர்த்துவதற்காக பணியாற்றப் போகிறேன். தவிர, தமுமுக என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது நிறைவேறி விட்டது. எனவே தமுமுக என்ற ஒன்று, அதன் பணிகள் எதுவும் இன்று அவசியமற்றதாகி விட்டது. எனவே அங்கிருப்பவர்கள் உடனடியாக வெளியேறி என் பின்னே அணிவகுக்க வேண்டும்' – என்று மேடைகளிலும், தமுமுக ஆறு மாதங்களில் அழிந்து விடும் எனவே இங்கு வந்து விடுங்கள் என தனி நபர்களிடமும் கதை அளந்து பார்த்தார்.
80 களிலிருந்து அவருடன் இருந்தாலும், அவரது நோக்கத்தை புரிந்து கொள்ளாத சிலர் அவர் கூறிய தவ்ஹீத் எனும் தாரக மந்திரத்தால் மயங்கி அவரின் பின் சென்றனர். எந்த தமுமுகவிற்கான அவசியமோ, அவர்களின் பணியோ இந்த தமிழகத்திற்கு அவசியமற்றதாகி விட்டதாகச் சொன்னாரோ, அதே தமுமுகவை காப்பியடித்து கொடி முதல் கொள்கை வரை பின்பற்ற ஆரம்பித்தார்.
தவ்ஹீத் தான் என் உயிர் மூச்சு, நாங்கள் கொடி தூக்கும் கோமாளிகளல்ல மாறாக இது கொள்கை காக்கும் கூடாரம் என கொக்கரித்தவர்கள் பெற வேண்டியதை பெற்றுக் கொண்டதாலோ அல்லது வேறு எந்த நிர்பந்தத்திற்காகவோ அதைப் பற்றி பிறகு மூச்சுக்கூட விட வில்லை. ஆனால் தவ்ஹீத் என்ற பெயரால் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதனை தாமதமாக உணர்ந்து கொண்ட பலர் மவுனமாக ஒதுங்கிக் கொண்டனர்.
அரசின் ஆதரவோடும் அன்று இருந்த அரசியின் ஆசியோடும், அனுசரணையோடும் கும்பமேளா ஒன்றை நடத்த முயற்சித்தார். ஆனால் அந்த கும்பமேளாவை தவ்ஹீதின் பெயரால் நடத்த முற்படவில்லை. தவ்ஹீத்தான் எமது உயிர் மூச்சு என்று சொல்லிக் கொண்டாலும், இஸ்லாமிய எதிரியான செல்வியோடு அரசியல் கூட்டணி காண வேண்டும். அதனால் தவ்ஹீத் என்று சொல்லி அதனால் பொதுமக்கள் (அவரது பாஷையில் குராஃபிகள்) வராமல் போய் விட்டால் பேரம் படியாது என்ற பயத்தினால் தமுமுகவின் முழுமுதற் கோரிக்கையை கையில் எடுத்து இட ஒதுக்கீடு கோரிக்கை மாநாடு என்று பெயரிட்டு கும்பமேளாவிற்கு கூட்டத்தை சேர்க்க நாடினார்.
அந்தோ பரிதாபம். அதிலும் தோல்வி தான். தமுமுக இதே ஒதுக்கீடு கோரிக்கைக்காக தஞ்சையில் திரண்ட போது அலை அலையாய் ஆர்ப்பரித்து வந்த தமிழக முஸ்லிம்கள் இவரின் கும்பமேளாவிற்கு குறைந்த அளவிலேயே கூடினர். ஒன்னரை லட்சத்தை தாண்டாத அந்த கூட்டத்தை உருப்பெருக்கி, அதனையும் பல முறை பெருக்கி 10 இலட்சத்திலிருந்து 18 இலட்சம் வரை இஷ்டத்திற்கு எண்ணிக்கையை அறிவித்து இங்கிலாந்து மகாராணியின் ஒட்டியாணத்தை ஏலம் விடுவது போல சமுதாயத்தை ஏலம் விட்டார்.
என்றாலும் அரசியின் முன் அடங்கி ஒடுங்கி ஒரு இலட்சம் பேர் வரை கூடினார்கள் என்று சுருதி குறைந்து ஸ்வரம் வாசித்தார்.
இது 2005 கதை. அன்று சொன்ன அதே கதையை இன்று விட முடியாது. அரசியின் முன்பாக அடங்கி ஒடுங்கி குடுத்த வாக்குமூலம் சம்சுதீன் காஸிமி போன்றோர்களால் சந்திக்கு இழுத்து வரப்பட்டு விட்டது. தவிர அன்று அரசியல் பேரம் பேச இடஒதுக்கீடு கோரிக்கையை முகமூடியாய் பயன்படுத்தியது போல் இன்று படம் காட்ட வழியில்லை. பெயரளவிற்காவது ஒரு அரசு ஆணை வெளியாகி விட்டது. அதற்காக தலைவரை தனியே சந்தித்து அடிமை சாசனமும் எழுதிக் கொடுத்தாகி விட்டது. அதனால் இடஒதுக்கீடு பற்றிப் பேச முடியாது. எனவே தான் மீண்டும் தவ்ஹீத்.
சமுதாயத்தை கூட்டி வந்து அரசியிடம் காண்பித்து பேரம் நடத்தியதில் பெரும் தொகை கைமாறியதாக அன்றே ஒரு பேச்சு அடிபட்டது. அப்படி அரசியிடமிருந்து சேர்ந்த பணத்தை சந்தேஷமா, செலவு பண்ண பக்குவமா – பத்திரப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்ததால் தலைவரை தனியே சந்தித்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தாகி விட்டது.
எனவே வேறு வழியே இல்லை.
தேவையான சமயத்தில் பிஜேபிக்கு இந்துத்துவா கைகொடுப்பது போல, பிஜேவிற்கு கை கொடுப்பது தவ்ஹீது கோஷம் தானே. இதனை கூவியதால் தானே தமுமுகவிலிருந்து ஒரு சிலரையாவது அசைக்க முடிந்தது. இதனை கூவிக் கொண்டிருப்பதால் தானே அப்பாவி தமிழ் முஸ்லிம்களை கொஞ்சமாவது தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு, அவர்களின் உழைப்பை உறிஞ்சி கொளுக்க முடிகிறது.
எனவே வேறு வழியே இல்லை. உள்ளூர் மக்களிடம் ஆதரவை எப்படிப் பெறுவது என்பதற்கு கும்பமேளாவில் கிடைத்த அனுபவம் கைகொடுக்கும். இலவச பயண ஏற்பாட்டாலும், உணவு ஏற்பாட்டாலும் ஓரளவுக்கு ஆட்களை திரட்ட இயலும். இதனைச் சொல்லியே ஏமாந்த வெளிநாட்டு ரசிகர்களிடம் ஒரு தொகையை வசூலிக்கவும் இயலும்.
இத்தனைக்கு பிறகும் எதிர்பார்த்த கூட்டம் கூட வில்லையானாலும் கவலையில்லை கும்பமேளாவில் பெற்ற அனுபவம் உள்ளது. ஒரே இடத்திலுள்ளவர்களை வெ வ்வேறு கோணங்களில் எடுத்து மிக பிரம்மாண்டமாக படம் காட்டுவதற்கான கருவிகளும் சாதனங்களும் வசதி வாய்ப்புகளும் வின்டிவியின் தயவில் தயாராக இருக்கவே இருக்கின்றது. எனவே கவலையில்லை.
தவிர, வரப்பையும், வாய்க்காலையும் கும்பகோண தெருக்களையும் நீள அகலத்தால் பெருக்கி மாநாட்டு வருகையாளர்களை கணக்கிடுவதில் பதிய முறையை கடைப்பிடித்து அரசியல்வாதிகளுக்கெல்லாம் அரிச்சுவடி கற்றுக் கொடுத்த வாத்தியார் - தவ்ஹீத் எம்ஜிஆர் - அல்லவா, இந்த பிஜே. இந்த அடிப்படையில் வல்லத்தில் வளைத்துப் போடப்பட்ட நிலத்தின் நீள அகலங்களைப் பெருக்கி லட்சகணக்கில் அல்ல கோடிக்கணக்கில் குழுமியதாக கணக்க காட்டி விடலாம்.
எனவே தான் தவ்ஹீத் பெயரில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
அதையும் கூட சற்று கவனித்துப் பார்த்தால், இவர் செய்து வரும் வரலாற்று இருட்டடிப்பு பளிச்சென விளங்கும். அதாவது தமிழக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, ஏன் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என தொலைக்காட்சிகள ஒவ்வொன்றும் நல்ல நாள் பெருநாளுக்கு அறிவிப்பு செய்வதை கண்டிருக்கிறோம்.
அரசியின் கண்ணசைவில் கைமாறிய தொகையை தொலைக்காட்சியில் முதலீடு செய்து மீண்டும் அதே தொலைக்காட்சியை அதே அரசியிடம் விற்றுப் பெருத்த பணம் பார்த்த அனுபவத்தால் இவரும் அதே டிவி பாணியை கடைப்பிடித்துள்ளார் போலும்.
'முற்றிலும் மாறுபட்ட இதுவரை சமுதாயமே கண்டிராத வகையில் .. .. .. .. ஓர் இறை தாரக மந்திரம் உலகெங்கும் பரவுவதற்காக.. .. ..'
வரலாற்றை மாற்றி எழுதுவதிலும், மறைப்பதிலும் சோ, குருமூர்த்தி வகையறாவிற்கு இணையாக பிஜேவும் விளங்குகிறார் என்ற கூற்று உண்மைதான் போலும். 2000 இல், மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு ஏகத்துவ எழுச்சி மாநாடு முன்னர் நடத்தப்பட்டது, அன்று இவருடன் இருந்தவர்களில் பலர், இவரின் வேஷம் விளங்கியதால் இவரை விட்டு விலகிச் சென்று விட்டனர்.
அன்றய மதுரை ஏகத்துவ மாநாட்டில் பிஜே, பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பக்கமே சுற்றித் திரிந்தார் என பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்த லுஹா கூட, மஸ்ஜிதுர் ரஹ்மான் கணக்கு வழக்கிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக பின்னர் அமைதியாகி விட்டார்.
அதேபோல், மற்றொரு மேலப்பாளையத்துக்காரர் மாநாட்டு வரவு செலவுகளை கவனித்துக் கொண்டிருந்தவர் மாநாட்டுப் பணிகளில் நடைபெற்ற வீண் விரயங்களை தட்டிக்கேட்ட காரணத்தினாலும், பிஜேவின் நடவடிக்கைகளை ஆட்சேபித்ததாலும், மாநாடு முடிந்தவுடன் பொருளாதார அவதூறு சுமத்தப்பட்டு, மனநோயாளியாக சித்தரிக்கப்பட்டு அமைப்பிலிருந்தும், இயக்கத்திலிருந்தும் ஓரம்கட்டப்பட்டார்.
இதுதான் ஃபளுலுல் இலாஹி வெளியேற்றப்பட்டதன் பின்னணி.
இவையெல்லாம் இன்றய தளபதிகளின் நினைவிற்க வந்துவிடக்கூடாது என்பதற்காகவே மதுரை மாநாடு பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லையோ என்னவோ.
பாக்கரின் பஸ் பயண லீலைகள் சம்பந்தமாக, கடலூர் முன்னாள் ததஜ நிர்வாகிகள் பிஜேவை முபாஹலா செய்ய அழைத்த போது ஓடோடிச் சென்று, அங்கு கூடியிருந்தவர்களை ஏன் வல்ல அல்லாஹ்வையே முட்டாளாக்குவது (நவூபில்லாஹ்) போல இவர் அவருக்குச் சொன்னதை அவர் எனக்குச் சொல்ல, அதைத் தான் நான் இவர்களுக்குச் சொன்னேன் எனக் குறிப்பிட்டாரே அது போன்று கூட ஃபளுலுல் இலாஹி விடுக்கும் முபாஹலா சவாலை சந்திக்க முடியாமல் வெருண்டோடிக் கொண்டு இருப்பவர் தான் இந்த தவ்ஹத் வாத்தியார் -எம்ஜிஆர் - பிஜே.
சேலம் கண்ணன் என்பவர் அவரிடம் சொல்லி, அவர் என்னிடம் சொன்னதைத் தான் நான் புகாராக அளித்தேன் என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், சர்க்காரியா கமிஷன் முன்பு ஆஜராகிச் சொன்னாரே அதேபோல் கடலூர்காரர்களிடம் பிஜே சொன்னதால் மாத்திரம் அவரை நாம் தவ்ஹீது வாத்தியார் என்று குறிப்பிடவில்லை. மாறாக மதுரை மாநாடு விஷயத்தில் லுஹா, இவர் மீது சுமத்திய குற்றச்சாட்டும் கூட ஒரிஜினல் வாத்தியார் எம்ஜிஆர் விஷயத்தில் ஒத்துப் போவதால் இவரை தவ்ஹீது வாத்தியார் எனக் குறிப்பிட்டுள்ளோம்.
இந்த தவ்ஹீது வாத்தியார் - எம்ஜிஆர் பிஜேவின் அழைப்பில் உள்ள மற்றொரு வாசகம் 'ஓர் இறை தாரக மந்திரம் உலகெங்கும் பரவுவதற்காக.. .. ..'
இந்த மாநாடு(?) நடக்க இருப்பது வல்லத்தில். மாநாடு நடைபெற இருப்பது தமிழ் மொழியில் மட்டுமே அப்புறம் எப்படி.. .. .. உலகமெங்கும் பரவுவதற்காக .. .. .. ???
எதையுமே மிகைப்படுத்தி பழக்கப்பட்ட திருவாளர் பிஜே, தவ்ஹீதின் உலகத் தலைமை தனக்கு வழங்கப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டார் போலும். அதனால் தான் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் தான் நடத்தும் இம்மாநாடு உலகமெங்கும் பரவும் என்று புருடா விட்டுள்ளார். அதாவது, உலகமெங்கும் ஏகத்துவ ஒளி பரவாமல் அந்தகாரம் சூழ்ந்திருப்பது போலவும், இனி இவர் நடத்தப்போகும் மாநாட்டிற்கு பிறகு தான் உலகமெங்கும் ஏகத்துவம் எதிரொலிக்கப் போகிறது போன்றதொரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.
ஆனால் உண்மையான தவ்ஹீத் எழுச்சி மாநாடுகள் உலகெங்கும் பரவலாக பல்வேறு பகுதிகளில் பல சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்டு வருவதை தவ்ஹீதின் பால் நாட்டமுள்ள அனைவரும் அறிவார்கள். சமீபத்தில் கூட உலகெங்கும் இருந்து வருகை தந்த பல அறிஞர்களைக் கொண்டு சென்னையில் பிரம்மாண்டமாக பத்து நாட்கள் பீஸ் (PEACE) மாநாடு நடந்தது. இதில் விசேஷம் என்னவெனில், பத்து நாட்களும் தமிழ், மலையாளம், உருது இவற்றுடன் ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளும் கண்காட்சிகளும் நடத்தப்பட்டமையால், முஸ்லீமல்லாத பல சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு உண்மையான ஏகத்துவத்தை விளங்கிச் சென்றனர்.
யதார்த்தம் இவ்வாறு இருக்கையில், ஏதோ இவர் வல்லத்தில் ஏற்றி வைக்கப்போகும் ஜோதி தான் உலகெங்கும் ஒளிபரப்பப் போவதைப் போன்றதொரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். உண்மையில் சென்னையில் நடைபெற்ற பத்து நாள் பீஸ் மீட்டிங்கில் தனது அடிப்;பொடிகள் எவரும் கலந்து கொள்ளக்கூடாதென தடை விதித்தவர், ஏகத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதை தடுத்து ஜும்ஆ உரையாற்றியவர், தன்னிடம் சம்பளம் வாங்கும் மவ்லவிகள் மூலமாக ஜும்ஆ உரையாற்ற வைத்தவர், இத்தனை தகுதிகளையும் தனிச்சிறப்புகளையும் பெற்றவர் தான், 'ஓர் இறை தாரக மந்திரம் உலகெங்கும் பரவுவதற்காகத் தான் இந்த தவ்ஹீத் மாநாடு' என்று அழைப்பு விடுத்துள்ளார்.
80 களில் இவரிடம் காணப்பட்ட தவ்ஹீத் கொள்கை உறுதி இன்று இல்லை என்பதை உண்மையான தவ்ஹீத்வாதிகள் அறிவர். அதற்கான சமீபத்திய சான்று தான் பாக்கர் - பஸ் - நந்தினி – பிஜேவின் ஆடியோ – பாக்கர் நீக்கம் - பாக்கரின் துபாய் பயணம் - மிரட்டல் - மீண்டும் பாக்கருக்கு முன்னிலும் கூடுதல் அதிகாரத்துடனான பதவி. இத்தனைக்குப் பிறகும் இவரிடமிருந்து ஏகத்துவத்தை விளங்க முயற்சிப்பவர் ஒன்று மார்க்கமறியாதவராக இருக்க வேண்டும் அல்லது இவர் என்ன செய்தாலும் கண்மூடி பின்பற்றும் தக்லீத்வாதியாக இருக்க வேண்டும். ஆக மொத்தம் ஸஹாபாக்கள் துவங்கி அனைத்து இஸ்லாமிய அறிஞர்களையும் ஏசிய இவரை, சுயநலத்திற்காக தவ்ஹீத் கொள்கையில் தடுமாறும் இவரை, உண்மையான தவ்ஹீத்வாதிகள் ஒருக்காலும் பின்பற்ற மாட்டார்கள்.
இந்த அச்சம் அவருள்ளும் எழுந்துள்ளதன் விளைவு தான் கவர்ச்சி அம்சங்களாக பல விஷயத்தை இந்த மாநாட்டில் இணைத்துள்ளார் போலும்.
இந்த மாநாடு சுயம்வர மாநாடாகவும் நடைபெற உள்ளதாம். ஆம். ஆணும் பெண்ணும் கலந்து செல்லும் தர்ஹா, கூடு, உரூஸ் போல இதுவும் ஒரு திருவிழா கோலம் பூண இருக்கிறது. இது போல பல நவீனத்துவங்களை (பித்அத்களை) நடத்தியாவது கூட்டம் சேர்த்தாக வேண்டுமென்ற நிர்பந்தம் காரணமாகத் தான் இத்தனை முஸ்தீபுகளும். இதற்கெல்லாம் மேலாக உச்சகட்டமாக வேறொரு முயற்சியும் நடந்து வருவதாக அறிகிறோம். இது இஸ்லாமிய சமூகத்திற்குள் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும். அதாவது மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வைப் போன்ற அமைப்பை இந்த மாநாட்டுத் திடலிலும் அமைக்க இருப்பதாக அறிகிறோம். இதே போன்றதொரு முயற்சியை 2000 ஆம் ஆண்டு மதுரையில் ஏற்பாடு செய்த ஏகத்துவ எழுச்சி மாநாட்டிலும் செய்திருந்தார். அன்றய தேதியில் பலரின் ஆட்சேபனைகளுக்கு இந்த காரியம் உள்ளானது. என்றாலும் 2000 ல் இருந்தவர்கள் இன்று அவருடன் இல்லையென்ற காரணத்தினாலும் இது போன்ற ஏதாவது ஒரு செட்டைக் காட்டியாவது மக்களை அங்கு இழுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தினாலும் இதை செய்திருக்கிறார்.
உலகிலேயே முதல் வணக்கத்தலமான கஃபாவை காட்சிப் பொருளாக்குவதை முஸ்லிம்கள் எவரும் விரும்ப மாட்டார். குறிப்பாக, உண்மை தவ்ஹீத்வாதிகள் அதனை எதிர்க்கவே செய்வார்கள். ஒரு சில மாதங்களுக்கு முன் உலகின் முன்னணி நிருவனமான ஆப்பிள் கம்பியூட்டர் கம்பெனி அமெரிக்காவில் பளிங்கு கற்களால் கஃபாவை உருவாக்க முனைந்த போது உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்த்ததே இதற்கு சாட்சி. வரலாற்றிலும் கூட அப்ரஹா மன்னன் அபாபீல் பறவைக் கூட்டத்தால் அழிக்கப்படுவதற்கு முன்னால் ஏமன் நாட்டில் கஃபாவைப் போன்றதொன்றை அவன் உருவாக்கியது வரலாற்றுப் பதிவு. என்றாலும் அதனை அப்போது இருந்த முஸ்லிம்களும் எதிர்த்தார்கள் என்பதும் வரலாறு.
ஆக எப்பாடு பட்டாவது இஸ்லாத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டாவது தன் ரசிகர்களுக்கும் ஏதமறியாத அப்பாவி முஸ்லிம்களுக்கும் படம் காட்டி அதன் மூலம் பணமும் பலத்தையும் கொள்முதல் செய்ய வேண்டுமென்று எண்ணுகிறார் போலும். இதற்காக எவ்வளவு செலவழித்தாலும் அவரைப் பொறுத்த அளவில் அவை அனைத்துமே இவ்வுலக வியாபாரத்தில் இடப்படும் முதலீடு தான்.
இதைப் போலவே 2005 ஜனவரியில் கூட்டிய (கூடிய அல்ல) கூட்டத்தைக் காட்டி போயஸ் தோட்டத்து பொன் மகள் (அன்றய அரசி)யிடம் சன்மானம் பெற்றுக் கொண்டார். தேர்தல் நேரத்தில் தளபதியாகவும் செயல்பட்டார். அதனால் தான் இப்பொழுது என்ன செலவானாலும் அதனை மீண்டும் என்கேஷ் பண்ணிக் கொள்ளலாம் என்று தாரளமாக செலவு செய்கிறார். இதைச் சொல்லியே ஒரு பெருந்தொகை வசூலிக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
எல்லாம் முடிந்த பின் தப்பித் தவறி யாரேனும் கணக்கு கேட்டாலோ, ஃபளுலுல் இலாஹிக்கு நேர்ந்த கதி தான் என்பதை உணர்ந்த இந்நாள் தளபதிகள் மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டு உள்ளனர்.
ஏற்கனவே மக்களை விலை பேசி சேர்த்த பணத்தை செழிக்க வைப்பதற்காக சிலு சிலு சிங்கப்பூரில் வியாபார முதலீடு செய்து தனது பினாமியை – அற்புத மனிதன் அலாவுதீனை (40 பேர் ஏறி உயிர் நிலையில் உதைத்த பின்னும் உயிர் பிழைப்பவர் அற்புத மனிதராகத் தானே இருக்க முடியும்) நாடு கடத்தியாகி விட்டது.
இந்த மாநாட்டை யாரிடம் காட்டி சமுதாயத்தை விலை பேச காத்திருக்கிறாரோ?! இதன் மூலம் பெறும் கையூட்டைக் கொண்டு பினாமியாக பிஸினஸ் நடத்தும் பாக்கியம் எந்த தளபதிக்கு கிடைக்கப் போகிறதோ.
பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி - முத்துப்பேட்டை வலைப்பூ

April 13, 2008

மத்திய அரசு நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னிங் பணியிடங்கள்

மத்திய பொதுத் துறை நிறுவனமான புராஜக்ட்ஸ் அண்ட் டெவலப்மென்ட் இந்தியாவில் காலியாகவுள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் ஒரு ஐ.எஸ்.ஓ. 90012000 சான்றிதழ் நிறுவனம். டிசைன் இன்ஜினியரிங் மற்றும் கன்சல்டன்சி நிறுவனமான இது 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பெரிய உரத் தொழிற்சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைகள், வீட்டு வசதி மற்றும் டவுன்சிப் போன்றவற்றை உருவாக்கும் பணியில் இது ஈடுபட்டுள்ளது. மொத்தத்தில் இது ஒரு அடிப்படை கட்டுமான வசதி உருவாக்க நிறுவனமாகும். இதன் நொய்டா, பரோடா, சிந்திரி, மும்பை, சென்னை, ஐதராபாத் மற்றும் கோல்கட்டா பணிகளுக்குத் தேவைப்படும் மேனேஜ்மென்ட் டிரெய்னிகளுக்கான அறிவிப்பை இது இப்போது வெளியிட்டுள்ளது. எந்த பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன?*சிவில், கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ருமெண்டேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ் ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்தவருக்கான காலியிடங்கள் உள்ளன.

மார்க்கெட்டிங், சேல்ஸ் பிரிவுகளில் பி.எஸ்சி./எம்.எஸ்சி. முடித்து அதன் பின் எம்.பி.ஏ./பி.ஜி.டி.பி.எம். தகுதி பெற்றிருப்போருக்கான காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்தத் தகுதி தரும் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். பட்ட மேற்படிப்பு முடித்திருப்போர் அதிக பட்சம்õக 25 வயது இருக்கலாம். ஏப்ரல் 30, 2008தேதியை அடிப்படையாக வைத்து இது கணக்கிடப்படும். தற்போது இந்தப் படிப்புகளில் இறுதியாண்டு படிப்பவரும் விண்ணப்பிக்கலாம்.


முக்கியக் குறிப்புகள்:


எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள். இப்பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300. இதை புராஜக்ட்ஸ் அண்ட் டெவலப்மென்ட் இந்தியா லிமிடட் என்ற பெயரில் நொய்டா/டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். முழு விபரங்களும் படிவமும் நிறுவனத்தின் இன்டர்நெட் தளமான http://www.pdilin.com தரப்பட்டுள்ளது. பார்த்து விண்ணப்பிக்கவும்.


விண்ணப்பிக்கும் முகவரி:


Dy. General Manager (HR), PDIL, PDIL Bhawan, A14, Sector1, Noida 201301.


விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்:

ஏப்ரல் 21, 2008.


டிரைவிங் அறிந்தவருக்கு ராணுவத்தில் பணி

நமக்குத் தெரிந்தவர் பலர் நல்ல திறமை உடையவர்களாகவும் போதிய படிப்பு இல்லாதவராகவும் இருப்பதை அவ்வப்போது பார்க்கிறோம். சிறப்புத் திறன்களைப் பெற்றிருக்கும் சிலருக்கு கல்வித் தகுதி இல்லாத காரணத்தினாலேயே நல்ல வேலை வாய்ப்புகள் இல்லாமலிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்குமான வேலைகள் இருக்கத் தான் செய்கின்றன. இவற்றை அறிந்து தக்க சமயத்தில் விண்ணப்பிப்பதன் மூலமாக நல்ல வேலை வாய்ப்புகளை நாம் பெற முடியும். இது போன்ற ஒரு வாய்ப்பை ராணுவ துணைப் பிரிவான சஸாஸ்டிர சீமா பெல் அறிவித்துள்ளது. இது பற்றிய விபரங்கள்.பணியின் பெயர்: கான்ஸ்டபிள் (டிரைவர்)

காலியிட எண்ணிக்கை:

221வேலை வாய்ப்பு முறை: நேரடி சேர்க்கை
விளம்பர எண்: BE/FTRL/RECTT/082

தகுதிகள்:

*10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டும் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.*உயரம் குறைந்தது 170 செ.மீ. இருக்க வேண்டும். மார்பளவு 80 செ.மீ. இருப்பதுடன் குறைந்தது 5 செ.மீ.விரிவடைவதாக இருப்பதும் முக்கியம்.*சிறப்பான கண் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும். *தட்டையான பாதம், கிட்டப்பார்வை, மாறுகண், நிறக்குருடு, தட்டும் முட்டி போன்றவற்றைப் பெற்றிருப்போர் இப் பணிகளுக்கு தகுதியில்லை. *ஆகஸ்ட் 1, 2008 அன்று 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
*ஆறரை நிமிடங்களில் 1.6 கி.மீ. தூரம் ஓடுவது, 11 அடி நீளம் தாண்டுவது மற்றும் 3.6 அடி உயரம் தாண்டுவது போன்றவற்றில் தகுதி பெற வேண்டும்.*இதில் தகுதி பெறுபவருக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.*நேரடியாக சென்று தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். அப்படிச் செல்லும் போது விண்ணப்பத்தைத் தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும்.*நேரில் செல்லும் போது கல்வித் தகுதிகள், வயது, பிறந்த தேதி, கனரக வாகன ஓட்டும் உரிமம், ஜாதி, இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.*தேர்வுக்கு தங்களது சொந்த செலவிலேயே சென்று வர வேண்டும். தேர்வு முறைக்குச் செல்ல வேண்டிய முகவரி:.

விண்ணப்பிக்கும் முகவரி:

Distt. Police Line Mau (UP)or 5th Bn., (SSB) Majra Farm,Lakhimpur Kheri District, Lakhimpur Kheri (UP).
தேர்வுகள் தொடங்கப்படும் நாள் ஏப்ரல் 15, 2008. முடியும் நாள் ஏப்ரல் 23, 2008. முழு விபரங்களறிய இன்டர்நெட் முகவரி:
http://www.ssb.nic.in/

ரயில்வே பணி வாய்ப்புகள் - ஒரு அறிமுகம்

ஆறாவது சம்பளக் குழுவின் சிபாரிசுகள் பற்றி அதிகமாக பேசப்படும் காலகட்டம் இது. மத்தியஅரசு மாநில அரசு பணிகளில் சேர வேண்டும் என்ற எண்ணம் நமது இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேண்டுமானால் குறைந்து கொண்டே வரலாம். ஆனால் பி.ஏ./பி.எஸ்சி./ பி.காம்/இன்ஜினியரிங் டிப்ளமோ போன்ற எண்ணற்ற பிற படிப்புகளைப் படிப்பவருக்கு இன்னமும் கால் துட்டு என்றாலும் கவர்ன்மென்ட் துட்டு தான் பெரியதாக இருக்கிறது. கடந்த நூற்றாண்டின் இறுதியில் பெரிய அளவில் அரசு வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. மேலும் புதிதாக ஊழியர்களை எடுத்துக் கொள்ள அனுமதி மறுக் கப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது மாறி இப்போது புதிய வாய்ப்புகள் அறிவிக் கப்பட்டுக் கொண்டேயிருப்பதை காண்கிறோம். எண்ணற்ற வேலைகளை இந்திய ரயில்வே அறிவித்து வருகிறது. ஆயிரக்கணக்கில் அறிவிக்கப்படும் இந்த வேலை வாய்ப்புகள் நமது இளைஞர் களுக்கான மிக மிக உன்னதமான செய்தியாக விளங்குகிறது. இந்திய ரயில்வேயின் வேலை வாய்ப்புகளைப் பற்றி நமது இளைஞர்கள் அறிந்து கொள்ள இதோ ஒரு சிறு அறிமுகம்.

இந்திய ரயில்வே பணிகள் எவை?:
இந்திய ரயில்வே பணிகளில் கிளாஸ் 1 மற்றும் கிளாஸ் 2 கெசடட் அதிகாரி நிலை பணிகள் உள்ளன. கிளாஸ் 1 பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வு மூலமாக திறன் வாய்ந்த நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆண்டு தோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக இது மேற்கொள்ளப்படுகிறது. இந்திய ரயில்வே டிராபிக் சர்விஸ் மற்றும் இந்திய ரயில்வே அக்கவுன்ட்ஸ் சர்விஸ் பணிகளுக்கு சிவில் சர்விஸ் தேர்வு மூலமாக சேர்க்கை நடக்கிறது.
கிளாஸ் 2 பணிகள் கிளாஸ் 3 நிலையிலிருந்து பதவி உயர்வு பெறுவோரைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. கிளாஸ் 3ல் டெக்னிகல் மற்றும் டெக்னிகல் அல்லாத ஊழியர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் கலெக்டர், கார்டு,டிரைவர், ஒர்க்ஷாப் சார்ஜ்மேன், போர்மென் ஆகியவர்கள் இதில் தான் வருகின்றனர்.
கிளாஸ் 3 நிலை டெக்னிகல் பணிகளுக்கு இன்ஜினியரிங் டிப்ளமோ தகுதி பெற்றிருப்போர் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆர்.ஆர்.பி. எனப்படும் ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டுகள் இவர்களை பணிக்கு எடுத்துக் கொள்ள போட்டித் தேர்வுகளை நடத்துகின்றன.

சில பணிகளும் தகுதிகளும்: டிராபிக் அப்ரென்டிஸ்/கமர்சியல் அப்ரென்டிஸ்/அசிஸ்டன்ட் ஸ்டேசன் மாஸ்டர்/டிரெய்னி கார்டு/குட்ஸ் கார்டு/என்கொயரி கம் ரிசர்வேசன் கிளார்க்/ஜூனியர் அக்கவுன்ட்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்திருப்போர் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு பொதுவாக 18 முதல் 30 வயது வரம்பு இருக்கிறது. பிற நான்டெக்னிகல் பணிகளுக்கு 10ம் வகுப்பு தகுதி தான் தேவைப்படுகிறது.


அசிஸ்டன்ட் டிரைவர்/ஸ்கில்ட் பிட்டர்/அப்ரென்டிஸ் மெக்கானிக் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ/ஐ.டி.ஐ. தகுதிகள் தேவை. பொதுவாக ரயில்வேயின் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்கு 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை பயிற்சி செய்தால் போதும். பொது அறிவு, கணிதம், ரீசனிங் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின் றன. டெக்னிகல் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் கேள்விகள் கொண்ட தேர்வு நடத்தப்படும். ரயில்வே வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை நமது நாளிதழின் இந்த சிறப்புப் பகுதியில் அவ்வப்போது தந்து வருகிறோம். தவறாது கவனித்து பயனடையவும்.

வாழ்க வ.வா.ச - குவைத்