இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

December 29, 2007

மசூதிக்குள் இறந்த பன்றி வீச்சு - சந்தேகம் பணபாலு

தாராபுரம் நகராட்சி கண்ணன் நகர் பைபாஸ் ரோட்டில் மசூதி உள்ளது. நேற்று அதிகாலையில் தொழுகை நடத்த, மசூதி கேட்டை திறந்தனர். அங்கு இறந்த பன்றி கிடந்தது. தகவல் பரவியதும் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டனர்.

தகவல் அறிந்ததும் தாராபுரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மசூதிக்குள் இருந்த பன்றி உடலை அப்புறப்படுத்தினார். மசூதி பொறுப்பாளர், "பன்றியை மசூதிக்குள் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மசூதிக்குள் பன்றி வீசியதை கேள்விப்பட்ட அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் சாரைசாரையாக வந்து பார்த்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமாக இருந்தது.

அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழாமல் தடுக்க கோவை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் தாராபுரத்தில் குவிக்கப்பட்டனர். கோவில்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகம் பணபாலு: தென்னமரத்தில தேள் கொட்ட பனை மரத்தில நெறி கட்டுச்சாம். மசூதிக்குள் பன்றிய வீசிட்டு கோயில பாதுகாக்குறாங்களாம்.

December 26, 2007

பராக்.... பராக்.... நரமாமிச நரேந்திரமோடி பராக்

சபர்மதி ரயிலை எரித்த.... அந்த பழியை முஸ்லிம்கள் மீது திணித்த.... கர்பிணி வயிற்றை கிழித்த.... உள்ளிருந்த சிசுவை கொன்ற நரமாமிச வேட்டையன் நரேந்திர மோடி பராக்
சாத்தானின் வருகையால் சந்தோஷப்பட்டவர்கள்
திருச்சியில் பா.ஜ., கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்குஜராத் சட்டசபைத் தேர்தலில் பெருபான்மை தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்ததை, திருச்சி மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதை தமிழகத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடினர். திருச்சி மாவட்டத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் கட்சியின் குஜராத் வெற்றியை கொண்டாடினர். திருச்சி மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் கண்ணன் தலைமையில் ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள வழிவிடு வேல்முருகன் கோயில் அருகே கூடிய பாரதிய ஜனதாக் கட்சியினர் வெடி வெடித்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களின் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். ஜங்சன் பஸ்ஸ்டாண்ட் சென்ற கட்சியினர் அங்கும் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பின்னர் டி.வி.எஸ்., டோல்கேட், பாலக்கரை, சத்திரம் பஸ்ஸ்டாண்ட், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலும் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பாரதிய ஜனதாவினர் தங்கள் கட்சியின் குஜராத் வெற்றியை கொண்டாடினர். கொண்டாட்ட நிகழ்ச்சியில் கட்சியின் மாநில வர்த்தக அணி பொறுப்பாளர் ராஜப்பா ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் திருமால், சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியம், மகளிரணி பொறுப்பாளர் அமுதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பா.ஜ., கொண்டாட்டம் சேலம்: குஜராத் சட்டசபை தேர்தல் வெற்றியை சேலம் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக நரேந்திரமோடி முதல்வராக பொறுப்பேற்கிறார்.சேலத்தில் தலைமை தபால் அலுவலகம் முன் பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் தலைமையில் கட்சியினர் கூடினர். அங்கு, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.

சபர்மதி ரயிலில் இறந்து போன மோடியின் சூழ்ச்சி தெரியாத அப்பாவி பாஜக வினரே இந்த வெற்றிக்கான பலிகடாக்கள். இன்று பட்டாசு வெடித்து பரவசப்படும் பாஜகவினர்களே மோடியின் அற்ப சந்தோஷத்திற்காக நாளை நீங்களும் பலிகடாவாக்கப்படலாம்.

தெஹல்கா கண்டறிந்த வீடியோ ஆதாரங்களை யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. வெகுஜன மக்களால் படிக்கப்படும் எந்த நாளிதழிலும் வெளியிடவுமில்லை. குஜராத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்துவெறி பிடித்த பாஸிஸ சக்திகளின் வெறியாட்டத்தின் போது அகதிகளாக துரத்தியடிக்கப்பட்டவர்கள் இன்றுவரை எல்லையோர முகாம்களிலேயே தங்கி வருகின்றனர். காங்கிரஸும், பாஜகவும் பிரச்சாரம் செய்தது முழுக்க, முழுக்க பாஸிஸ வெறிபிடித்த இந்துக்களிடம் மட்டுமே. தேர்தலில் வாக்களிக்க வந்திருந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் மட்டுமே. ஊடகங்களின் வீடியோ பதிவுகளுக்காக இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்த இந்துக்களையே காட்டியுள்ளனர். மூன்று நாட்கள் அரசு இயந்திரத்தையே நிறுத்திவைத்து சிறுபான்மையினர் மீது கொலை வெறித்தாக்குதலை தனது தலைமையிலேயே நடத்திய அராஜக நரமாமிச நரேந்திரமோடிக்கு தேர்தலில் வெற்றி வெற்றியடைந்தது ஒரு வீரச்செயலே அல்ல.

அதுமட்டுமின்றி தேர்தல் மட்டுமே ஒரு தனி மனிதனை, ஒரு மனித மிருகத்தை எடை போடும் அளவீட்டுக்கருவியாகாது. ஏனென்றால், இந்தியாவில் தேர்தல்களின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தேர்தலுக்காகவும், தேர்தல் நேரங்களிலும் நடைபெற்று வந்த அராஜகமும், வன்முறைகளும், கலவரங்களுமே ஜனநாயகத்தை விலைபேசுகின்றது. மேலும் தேர்தல் தினத்தன்று பிற்பகல் நேரங்களே வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்கின்றது. அமைதிப்பூங்காவான தமிழகத்தின் தேர்தல்களங்களே அனலை பறக்கவிடும் போது, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை குத்திக்கிழித்து உள்ளிருக்கும் சிசுவை தீயிலிட்டதையும், கணவர் மற்றும் தந்தை கண்ணெதிரே பெண்களைக் கதற கதற கற்பழித்ததையும் உலகுக்கே மறைத்ததையும், உள்ளுக்குள் பெருமை பொங்க புளங்காங்கிதம் அடைந்து பரவசப்பட்டு ஆனந்தத்தில் கொக்கரிக்கும் கொடுங்கோலர்கள் வாழும் குஜராத்தின் தேர்தல்களம் என்ன பாடுபட்டதோ தெரியவில்லை. இவர்களின் இந்த சந்தோஷம் அரவாணி கற்பம் தரித்ததைப்போல் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல்தான் உண்மை ஜனநாயகம் மோடிக்கு ஒருநாளும் வெற்றியைத் தராது என்பது புத்தியில்லாதவனும் விளங்கிக்கொள்ளும் நிதர்சனம். அதைவிடுத்து இந்த வெற்றிக்காக இனிப்பு வழங்குவது, வெடி வெடிப்பது எல்லாம் அரவாணியின் ஆதாரமில்லா சந்தோஷத்தை தான் காட்டுகிறதே தவிர வேறில்லை. அல்லாஹ் அறிவீனர்களின் கண்களை திறக்கட்டும்.

December 17, 2007

கலைஞர் டிவியில் நன்றி அறிவிப்பு மாநாடு

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...,



19-12-2007 புதன் 20-12-2007 வியாழன் ஆகிய இரண்டு நாட்களும் மாலை 5 மணிக்கு கலைஞர் டி.வி.யை பார்க்கத் தவறாதீர்கள். 2007 நவம்பர் 24 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் த.மு.மு.க. நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு ஒளிபரப்பாகிறது.

தமுமுக - குவைத் மண்டலத்தின் வாழ்த்துக்கள்

December 13, 2007

மீண்டும்....கொடுத்த வாக்கை காப்பற்றிய முதல்வர்


... யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ,(அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான். (3:76 )

December 12, 2007

குவைத்தில் நடந்த கண்டனக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...,

பாபர் மசூதி வழக்கு நிலுவை மற்றும் இலுவையை கண்டித்து தமிழகம் முழுவதும் நீதிமன்ற முற்றுகை போராட்டம் நடத்த தமுமுக ஏற்பாடு செய்தது. அதேபோல், குவைத்திலும் மண்டல தலைமையும் கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.

மேடையில் வீற்றிருக்கும் மண்டலத்தலைவர் சகோ. அமானுல்லாஹ், மண்டலச்செயலாளர் சகோ. ஷநவாஸ் மற்றம் சிறப்பு விருந்தினர் தோழர். ஆர். கே. சரவணன்-(CPI).












குவைத் மண்டலத்தலைவர் சகோ. அமானுல்லாஹ் அவர்களின் வரவேற்புடன் துவங்கியது கண்டனக்கூட்டம்.

மண்டலச்செயலாளர் சகோ. ஷாநவாஸ் அவர்களின் தலைமையுரையின் போது..

பொதுமக்களில் ஒரு பகுதியினர்.

துணைச்செயலாளர் முஹம்மது இக்பால் அவர்கள் கண்டனத்தை முன் மொழிகிறார்.

கண்டனக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர். ஆர்.கே. சரவணன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.





இணைச்செயலாளர் சகோ. முபாரக்அலி அவர்களின் நன்றியுரையுடன் கண்டனக்கூட்டம் இனிதே நிறைவடைகிறது. அல்ஹம்துலில்லாஹ்...,

November 29, 2007

மாபெரும் கண்டனக்கூட்டம் - தமுமுக - குவைத்

அழைப்பிதழ்

தமுமுக - குவைத் மாபெரும் கண்டனக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...
கடந்த 23-11-2007 அன்றைய நன்றி அறிவிப்பு மாநாட்டைத் தொடர்ந்து எதிர்வரும் 07-12-2007 வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு பாபர் மசூதி இடிப்பு வழக்கு நிலுவை குறித்து மாபெரும் கண்டனக்கூட்டம் முர்காப் பகுதியில் தஞ்சை உணவகத்தில் தமுமுக - குவைத் மண்டலத்தின் சார்பாக நடைபெற உள்ளது. ஈருலகிலும் வெற்றி பெற அனைவருக்காகவும் துஆ செய்யவும்.
தமுமுக - குவைத் மண்டலம்
Instantly Visit our Web: http://www.q8tmmk.blogspot.com/

November 28, 2007

வாக்காளர் அட்டைக்கு பதிவு செய்யுங்கள்


உங்களது பழைய வாக்காளர் அட்டையை சரிபார்க்கவும், புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் உள் நுழையுங்கள்:

November 26, 2007

குவைத் தமுமுகவின் நன்றி அறிவிப்பு மாநாடு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம...)
குவைத் நாட்டில் தமுமுக - குவைத் மண்டலத்தின் சார்பாக இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்த்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நன்றி பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ''நன்றி அறிவிப்பு மாநாடு" ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை யிலிருந்து மாநாட்டுக்கான தேதியை அறிவிப்பு செய்தவுடனேயே இதற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டன. குவைத் முர்காப் சிட்டியில் தஞ்சை உணவகத்தில் ஷஹீத் ராஜாமுஹம்மது நினைவு அரங்கத்தில் கடந்த 23-11-2007 அன்று இரவு 8:00 மணிக்கு மாநாடு துவங்கப்பட்டது. பொருளாளர் சகோ. ஃபஜ்லுர்ரஹ்மான்-திருச்சி அவர்கள் கிராஅத் ஓதி மாநாட்டை துவக்கி வைத்தார். சகோ. கலீல்ரஹ்மான்-எருமப்பட்டி அவர்கள் வரவேற் புரையாற்றி மண்டலத்தலைவர் அமானுல்லாஹ்-திருச்சி அவர்களை தலைமையுரையாற்ற அழைத்தார்.

தலைமையுரையில் 60 ஆண்டுகால கனவு, 12 ஆண்டுகால போராட்டம், 16 மாத திட்டம், 12 நிமிடங்களில் நிறைவேறிய அவசரச்சட்டத்தில் இந்தத் தனி இடஒதுக்கீட்டை அறிவித்த கலைஞர் அவர்களுக்கும், இடஒதுக்கீட்டையும், சிறைவாசிகளின் விடுதலையையும் கோரிக்கையாக வைத்து திமுகவுடனான கூட்டனிக்கு திட்டமிட்டு அதன்படி உழைத்து வெற்றிபெறச்செய்த தமுமுக தலைமை முதல் அடித்தொண்டன் வரை அனைவருக்கும் நன்றி கூறினார்.

சிறப்பு அழைப்பாளராக தமுமுக-ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஷாநவாஸ்-லால்குடி அவர்களும், குவைத் - தமிழ் கிருஸ்த்தவ திருச்சபையின் தலைவர் சகோ. ஹெர்பர்ட் சத்தியதாஸ்-நாகர்கோயில் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். குவைத்தில் அனைவருக்கும் அறிமுகமான நீண்டகாலமாக சமுதாயத்தொண்டாற்றி வரும் பேரா. தாஜ்தீன்-புதுஆத்தூர் அவர்களும் தங்களது உரையில் பெற்றுள்ள இடஒதுக்கீட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்கள்.

மறைந்த இணைச்செயலாளர் ராஜாமுஹம்மது அவர்களின் அன்புச்சகோதரர் சகோ. முபாரக்அலி-லால்குடி அவர்கள் கலந்துகொண்டு பணியாற்றிய டெல்லிப்பேரணி, சிறைநிரப்பும் போராட்டம், இரண்டு வாழ்வுரிமை மாநாடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் அரங்கம் நெகிழ அழகாக எடுத்துரைத்தார். குவைத் மண்டல இணைச்செயலாளர் சகோ. தமீம் அன்சாரி-முத்துப்பேட்டை அவர்களின் நன்றியுரையோடு மாநாடு இனிதே நிறைவுபெற்றது. மாநாட்டிற்கு பல்வேறு இஸ்லாமிய, தமிழ், கிருஸ்த்துவ அமைப்புகளில் இருந்தும் பெருந்திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்புச் செய்தனர்.


அதே மாநாட்டில் டிசம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மவ்லவி பி.அப்துல்ரஹீம் நினைவு அரங்கத்தில் நடைபெறவுள்ள பாபர்மசூதி கண்டனக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு இதுவரை ரியாத் மண்டலத்தில் செயலாளராக பணியாற்றிய சகோ. ஷாநவாஸ் அவர்கள் அனைவரின் விருப்பத்திற்கிணங்க குவைத் மண்டலத்தில் மண்டலச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இரவு தேனீர் விருந்தோடு மாநாடு 10:30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.
News from:
TMMK - Media Group
Kuwait

November 24, 2007

உற்சாகத்துடன் நடந்த "நன்றி அறிவிப்பு மாநாடு"



"விரைவில் செய்திகள்"


படத்தில்: குவைத் மண்டல தமுமுக தலைவர் சகோ. அமானுல்லாஹ் அவர்களின் தலைமையுரை யின் போது, மேடையில் குவைத் - தமிழ் கிருஸ்த்தவ திருச்சபை தலைவர் சகோ. ஹெர்பட் சத்தியதாஸ் அவர்களும், ரியாத் மண்டல தமுமுக செயலாளர் சகோ. ஷானவாஸ் அவர்களும்..,

November 19, 2007

தமுமுக-வின் திருச்சி மாவட்ட, மாநகர புதிய அலுவலகம்:

திருச்சி பாலக்கரை மதுரை ரோட்டில் உள்ள எம்.ஜி. காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட, மாநகர புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா 18-11-2007 காலை நடந்தது.


விழாவில் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சவுதி கிழக்கு மண்டல தலைவர் சபியுல்லாஹ்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநில துணைச் செயலாளர் ஹாஜாகனி வாழ்த்துரை வழங்கினார்.


திருச்சி மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம், செயலாளர் அப்துல் ரஹீம், பொருளாளர் பைஸ் அஹம்மது, துணைத்தலைவர் ஹபிபுல்லாஹ், துணை செயலாளர் அப்துல் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் த.மு.மு.க. திருச்சி மாவட்ட, மாநகர நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை த.மு.மு.க. திருச்சி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
தமுமுக-திருச்சி மாவட்டம்

November 17, 2007

அல்லாஹ்வின் பெயரில் பதவி பிரமாணம்..!

"கேரள மாநில எம்.எல்.ஏ.,க்கள் 13 பேர் அல்லாவின் பெயரில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதில் எவ்வித தவறும் இல்லை' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எம்.எல்.ஏ. க்கள் பதவிப் பிரமாணத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தது.


கேரள சட்டசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் மற்றும் காங்., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் 13 பேர், அல்லாவின் பெயரில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இதை எதிர்த்து கேரள பா.ஜ., இளைஞர் அணி துணை தலைவரான மது பருமலா, கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கேரள ஐகோர்ட் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து மது பருமலா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரநாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதை விசாரித்தது.

கோர்ட்டில் ஆஜரான மனுதாரரின் வக்கீல், "இந்திய அரசியல் சட்டம் 188 வது பிரிவு மூன்றாவது அட்டவணையின்படி எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்கும் போது கடவுளின் பெயராலே தான் உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் காங்., கட்சியை சேர்ந்த எம்.எம்.ஏ.,க்கள் 13 பேர் அல்லாஹ்வின் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். இது அரசியல் சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும்' என்று அவர் கோரியிருந்தார்.


அப்போது, நீதிபதிகள் கூறுகையில், "அரபி மொழியில் அல்லா என்றால் கடவுள் என அர்த்தம். படிப்பறிவு இல்லாத மற்றும் ஆங்கில மொழி தெரியாதவர்களுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட பதவி பிரமாணத்தின் நகல்கள் வழங்கப்பட்டு அவர்கள் படிக்கின்றனர். இதை அரசியல் சட்டத்தை மீறியதாக எப்படி கூறலாம்? எனவே, அல்லாவின் பெயரில் பதவி பிரமாணம் எடுப்பதில் தவறு இல்லை,'' என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

October 31, 2007

திருச்சியில் நடைபெற்ற தி.க. பொதுக் கூட்டத்தில் "ராமர் வாழ்க'' கோஷம்:

திருச்சி மாநகர திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திர திட்ட விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. சத்திரம் பஸ் நிலையம் ரகுநாத் ஒட்டல் அருகே நடந்த கூட்டத்துக்கு மாநகர தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தமிழ் இனியன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன் சேதுசமுத்திர திட்டம், அதன்பயன்கள் குறித்து விளக்கி பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென "ராமர் வாழ்க'' "சேது சமுத்திர திட்டம் ஒழிக'' என கோஷம் எழுப்பினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே திராவிட கழக நிர்வாகிகள் அந்த வாலிபரை அப்புறபடுத்தினர். இதனால் அந்த வாலிபருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து கோட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் இந்த சம்பவம் தொடர்பாக பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாலிபர் யார்ப எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

October 29, 2007

தமிழகத்திற்கு இராமன் வந்தாரா....?

ஜோத்பூர்: ராம பக்தர்கள் வெகுண்டெழுந்ததால், ராவணன் கோவில் மூடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராவணனுக்கு கோவில் உள்ளது. கடந்த வியாழன் கிழமை, இந்த கோவிலில் ராவணன் சிலைக்கு விசேஷ அபிஷேகம் செய்ய பக்தர்கள் முடிவு செய்தனர். அதற்காக, பிரமாண்ட பந்தல் போட்டு, யாக குண்டங்களும் அமைத்திருந்தனர். ஆனால், பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சிலர், கோவிலுக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நம் கடவுள் ராமன் தான். தவறு செய்த ராவணனை அழித்தவர் அவர். அந்த அசுரனை நாம் வழிபடக் கூடாது. நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம்' என்று கத்தினர். உடனடியாக போலீசார் தலையிட்டு ராம பக்தர்களை சமாதானப்படுத்தி, கோவிலில் இருந்து வெளியேற்றினர். அதன் பின்னும், கோவிலில் ராவணனுக்கு விசேஷ பூஜை செய்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று இந்து அமைப்புகள் எச்சரித்ததால், விழாவை நிறுத்தி விடும் படி கோவில் நிர்வாகத்துக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை கூறினர். இதன் படி கோவிலில் விழா நிறுத்தப்பட்டது. விழாவை ரத்து செய்துவிட்ட நிலையில், மீண்டும் பிரச்னை வரலாம் என்று போலீஸ் எண்ணுவதால், கோவிலை தற்காலிகமாக மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் படி, ராவணன் கோவில் மட்டும் மூடப்பட்டது. கோவிலை நிர்வகிக்கும் கமிட்டி செயலர் அஜய் தவே கூறுகையில், இந்த கோவிலில் ராவணன் சிலை, சமீபத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏற்கனவே, ராவணன் சிலைகள் இருந்தன. அவற்றை தான் மீண்டும் வைத்தோம். ஆனால், அதற்கு பிரச்னை கிளம்பியதால், அதை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்' என்று கூறினார். ராவணன் கோவிலில், சிவன் உட்பட மற்ற கடவுள்களின் சன்னிதிகளும் உள்ளன. அந்த சன்னிதிகளுடன் சமீபத்தில் ராவணனுக்கு தனி சன்னிதி அமைத்து, தனி வழி அமைக்கப் பட்டிருந்தது. அதை எதிர்த்து தான் இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ராவணன் கோவில் நிரந்தரமாக மூடப்படலாம் என்று தெரிகிறது.

நன்றி: தினமலர் 29ஆம் தேதிய இணையதளச்செய்தி

இந்த தினமலரின் செய்திப்படி இராவணனுக்கு வடமாநிலத்தில் தான் கோவில் உள்ளது. தமிழகத்தில் எந்த கோவிலும் இல்லை. இராமன் தமிழகத்தின் பக்கம் வரவேயில்லை. அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகத்தை உலுக்கிப்பார்க்கவே இவர்களின் இராமர்பால நாடகம் என்பதை தினமலர் நாளிதழே ஏற்றுக்கொள்கிறது.

October 28, 2007

ஹிந்து, முஸ்லிம் மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதல்

ஹிந்து, முஸ்லிம் மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால், சேலம் கிச்சிப்பாளையத்தில் நேற்று இரவு பதட்டமான சூழல் நிலவியது.

கிச்சிப்பாளையத்தில் கடம்பூர் முனியப்பன் கோயில் உள்ளது. ஐநூறுக்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பத்தினர் வசிக்கும் இப்பகுதியில், பத்து முஸ்லிம் குடும்பத்தினரும் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் இங்குள்ள முஸ்லிம் குடும்பத்தினர் சேர்ந்து மதரஸா பள்ளியெழுச்சி ஒன்றை துவங்கியுள்ளனர். ரம்ஜான் முதல் அதை மசூதியாக மாற்றம் செய்தனர். அதனால் வெவ்வேறு இடத்தில் இருந்தும் முஸ்லிம் மக்கள் அங்கு வந்து செல்ல துவங்கினர். அதற்கு, அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்னை பற்றி இரு தரப்பினரும், நேற்று இரவு கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர்.போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசினர். பேச்சு நடந்த வந்த முஸ்லிம்கள், "அந்த இடம், மதரஸா பள்ளியெழுச்சியாகவே செயல்படும்' என்று உறுதியளித்து சென்றனர். இப்பிரச்னையால், நேற்று இரவு கிச்சிப்பாளையத்தில் பதட்டமான சூழல் நிலவியது.
செய்தி:தினமலர்

October 23, 2007

பெரம்பலூரில் ஈகைத்திருநாள் கொண்டாட்டம்

கடைத்தெருவில் உள்ள பெரியபள்ளிவாசல்

இமாம் அவர்களின் குத்பா


தமுமுகவின் பேனர் வரவேற்கிறது

படங்கள் & செய்தி:

லியாக்கத் அலி & அபுத்தாஹிர்

- குவைத் வாழ் பெரம்பலூர் நகர தமுமுக

குவைத் மண்டலம்

October 17, 2007

தனக்கு தனக்குன்னா...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
குவைத் நாட்டில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்கள் இதுவரை மடமையில் மூழ்கியிருந்ததாகவும் அல்டாபு வந்தபிறகு தான் தவ்ஹீதில் எழுச்சி ஏற்பட்டதாகவும் திருடிய பத்திரிக்கையின் கடைசி பக்கத்தில் வந்துள்ள செய்தியை பார்த்து வேதனையடைந்தோம். இந்தக் கேடு கெட்டதுகள் தங்கள் தனிமனித வாழ்க்கையில் இறைமறுப்புக்கு இட்டுச் செல்லும் காரியங்களை சத்தமில்லாமல் செய்துவிட்டு மக்கள் மத்தியில் தவ்ஹீது வேடம் போடுகிறார்கள்.
எழுதுகிறவன் தான் தன் இஷ்டத்திற்கு எழுதுகிறான் என்றால் படிக்கிறவர்களுக்காவது அறிவு இருக்க வேண்டாம். (இவர்களது பத்திரிக்கையை படிக்க அறிவு வேற வேண்டுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது) இருந்தாலும் விழிப்புணர்வு கொடுப்பது எங்கள் கடமை. விளங்கிக் கொள்ளுங்கள் 4+5+4x20=260+100 பேர் அளவுக்கு நின்றுகொண்டு வேடிக்கைப் பார்த்தவர்கள். (அதாவது 4 இருக்கைகள் 20 வரிசை பக்கத்தில் 5இருக்கைகள் 20 வரிசை கடைசியாக 4இருக்கைகள் 20 வரிசை ஆக 4+5+4x20=260 நின்றுகொண்டும் நடந்து கொண்டும் 100 பேர் அளவுக்கு இருந்தார்கள்) ஆறாம் வகுப்பு கூட பாஸ் பண்ண முடியாத கூமுட்டை தலைவருக்கு தெரியுமா ஒரு சதுர மீட்டர் அளவில் எத்தனை நபர்கள் நிற்கவும் உட்காரவும் முடியுமென்று இல்லை மருத்துவத்திற்கு படித்திருந்தும் ததஜவின் முட்டாள்களுக்குப் பின் குடை தூக்கிக் கொண்டு செல்பவருக்குத்தான் தெரியுமா?
தலைவனின் புத்தியே இந்த தொண்டர்களுக்கும். வாய் கூசாமல் ரமலான் என்றும் பாராமல் அதுவும் கண்ணியமிக்க இரவை தேடும் இறுதிப்பத்து என்ற நினைவு கூட இல்லாமல் 700 பேர்கள் என்று அண்டப்புழுகும் ஆகாசப்புழுகும் சேர்த்து எழுதிய செய்தித்தாளைப் படிக்க வேண்டுமென்றால் அது தமுமுகவிடமிருந்து இவர்களால் களவாடப்பட்ட உணர்வு ஒன்றில் மட்டுமே முடியும். ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாம் ஆம் இஸ்லாமியச் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டோரின் ஈனக்குரல்.
புதுசா திருமணம் முடித்தவரை முழுதாகக் கூட வாழ விடாமல் பாதியிலேயே குவைத்துக்கு இழுத்து வந்து தலைவரின் துதி பாட வைத்தார்கள். புது மனைவின் நினைவிலேயே சென்ற இடமெல்லாமே உளறல்... உளறல்... புதுமாப்பிள்ளையின் உளறலைத்தவிர வேறில்லை. கொஞ்ச நஞ்ச ததஜ அபிமானிகளின் வெறுப்பையும் சம்பாதித்தது தான் மிச்சம். மனைவியை பிரிந்து வந்த அல்டாபு காய்ச்சலிலேயே 4 நாட்களாக படுத்து விட்டார். ஆனாலும் ததஜ எடுபிடிகளோ இன்னைக்கி அங்க மீட்டிங்கு நாளைக்கி இங்க மீட்டிங்கு என்று புரளி கிளப்பி விட்டு கொண்டே இருந்தார்கள். தன்னுடைய அழைப்பில் வந்த கூட்டத்தை கணக்கு காட்டியிருந்தால் பெருமைபட்டுக் கொள்ளட்டும். கூட்டமாக இருந்த இடத்தில் இவர்கள் நின்று கொண்டு போட்டோ எடுத்துக்கொண்டு அதை எனக்கு வந்தது என்றால்... பாவம் இவர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது.
இந்த நிகழ்ச்சிக்காக ஸ்பான்சர் செய்த தொழிலதிபர்களோ இவர்கள் அடித்த கூத்தில் ஏற்பட்ட அவமானத்தால் அவர்கள் நிறுவனத்தின் விளம்பர பேனரை கூட கட்ட மறுத்து விட்டனர். பொருளாதார உதவி செய்த சில பெருந்தனக்காரர்களின் முகத்தில் ஈயாடவில்லை. பகலில் இலங்கை பள்ளிவாசலில் நடந்த சண்டையால் மாலை என்ன நடக்கிறது என்று பார்க்க வந்த மற்ற இயக்கங்களைச் சார்ந்த பொதுஜனம் பாதிபேர். இதில் இலங்கையைச் சார்ந்தவர்களும் அடங்குவர். மீதிப்பாதியில் எந்த இயக்கத்தையும் சாராமல் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுபவர்கள் பாதி பேர். மீதிக்கால்வாசி பேர்தான் இவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ததஜவினர். இவர்களின் கணக்குப்படியே 700 /4 =175 பேர்தான். அதே மேடையில் ததஜ பொருப்பாளரும் கூட கணக்கிட்டு சொன்னதும் இதே எண்ணிக்கையை தான். இப்போது சொல்லுங்கள் இவர்கள் கூட்டத்தை கூட்டி எழுச்சி ஏற்படுத்தினார்களா..? அல்லது கூட்டமாக இருந்த இடத்தில் நின்று கொண்டு எழுச்சி என்கிறார்களா..?
தமுமுக ஒரு இடத்தில் இப்தார் நிகழ்ச்சி நடத்தியது அது வெற்றி பெற்றது என்ற காரணத்தினால் அதே ஒத்துழைப்பு அந்த மக்கள் தமக்கும் தருவார்கள் என்று மனப்பால் குடித்துவிட்டு மறுவாரம் வீம்புக்கு அல்டாபையும் அழைத்துச் சென்றனர். ஆனால் நடந்தது என்ன அந்த பகுதியினர் அல்டாபை உள்ளேயே விடவில்லை. கண்ணியமாக நோன்பு திறந்து விட்டு சென்றுவிடுங்கள் என்று சொன்ன போதும் மீறி தனது உரையை ஆரம்பித்தார் அல்டாபு விளைவு பாதியிலேயே அந்தப்பள்ளியிலிருந்தும் விரட்டப்பட்டார்.
அடுத்தாக பெரிய பள்ளியில் (மஸ்ஜித் கபீர்) பேச்சு என்று ஒரு புரளி. சென்று பார்த்தால் இவர்கள் இத்தனை நாட்களாக செய்திருந்த சண்டை சச்சரவை கவனத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் உள்ளேயே விடவில்லை. மார்க்கத்தைப் பற்றிய பேச்சு என்பதால் பள்ளிக்கு வெளியிலிருந்து மட்டும் சத்தம் போடாமல் இருந்து விட்டு செல்லுங்கள் என்று தடுத்து விட்டது நிர்வாகம். அவமானம் தாங்காமல் பள்ளிக்கு பின்பகுதியில் நோன்பு திறப்பதற்காக போடப்பட்ட கூடாரத்தில் தனியாக அமர்ந்து அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி பேசிவிட்டு கலைந்தனர். அதே பள்ளியில் முன்பகுதியில் மலையாளிகளும் இடப்பக்கத்தில் பங்காளிகளும் நிகழ்ச்சி நடத்தினார்கள்.
இவ்வாறாக புண்ணியம் தேடும் ரமலான் மாதத்தில் இவர்களின் சுயகௌரவத்தை நிலைநாட்ட குவைத்திற்குள் புழுதியையும் புரளியையும் கிளப்பிவிட்டு பல நடுநிலை தவ்ஹீதுவாதிகளின் வயிற்றெரிச்சலைக் கிளப்பி விட்டு சமுதாயத்துக்குள் குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டாக்கியது தான் இவர்கள் இம்மாதத்தில் சம்பாதித்தது. இவர்களால் ஒன்று செய்ய முடியுமானால் அது குழப்பத்தைத் தவிர வேறில்லை. அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத்தைத் தந்து நேர்வழியில் இட்டுச்செல்ல பிரார்த்திக்கின்றோம்.
நன்றி: வசைபாடும் வாலிபர் சங்கம்-குவைத்

சமுதாயமே சிந்திக்க மாட்டாயா..?

கடந்த 2006 ல் தமுமுகவிடமிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகு தங்களது பலத்தையும் செல்வாக்கையும் எடைபோட்டு பார்க்க குடந்தை பேரணியை நடத்தும் போது மக்களிடம் ஒற்றுமையா இருந்து போராடினால் தான் இடஒதுக்கீடு கிடைக்கும். இடஒதுக்கீட்டுக்காக நடக்கும் போராட்டங்களில் யார் நடத்துகிறார்கள் என்று பார்க்காதீர்கள் அனைவரும் வாருங்கள் என்று வாய் வலிக்க அழைத்தார்கள். அதை நம்பி எங்கள் ஊர்களிலுள்ள முஸ்லிம் லீக், தமுமுக, தப்லீக் அமைப்புகளிடம் பேசி எல்லோரையும் கலந்து கொள்ள செய்தோம். ஆனால் நன்றி கெட்ட பி.ஜே. பேரணி முடிந்ததும் இது ததஜவிற்கு கிடைத்த வெற்றி என்று பேட்டி தருகிறார்.

அதே தினத்தில் தமுமுக சார்பாக சிறைவாசிகளுக்காக இரண்டு மாவட்ட மாநாடுகள் நடத்தினார்கள். அங்கு கூடிய மக்கள் வெள்ளத்தைப் பார்த்து வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டதை சமுதாயமே நீங்கள் பார்த்து கொண்டு தான் இருந்தீர்கள். எல்லா அடிவருடிகளும் ஒரே கேள்வியை தான் கேட்டார்கள். அதாவது ''சிறைவாசி பிரச்சனை-இடஒதுக்கீடு பிரச்சனை இரண்டுமே முக்கியம் தான் ஆனால் 6 மாதமாக ஏற்பாடு செய்து நாங்கள் பேரணி நடத்தும் அதே தினத்தில் தான் இவர்களும் மாநாடுகள் நடத்த வேண்டுமா? இவர்கள் தான் சமுதாயத்தை ஒன்று படுத்தப்போகிறார்களா? நேர்வழி படுத்தப்போகிறார்களா?" என்று திட்டித் தீர்த்தனர்.

ஆனால் என்றுமே முன்னுக்குப்பின் முரணாக பேசவும் எழுதவும் செயல்படவும் ததஜவுக்கு நிகர் ததஜவினரே. அதனால் தான் குடந்தை பேரணி குறித்து அவ்வாறு பேசியவர்கள் இன்று குவைத்தில் 12 ஆண்டுகளாக சாதனை புரிந்து வரும் (TMCA) தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நமக்கும் குவைத்தில் இருக்கும் சக மதத்தினருக்கும் இணக்கம் ஏற்படும் வகையிலும் இந்திய தூதரகத்தில் தமிழர்களுக்கான தனி முத்திரையைப் பதிக்கவும் இந்திய தூதரை கௌரவிக்கவும் வருடந்தோரும் TMCA நடத்துகின்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை குவைத் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததே. அந்த ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கும் முகமாக குவைத்தில் அதே நாளில் அதே நேரத்தில் ''இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இவ்வுலகில் அழிந்து போகும் செல்வாக்கையும் பலத்தை சோதித்துப்பார்க்கவும் சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தவும் குழப்பம் உண்டாக்கவும் இதுபோன்ற சதி வேலைகளை தலைமை முதல் கடைநிலை தொண்டன் வரை இரவு பகல் பாராமல் செய்து வருகின்றனர்.

பேரணி தினத்தன்று தமுமுகவே தவறு செய்துவிட்டது என்று வைத்துக் கொண்டாலும் அதே தவறை இன்று நீங்களே செய்திருக்கிறீர்களே… நீங்களெல்லாம் என்ன யோக்கியார்கள். உங்கள் பின்னால் சுற்றுபவர் களெல்லாம் முட்டாள்கள் என்பதாலா இல்லை? என்ன செய்தாலும் ஏன்? எதற்கு என்ற கேள்வியே வராது என்பதாலா..? இதே நிகழ்ச்சியை முந்திய வாரம் வைத்திருக்கலாம் இல்லை மறு வாரம் வைக்கலாம். நேரத்தையாவது மாற்றி வைத்திருக்கலாம். அட.. இஸ்லாமியர்கள் மார்க்கத்தை தெரிந்து கொள்ள பல வழிகள் பள்ளிவாயில்கள் இருக்கிறது. மாற்று மதத்தினருக்காக நிகழ்ச்சியை மட்டுமாவது வைத்திருக்கலாம். முடியாது உங்களால் ஏனென்றால் TMCA என்ன செய்திருக்கிறது என்ன செய்கிறது இதையெல்லாம் தெரிந்து வைத்திருந்து ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கவே இது போல் செய்கிறீர்கள். கூட்டத்தில திருடியவனே 'திருடன்" 'திருடன்" என்று கத்திக்கொண்டே ஓடினானாம். அது போல பிரிவினைக்கான எல்லா வேலைகளையும் செய்து விட்டு ஒற்றுமை ஒற்றுமை என வேடம் போடுவதால் தான் எல்லா பள்ளிவாயில் களிலிருந்தும் விரட்டப்படுகிறீர்கள்.

புரோகிதத்தை ஒழிப்போம் என்று கட்சி ஆரம்பித்து விட்டு ததஜ புரோகிதர்கள் இல்லாமல் எந்த காரியமும் இவர்கள் நடத்துவதில்லை. குர்ஆனையும் ஹதீஸ்களையும் யார் வேண்டுமானாலும் விளங்கிக் கொள்ளலாம் பழங்கால உலமாக்கள் பயம் காட்டி மறைத்து விட்டனர் என்று பிரச்சாரம் செய்து வந்தவர்கள் இன்று 'மையத்தை குளிப்பாட்டுவது எப்படி" என்ற தலைப்பில் நான்கு வாரங்களுக்கு டிவியில் வந்து பேசுகிறார். ஒரு வாரத்திற்கு 3.5 இலட்சங்கள் அரைமணிக்கு செலவாகிறது (3.5 x 4 வாரம் = 14 இலட்சங்கள்). மக்களிடம் வசூல் செய்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். பிறகு அதே தலைப்பில் புத்தகம் கேஸட் சீடி விற்பனை இதனுடைய இலாபமெல்லாம் கமருன்னிஸாவின் கஜானாவிலே. 25 வருடமாக தவ்ஹீதை எடுத்து சொன்னார்களாம் இருந்தும் 60 வயது முண்டாசு கட்டிய முதியவருக்கு ஜகாத்தில் சந்தேகம். இவர்களின் சூது தெரியாமல் பின்னால் சுற்றுபவர்கள் திருந்துவதற்கு பிரார்த்திக்கின்றோம்.

October 07, 2007

தமுமுக நடத்திய இப்தார் நிகழ்ச்சி

குவைத் இஸ்லாமிய நிலையத்துடன் தமுமுக அம்காரா கிளையும் இணைந்து அம்காரா லேபர் கேம்ப்பில் கடந்த சனிக்கிழமை இப்தார் நிகழ்ச்சியை நடத்தியது. நூற்றுக்கணக்கான மாற்று மத நண்பர்களுடன் நமது இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமுமுக மண்டலத்தலைவர் அமானுல்லா மற்றும் தாயகத்திலிருந்து வருகைதந்திருக்கும் தொண்டி சகோ. நிளாமுத்தீன் அஷ்ரபி அவர்களும் கலந்து கொண்டனர். இப்தாருக்கு முன் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். மஃரிப் தொழுகையோடு நிகழச்சி இனிதே நிறைவு பெற்றது.

மானத்தை பறக்கவிட்ட ததஜவினர்

அன்புச்சகோதரர்களே.., அஸ்ஸலாமு அலைக்கும்,

ஏகத்துவத்தை பரப்ப ஏரோப்ளைன் ஏறி வந்து தலைமையின் மானம், மண்டலத்தின் மானம், ததஜவில் சேராத தூய தவ்ஹீதுவாதிகளின் எல்லாத்தையும் குவைத்தின் பாலைவனக்காற்றில் பறக்க விட்டார் அல்டாபு அல்டாபி. என்ன செய்ய எந்த குணம் போனாலும் நாயின் சொந்த குணம் போகுமா - அதைப்போல பிழைக்க வந்த இடத்தில் மார்க்க பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கொடுத்தால் தான் கெட்டதில்லாமல் வாய்ப்பு கொடுத்தவரின் பிழைப்பையும் சேர்த்து கெடுப்பது ததஜ பாசறையில் பயின்றவர்களால் மட்டுமே முடியும்.

ஒற்றுமை எனும் தலைப்பில் பேச ஆரம்பித்து பேச்சை முடிக்கும் போது பள்ளிவாயிலுக்கள்ளேயே சண்டை போட்டு கொண்டு இலங்கை - தமிழக இஸ்லாமியர்கள் ததஜவினர் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு சென்றனர்.

புகைப்படத்துடன் விவரங்கள் அடுத்த பதிவில்.
வஸ்ஸலாம்.

September 27, 2007

திருச்சியில் 3 முஸ்லிம்கள் காவிரி ஆற்றில் மூழ்கி பலி

திருச்சி மரக்கடை வீதியில் உள்ள நத்ஹர்வலி தர்க்கா உள்ளது. இங்கு சந்தனக்கூடு விழா கடந்த 13-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. சந்தனம் பூசும் நிகழ்ச்சியையொட்டி காவிரியில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து மகான் ஹச்ரத் சப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்க்காவை சுத்தம் செய்வது வழக்கம்.
இதற்காக நத்ஹர்வலி தர்க்காவில் இருந்து 500 பேர் ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு செல்வார்கள் பிறகு காவிரி ஆற்றில் இருந்து குடங்களில் தீர்த்த தண்ணீரை எடுத்து தர்காவுக்கு வருவார்கள். நேற்றும் 500 பேர் காவிரி ஆற்றுக்கு குடங்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதில் 10 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்களும் அடக்கம். இன்று அதிகாலை 1.30 மணிக்கு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில், அண்ணா சிலை எதிரே உள்ள அய்யாளம்மன் படித்துறையில், குவிந்த 500 பேரும் காவிரி ஆற்றில் இறங்கி தண்ணீரை குடத்தில் நிரப்பினர். அப்போது, இருட்டு நேரமானதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. திடீரென்று கூட்ட நெரிசலில் சிலர் காவிரி ஆற்றுக்குள் விழுந்தனர். கும்மியிருட்டில் எத்தனைபேர் விழுந்தார்கள் என்று தெரிய வில்லை.
காவிரி ஆற்றுக்குள், விழுந்தவர்களை காப்பாற்றும் நோக்கில் சிலர் ஆற்றுக்குள் குதித்து முடிந்தவரை சிலரை காப்பாற்றி கரையில் சேர்த்தனர். சிலரின் கதி மட்டும் என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. அந்த இடத்தில் ஒரே அபாய குரலாக இருந்தது. காவிரி ஆற்றில் விழுந்தவர்களை தேடும் பணியில் நத்தர்ஷா பள்ளி வாசலை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடும் பணிக்கு பிறகு மாலிக் (வயது 20), என்ற வாலிபரின் உடலை மீட்டனர். இவரது தந்தை ஜாபர்முனபா. முனாபா வெளிநாட்டில் உள்ளார். ஒரே மகன் ஆன மாலிக் தீர்த்தக்குடம் எடுக்க நேர்த்திக்கடன் செய்திருந்தாராம். காவிரி ஆற்றுக்கு சென்ற இடத்தில் பலியாகிவிட்டார். சற்று நேரத்தில் மற்றொருவர் உடலும் மீட்கப்பட்டது.
30 வயது மதிக்கத்தக்க அவர், பெங்களூரைச் சேர்ந்த வர் சந்தனக்கூடு விழாவுக்காக பெங்களூரில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் காவிரி ஆற்றில் விழுந்து பலியாகிவிட்டார். இவரது உடல், தர்க்காவில் வைக்கப்பட்டு உள்ளது. உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் நத்தர்ஷா பள்ளி வாசல் அருகில் உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்த ஷாநிவாஷ் (25) என்ற ஷானு என்பவரும் காவிரி ஆற்றில் மூழ்கிவிட்டார். அவரது உடலை இன்று காலை 11 மணி வரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் வாலிபர்கள் தேடியும் கிடைக்கவில்லை. உடலை தேடி வருகிறார் கள். ஷாநிவாஸ்க்கு திருமண மாகி 5 மாதத்தில் குழந்தை உள்ளது.

சந்தனக்கூடு விழாவுக்கு தீர்த்தக்குடம் எடுக்க சென்று3 பக்தர்கள் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காவிரி கரையில் சோகமாக கூட்டம் திரண்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் 8 பேர் வரை நீரில் மூழ்கி இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் 3 பேர் மட்டுமே இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் 5 பேர் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அவர்கள் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
நன்றி - மாலைமலர்

September 19, 2007

குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் பருவ மழையின் தீவிரம் இருந்தது. குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலையில் மழை விட்டு விட்டு பெய்ததால் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி முதல் பாலத்தை தொட்டுக் கொண்டு தண்ணீர் விழுந்தது. அருவியில் கற்கள், மரக்கிளைகள் வந்து விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

September 18, 2007

இந்திய நூல்களை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடு

இந்திய இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட நூல்களை அரபு மொழியில் மொழி பெயர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அபுதாபியில் நடைபெற உள்ள அகில இந்திய புத்தகக் கண்காட்சியில், மொழிபெயர்ப்பு நூல்கள் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள புல்வாடியில், அரபு நாட்டு பிரதிநிதிகளும், இந்திய பதிப்பீட்டாளர்களும் கூடி, இந்திய நூல்களை மொழி பெயர்ப்பது குறித்து விவாதித்தனர். மொழி பெயர்ப்பு நூல்களை கண்காட்சியாக வைக்க முடிவு செய்துள்ள குழுவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது. புத்தகக் கண் காட்சியின் இயக்குனர் ஜமா அல் கியூபைசி, தலைமை அதிகாரி அப்துல்லா கியூபைமி, புத்தக கண்காட்சியின் உதவி இயக்குனரான கிளவ்டியா கைசர் ஆகியோர், பின்னர் நிருபர்களடம் கூறியதாவது: கிட்டத்தட்ட ஐந்தாயிரம் இந்திய நூல்கள் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பதிப்பிக்க திட்டம் கொண்டுவரப்படும். ரவீந்திரநாத் தாகூர் பற்றிய நூல்கள் அரபு மொழியில் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. தற்போது, இந்திய கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நூல்களைத் தவிர, கிளாசிகல் மற்றும் சம காலத்திய இலக்கியங்களை மொழிபெயர்க்கும் வேலை நடந்து வருகிறது. புத்தக விற்பனை அதிகாரி கிஷோர் குமார் கூறியதாவது: இந்திய வெளியீட்டாளர் கழகமும், இந்திய பதிப்பாளர் சங்கமும் இணைந்து இவ் விலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஐக்கிய அரபு நாடுகளில் (யு.ஏ.இ.,) 12 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதனால், அங்கு மொழி பெயர்ப்பு நூல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதால், இரு நாடுகளின் கலாசார உறவும் மேம்படும். டில்லி புத்தகக் கண்காட்சியிலும் இதற்கான விளம்பரம் செய்யப்பட்டு, ஸ்டால் போடப்பட்டு, இந்நூல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராமர் பற்றிய சர்ச்சைக்குரிய மனு - புது ஐடியா

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் ஆன, ராமர் பற்றிய சர்ச்சைக்குரிய மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. சேதுசமுத்திர திட்டத்துக்கு, மாற்றுப் பாதை பற்றி பரிசீலிக்கவும் தயார் என்றும் அறிவித்து உள்ளது. -இது பத்திரிக்கைச் செய்தி.
கற்பனை கதாபாத்திரங்களுக்காக பல கோடி ரூபாய் இலாபம் தரக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை முடக்குவது உண்மையான வந்தேறிகளா? இல்லை இந்திய நாட்டின் குடிமகன்களா? என்பதில் சந்தேகம் எழுகிறது. 850 ஆண்டுகாலம் இந்திய நாட்டை ஆண்டதற்கான ஆதாரங்கள் இன்றும் பசுமை மாறாமல் வானளாவி நிற்கின்றது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கூட இதே ஆரிய ராமரின் பெயரால் ஓர் அயோக்கியத்தனத்தை அரங்கேற் றினார்கள். 15 ஆண்டுகள் கழித்து இவர்களின் கற்பனை கதைகளை கலாச் சாரமாக்க மீண்டும் ஒரு நாடகத்தை தயாரித்து வருகிறார்கள். இந்தியா ஜனநாயக நாடு, மதச்சார்பற்ற நாடு. இதில் இந்து மதத்தின் மீது மட்டும் கரிசனம் காட்டுவது ஏன். வந்தேறிகளால் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பகரமாக ராமர் பாலத்தை இடித்தே ஆக வேண்டும். கொளுத்தப்பட்ட கிறுத்துவப் பாதிரியாருக்கு பகரமாகவும் ராமர் பாலத்தை இடித்தே ஆக வேண்டும். 100 சதவீதம் வந்தேறிகளால் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி. காவி பயங்கரவாதிகளால் சாம்பலாக்கப்பட்ட பாதிரியார். அதற்கு பதிலாக 3.5 + 3.5 எங்களுக்குள்ள பங்கில் பாலத்தை இடித்து கொள்கிறோம்.

இன்னும் அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்தோமானால், இன்று ராமர் பாலம் என்று வந்தேறிகளால் கூறப்படும் அந்த இடம் 1,40,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒரே சமதளமாக குறுக்கே கடல் நீர் புகாமல் விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக இருந்தது. இந்திய வம்ச வழி வந்த எங்கள் முப்பாட்டனார் மஸ்தான் கொள்ளு தின்ன ராவுத்தர் அவர்கள் இலங்கையில் திருமணம் முடித்தார். அப்போது அவருக்கு சீதனமாக வழங்கப்பட்டதே அந்த இடம். அப்போது இலங்கையை ஆண்டு வந்த இவர்களால் இராவணன் என அழைக்கப்படும் மன்னர் நிலவழங்கி பாண்டியன் என்பவரின் பண்ணை நிலத்திற்கு அடுத்ததாக எங்கள் முப்பாட்டனாரின் நிலம் இருந்தது. சீதையின் அழகில் மயங்கிய மன்னன் நிலவழங்கி பாண்டியன் சீதையை திருமணம் செய்ய வேண்டி காட்டுக்கு புறப்படுகிறான். வழியில் எங்கள் முப்பாட்டனார் நிலத்தை கடந்து செல்ல அனுமதிக்காக காத்திருக்கும் போது மன்னருக்கும் அவரின் பரிவாரங்களுக்கும் விருந்து தருவதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது எங்களது முப்பாட்டனாரும், மன்னர் நிலவழங்கி பாண்டியனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எங்கள் முப்பாட்டனார் மன்னரிடம், "மன்னா சீதைக்கு சிவபெருமான் ஒரு வரம் தந்துள்ளார் அது பற்றி தாங்களுக்கு ஏதும் விபரம் தெரியுமா?", என்று கேட்டார். அதற்கு மன்னரோ, "அப்படியா அது பற்றி எனக்கேதும் தெரியாது நண்பா..! கொஞ்சம் விளக்குங்களேன்", என மன்னர் கேட்டதற்கு முப்பாட்டனாரோ, "அதாவது சீதையின் விருப்பமில்லாமல் யாரேனும் அவரை தீண்டினால் தீண்டியவர் தலை வெடித்து சிதறிவிடும் என்பதே அந்த வரம்", என்று முப்பாட்டனார் விளக்கினார். விருந்தை முடித்துக் கொண்டு கிளம்பிய மன்னர் காட்டுக்கு வந்து சீதையை எந்த வித வற்புறுத்தலும் இன்றி சீதையின் எதிர்ப்பும் இன்றி மன்னரின் தலையும் வெடிக்காமல், அவரது தொடையின் மீதமர்ந்து மகிழ்ச்சியோடு இலங்கை வந்து சேர்ந்தார். (அப்படியென்றால் சிவன் கொடுத்த வரம் பொய்யா) மீண்டும் மூன்று மாத இடைவெளியில் ராமர் அங்கு வருகிறார். இல்லாத கடல் மீது பாலம் கட்ட வானர சேனைகள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. அவர்களுக்கு உதவிய அணிலின் முதுகில் ராமரால் கோடு போடப்படவும் இல்லை. சமதளப்பரப்பில் நடந்தே ராமர் வந்தார் எங்கள் முப்பாட்டனார் வசம் அனுமதி பெற்று நிலத்தை கடந்து இலங்கைக்குள் சென்றார்கள். மன்னரைக்கொன்று சீதையை திரும்ப அழைத்துச் சென்றார்கள். கட்டிய மனைவியை அத்துவானக்காட்டில் கோடு போட்டு வைத்து விட்டு கணவன் சென்றுவிட்டான். அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து தன் தாயின் அரவணைப்பில் வைத்தான் மன்னன் நிலவழங்கி பாண்டியன்.

மொத்தம் நான்கு முறை இந்தியா – இலங்கை தரைப்பகுதியை கடந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒருமுறை கூட பாலம் தேவைப் படவில்லை. இவர்களின் முதல் இராமாயணத்தில் இந்த நிகழ்வுகளெல்லாம் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்கள். நாசாவிலிருந்து எடுத்த புகைப்படம் என்னவென்றால் எங்கள் முப்பாட்டனார் மஸ்தான் கொள்ளு தின்ன ராவுத்தரின் மகனார் மஸ்தான் எள்ளு தின்ன ராவுத்தர் அவர்கள் காலத்தில் இந்த ராமர்-ராவணர் சண்டையெல்லாம் முடிந்து விட்டதால் போரடிக்கும் நேரத்தில் விளையாடுவதற்காக கோல்ப் மைதானம் ஒன்றை உறுவாக்கினார். பல அடி உயரத்தில் பல கிலோ மீட்டர்கள் நீளத்தில் ராட்சத மைதானம் அது. அதுதான் பாலம் போல் தெரிந்திருக்கிறது. பிறகு 40,000 வருடங்களுக்கு முன் நம் நெஞ்சை விட்டு நீங்காத அந்தச் சம்பவம் ஆம், கடல் கொந்தளிப்பு, இலங்கைக்கும்-இந்தியாவிற்கும் இடையே இறைவனால் பேடப்பட்ட பெருந்திரை. அந்த கொந்தளிப்பின் போது முப்பாட்டனாரின் நிலப்பத்திரம், மூலப்பத்திரம், அவரின் மாமனாரின் உயில், முதல் இராமாயணத்தின் நகல் எல்லாமே அடித்துச் சென்று விட்டது. இன்றும் கூட இந்திய-இலங்கை வான் எல்லையில் பறக்கும் போது கடல் பகுதியை பார்த்தால் ஆங்காங்கே கோல்ப் விளையாட்டு மைதானங்கள் இருப்பது தெரியவரும். வரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்களான இவர்களின் இந்த இராமாயணம் இரண்டாவதாக 25,000 ஆண்டுக்கு முன்பு வால்மீகி அவர்களால் எழுதப்பட்டது. வால்மீகி காலத்திலெல்லாம் இந்தியாவும்-இலங்கையும் பிரிந்து 15,000 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தது. வால்மீகி காலத்தில் இந்தியா-இலங்கை நடுவே கடல்நீர் இருந்ததால் லாஜிக் இடிக்கக்கூடாது என்பதற்காக இலங்கைக்கு பாலம் கட்டி போனதாக கதையில் எழுதி விட்டார். ஒரு பேச்சுக்கு பாலம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் காவிகளின் சுயலாபத்திற்காக நாங்கள் பாபர் மஸ்ஜிதை இழந்தோமல்லவா அதுபோல மக்களின் பொதுலாபத்திற்காக இவர்கள் பாலத்தை இழக்கட்டுமே. அதுவன்றி பாலம் தான் முக்கியமெனக் கருதினால் முதலில் பாபர் மஸ்ஜிதை கட்டி கொடுத்துவிட்டு பிறகு பாலத்தை பாதுகாக்கட்டும். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்காக யார் எங்களிடம் மன்னிப்பு கேட்டார்கள்?. இனி இவர்கள் மன்னிப்பு கேட்டால் நாங்களும் கேட்போம் இல்லாத பாலத்தை இடித்துவிட்டு.
நன்றி.

விநாயகர் ஊர்வலத்தை செல்ல விடாமல் தடுத்த

மனிதநீதி பாசறை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு பாறைபட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை தெருக்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது சிலர் கல் மற்றும் செருப்புகளை வீசினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டு மறியல் உட்பட பல சம்பவங்கள் நடந்ததால் பதட்டம் நிலவியது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பாறைபட்டி விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நேற்று காலை 9 மணிக்கு கோட்டை குளத்தில் விசர்ஜனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விநாயகர் சிலை பாறைபட்டியில் இருந்து ஊர்வலமாக பேகம்பூர் வழியாக வந்த போது, மனித நீதிபாசறை, தமிழ்நாடு முன்னேற்றக்கழகத்தை சேர்ந்த 60 பேர் கோஷங்களை எழுப்பியவாறு விநாயகர் சிலையை மறித்தனர்.

இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீசாருக்கும் இவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து டி.ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி., பாரி ஆகியோர் மறியல் செய்த அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். திண்டுக்கல்லில் மாலை 4 மணிக்கு இந்து முன்னணி சார்பில் 45 விநாயகர் சிலைகள் திருவள்ளூவர் சாலை, ஆர்.எஸ்.ரோடு, சென்ட்ரல் ரோடு, தெற்குரதவீதி வழியாக எடுத்து செல்லப்பட்டு கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டது. இந்துமுன்னணி மாவட்ட பொது செயலாளர் ரவிபாலன், மாநில துணை தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், பா.ஜ., பொது செயலாளர் திருமலைபாலாஜி, ஆடிட்டர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர். எஸ்.பி., பாரி, கூடுதல் எஸ்.பி., ஜெயஸ்ரீ தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தம்மம்பட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்

இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மத மோதலால், தம்மம்பட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியின் போது, தம்மம்பட்டி மசூதி அருகே விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடந்தது. இதை, முஸ்லிம்கள் எதிர்த்தனர். அதிகாரிகள் பேச்சு நடத்தி சுமுகமாக தீர்வு கண்டனர். இப்பிரச்னை முடிந்த நிலையில், புதிய பிரச்னை எழுந்தது. தம்மம்பட்டி பஸ்நிலையம் அருகே, "வெங்கடேஷ்வரா' என்ற பெயரில் ஓட்டல் உள்ளது. இதன் உரிமையாளர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது என்று பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகராறு செய்தவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தடியடியை கண்டித்து, சாலை மறியல் நடந்தது. போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தி மறியலை கைவிட செய்தனர். பதட்டம் காரணமாக தம்மம்பட்டி வெறிச் சோடிக் கிடக்கிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிக்கின்றனர்.

September 11, 2007

வேண்டும் தமுமுகவின் வர்த்தகர் அணியின் சாதனைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..,

புதுப்பொலிவுடன் அமைந்திருக்கும் மேலான தலைமைக்கு, பிரார்த்தனைகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். இங்கு, குவைத் மண்டலத்தில் வர்த்தகர் அணியை அமைக்க கடந்தவாரம் கூடிய பொதுக்குழு தீர்மானித்துள்ளது. எனவே, வர்த்தகர் அணியின் சாதனைகளை எமக்கு அறியத்தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்கள் மின்னஞ்சல் வாயிலாகவோ, அல்லது குவைத் பிரதிநிதி சகோ. இப்ராஹிம்-9941211377 இவர் மூலமாகவோ அனுப்பிவையுங்கள். இந்த இணையத்தை பார்வையிடும் நமது தமுமுக வீரர்களிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.

காத்திருக்கிறோம்
வஸ்ஸலாம்
தமுமுக - குவைத்

August 01, 2007

கோவை குண்டு வெடிப்பு வழக்கு


கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது. கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே.ருத்ராபதி தெரிவித்தார். கோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் நாசப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்துவிட்டார். மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:

முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது. அப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.

நெவ்சாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.


குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார். கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.

- நன்றி - தினமனி

July 22, 2007

எங்கே எங்களது மாமா...?

40 பேர் ஒரே நேரத்தில் தனது குறியில் மிதித்தும் உயிரோடிருக்கும் இரும்பு மனிதர், தென்றல் காற்றுக்கும் தள்ளாடும் மார்க்கண்டேயன், ஜெயலலிதா அவர்களிடமிருந்து பாதுகாப்பு தேடி ஜெயலலிதா அவர்களிடமே தஞ்சமடைந்த கூட்டத்தாரில் ஒருவர், ததஜவின் மாநில பொருளாளர், உங்களால் ASA என்று செல்லமாக அழைக்கக்கூடியவரும், மாமா என்று அழைக்கக்கூடியவருமான ஏ. எஸ். அலாவுதீன் அவர்கள் எங்கே..? என்ன செய்தீர்கள் அவரை..? அவரின் சத்தத்தையே காணோமே, அடக்கி விட்டீர்களா..? இல்லை அடங்கி விட்டாரா..? அண்னண் பி.ஜெ அவர்களே, மச்சான் பாக்கர் அவர்களே எங்கே எங்களது மா..............மா..? வெளிக்கொணருங்கள் எங்கள் சிங்கத்தை, கேட்போம் அந்த சீவாங்குச்சியின் சத்தத்தை.....!

July 21, 2007

கல்வி கற்க உதவிடுவோம்...வாரீர்

கல்வி கற்க உதவிடுவோம்...வாரீர்
அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே..,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.., நமது தமுமுக-குவைத் மண்டலத்தின் பல்வேறு அரும்பணிகளில் தற்போது கல்வி உதவிப்பணிகளும் சேர்ந்துள்ளது. மாணவர்களின் தேவைக் கேற்ப அனைவரு க்கும் தற்போது கழகத்திலிருந்து உதவிட இயலாததால் வந்துள்ள விண்ண ப்பங்களுக்கு முழு நிறைவை அளிக்கமுடியாமல் வருத்தத்தில் உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, எஞ்சியுள்ள மற்றும் தாமதமாக வந்துள்ள இரண்டு விண்ணப்பங்கள் மட்டுமே மீதியுள்ளன. இவர்களில் ஒருவர், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர். கப்பல் துறையில் ஒரு பிரிவான G.P Wiring எனும் பிரிவிலும், மற்றவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவரான சகோதரி. இவர் B.Sc Computer Science எனும் பாடத்தையும் எடுத்துள்ளார்கள். இவர்களிருவரின் மதிப்பெண் பட்டியலை பார்வையிட்டு உதவிடவிரும்பும் சகோதரர்கள் aman_kwt@yahoo அல்லது tmmkkwt@sify.com என்ற மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொண்டால் தக்க விவரங்கள் அளிக்கப்படும். 'சீனதேசம் சென்றேனும சீர்கல்வி பெற்றுவா..! என்பது திருநபியின் அருள்மொழி. எனவே, நபிகளாரின் வாக்கையொட்டி நற்கல்வி பயின்று இறைவனின் அருளால் நல்வாழ்க்கை பெற்றிருக்கும் சான்றோர்ளே, அறிஞர்களே, மார்க்க சிந்தனையாளர்களே, சமூக ஆர்வளேர்களே, சகோதரர்களே இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி இவ்விருவருக்கும் இவர்களது கல்விக்காலம் முழுவதுமோ அல்லது ஏதேனும் குறிப்பிட்ட காலத்திற்குகோ தங்களால் இயன்றளவு உதவிடுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
என்றும் சமுதாயப்பணியில்
தமுமுக - குவைத் மண்டலம்

தமிழக அரசியல் இன்றைய கண்ணோட்டம்

தமிழக அரசியல் இன்றைய கண்ணோட்டம்:
அலைகள் மீது சவாரி - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
அலைகள் எழும் - விழும். ஆனால் அதன் மீதும் சவாரி செய்வதில் கில்லாடிகள் தமிழக அரசியல்வாதிகள்!!!
நடக்குமோ, நடக்காதோ, தள்ளிப்போடப்படுமோ - தவிர்க்கப்படுமோ என்றெல்லாம் சந்தேகத் தொட்டிலில் ஊஞ்சலாடிய மதுரை மேற்குத் தொகுதி சட்ட மன்ற இடைத் தேர்தல் கடைசியில் நடந்தே முடிந்துவிட்டது.
கலைஞர் கூட 25,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்திருக்க 31,000 வாக்கு வித்தியாசத்தில் ஏறக்குறைய 'ஜேக்பொட்டே' அடித்து விட்டார்கள் தி.மு.க.கூட்டணியினர்.
சென்ற தேர்தலில் 57,000 வாக்குகள் பெற்று தொகுதியையும் கைப்பற்றியிருந்த அ.தி.மு.க சுமார் 30,000 வாக்குகள் மட்டுமே பெற்று 27,000 வாக்குகளையும் தொகுதியையும் இழந்துள்ளது.
தி.மு.க. அரசு ஊழல் நிறைந்தது என்றும் அராஜக அரசியல் நடத்துகிறது என்றும் ஜெயலலிதா அம்மையார் நடத்திய அதிரடி அரசியல் தாக்குதல்கள் பொது மக்கள் மத்தியில் எடுபடாமல் போய் விட்டதும், வேறு எது பற்றிப் பேசினாலும் இந்த இரண்டைப் பற்றியும் பேச இவருக்கு அருகதை இல்லை என்று இவரது கடந்த கால அரசியலை கணக்குப்போட்ட பொது மக்களின் கணிப்பு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
அதே சமயம், திமுக, அதிமுக அணிகள் மாபெரும் கூட்டணிகள் அமைத்துப் போட்டியிட தனி நபராகக் களமிறங்கிய விஜயகாந்த் சென்ற தேர்தலில் பெற்றதை விட சுமார் நான்காயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தமிழகத்தில் தான் தான் மூன்றாவது சக்தி என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்.
ஆனால், உள்ளூராட்சித் தேர்தலில் இந்தத் தொகுதியில் இவர் பெற்ற வாக்குகளை விட இப்போது பெற்ற வாக்குகள் சுமார் 4,000 குறைவு என்பதை எண்ணும்போது மூன்றாம் சக்தி என்ற கூற்றை பலரும் ஏற்க மறுக்கிறார்கள்.
இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர் காங்கிரஸ் வேட்பாளர்தான் என்றாலும் இது திமுகவுக்கும்இ கலைஞருக்கும் கிடைத்த தனிப்பட்ட வெற்றி என்று சொன்னால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக பல்வேறு பழிச் சொற்களுக்கு இலக்கான கலைஞரின் மூத்த மகன் அழகிரிக்குக் கிடைத்த வெற்றி என்றால் அது சற்று அதிகப் பிரசங்கித்தனமாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை.
வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ' அண்ணன் அழகிரி வந்த பிறகுதான் வெற்றி சான்றிதழைப் பெற்றுக் கொள்வேன் என்று அடம் பிடித்ததும், கலைஞரின் முன்னிலையில் தான் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்வேன் என்று தன் கட்சியை விட திமுகவுக்கு தன்னுடைய விசுவாசத்தை பிரகடனப்படுத்தியதையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.
திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுகவும், விஜயகாந்த் கட்சியும் பிரித்ததால்தான் திமுக வெற்றி பெற்றது என்கிற வாதம் முன் வைக்கப் படுகிறது ஆனால் இவை இரண்டுமே சேர்ந்து போட்டியிட்டிருந்தாலும் திமுக கூட்ட்ணி 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கும் என்றுதான் வாக்கு எண்ணிக்கை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
மேலும் திமுக - அதிமுக எதிர்ப்பு வாக்குகள்தான் விஜயகாந்துக்குப் போகின்றன. ஒரு வேளை ஏதாவது கட்சியில் விஜயகாந்த் ஐக்கியமாகும் பட்சத்தில் இது காணாமல் போக வாய்ப்புண்டு.
உண்மையில் வை.கோதான் மூன்றாவது சக்தியாக வளர்ந்து கொண்டிருந்தார். அவர் அதிமுக ஜோதியில் ஐக்கியமானதும் அந்த இடத்துக்கு விஜயகாந்த் வந்துவிட்டார் என்று சொல்லலாம் வை.கோ போல இவரும் ஏதாவது கட்சியுடன் கூட்டு சேர்ந்தால் விஜயகாந்தும் இந்த இடத்தை இழக்க நேரிடலாம்.
திமுக போய் அதிமுகஇ அதிமுக போய் திமுக என்ற நிலை இனி வருங்காலங்களில் ஏற்படாது என்று அரசியல் அவதானிகள் ஆரூடம் கணிக்கிறார்கள். ஒரு மூன்றாவது சக்திதான் ஆட்சிக்கு வரும் என்றும் சேர்த்துச் சொல்கிறார்கள்.
2011ல் அந்த மூன்றாவது சக்தியாக பாட்டாளி மக்க்ள் கட்சி வரும் என்று அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மார் தட்டுகிறார். ஆனால் அவரது கட்சிக்கு மாநிலத்தின் வட புலத்தில் உள்ள அபரிமிதமான செல்வாக்கு தென்புலத்தில் இல்லை. அது மட்டுமல்ல அதன் கோட்டையான விருத்தாசலம் தொகுதியையே சென்ற தேர்தலில் அது விஜயகாந்திடம் இழந்துள்ளது. மேலும் வன்னியர்களின் சாதிக் கட்சி என்கிற தோற்றப் பொலிவிலிருந்து மீண்டு வர டாக்டர் பெரிதும் பாடு பட வேண்டியதிருக்கும். தன் சாதியையும் அந்நியப்படுத்தி விடாது, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வது டாக்டருக்கு கம்பிமேல் நடக்கும் கடின வித்தையாக இருக்கும்
வை.கோ - விஜயகாந்த் - இடது சாரிகள் சேர்ந்த ஒரு கூட்டணிக்கு இது சாத்தியமாகலாம். ஆனால் அது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்கிற சமாச்சாரம். ஆனால் வேடிக்கை என்னவென்றால் சில அத்தைகளுக்கு மீசை முளைக்கவே செய்கிறது.
அடுத்த தேர்தலில் பா.ம.க - திமுக கூட்டணியில் அங்கம் வகிக்காது என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன. அதற்கு வலு சேர்ப்பதுபோல் 2011 தேர்தலில் பா.ம.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்று டாக்டர் ராமதாஸ் வெளிப்படையாகவே பிரகடனப் படுத்தி விட்டார்.
அதுபோல வை.கோ அதிமுகவில் நீடிக்க மாட்டார் என்பது இப்போதைக்கு ஊகம். ஆனால் இது உண்மையாகாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
உள்ளூராட்சி தேர்தலில் ஒப்புக் கொண்டதற்கும் குறைவான இடங்களை ஒதுக்கியது. ஒதுக்கிய இடங்களில் அதிமுக காரர்களையே போட்டியிட வைத்தது. இது பற்றிப் பேச வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கும் நேர எல்லை கடந்து அனுமதியளித்தது என்பவையெல்லாம் தமிழக அரசியலைப் பொறுத்தவரை சகித்துக் கொள்ளக் கூடிய அவமானம்தான். இதற்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டால் பிறகு அரசியலே நடத்த முடியாது
ஆனால் ராஜ்ய சபாவில் ஓர் இடம் ஒதுக்காமல் போனது சகித்துக் கொள்ளக் கூடியதல்ல. ஆறு இடங்கள் காலியாகின்றன. நான்கு இடங்களில் திமுக எளிதாக வெற்றி பெற முடியும். அதில் ஒன்றைத் தன் மகள் கனிமொழிக்கும், இன்னொன்றை இளைஞர் அணித் தலைவர் திருச்சி சிவாவுக்கும் கலைஞர் ஒதுக்குகிறார். இருக்கும் இன்னும் இரண்டில் ஒன்று காங்கிரசுக்கும், மற்றொன்று வலதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிக்கும் போகின்றன.
மீதமுள்ள இரண்டு இடங்களில் ஒன்றில் அதிமுக நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்னொன்றை கைப்பற்ற இன்னும் சில வாக்குகள் மற்றவர்களிடமிருந்து தேவை. இதை வைத்து கலைஞர் ஓர் அரசியல் சித்து விளையாட்டு விளையாடி இருக்கக் கூடும் ஆனால் தன் மகள் கனிமொழி களத்தில் இருப்பதால் போட்டி என்று வந்தால்
பிரச்னைகளும் கூடவே சிக்கல்களும் வரக்கூடும் என்று கருதி அந்த ஓர் இடத்தை பெருந்தன்மையுடன் கலைஞர் அதிமுகவுக்கு விட்டுக் கொடுக்கிறார். ஜெ.அம்மையாரும் முதன் முறையாக கலைஞரை இதற்காகப் பாராட்டுகிறார்.
'போனஸாகக்' கிடைத்த இந்த இடத்தை நல்ல 'பார்லிமெண்டேரியனான' வை.கோவுக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுத்தால் நா.ம. கூட்டணிக் கட்சிகளின் தலைவராகவும் வை.கோவை நியமிக்க வேண்டியது நேரிடலாம். இது அம்மையாருக்கு ஏற்புடையதல்ல என்பது பொதுவான கணிப்பு அதுமட்டுமல்ல, தனக்கு நிகராக யாரும் வளர்வதை அந்த அம்மையார் விரும்புவதில்லை என்பது இது காறும் நாம் கண்டு வந்துள்ள சரித்திரம். அடுத்தவர் தனக்கு நிகராக மேடைகளில் ஆசனம் போட்டு அமர்வதைக் கூட அந்த அம்மையார் அனுமதிப்பதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை
வை.கோவை 'புரட்சிப்புயல்' என்கிறார்கள். ஆனால் 'புரட்சிப்புலி' என்பதுதான் பொருத்தமாக இருக்கும். புலி கூண்டுகுள்ளேயும் கூட உலாவும் சுபாவமுடையது. அடங்கி இருக்காது. எனவே அது தனது கட்டுத் தளைகளை அறுத்துக்கொண்டு ஒரு நாள் சீறிப்பாயும் என்கிற எதிர்பார்ப்பு இங்கே நிறைய இருக்கிறது. இது என்றோ நடந்திருக்கும். ஆனால் கட்சிக்குள் ஏற்பட்ட பின்னல்கள் - பிணக்குகள் - பிளவுகள் அவரை நிதானிக்க வைத்திருப்பதாகவும் சிலர் கணக்குப் போடுகிறார்கள்.
இந்த நிலையில்தான் நடிகர் சரத்குமார் இன்னும் இரண்டு மாதங்களில் தன்னுடைய புதிய அரசியல் கட்சி தோன்றும் என்று அறிவித்துள்ளார். ரஜினியைப் போலவே சந்தர்ப்பம் வந்த போது நழுவ விட்டு விட்டு வாலை விட்டு தும்பைப் பிடிப்பதையே இவரும் தொடர்கிறாரோ என்கிற சந்தேகம் ஆரம்பத்திலேயே எழுந்துள்ளது.
சமூக அமைப்பில் ஒற்றுமைக்கு மிகச் சிறந்த உதாரணம் நாடார் இன மக்கள். ஆனால் அமைப்பு ரீதியாக பல்வேறு பிளவுகளுக்கும் - பிரிவுகளுக்கும் சிறந்த இலக்கணமும் இவர்கள்தான். பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு அந்த சமூகத்தை வழி நடத்த POLITICAL HEAVY-WEIGHT எனப்படும் அரசியல் ஜாம்பவான்கள் யாரும் தோன்றவில்லை. குமரி அனந்தன் 'சின்னக்காமராஜர்' என்று சிறிது காலம் வலம் வந்தார். இடையில் இலக்குகள் தவறிப் பயணித்ததால் பாதை மாறிப் போய் தன் வழியில் தானே தடைக் கற்களை ஏற்படுத்திக்கொண்டார்.
நாடார் அமைப்புகளில் காணப்படும் பல்வேறு பிரிவுகள்தான் சரத்குமாரை களம் இறங்க தயங்க வைத்தன. அந்த நிலையில் இன்னும் மாற்றம் எதுவும் இல்லை. எனினும் துணிந்து களம் காண்கிறார். இதற்கு விஜயகாந்த் நாடார் இன மக்களை இலக்கு கொண்டு நெல்லையில் மாநாடு நடத்தியதும், ஆதித்தனார் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் பொருளாள ராக்கியது மட்டுமல்ல நாடார் இன மக்களின் ஜீவாதார பிரச்னையான கள் இறக்கும் உரிமம் வேண்டும் என்றும் விஜயகாந்த் குரல் கொடுத்தது தான் சரத்குமாரை துயில் கலையச் செய்திருக்கிறது
நாடார் இனத்தைச் சேர்ந்த திமுகவின் தூத்துக்குடி பெரியசாமியும், அதிமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனும் சரத்தை நாடார் மக்களிடையே அரசியல் ரீதியாகத் தலை எடுக்க அனுமதிப்பார்களா என்பது எழும் கேள்வி.
இதற்கிடையில் கலைஞர் இறக்கியுள்ள துருப்புச் சீட்டுகள் சரத்குமாரின் உறக்கத்தை கெடுக்க வல்லவை. தூத்துக்குடி பெரியசாமியின் மகள் கீதா ஜீவன், மறைந்த ஆலடி அருணாவின் மகள் டாக்டர் பூங்கோதை ஆகியோரை மாநில அமைச்சர்களாகவும், காவல்துறை 'என்கவுண்டரில்' உயிரிழந்த வெங்கடேசப் பண்ணையாரின் துணைவி ராதிகா செல்வியை மத்திய உள்துறை இணை அமைச்சராகவும் நியமித்ததன் மூலம் நாடார் இன மக்களின் பெருத்த அன்பிற்கும் அபிமானத்துக்கும் கலைஞர் ஆளாகியுள்ளார்.
இவற்றை விட இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் கலைஞர் தன் மகள் கனிமொழியை மத்திய மேல் சபை உறுப்பினராக அறிவித்ததும் அதை வரவேற்று அறிக்கை வெளியிட்ட முதல் அமைப்பு ஒரு நாடார் இன அமைப்புதான் அவர்கள் கூற்றுப்படி கலைஞரின் இரண்டாவது துணைவியார் ராஜாத்தி அம்மாள் நாடார் இனத்தைச் சேர்ந்தவர். எனவே கனிமொழியும் நாடார் இனத்தவர் என்பது அவர்களது வாதம்.
இது போக, சரத்குமார் மதுரைப் பகுதியில் பிறந்தவர் என்றாலும் விருதுநகர்-சிவகாசி பகுதிகளைச் சேர்ந்த வணிக வைசிய நாடார்கள் சரத்தை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. தெற்கிலுள்ள தக்ஷ்ணமாற நாடார் அமைப்புகளில் எந்த அமைப்பு அல்லது எத்தனை அமைப்புகள் சரத்தை ஏற்றுக் கொள்ளும் என்பதும் கண்டு அறிய வேண்டிய ஒன்று. அது காலத்தின் தீர்ப்பாகவும் இருக்கும். ஆக, சலசலப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால் சரக்குக்கு நிச்சயம் பஞ்சமிருக்கும்.
தமிழக அரசியலில் வருங்காலங்களில் பல சூடும் சுவையும் நிறைந்த திருப்பங்களை எதிர்பார்க்கலாம். Survival of the Fittest - தகுதி உள்ளவன் மட்டுமே தாக்குப்பிடிப்பான் - என்கிற இந்த ஆதிக்கப் போட்டியில் யார், யார் நிற்பார்கள், யார், யார் நிலைப்பார்கள், யார், யார் நினைவில் மட்டுமே இடம் பெறுவார்கள் என்பது கேள்வி ! பதில் ? - யாமறியோம் பராபரமே!!!

July 16, 2007

ஸ்டெப்ஸ் - ஷரீஃபா அவர்களுக்கு

தாங்கள் பெண்களுக்கான 'தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாஅத்' என்ற பெயரில் நெல்லையில் நடத்திய உண்ணாவிரதம் பற்றிய தகவல்கள் அறிந்தோம். அப்போழுது தாங்கள் பேசிய பேச்சுக்களும், பேசியவிதமும் தங்களைப் பற்றி சிந்திக்க வைத்தது. இஸ்லாமியப் பெண்ணிற்கு இஸ்லாமும், குர்ஆனும் பல்வேறு உரிமைகளையும், கடமைகளையும் வகுத்துத் தந்துள்ளது. அதே நேரம் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இவ்வாறு ஏக இறைவன் அல்லாஹுத்தஆலாவால் ஏற்படுத்தித் தந்துள்ள சில பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழும்பொழுது தான் ஒரு பெண் எல்லாநிலையிலும், எல்லோராலும் மதிக்கக்கூடிய, போற்றக் கூடியவளாக இருப்பாள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதைவிடுத்து, பன்நெடுங்காலமாகவே முஸ்லிம் விரோத பாசிஸ சக்திகளிடம் விலை போனவர்கள் பல்வேறுபட்ட கொள்கைக் குழப்பங்களை உண்டாக்கி நமது சமுதாயத்தை பாகுபடுத்தி, கூறுபடுத்தி, வேறுபடுத்தி வைத்திருக்கின்றனர். இன்னும் வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற பாசிஸ சக்திகளுக்கு மத்தியில், நமக்குள் உட்கார்ந்து பேசிதீர்த்துக்கொள்ளக் கூடிய விஷயங்களைக்கூட மேடைபோட்டு, மைக் வைத்து கூப்பாடு போட வேண்டுமா..? அதை அந்நிய ஆடவர்களும், கேமராக்களும் சுற்றி வந்து படம் பிடிக்கத்தான் வேண்டுமா..? அதை பிரசுரிக்கின்ற பத்திரிக்கைகளும், அதை பார்க்கின்ற, படிக்கின்ற முகம் தெரியாத ஆண்களும் என்னென்ன கற்பனைகள் செய்வார்கள் என்பதை சிந்திக்க வேண்டாமா..?
நீங்கள் உங்களை அவமதித்து அடிமைபடுத்திய ஜமாஅத் என்று எந்த ஜமாஅத்தைக்கூறுகிறீர்கள். மஹரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருப்பது என்னவென்று தெரியுமா..? இன்றும் கூட இஸ்லாமி விரோத மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமிய ஆண், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்களை எதிர்க்க ரோட்டுக்கு வரும் பெண்கள் கூட ஹிஜாப் என்ற கவசத்துடனே பிரவேசிக்கிறார்கள். ஆனால், நீங்களோ புடவையை இழுத்துச் சொருகிக் கொண்டு குழாயடிச் சண்டைக்கு வருவது போல் மைக் முன்பு நிற்கிறீர்கள். உலகத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அவர்களோடு உங்களையும் ஒப்பிட்டு பாருங்கள்.
ஏறத்தாழ எல்ல மஹல்லாக்களிலும் பெண்களுக்கான பயிற்சிகள், இல்லற ஒழுக்கம், பெண்கள் பயான், போட்டிகள், கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் எல்லா ஜமாஅத்துகள் மூலமாகவும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. பள்ளியோடும், மஹல்லா ஜமாஅத்தோடும், மார்க்கத்தோடும் சிறிதேனும் நெருங்கி வாழ்பவர்களுக்கு இதுவெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. பெரும்பாலான ஊர்களிலெல்லாம் பெண்கள் ஜமாஅத் என்று 3 நாட்களுக்கு பக்கத்து ஊர்களுக்கு செல்வார்கள், வருவார்கள். பெண்களுக்கு உண்டான எந்த பிரச்சனைகளையும் கேட்டு தங்களது கணவன்மார்களிடம் சொல்லி பிரச்சனைக்குள்ளான பெண்களின் கணவன்மார்களிடம் பேசச்சொல்லி எவ்வளவோ பிரச்சனைகளைத் தீர்த்திருக்கிறார்கள். ஷெரிஃபா அவர்களே நீங்களும், உங்களுடன் உள்ளவர்களும் ஒரு 3 அல்லது 40 நாள் பெண்களுக்கான தப்லீக் ஜமாஅத்தில் சென்று வாருங்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள், 'மார்க்க செயல்பாட்டில் குறைபாடு கொண்டவர்களாகவும், அறிவில் குறைபாடு கொண்டவர்களாகவும் இருந்து உறுதியான மனிதனொருவனின் அறிவையும் போக்கக் கூடிய உங்களைப் போன்ற ஒருவரை நான் காணவில்லை' என்று, அப்போது பெண்கள், 'அல்லாஹ்வின் தூதரே..! அறிவுக் குறைபாடு மார்;கக செயல்பாட்டில் குறைவு என்பதன் மூலம் எதனை நீங்கள் கருதுகின்றீர்கள்' எனக் கேட்டனர். அதற்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'பெண்ணின் சாட்சியம் ஆணின் சாட்சியத்தில் பாதியல்லவா' என வினவ 'ஆம்' என பெண்கள் பதில் கூறினர். 'அதுவே அவர்களது குறைவைக் காட்டுகின்றது' என்றார் இறைத்தூதர் (ஸல்). 'மாதவிடாய்க் காலத்தில் அவள் நோன்பு பிடிக்கவோ, தொழவோ மாட்டாள் அல்லவா..,' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வினவ பெண்கள் 'ஆம்' என்றனர். 'இது அவளது மார்க்க செயல்பாட்டில் உள்ள குறைவைக் காட்டுகின்றது' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள். இது ஸஹீஹ் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸாகும்.
அதே நேரத்தில் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெண்களை பரிகசிப்பதும் பிழையான செயலாகும். ஏனெனில் இறைத்தூதர் இப்படியும் சொல்லியிருக்கிறார்கள். ''உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே. நான் என் மனைவியரிடத்தில் சிறந்தவனாக உள்ளேன்.'' (இப்னுமாஜா) என்றும் இருப்பதனால், பெண்களது பிரச்சனைகளை ரோட்டுக்குக் கொண்டு சொல்ல அனுமதியளித்த இவர்களின் கணவன்மார்கள் சிந்திக்க வேண்டும்.
இன்னும் ஷெரிஃபா அவர்களே, உங்களுக்கு நேர்ந்த அனுபவங்களும், நீங்கள் தேடிய ஆதாரங்களினாலும் தங்கள் செய்வது தான் சரியான வழி என நினைத்தால் உங்கள் ஊர்களில் உள்ள பெரும்பான்மை பெற்ற, ஆண்கள் நிர்வாகிக்கும் இயக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள். ஏனென்றால், அவ்வியக்கங்கள் நடத்தும் சமுதாய முன்னேற்றத்திற்கும், உரிமைக் குமான ஆர்பாட்டங்கள், போரட்டங்கள், மறியல்கள், தர்ணாக்கள் போன்ற எல்லாவற்றிலும் கணவன்மார்களின் முழுச் சம்மதத்தோடு அவர்களின் பெண்களும் கலந்து கொள்வதனால் அவர்களுக்குரிய முழுப்பாதுகாப்பையும், பொருப்யையும் கணவன்மார்களால் கொடுக்க முடிகிறது. அதேபோல் உங்களுடைய, உங்களுடன் இருப்பவர்களுடைய கணவன்மார்களையும் உங்கள் ஊர்களில் உள்ள இயக்கங்களில் இணைத்துக்கொள்ளச்செய்து அதன் மூலம் உங்களது பிரச்சனைகளை வெளிக் கொணருங்கள். நன்மையை நாடி நீங்கள் நடத்திய பெண்களுக்கான உரிமைப்போராட்டங்கள் உங்கள் தலைமையில் நடத்தப்பட்டு அதன்மூலம் நீங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்திருந்தால் அதற்குண்டான கூலி மறுமையில் இன்ஷாஅல்லாஹ் உண்டு. ஆனால், நீங்கள் சென்ற வழிமுறை மற்றும் இஸ்லாமிய சட்ட மீறல்களுடன் இருந்தால் இறைவனால் பலமாக தண்டிக்கப்படுவீர்கள். ஏனெனில் மிக அத்தியாவசியத் தேவை இருந்தாலன்றி ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுதல் கூடாதென அல்லாஹ் கூறுகின்றான், ''அவர்கள் (பெண்கள்) தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக் கட்டும், ஆரம்ப ஜாஹிலிய்ய நிலை போன்று தமது அழகுகளை வெளிக்காட்டித் திரிய வேண்டாம்'' எனறு இவ்வசனம் இரு கருத்துக்களைத் தருகின்றது :
முதலாவது, ஒரு முஸ்லிம் பெண், வீட்டில் இருக்கும் போது தான் மன அமைதியையும் பூரண திருப்தியையும் பெறுகிறாள். ஏனெனில் அப்போது தான் அவள் அல்லாஹ் பெண்ணில் படைத்து விட்;ட இயற்கை உணர்வோடு ஒத்துப் போகும் பணியில் ஈடுபடுகின்றாள். அப்போது தனது பணியை மிகச் சரியாக நிறைவேற்றுகிறாள். பெண் வீட்டிலிருப்பதை ஒரு நிர்ப்பந்தமாக கருதி வீட்டை விட்டு வெளியேறுவதை விரும்புவார் களாயின் அது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதாக அமையும். மேலும் தனது வீட்டுக் கடமைகளிலும் தோல்வி அடைவாள்.
இரண்டாவது, ''ஆரம்ப ஜாஹிலிய்யத் நிலை போன்று அழகுகளை வெளிக்காட்டித் திரிய வேண்டாம்'' என்ற வசனத்தின் அடுத்த பகுதி சொல்லுகிறது. ஒரு பெண் வீட்டில் தன் கணவனுக்கு மட்டும் அழகுகளைக் காட்டுவது ஜாஹிலிய்ய பண்பா? அல்லது சிறந்த முறையா? உண்மையில் வீட்டுக்கு வெளியே செல்லும் போது அழகுகள் வெளித் தெரிய நடந்து கொள்ளுவது தான் ஹராமாகும். இந்த வகையில் ஒரு முஸ்லிம் பெண் அடிப்படையில் வீட்டில் இருந்து தன் பணிகளை நிறைவேற்ற வேண்டும். ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டால் ஆரம்ப ஜாஹிலிய்யத் நிலை போன்று அழகுகளை வெளிக்காட்டி நடந்து கொள்ளக் கூடாது என்ற கருத்து குறிப்பிட்ட இறை வசனத்திலிருந்து பெறப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியேறும் போது அழகுகளை வெளிக்காட்டக் கூடாது என்று இறைவசனம் கூறுவதனூடாக, அனுமதிக்கப்பட்ட காரணத்திற்காக உரிய முறையில் வீட்டை விட்டு வெளியேற முடியும் என்ற கருத்தையும் பெற முடிகின்றது. அந்த வகையில் ஷரீஅத்தில் வாஜிபான ஒரு காரியத்தை நிறைவேற்ற ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறல் வாஜிபாகும். முபாஹான காரியத்தை நிறைவேற்ற வெளியேறல் முபாஹ் ஆகும். மக்ரூஹ் அல்லது ஹராமான காரியத்தில் ஈடுபட வெளியேறினால் அது மக்ரூஹாக அல்லது ஹராமாக அமையும். எனவே இஸ்லாமியப் பணிக்காக வீட்டை விட்டு வெளியே றுவதும் அப்பணியின் சட்ட நிலைகளைப் பொறுத்து வாஜிபாகவோ, சுன்னத்தாகவோ அமையலாம்.
''அல்குர்ஆன் பெண்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கிவிட்டது எனவும், ஆனால், நடைமுறையில் முஸ்லிம் பெண்கள் எந்தவித உரிமையும் இல்லாமல் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். அப்படி பெண்களை அடிமைப்படுத்துவதற்கு மார்க்கத்தையும், குர்ஆனையும் ஆண்கள் முகமூடிகளாகப் பயன்படுத் திக்கொள்கின்றனர். குர்ஆனில் பெண்களுக்குக் கல்வி, திருமணம், விவாகரத்து, சொத்து மற்றும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இவை அனைத்தும் மறுக்கப்பட்டிருக்கின்றன...,'' இவையெல்லாம் நீங்கள் பேசியவைதான்.
குர்ஆன் கூறுகிறது, எங்களது உரிமைகளை கொடுங்கள் என்று கூப்பாடு போடும் நீங்கள், அதைப் பெற்றுக்கொள்ள அழகான வழிமுறைகளை கையாண்டீர்களா என்றால் இல்லை. ஏனெனில், இஸ்லாமிய சிந்தனையில் கவனம் செலுத்து வதற்காக உங்கள் வீட்டில் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும்; நேரம் ஒதுக்கி குறிப்பிட்ட அந்த நேரத்தில் கணவன், பிள்ளைகள் அனைவரும் உட்கார்ந்து குர்ஆனை ஓதி, விளங்கி ஷரீஅத்தின் சட்டதிட்டங் களையும், உரிமைகளையும் உங்கள் வீட்டில் பெற்று கொண்டிருப்பதன் மூலமாகத்தானே மற்றவர்களின், சமூகத்தின் பிரச்சனைகளைக் களைய முடியும். அவ்வாறு செய்திருக் கிறீர்களா..? தன் வீட்டில் ஓர் அழகிய இஸ்லாமிய சூழலைப் பெற்றுள்ள பெண் தான் ஏனைய பெண்களுக்கு மிகவும் தேவையாக உள்ளாள். எனவே இத்தகைய பெண், பெண்கள் பகுதியில் உழைப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிச் செல்வது ஏனைய பெண்களை விட ஒருபடி கூடுதலாக கடமையாகிறது.
நீங்களும், உங்கள் பின்னால் உள்ள ஒவ்வொருவரும் கீழ்வரும் கேள்விகளை மனந்திறந்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்வதோடு அதற்கான தெளிவான பதில்களையும் தேடிக் கொள்ள வேண்டும்.
  • நான் இஸ்லாத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்டுவதில் உண்மையான நாட்டமும் எண்ணமும் கொண்டுள்ளேனா?
  • எனது நேரம் எனது தேவை இவை அனைத்திலும் இஸ்லாத்திற்கு நான் முதலிடம் கொடுத்துள்ளேனா?
  • இஸ்லாமியப் பணிக்காக உலக இன்பங்களில் சிலவற்றை விட்டுக் கொடுக்க நான் தயாராக உள்ளேனா?
  • இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவது, இஸ்லாமிய நாகரீகத்தை உருவாக்குவது ஆண் இன்றி பெண்ணினால் மாத்திரம் சாத்தியமாகுமா?
  • எமது கணவரும் ஆண்மக்களும் கலந்து கொள்ளாமல் ஆண்களிடையே, பெண்களுக்கான இஸ்லாமிய எழுச்சி பெற முடியுமா?
  • எமது உரிமைகள் சிலவற்றை நாம் விட்டுக் கொடுக்காமல் அல்லது வீட்டு வேலைகள் சிலவற்றில் நாம் பங்கு கொள்ளாமல், போராட்டத்தில் கலந்து கொள்ளுதல் சாத்திய மாகுமா?
  • நாம் எமது சுயநலப் போக்கால் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தேவைகளுக்கு, அவர்களின் மனைவியர்கள் எவ்வாறு உதவினார்களோ அவ்வாறு நாமும் நமது கணவன்மார்களுக்கு உதவுகின்றோமா..?

இது போன்ற கேள்விகளுக்கு உண்மையான விடை தேடிக்கொண்டு பிறகு உங்களது உரிமைகளையும், தேவைகளையும் தேடுங்கள்.
மேற்சொன்ன கருத்துகளையெல்லாம் சிந்தித்து, ஆராய்ந்து மார்க்க அறிஞர்களிடமும், இயக்கத் தலைவர்களிடமும் கலந்தாலோசித்து பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். ''தர்கா விழாக்களுக்கு பெண்கள் சென்றால் அந்நிய ஆடவர்கள் அவர்களைப் பார்ப்பதற்காகவே வருவார்கள். அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது, அதனால் தர்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது'' என்று பிரகடனம் செய்தவர்களே தங்கள் ஜமாஅத்தின் வளர்ச்சியைக் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட பெண்களை பயன்படுத்துவதை வன்மையாக கண்டித்து வருகின்ற இவ்வேளையில் நீங்கள் தனித்து ஆண்கள் துணையின்றி மார்க்கத்திற்கு முரணான (ஹிஜாப் இன்றியும், மஹரத்தை பேணாத) வகையில் போராடுவது எவ்வகையில் நியாயம் என்று கூறுங்கள். (உங்கள் உடம்பு இளைக்க ஊர் பெண்களையும் ஏன் பட்டினி போடுகிறீர்கள்.)

July 11, 2007

ஜனநாயகத்தை தேடிய தீவிரவாதத்தின் பயணங்கள்..!

ஜனநாயகம் - இது மக்களால், மக்களில், மக்களுக்காக தேர்வு செய்யப்படும் தலைமை. தலைமைகள் என்ன ஆரோக் கியமாகவா இருக்கின்றது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங் களிலும் பதவி வகிப்பவர்களுக்கு குறைந்த பட்ச தகுதி என்னவென்றால், அவர் மீது ஏதாவது ஒரு வகையிலாவது கிரிமினல் வழக்கு பதிவாகி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது. நம் நாட்டில் இதுவரை நடந்த தேர்தல்களைக் கருத்தில் கொண்டால், கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு மேல் எங்கும் ஓட்டு பதிவானது கிடையாது. ஆக, 40 சதவீதம் பேர்கள் தேர்தல்முறையை விட்டே விலகி நிற்கின்றார்கள். மீதி 60 சதவீதம் பேர்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளரைத் தேர்வு செய்கின்றார்கள். குறைந்தது மூன்று கட்சிகள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால், சராசரியாக ஒரு கட்சிக்கு 20 சதவீத ஓட்டு என்றால், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஓட்டளித்தவர்கள் 20 சதவீதம் என்றாகின்றது. ஆக, ஜனநாயகம் என்பது 80 சதவீதம் பேர் வெறுப்பில் 20 சதவீதம் பேரின் விருப்பம் நிறைவேறுகின்றது.
இதுதான் ஜனநாயகம் என்றால், முரண்பாடுகள் தான் முதலாக அமையும். ஏனெனில், அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றோம் என்று வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பது என்பது, அறுதிப் பெரும்பான்மையின் வெறுப்பில் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்று தான் அர்த்தமாகின்றது.
ஜனநாயகப்படி தேர்வு செய்யப்பட்ட அரசுகள், நாடுகள் சந்தித்த பிரச்னைகள், அங்கே ஜனநாயகம் இல்லை, மக்கள் அவதிப்படுகின்றார்கள், அவர்களுக்கு சுவாசத்தை மீட்டுத் தரப் போகின்றோம் என்றார்கள். ஆப்கானில் தேர்தல் நடந்தன. வாக்குப் பெட்டிகள் பாக்கிஸ்தானில் இருந்து, வாக்குச் சீட்டுகள் முத்திரையிடப்பட்டபடி ஆப்கான் வந்து சேர்ந்தன. என்ன ஆச்சரியம்..! ஜனநாயகத் தேர்தலில் கர்சாய் வெற்றி பெற்று விட்டார்.
மிக நீண்ட நாட்கள் கழித்து ஈராக்கில் ஜனநாயக அடிப்படையில் தேர்தல். வேட்பாளரே முன் வந்து நான் தேர்தலில் நிற்கவில்லை என்று அறிவித்த அதிசயம் அங்கு நிகழ்ந்தது. சரி.., மற்ற நாடுகளாக இருந்தால் அங்கு சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடக்கும். கண்காணிப்பு இருக்கும். ஆனால், ஈராக்கில் அவர்களுக்கு அனுமதி இல்லை.
அதிகம் பேசிய அல் ஜஸீரா தொலைக்காட்சி நிலையம் பூட்டப்பட்டது, ஏன்..? நிருபர்களும் கூட நிரந்தரமாக உலகத்தை விட்டே அனுப்பப்பட்டு விட்டார்கள். காரணம்.., அங்கு ஜனநாயகம் இல்லை.
யுக்ரைனில் ஜனநாயம் என்ற போர்வையில் ரஷ்யா ஒரு அணியிலும், மேற்கத்திய நாடுகள் ஒரு அணியிலும் ஒரு நாட்டின் இறையாண்மையை, மக்களை துண்டாக்கி பண பலமும், படை பலமும், மீடியா பலமும் பொருந்திய மேற்கத்திய நாடுகள் தனது ஆதிக்கத்தில் என்றும் போல் தக்கவைத்துக் கொண்டது.
நமது பக்கத்து நாடு.., நேபாளம். மன்னராட்சி அறிமுகம். பத்திரிக்கைகளுக்கு வாய்ப்பூட்டு..! என்ன செய்ய.., அமெரிக்கா மன்னராட்சிக்கு மலர்வளையம் வைக்கின்றது, நவீன ஆயுதங்கள் இறக்குமதியாகின்றன.
பங்களாதேஷில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை நிலவுகின்றது. மன்மோகன் சிங் குதிக்கின்றார். சார்க் மாநாட்டுக்கு நான் போக மாட்டேன். ஜனநாயகம் மலர வேண்டும். நல்ல காரணம், நல்ல நோக்கம் தான். என்ன செய்ய கொள்கைப் பிடிப்பு தளர்கின்றதே..?
சற்று எட்ட தூரத்தில் பர்மா..! இராணுவ ஆட்சி.., ஜனநாயகத்திற்குப் போராடும் ஒரு பெண்மணி, வீட்டுக் காவலில்.., சார்க் மாநாட்டுக்குப் போகாத மன்மோகன் சிங்கின் அமைச்சர், இராணுவ ஆட்சி நடக்கும் பர்மாவிற்கு ஒப்பந்தம் போடப்போகின்றார், ஏன்.., பர்மா, பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்கு எண்ணெய்க் குழாய் பதிப்பதற்கான ஒப்பந்தத்திற்காக..! ஏன்..! அங்கு விளையும் ஓபியம் என்ற கஞ்சா தான் இன்றைக்கு உலக வல்லரசின் உளவுத் துறைக்கே தீணி போடுவதாக வேறு பிரச்சாரம் அந்த நாட்டிலேயே வெகுவேகமாக நடக்கின்றது. அதன் முன்னாள் தலைவரே அதனை ஒப்புக் கொண்டுள்ளார். மனித விரோத, சர்வாதிகார இராணுவ ஆட்சியுடன் எப்படி ஒப்பந்தம் போடுகின்றோம்.
ஆனால் பக்கத்தில் பாகிஸ்தானில் மட்டும் ஜனநாயகம் இன்னும் மலரவில்லை என்று தினம் அரைப்பக்கத்துக்கு செய்தி வாசிக்கின்றோம்.., முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் ஜனநாயகமோ..?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசூலா அதிபர் அவ்வப்பொழுது அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப் படுகின்றார். அவரைக் கவிழ்ப்பதற்கான அத்தனை முயற்சிகளும் செய்யப்படுகின்றன.
கியூபா.. பிடரல் காஸ்ட்ரோ.., அவரையும் மக்கள் நேசிக்கின்றார்கள். இருந்தும் என்ன? நான் நேசிக்கவில்லையே..! என்கிறார்.., பின்னே என்ன அங்கும் தீவிரவாதத்திற்கு பயிற்சி.., ஆயுத சப்ளை.. என்ற குற்றச்சாட்டு.
இப்படியே போய்.., இப்பொழுது ஈரான், சிரியா அடுத்த இலக்காக குறி வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆளில்லாத விமானம் ஈரானின் மீது பறந்து கொண்டு எங்கே ஆதாரம் கிட்டதா என்று அலைகின்றது. அந்நிய நாட்டின் வான் எல்லை மீறப்படுகின்றது. அந்நிய நாட்டின் இறையாண்மை தூக்கி எறிப்படுகின்றது.
மேலே உள்ள ஆதாரங்களின் மீது சற்று கவனத்தைத் திருப்பினால், அதிகாரத் தோரணையுடன் ஆட்சியில் வீற்றிருக்கும்.., சுருங்கச் சொன்னால் நாட்டின் உயர்அந்தஸ்தில் இருந்து கொண்டு தடி எடுத்தால் அது நிர்வாக யுக்தி, அரசியல் சாணக்கியம். அதேநேரத்தில் அதிகாரம் இல்லாத ஏன்.., தனிநபர் ஆயுதம் எடுத்தால் தான் என்றில்லை.., வீட்டில் ஆடு அறுக்க கத்தி வைத்திருந்தாலும் அது தீவிரவாதம்.
பக்கத்து நாட்டின் மீது போட்டுத் தாக்க ஒரு நாடு அணுஆயுதம் தயாரித்தால் அது ராஜ தந்திரம்.., ஆனால் தனி மனிதன் வெடிக்காத பட்டாசை கையில் வைத்திருந்தால் அது தீவிரவாதம். இப்பொழுது புரிகின்றதா.., ஆட்சி, அதிகாரம், ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு ஒரு சமூகத்தின் மீது அராஜகம் கட்டவிழ்த்து விடப்படும். ஆனால், அந்த சமூகம் எந்தவித உணர்ச்சியையோ எதனையும் அது வெளிக்காட்டக் கூடாது. புழுப் பூச்சியை குச்சியால் நிமிண்டினால் கூட சற்று அது உணர்ச்சியைக் காட்டும், ஆனால், மனிதன்.., காட்டக் கூடாது. அதிலும் முஸ்லிம் காட்டவே கூடாது.
ஆப்கானில், பாலஸ்தீனில், ஈராக்கில், செசன்யாவில்.., காஷ்மீரில்.., தாய்லாந்து, என்று நீங்கள் எங்கு திரும்பினாலும் முஸ்லிம்கள் மீது சொல்லொண்ணா படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும், அந்த சமூகம் உணர்ச்சியற்ற ஜடமாக உலா வர வேண்டும் என்பது விபரீதமானதொரு எதிர்பார்ப்பு..
இவ்வளவு ஏன் இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் ஜெர்மனியில் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் ஹிட்லர் அரிதப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அதுவே இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த காரணிகளில் ஒன்றாகவும் அமைந்தது. இரண்டாம் உலகப் போருக்கு ஹிட்லர் மட்டும் காரணமல்ல, மாறாக சோவியத்தின் சர்வாதிகாரியான ஸ்டாலினும் கூட காரண கர்த்தாவாகவே இருந்தார். இன்னும் தொழில்முறைப் போட்டி யாளராக ஜெர்மனியை வரித்தெடுத்துக் கொண்ட யூதர்களும், அவர்களுடன் இணைந்து கொண்ட அமெரிக்கர்களும் காரணகர்த்தாக்களாவர். இன்னும் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா வரைக்கும் பரவியிருந்த சாம்ராஜ்யம் எங்கே அஸ்தமித்து விடுமோ என்று பயந்த பிரிட்டனும் இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாகும்.
ஆக, உலகத்தை நடுநடுங்க வைத்த கோடிக்கணக்கான மக்களைப் பழி எடுத்த இரண்டாம் உலக மகா யுத்தத்தை யார் ஆரம்பித்து வைத்தது என்றால், ஜனநாயகம் என்ற பெயரிலும், கம்யூனிஸம் என்ற பெயரிலும், முதலாளித்துவம் என்ற பெயரிலும், வியாபாரம் என்ற போர்வையிலும், பாஸிஸம், நாஜிஸம் என்ற பெயரிலும் இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் உள்ள மக்களையும் தங்களது கைப்பிடிக்குள் போட்டுக் கொள்ள முயன்ற ஆதிக்கவாதிகள் தான்.
ஹிட்லர் முஸ்லிம்களுடன் நட்புரிமை பாராட்டி வந்ததும், முஸ்லிம்கள் ஹிட்லரின் அணியில் சேர்ந்து கொண்டதும் வரலாற்றுத் தவறல்ல, மாறாக முஸ்லிம்கள் மீது சொல் லொண்ணா அடக்குமுறைகளை பிரிட்டனும், அமெரிக்காவும் இன்னும் ஆப்பிரிக்கப் பிரதே சத்தில் ஃபிரான்ஸும், இவர்களுடன் யூத சதிகளும் இணைந்து கொள்ளவே இவர்கள் அனைவ ருக்கும் எதிரான முகாமில் இருந்த ஹிட்லருடன் முஸ்லிம்கள் இணைந்து கொள்ள வேண்டிய தேற்பட்டது.
ஆனால், வரலாறு நெடுகிலும் எந்தவொரு போர்ப் பிரகடனத்தையும் முஸ்லிம்கள் யார் மீதும் சுமத்தியது கிடையாது. அவ்வாறிருக்க முஸ்லிம்கள் மீது ஏன் இவர்கள் போர் பிரகடனம் அறிவித்தது போல் நடந்து கொள்கின்றார்கள், தீவிரவாதிகள் என்று கூறுகின்றார்கள், குவாண்டனாமோ, அபூகிரைப் சித்ரவதை முகாமில் வைத்து சித்ரவதைகளைச் செய்கின் றார்கள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றார்கள்.
ஹிட்லரை மேற்க்கத்திய நாடுகள் எதிர்த்ததற்கு காரணம், ஜனநாயக முறையிலான தேர்தலில் அவர் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை ஆரம்பித்தார். இரண்டாவது, ஜெர்மனி மக்களுக்கு இரண்டு உத்ரவாதங்களைத் ஹிட்லர் தந்தார், ஒன்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இரண்டாவது அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ வசதி. மூன்றாவது, தேக்கமற்ற சமூக வளர்ச்சிக்கு நிறைவான மனித வளம். இந்த மூன்று காரணிகளும் தான் ஜெர்மன் மீது போர்ப் பிரகடனம் செய்ய வைத்தன.
உண்மையில் ஹிட்லரை விட உன்னதமான ஜனநாயகம் இஸ்லாத்தில் தான் இருக்கின்றது. இரண்டாவது, இஸ்லாம் தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர் களையும், ஏற்றுக் கொள்ளாதவர்களையும் சமமாகப் பார்க்கக் கூடியதொரு உண்மையான ஜனநாயகக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. அது ஆட்சிக்கு வந்த போதெல்லாம் ஏனைய கொள்கையினர் சுதந்திரமாக வாழ்ந்தனர், சுதந்திரமாக தங்களுடைய வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டனர். மூன்றாவதாக, அதனிடம் மற்ற சமுதாயத்தினரை விட நிறைவான மனித வளம் இருக்கின்றது. அந்த மனித வளத்தை முழுமையான முன்னேற்றப் பாதையின் கீழ் கொண்டு செல்வதற்கான பொருளாதாரக் கொள்கையும் அதனிடம் இருக்கின்றது. ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரியாக அல்ல, மாறாக, நடுநிலையான சமுதாயத்தை அமைப்பதற்குத் தேவையான சமூக நீதி அதனிடம் இருக்கின்றது. எனவே, தான் தங்களது சுரண்டலுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க யாரும் இருக்கக் கூடாது என்று இன்றைய அமெரிக்காவும், பிரிட்டனும், அவர்களுடன் இணைந்து தோளோடு தோளாக நின்கின்ற யூதர்களும் நினைக்கின்றார்கள்.
ஏனெனில், இறுதி வரைக்கும் முஸ்லிம்கள் அடிமை வாழ்வு வாழ மாட்டார்கள். அவர்களின் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் அடக்குமுறைக்கு எதிராகப் போர் தொடுப்பார்கள். அவர்கள் படைத்தவனுக்கு மட்டுமே அடிமைகளாக இருப்பதில் சந்தோஷம் அடைபவர்கள். பனி படர்ந்த சைபீரிய மரணப்படுகொலை முகாம்.., வருடம் 1941, தார்த்தாரிஸ்தான் மற்றும் புகராவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் அந்த முஸ்லிம்கள். தங்களது தலைக்கு மேலாக கத்தி தொங்கிக் கொண்டிருந்த நிலையிலும் மறைமுகமாக அந்த முகாம்களில் தொழுகையை நிறைவேற்றிய வண்ணம் அவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்ற செய்தியைப் படிக்க முடிகின்றது.
இன்றைக்கும் அவர்களது இளவல்கள் தான் செசன்யாவில் ரஷ்யாவோடு போர் தொடுத்து வருகின்றார்கள். உலகத்தின் பார்வையில் தீவிரவாதிகளாக..!
நாடு என்ற அளவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய நாடுகளில் தங்களது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பொம்மைகளை ஆட்சி பீடத்தில் அமர்த்தி வைத்திருந்தாலும், மக்களின் கொள்கைத்தாகம் அவ்வப்பொழுது அங்கும் இங்கும் வெடித்து வருவதனை இவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே, உலகத்தின் பார்வையில் இந்த முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, அவர்களை உலக சமூக வாழ்விலிருந்து தனிமைப்படுத்தி அவர்களை மக்கள் தொடர்பிலிருந்து முதலில் விடுவித்து, பின்னர் அவர்களை கொள்கையற்றவர்களாக, தங்களது வாழ்க்கைப் போராட்டத்திற்காக கொள்கையை விற்றுவிடக்கூடியவர்களாக முஸ்லிம்களை ஆக்கி விட வேண்டும் என்று ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றிணைந்து பாடுபட்டு வருகின்றன. அதற்காக தங்களது அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றன.
அவர்களது சுயலாபத்திற்காக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷர்ரப்பிற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள், நேபாள மன்னருக்கு வெஞ்சாமரம் வீசுவார்கள், பர்மாவின் இராணுவ ஆட்சியாளருக்கு காவல் பூனையாக இருப்பார்கள், ஆனால் அவர்கள் சுயலாபம் பாதிக்கப்பட்டால் பிடல் காஸ்ட்ரோ ஒரு முள்ளாகக் கருதப்படுவார். தாலிபான்கள் கரையான் புற்றுக்களாகச் சித்தரிக்கப்படுவார்கள்.
ரஷ்யாவை எதிர்க்க ஆயுதமாகப் பயன்பட்ட பின்லாடன் அப்போது விடுதலை வீரர், இப்போது தேடிக் கொல்ல வேண்டியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்.
யூதர்களைப் படுகொலை செய்தார் என்பதனால் ஹிட்லரை அழித்ததில் நியாயம் இருக்கின்றது. சைபீரிய மரணப் படுகொலை முகாம்களில் மனித நர வேட்டை நடத்தியது ரஷ்யா என்பதனால் அதனை அழித்ததிலும் நியாயம் இருக்கின்றது. முஸ்லிம்கள் யாரை எதனை அழித்தார்கள்? எதற்காக இந்த வெறியாட்டம் நடக்கின்றது?
அமெரிக்காவுக்குச் சொந்தமான பியர்ள் ஹார்பர் துறைமுகத்தை ஜப்பானியர்கள் ஆக்கிரமித்தார்கள் என்பதற்காக ஹிரோஷிமா - நாகஸாகியில் அணு குண்டுகளைப் போட்டோம் என்றாலும்.., வாதத்திற்காக தலையை ஆட்டி வைக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் அமெரிக்காவின் எந்த ஹார்பரையும் அழிக்கவில்லை,
செப்டம்பர் 11 தாக்குதல் கூட, அதன் விசாரணை அறிக்கையின் உண்மை என்னவென்பதே யாருக்கும் தெரியவில்லை. சம்பவம் நடந்த பொழுது ஸவூதி அரேபியாவின் பெயர் அதிகம் அடிபட்டது. சமீபத்தில் ஸவூதியின் தலையீடு இதில் இல்லை என்று அமெரிக்காவே கூறி விட்டது. பின்னர்.., முஸ்லிம்களின் மீது ஏனிந்தப் போர்..!
அது தான் மிகப் பெரிய சூட்சுமம். எந்தக் கொள்கையையும் உறுதியோடு எதிர்க்கும் உள வலிமை அவர்களிடம் உண்டு. எனவே, எப்பொழுது எந்தக் கொள்கை அரியணை ஏறினாலும் அதன் அடக்குமுறைக்கு முதல் எதிர்ப்பு முஸ்லிம்களிடத்திலிருந்து தான் வரும். அதனை இஸ்லாம் என்ற கொள்கை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் என்ற உண்மை முஸ்லிம்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, இந்த ஏகாதிபத்தியத் தீவிரவாதிகள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.
அவர்கள் முதலில் முஸ்லிம்கள், இஸ்லாத்தைக் கொள்கையாகப் பின்பற்றுபவர்கள்.., சுய ஆதிக்கம், சுய லாபம் என்ற மனித விரோதசக்திகளுக்கு எதிராக அவர்கள் போர் தொடுத்திருக் கின்றார்கள். அதற்கு அவர்களது கொள்கை ஊட்டமளிக்கின்றது.
ஆனால், ஜனநாயகம் - தீவிரவாதம் போன்ற எதிலும் தலையிடாத நிலைப்பாட்டில் இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் மிகப் பெரிய ஆதிக்க சக்தியாகவோ அல்லது பொருளாதார சக்தியாகவோ அல்லது இராணுவ வலிமை மிக்க சக்தியாகவோ சமீப கால வரலாற்றில் என்றுமே அவர்கள் தங்களை இனங்காட்டிக் கொண்டதில்லை. பின்னர் ஏன் அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகின்றார்கள்.
ஆதிக்கச்சக்திகளோ.., ஜனநாயகம் என்ற பெயரில் போலி நாடகம் ஆடுகின்றன. அவர்களது வாயில் ஜனநாயகம் என்று வந்தால், அவர்களது சுய லாபம் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். அவர்களது வாயில் தீவிரவாதம் என்று வந்தால் எங்கோ அவர்களது சுய லாபம் ஆட்டம் காண்கின்றது என்று அர்த்தம்.
சுய ஆதிக்கமும், சுய லாபமும் மனித சமூகத்திற்கு எதிரானது..! அதனை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால், மனித விரோதிகள் என்பவர்கள் யார்..!? மனித குலத்திற்கு எதிரி யார் என்பதை இப்பொழுது புரிந்திருப்பீர்கள். தீவிரவாதம் என்றால் என்ன என்பதையும் இப்பொழுது புரிந்திருப்பீர்கள்..!