இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

December 15, 2009

டிசம்பர் 6 கருப்புதினக் கண்டனகூட்டம்






குவைத் தமுமுக ஏற்பாடு செய்த டிசம்பர் 6 கருப்பு தினக் கண்டன கூட்டம் டிசம்பர் 11, வெள்ளிக் கிழமை மாலை நடந்தது. ஃபாஹில் மண்டல பொருளாளர், அறந்தாங்கி அப்துல் அஜீஸ் அவர்கள் திருக்குர்ஆன் ஓதினார். தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவையின் தலைவர் பெரம்பலூர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில், தமுமுக சகோதரர்கள் முன்னிலையில், தமுமுக நிர்வாகக் குழு உறுப்பினர் காரைக்கால் ஷாஹுல் அவர்கள் தொகுத்து வழங்க, இஸ்லாமிய அழைப்பாளர் (அரக்கோணம்) மெளலவி. அன்ஸர் ஹுசைன் ஃபிர்தெளஸி அவர்களின் அரசியல் எழுச்சி சிந்தனையுடன் தொடங்கியது.அதன் பின் தமிழோசைப் பேச்சாளர் சகோ.இராவணன், இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் பேராசிரியர். தாஜுதீன், தமுமுக குவைத் ரிஃக்கா கிளை செயலாளர். சிதம்பரம் சாதிக், தொழிலதிபர் புரவலர் எஸ்.கே.எஸ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். மற்றும் சகோ.அபு தாஹிர் கவிதை வாசிக்க, சகோ.புதுகை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் ஒரு தீர்மானத்தையும் வாசித்தார்.
இன்றைய முஸ்லிம் சமுதாயப் பிரச்னைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் முஸ்லிம்கள் அரசு அதிகாரத்தில் தகுந்த பங்கு கொள்ளாமல் இருப்பதுதான். எனவே தமிழக முஸ்லிம் சமூகத்தின் பேரெழுச்சியான மனிதநேய மக்கள் கட்சியில் எல்லா இயக்க சகோதரர்களும் ஒன்று சேர வேண்டும். நிச்சயமாக இன்று உள்ள இயக்கத் தலைவர்கள் ஒன்று சேர மாட்டார்கள். ஏனென்றால் பிரித்தவர்களே அவர்கள் தானே. ஆனால் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் அரசியலில் மட்டுமாவது ம.ம.க எனப்படும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்று இந்த கூட்டம் தமிழக முஸ்லிம்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
சகோ.திருச்சி ஃபஜ்லுர் ரஹ்மான் அவர்கள் நன்றி கூற கண்டனக் கூட்டம் நிறைவடைந்தது.
வஸ்ஸலாம்

December 09, 2009

வேதாந்தி சாமியார் சொல்கிறார்: நரசிம்மராவ் ஆசியோடு பாபர் மசூதியை இடித்தோம்

லக்னோ, டிச. 8-

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகளுக்கு பிறகு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 60 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதில் முன்னாள் பாரதீய ஜனதா எம்.பி.யும், ராம ஜென்மபூமி கமிட்டி உறுப்பினருமான ராம்விலாஸ் வேதாந்தி சாமியாரும் ஒருவர்.லிபரான் கமிஷன் அறிக்கையில் முன்கூட்டியே திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை பாரதீய ஜனதா தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.

ஆனால் வேதாந்தி சாமியார் மட்டும் திட்டமிட்டுதான் இடித்தோம் என்று ஒப்புதல் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நடக்கும் கரசேவையின்போது பாபர் மசூதியை இடித்து தள்ளவேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து இருந்தோம். அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை 1992 நவம்பர் மாதம் 20-ந்தேதி நான் சந்தித்தேன்.

அப்போது அவர் கரசேவையின்போது என்ன செய்யப்போகிறீர்கள்? என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 6-ந்தேதி பாபர் மசூதியை இடித்து தள்ளுவோம் என்று கூறினேன்.

இடிக்க போகிறோம் என்று அவரிடம் சொல்லி விட்டுத்தான் இடித்தோம். எனவே அவருடைய ஆசீர்வாதத்தோடுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

6-ந்தேதி கரசேவகர்கள் பாபர் மசூதி பகுதிக்குள் நுழைந்து மசூதியில் “டூம்” மீது ஏறினார்கள். அப்போது சங்பரிவாரை சேர்ந்த சில தலைவர்கள் அவர்களை இறங்கி வரும்படி கேட்டனர். ஆனால் நான் அவர்களை மேலும் முன்னேறி செல்லுங்கள். இடித்து தள்ளுங்கள் என்று கூறினேன். அதன்படி இடிக்கப்பட்டது.

பாபர் மசூதியை இடித்து அதை தரைமட்டமாக்கி சமப்படுத்தும் வரை அதாவது 7-ந்தேதி இரவு வரை அங்கேதான் நான் இருந்தேன். மசூதியை இடிப்பதை முழுவதும் நான் மேற்பார்வையிட்டேன்.

இதை சொல்வதற்காக நான் கவலைப்படவில்லை. முடிந்தால் என்னை தூக்கில் போடுங்கள்.

இவ்வாறு வேதாந்தி சாமியார் கூறினார்.

December 06, 2009

பாபர் மசூதி இடிப்பு தினம்: இந்து முன்னணியினர் அர்ச்சனையால் பரபரப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ஐ முஸ்லீம்கள் கறுப்புத்தினமாக கடை பிடித்து வருகிறார்கள். மசூதி இடிக்கப்பட்ட இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தொடர்புடையதாக லிபரான், கமிஷன் குற்றம்சாட்டிய 68 பேரை உடனே கைது செய்ய கோரியும் டிசம்பர் 6ல் பேரணி, போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆண்டும் இன்று 6-ந்தேதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக திருச்சி மாவட்டம் சார்பில் பாலக்கரையில் ரவுண்டானாவில் இருந்து பேரணி புறப்பட்டு சிங்காரதோப்பு காமராஜர் வளைவு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி காலை 8 மணி முதலே அங்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் குவியத் தொடங்கினர். அங்கு பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமை தாங்கினார். மாநில தலைமை நிர்வாக குழு உறுப்பினர் அப்துல் சமது கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பயஸ் அகமது, பொருளாளர் பெரோஸ்கான், துணைச் செயலாளர்கள் பெராகிம்ஷா, சாதிக் பாட்ஷா, ஹபிபுல்லா, மாணவரணி உமர்பாரூக் துணைச் செயலாளர் முகமது அபேர் மருத்துவரணி அப்துல்காதர் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். மேலும் பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் உதவி கமிஷனர்கள் காந்தி, பழனிச்சாமி, ஞானசேகர், ராஜசேகரன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முருகேசன் மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சியில் ஆழ்வார் தோப்பு பாலக்கரை சிங்கார தோப்பு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அங்காங்கே கறுப்பு கொடிகளை பறக்க விட்டிருந்தனர்.

இதற்கிடையே திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் இந்து முன்னணியினர் அர்ச்சனை செய்ய வருவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதனால் அங்கு அர்ச்சனை செய்யாமல் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் இந்து முன்னணியினர் அர்ச்சனை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முன்னதாக அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 4000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம், விமான நிலையம் ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், சமயபுரம் கோவில், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

November 24, 2009

குவைத் தமிழ் சகோதரர்களை அழைக்கிறது குவைத் தமுமுக :

சமுதாயப் பணியில் பங்கு கொள்ள குவைத் தமிழ் சகோதரர்களை அழைக்கிறது குவைத் தமுமுக :
புரவலர் எஸ்.கே.எஸ் முன்னிலையில், தமுமுக பொதுச் செயலாளர் S.ஹைதர் அலி அவர்களின் ஆலோசனைப் படி அண்மையில் குவைத் மண்டல நிர்வாகத்தில் சில சீர் அமைப்புப் பணிகள் செய்யப் பட்டது. அதன்படி புதிய கிளைகள் குவைத்தின் எல்லா பகுதிகளிலும் ஆரம்பிக்க இன்ஷா அல்லாஹ் முடிவு செய்யப் பட்டது. புதிய மண்டல நிர்வாகம் தேர்ந்தெடுக்கப் படும் வரை குவைத் வாழ் தமிழ் சகோதரர்கள் கீழ் கண்ட மொபைல் எண்களைத் தொடர்பு கொள்ளவும். அப்துல் அஜீஸ் 99489481 முஜிபுர் ரஹ்மான் 99851036 ஷாஹுல் ஹமீத் 99776532 ஷாநவாஸ் 99147292 அமானுல்லாஹ் 97493869
கடந்த இரண்டு மாதங்களில் அஹ்மதி, ஜிலிப் சுவைக் ஆகிய இரண்டு முக்கிய பகுதிகளில் கிளைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. ஏனைய பகுதிகளில் உறுப்பினர்கள் சேர்ப்பு, மற்றும் மக்கள் உரிமை பத்திரிக்கை விற்பனையும் முடுக்கி விடப் பட்டுள்ளன.. புதிய சமூக எழுச்சியான " மனிதநேய மக்கள் கட்சி " குவைத் வாழ் தமிழ் மக்களிடமும், ஏனைய இயக்க சகோதரர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அரசியலில் இழந்த உரிமையை மீட்டு எடுக்கவும், அனைத்து தமிழ் முஸ்லிம்களுக்கும் இது இன்ஷா அல்லாஹ் கலங்கரை விளக்கமாக அமையும் என்பதும் குவைத் வாழ் தமிழ் சகோதரர்களின் ஒரு மித்த கருத்தாய் உள்ளது.

November 23, 2009

குவைத்தில் கருப்புதினக் கண்டனக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11-12-2009 வெள்ளிகிழமையன்று குவைத் முர்காப் சிட்டியில் திருச்சி உணவகத்தில் மாலை 6:30 மணிக்கு குவைத்தில் உள்ள பிரபல சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் கருப்புதினக்கண்டனக்கூட்டம் நடைபெற இருக்கின்றது.
நிகழ்ச்சி முழு ஏற்பாடு: தமுமுக குவைத் மண்டலம்

November 18, 2009

குவைத்தில் புதிய வேலைவாய்ப்புகள்

1 Store man / technical store man / materials and technical supplies
2 Computer assembly technician
3 Thorough Checkup
4 Navy Pump technician
5 Technician / Engineering equipment
6- Fire extinguisher technician
7 Technician / micro equipment and devices (electronics and electricity)
8- Technician / plumbing tools
9 Technician / meteorology
10 Addition and data analysis researcher
11 Computer networks technician
12 Technician / Oxygen
13 Electricity lines technician
14 Hydraulics technician
15 Aircraft equipment technician
16 Technician I Aircraft electronics
17 Technician I Aluminum
18 Technician I cameras
19 Assembly technician / Car windscreen
20 Quality supervision
21 Motorcycle technician
22 Decor technician
23 Radar technician
24 Technician (Central and wireless / lines and telephones)
25 Radiator technician
26 Ceramic technician
27 Welding technician / and smothery / electricity and oxygen
28 Lever maintenance technician
29 Fuel System technician
30 Cashier
31 Artillery blacksmith technician / adjusting and plumping
32 Turnery technician / freeze / cylinder / crank / metals
33 Electrical air conditioning and tooling technician
34 Technician supervision coordinator / Bodies
35 Diesel artillery mechanical
36 Ship carpenter
37 Small boats technician
38 Cable maintenance technician
39 Offset printing technician
40 Painting technician
41 Diesel turbine technician
42 General hydraulic turbine technician
43 Tuber technician
44 Assembly and disassembly mechanical
45 fiber glass technician
46 Glass cutting technician
47 Control and command technician
48 Pipes compression technician
49 Computer technician
50 Wheeled artillery technician
51 Technician supervision coordinator
52 Electrical artillery technician
53 Safety tools technician
54 Artillery adjacent technician
55 Diesel generator electrical technician
56 Shooting fields technician
57 Scale technician
58 Mechanical technician (boats/firefighting/diesel & benzene cars/ Earthen equipment
59 Manual and automatic gear mechanical technician
60 Electronic binoculars technician
61 Antenna technician
62 frames technician
63 Tires Technician supervision
64 Technician earthen equipment supervision representative
65 Cars electrician
66 Armiger dynamo wrap electrician
67 Equipment technician
68 Undertaker
69 Radar and radio, supervision
70 Programmer
71 Follow up methods and examination
72 Follow up and statistics
73 Translator (French, Chinese, Russian)
74 Programming analyzer
75 Computer trainer
76 Teacher (electronics/management/computer/mathematics/physics/electricity/English)
77 Laser technician
78 Safety tools technician supervisor
79 Motor roll up technician
80 Material supervisor for technical production corner
81 Antenna assembly technician
82 Assistant engineer of central cables and operating
83 Consultant (electricity and electronics, legal, mechanical and contract dealer) 84 Aircraft painting technician
85 Computer operator
86 Technical supervisor of technical control
87 Ground equipment supervisor
88 Maps corrector
89 Car adjuster and exhaust welder
90 Navigation
91 Technical production observer
92 Electronics and electricity technical observer
93 Engineer (electrical, electrical firefighting, mechanical power
electricity, firefighting production control, mechanics / firefighting, mechanics/
production mechanics / automobiles, power mechanics, maintenance systems,
telecommunications, networks, electronics, computer maintenance, Technical
control , Computer operation, Computer programming. Graphics and
planning)
94 Automobile scale/diesel
95 Electrical diesel generator mechanic
96 Cranes, equipment and lever mechanic
97 Small boats mechanic
98 Benzene wheeled machinery
99 Typing trainer
100 Coach (basketball/volleyball/football/handball/fitness)
101 Mechanical trainer
102 Evaluation and quality control
103 Horseshoe maker
104 Stableman
105 Ground equipment and electrical technician
106 Printers maintenance
101 Heavy machinery technician
106 Electricity and meters technician
109 Ship structure technician
110 Cooler technician
111 Wheeled machinery flat tire technician
112 Greasing and changing oil technician
113 Computer technician
114 Building fittings electrician
115 Benzene / Diesel engine renewal technician
116 Automatic / manual gear re-pairing technician
117 Tachnician / aircrafts electronics
118 Motorcycle technician
119 Operating and halting aircrafts systems maintenance technician
1120 Painting aircrafts technicians
121 Aircrafts equipment technician
122 Pilot trainer
123 Pilot trainer for ground lessons
124 Shooting trainer
125 Safety equipment technical supervisor
126 Wheeled machinery technician
127 Electronics and electricity technical supervisor
128 Structure and engine technical supervisor / first line
129 Structure and engine technical supervisor / second line
130 Technical control technician
131 Ground equipment supervisor
132 Electronics and electricity technical observer/first line
133 Structure and engine technical supervisor / first line
134 Structural and engine technical supervisor/second line
135 Aviation operation coordination
136 Technical control coordinator/structures


First: General Requirement:

1. The applicant must have certificate related to the specialized field of the job with
a. Minimum degree "C"
2. Not less than "5 years experience in the same specialized field
3. Invalid Residency; clause 18
4. Must master spoken and written English
5. Excellent in computer use
6. Candidate must be clear of any contagious disease
7. Candidate must not be a former government employee whose services have been ended for any reason
8. Former application will not be looked into and their owners don't have the right to apply again to work for the Ministry
9. Applications that do not satisfy the requirement demanded will not be accepted
10. The intelligence & Security department agreement.

Second: Documents needed:

1. Copy of the passport and the residency page
2. Copy of Civil ID
3. Copy of the academic qualifications and experience certificates authenticated by official authorities
4. Copy of the driving license (for positions that require it)
5. Copy of the training courses in computer

Applications will be received at the Special Contracts Department, located in South Mushrif next to Jaber Al-Ahmed Forces Hospital , for two weeks only starting from the date of publication in the official newspapers.

For Inquiry:

965 4718266 / 4714377 Ext: 3001 / 3002
E-mail: Cont-dept@mod.gov.kw.

for References:

http://www.kuwait.jobs-career-listing.com/articles/115/1/Career-Opportunities-in-Ministry-of-Defense-Kuwait/Page1.html

November 12, 2009

பாங்க் ஆப் இந்தியாவில் 1083 அதிகாரி பணியிடங்கள்

முன்னணி பொதுத் துறை பாங்குகளில் ஒன்றான பாங்க் ஆப் இந்தியா 1083 அதிகாரி நிலைப் பணியிடங்களை அறிவித்துள்ளது.



ஜெனரல் பாங்கிங் ஆபிசர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பணியிடங்கள் ஸ்கேல் 1, 2 மற்றும் 3 நிலையிலானவை.
3 ஸ்கேல்களிலான பணிகளாக இருந்தாலும் பாங்க் ஆப் இந்தியா இந்த வேலை அறிவிப்பை பி.ஓ., ரெக்ரூட்மெண்ட் புராஜக்ட் 2009 என்றே பெயரிட்டுள்ளது. தகுதிகளை நவம்பர் 1, 2009 அன்று பெற்றிருக்க வேண்டும். 1083 பணியிடங்களில் முக்கிய பணி இடங்களின் விபரங்கள் இங்கே.
தகுதிகள்
ஸ்கேல் 1 ஆபிசர்

காலியிடங்கள் 460
21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பருக்கு முன்னுரிமை தரப்படும்.
ஸ்கேல் 2 ஆபிசர்
காலியிடங்கள் 386
21 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீதத்துடன் தேர்ச்சி அல்லது பட்ட மேற்படிப்பில் 50 சதவீதத்துடன் தேர்ச்சி அல்லது சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ., போன்ற தகுதிகளில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் வங்கி அல்லது நிதி நிறுவனப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஸ்கேல் 3 ஆபிசர்
காலியிடங்கள் 24 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீதத்துடன் தேர்ச்சி அல்லது பட்ட மேற்படிப்பில் 50 சதவீதத்துடன் தேர்ச்சி அல்லது சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ., போன்ற தகுதிகளில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் வங்கி அல்லது நிதி நிறுவனப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அனைத்துப் பணிகளுக்குமே சிறப்பாக கம்ப்யூட்டரில் பணியாற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். எழுத்துத் தேர்வானது அப்ஜக்டிவ் மற்றும் விரிவாக விடையளிக்கும் பகுதிகளைக் கொண்டிருக்கும். அப்ஜக்டிவ் பகுதியில் ரீசனிங், கணிதம், பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் ஆகிய 3 பகுதிகளில் முறையே 100, 50 மற்றும் 50 கேள்விகள் இடம் பெறும். இவற்றுக்கு மதிப்பெண்கள் முறையே 150, 75 மற்றும் 75 என தரப்படும். மொத்தம் 2 மணி நேரத்தில் இந்த 200 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். ஒவ்வொன்றிலும் தனித்தனியாக பாஸ் செய்வதுடன் மெரிட் பட்டியலிலும் இடம் பெறும் வகையில் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும். தவறாக பதிலளித்தால் நெகடிவ் மதிப்பெண்கள் முறையில் பெற்றிருக்கும் மதிப்பெண்ணிலிருந்து கழிக்கப்படும்.
விரிவாக விடையளிக்கும் பகுதியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் பதிலளிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 5 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொன்றும் தனித்தனியாக மாற்று கேள்வியையும் கொண்டிருக்கும். இந்தப் பகுதியில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணைப் பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர் 45 சதவீதம் எடுத்தால் போதும். இப்பகுதிக்கு 100 மதிப்பெண்கள். அப்ஜக்டிவ் தேர்வுக்கு 300, விரிவாக விடையளிக்கும் பகுதிக்கு 100 மற்றும் நேர்முகத் தேர்வுக்கு 100 ஆக மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு நீங்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து பணி வாய்ப்பு தரப்படும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இத்தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.400. ஏதாவது ஒரு பணிக்கு மட்டுமே ஒருவர் விண்ணப்பிக்க முடியும். இப்பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.bankofindia.co.in என்னும் இணைய தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். நவம்பர் 30க்குள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள தளத்தில் ஆன்லைன் விண்ணப்ப லிங்க்கிற்குச் சென்று முதலில் சலானை டவுண்லோட் செய்து கொள்ள வேண்டும். பின்பு கட்டணத்தை பாங்க் ஆப் இந்தியாவின் எந்தக் கிளையிலும் செலுத்தி டிரான்சாக்ஷன் ஐ.டி., ஒன்றைப் பெற்று தயாராக வைத்துக் கொண்டு ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். தற்போது பயன்பாட்டிலுள்ள இமெயில் முகவரியைப் பெற்றிருப்பதும் அவசியம். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்கிடைக்கும் நகலை பிரிண்ட் செய்து எடுத்துக் கொண்டு போட்டோவை ஒட்ட வேண்டும். அனைத்து சான்றிதழ்களின் அட்டெஸ்டட் நகல்களை இணைத்து நீங்களே வைத்துக் கொள்ள வேண்டும். தபாலில் அனுப்ப வேண்டாம். தேர்வுக்கு செல்லும் போது அல்லது நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது எடுத்துச் சென்றால் போதும்.

September 19, 2009

ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
அனைவருக்கும் இதயம் கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
அமானுல்லாஹ்-குவைத்

September 01, 2009

திருவாரூர் மாவட்ட தொண்டரணிச் செயலாளர்

அனைத்து தமுமுக கிளை உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அவசர வேண்டுகோள்:

கூத்தாநல்லூரில் ஆக 29 இஃப்தாருக்குப் பிறகு திருவாரூர் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் முஹம்மது அதே ஊரைச் சேர்ந்த சமூக விரோதி அனஸ் மற்றும் அவனது கூட்டாளிகளால் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்திருப்பீர்கள். இந்த குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவிக்க சில சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இந்த கயவர்களை நீதியின் முன் நிறுத்த தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க அவரது தனி செல்லுக்கு (00914425671441) என்ற எண்ணில் இணைப்பில் உள்ள படிவத்தில் கையெழுத்திட்டு உடனடியாக ஏராளமான ஃபேக்ஸ்களை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். ஜஸாக் அல்லாஹ்!

கீழே பாக்ஸ் அனுப்பவேண்டிய செய்தி JPEG பைலாக உள்ளது. அப்படியே பிரிண்ட் எடுத்து உபயோகிக்கவும்

Thanks to: தம்மாம் மண்டல தமுமுக

August 20, 2009

விழிப்புணர்வு மாநாடு கிளிப்புகள்




குவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு மாநாடு!

குவைத் மண்டல தமுமுக, குவைத் தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் சமூக விழிப்புணர்வு மாநாட்டை குவைத் ரவ்தா பகுதியில் அமைந்துள்ள ஜம்இய்யத் அல்-இஸ்லாஹ் அரங்கில் சிறப்புடன் நடத்தியது.

மாலை சரியாக 5 :30 மணிக்கு சவூதியிலிருந்து வருகை தந்திருந்த பொறியாளர் சர்புதீன் தலைமை தாங்க, குவைத் மண்டல தமுமுக தலைவர் திருச்சி அமானுல்லா அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கிய முதல் அமர்வின் தொடக்கமாக,

'ஒற்றுமை' என்ற தலைப்பில் பேசிய குவைத் விடுதலை சிறுத்தைகளின் பிரதிநிதி அன்பரசன் அவர்கள், முஸ்லிம் சமுதாயம் பின்தங்கியதற்கு காரணம் உங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மையே. எனவே ஒவ்வொருவரும் எங்கள் பின்னால் அணிவகுக்க வாருங்கள் என்று அழைப்பதை விடுத்து எங்களை போன்றோர் பார்வையில் சிறப்பாக சமுதாயப்பணியாற்றிக் கொண்டிருக்கும் தமுமுகவில் முஸ்லிம்கள் அணிவகுத்து வெற்றிகளை ஈட்ட முன்வரவேண்டும் என்றார்.

அடுத்து, 'ஊடக விழிப்புணர்வு' என்ற தலைப்பில் உரையாற்றிய 'அரவணைப்பு' என்ற அமைப்பின் அமைப்பாளர் இளங்கோவன், தங்களது அமைப்பு செய்து வரும் கல்வி பணிகள்- அநாதை குழந்தைகள் அரவணைப்பு பற்றி எடுத்துக்கூறியதோடு, நாம் ஒவ்வொருவரும் நமது வருமானத்தில் குறைந்தது ஒரு சதவிகிதமாவது அனாதைகள் அரவணைப்பு மற்றும் எளியோர்களின் கல்விக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றவர், குறைந்தது 25 ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்வதுதான் தமது அமைப்பின் எதிர்கால லட்சியம் என்று கூறி முடித்தார்.

அடுத்து 'உயர்கல்வி மற்றும்- உயர்பதவிகளில் சிறுபான்மையினர் ஏமாற்றப்படுகிறார்களா?' என்ற தலைப்பில் பேசிய வளநாடன் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் வளநாடன் அவர்கள், மத்திய-மாநில அரசுகளின் உயர்பதவிகளில் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்தை பட்டியலிட்டு பேசியவர், இந்நிலைக்கு நமது கல்லாமையும் காரணம் என்றதோடு, பாஸ்போர்ட் மோகத்தை ஒழித்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கல்வியாளர்களாக நாம் மாறவேண்டும். அப்போதுதான் அரசின் உயர்பதவிகளை நம்மால் எட்டிப்பிடிக்க முடியும் என்றார்.

அடுத்து 'கல்வி விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையின் பொதுச்செயலாளர் சகோதரர் அப்துல் அலீம் அவர்கள், சமீபத்தில் குவைத்தில் பணிக்கு வந்து முதலாளிகளின் கைவிரிப்பால் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகி தமுமுகவின் உதவியால் தாயகம் சென்ற ஒன்பது நபர்களை சுட்டிக்காட்டி, இதற்கு காரணம் கல்வி விழிப்புணர்வு இன்மையே என்று கூறியவர், முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பெற்றுத்தந்த தமுமுக, முஸ்லிம்களின் கல்வி விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிறைவு செய்தார்.

அடுத்து இஷா தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டு, தொழுகை முடிந்தவுடன் ஆரம்பமான இரண்டாம் அமர்வுக்கு சவூதியில் இருந்து வருகை தந்த சகோதரர் பொறியாளர் ஷபியுல்லா கான் தலைமை தாங்கினார். தொடர்ந்து 'அரசியல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசிய தமிழ் ஓசை கவிஞர் மன்ற பிரதிநிதி ராவணன் அவர்கள், தற்போதைய அரசியல் நிலவரங்களை எடுத்துக் கூறியவர், பிறந்த இரண்டே மாதங்களில் கூட்டணி என்ற நடைவண்டியின் துணையின்றி மமக எனும் குழந்தை நடந்து காட்டியது பாராட்டுக்குரியது என்றவர், உங்கள் சமுதாய அமைப்புகள் தேர்தல் நேரத்தில் ஆளுக்கொரு கட்சியின் கதவை தட்டுவதை விடுத்து, நீங்கள் அனைவரும் சேர்ந்து ஒரே அணியாக ஒரு கட்சியின் கதவை தட்டினால் அவர்கள் திறந்தே தீரவேண்டிய நீங்கள் கேட்கும் இடங்களை தந்தே தீரவேண்டிய நிலை உருவாகும் என்றார்.

இரண்டாவது அமர்வின் இரண்டாவது பேச்சாளராக மேடையேறிய, இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பாளர் மவ்லவி ஜமாலுத்தீன்ஃபாஸி அவர்கள், 'பொருளாதார விழிப்புணர்வு' என்ற தலைப்பில், பொருளாதாரம் வாழ்க்கைக்கு அவசியமானது தான். அதே நேரத்தில் பொருளாதரம் மீது பேராசை கொள்ளக்கூடாது என்றவர் 'சூரத்துல் தகாஸுர்' அத்தியாத்தை மையமாக கொண்டு தனது உரையை கொண்டு சென்றவர், ஆடம்பர வாழ்க்கைக்காக காலமெல்லாம் அரபுநாடுகளில் இளமையை தொலைத்து வாழ்வதை விட இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ்வது தான் சிறந்தது என்றும், முஸ்லிம்கள் வட்டி போன்ற கொடும்பாவங்களில் சிக்கித்தவிப்பதை தவிர்க்க ஊர்கள் தோறும் 'பைத்துல் மால்' உருவாக்கப்பட வேண்டும் அதற்கு தமுமுக முழுமுயற்சி செய்யவேண்டும் என்றார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய தமுமுகவின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள், மமக தொடங்கப்பட்ட ஒன்றிரண்டு மாதங்களில் அதுவும் கூட்டணி எதுவுமின்றி தேர்தல் களம் கண்டது சரியா என்ற சிந்தனை நம் சமுதாயத்தில் பெரும்பாலோர் உள்ளத்தில் உள்ளது. கூட்டணி அமைந்தால் தலைமை நிர்வாகிகளாகிய நாங்கள் நிற்பதாக இல்லை. தனித்து நின்று தோல்விதான் கிடைக்கும் என்பதை அறிந்துதான் அந்த தோல்வியை மற்றவர்களை விட தலைமை நிர்வாகிகளாகிய நாங்கள் ஏற்பதுதான் சரி என்பதால் தேர்தலில் போட்டியிட்டோம், மேலும் ஒரு சீட்டை பெற்றுக்கொண்டு தன் சுய முகவரியை இழந்து நிற்கும் முஸ்லிம்லீக் போல் அல்லாமல், தனித்து நின்று வெற்றி பெறாவிட்டாலும் முஸ்லிம்கள் எங்கள் அடையாளம் தொலைத்து எவருக்கும் அடிமை சாசனம் எழுதித்தந்து பதவியை அனுபவிக்க வேண்டியதில்லை என்று காட்டியுள்ளோம். அதனால் தான் வக்பு வாரிய பதவியை தூக்கி எறிந்தோம்.

எங்களை பொருத்தவரை பதவியை கொண்டு சமுதாயத்திற்கு பயன்தரும் பணிகளை செய்ய முடிந்தால் அதை ஏற்றுக் கொள்வோமே தவிர அலங்காரத்திற்காக நாம் பதவிக்கு வர ஒருபோதும் விரும்பமாட்டோம் என்றவர், வக்பு வாரியத்தில் தான் பதவிக்கு வரும் முன் இருந்த நிலையையும், தான் வந்த பின் வாரியத்தில் செய்த சீர்திருத்தங்களையும், மீட்கப்பட்ட வக்பு சொத்துக்கள பற்றியும் எடுத்துரைத்தவர், அரசியலில் மமக ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் இன்றல்லா விட்டாலும் வரும் காலத்தில் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் வெற்றியைத் தரும் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது நேரமின்மையால் சில கேள்விகளுக்கு மட்டுமே ஹைதர்அலி பதிலளித்தார். அதில் பிரதானமாக, பீஜே விவாதத்திற்கு அழைத்தபோது ஒடி ஒளிந்துவிட்டீர்களாமே என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு முதல் நாள், வேட்பாளரான நான் தேர்தல் ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளும் நாளை தேர்ந்தெடுத்து அவராக ஒரு ரூம் போட்டுக்கொண்டு, ரூம் போடுவது அவர்களது வழக்கம் போலும். அவர் போட்ட ரூமுக்கு அவர் அழைத்த நேரத்தில் நான் போகவேண்டும் என்றால், இது அறிவுடையோர் ஒப்புக்கொள்வார்களா? எனவே விவாத பூச்சாண்டி காட்டும் பீஜே, பொதுமேடையில் மக்கள் முன்னிலையில் என்மீதான குற்றச்சாட்டை முன்வைத்து விவாதத்திற்கு வரத்தயாரா என்று நாம் ஏற்கனவே சவாலாகவே சொல்லியுள்ளோம். அதோடு கருணாநிதிக்கு இப்போது நெருக்கமாக உள்ள பீஜே, கருணாநிதியிடம் சொல்லி என்மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை வைக்க சொல்லட்டுமே! நாம் சந்திக்க தாயார் என்று தானே இப்போதும் சொல்கிறோம் என்று ஹைதர் பதில் அளித்தார்.

அரங்கின் கீழ்பகுதியில் ஆண்களும், மேல்பகுதியில் பெண்களாலும் நிரம்பிய இந்த மாநாடு சரியாக 10;30 மணிக்கு குவைத் மண்டல தமுமுக தலைவர் அமானுல்லா அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்! மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு சிறப்பான உணவு ஏற்பாட்டையும்- வாகன ஏற்பாட்டையும் மண்டல தமுமுக செயல்வீரர்கள் சிறப்பாக செய்து பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

August 17, 2009

குவைத்தில் பயங்கர தீ விபத்து


ஜஹ்ரா மாவட்டத்தில் ஒரு திருமண பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை மோசமாக உள்ளது.

திருமண விருந்து நிகழ்ச்சிக்காக பெண்களுக்கு என தனியாக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பந்தலில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாயினர்.

தீ பரவியதும் அங்கிருந்த கூட்டத்தினர் தப்பிக்க முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் பலரும் கீழே விழுந்து மிதிபட்டு மயங்கினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பலியாகிவிட்டனர்.

One hundred injured received by Jahra hospital:

His Highness the Amir of the State of Kuwait Sheikh Sabah AlـAhmad AlـSabah sent cables of condolences on Sunday to the families of those killed in the Jahra fire, expressing sympathy and praying God blesses the victims with forgiveness and the families with solace.
Their Highnesses the Crown Prince Sheikh Nawaf AlـAhmad AlـSabah and Prime Minister Sheikh Nasser AlـMohammed AlـSabah also sent cables carrying similar sentiments.
His Highness the Prime Minister Sheikh Nasser AlـMohammed AlـSabah on Sunday visited those injured in the fire Saturday, where be became acquainted with the medical facilities being granted to them at Jahra Hospital.
In a statement to reporters, His Highness Sheikh Nasser hailed the procedures of the Ministry of Health in terms of the speedy transfer of the injured to hospital to receive necessary treatment and hospitals'' "immediate absorption of impacts of this unfortunate incident."
He stressed that the government "will not hesitate to provide full healthcare to the injured of this incident."
He expressed deep sorrow for the victims of the fire, calling for God to bestow his mercy on the deceased.
For his part, acting Parliament Speaker Abdullah AlـRoumi on Sunday expressed his deep condolences to the families of the "martyrs of Jahra fire," describing the incident as "painful." In the tour accompanying His Highness the Prime Minister to Jahra Hospital, AlـRoumi hailed to reporters the efforts undertaken by the Ministries of Health and Interior during the incident, the speed of their response to the tragic incident, in addition to the cooperation of citizens and residents of Jahra.
Asked whether there are a number of victims that have not yet been identified, AlـRoumi explained that the Interior Ministry has assigned a hotline for citizens to inquire and identify victims.
He described the incident as "a great loss" and asked God to grant mercy upon the victims and wished a speedy recovery for the injured.
Meanwhile, President of the International Islamic Charitable Organization (IICO) Yousef AlـHajji said on Sunday that the IICO''s branch in Jahra Governorate had offered assistance and aid to those injured in the fire.
In a press release, AlـHajji called on all civil society institutions and other charitable organizations to also support the families of both the deceased and injured, "either financially or morally, during this ordeal."
Moreover, AlـHajji praised the efforts exerted by the medical teams, hospitals and fire department during and after the incident. ـKUNA

இன்னாலில்லாஹி வ இன்னா இளைஹிராஜிஹூன்

August 15, 2009

குவைத்தில் எழுச்சியுடன் நடந்த விழிப்புணர்வு மாநாடு

அரங்கில் அரங்கேறியவை..,

இறைமறை வசனம்: சகோ.அப்துல் குத்தூஸ்
வரவேற்புரை - தொகுப்புரை : சகோ. அமானுல்லாஹ், தலைவர் குவைத் மண்டலம்

முதல் அமர்வு
தலைமை : பொறியாளர் சகோ. சர்புத்தீன் துணைச்செயலாளர், ஜுபைல் மண்டலம், சவூதி அரேபிய்யா
வேண்டும் ஒற்றுமை : தோழர். அன்பரசன் - செயலாளர், தாய்மண் கலைஇலக்கியப் பேரவை குவைத்
ஊமையாகும் ஊடகங்கள்: தோழர். இளங்கோவன் - நிறுவனர், அரவணைப்பு அமைப்பு குவைத்
கடமையான கல்வி: சகோ. அப்துல் அளீம் - செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை குவைத்
அரசுப்பணிகளும்-உயர்பதவிகளும்: தோழர். வளநாடன் - தாளாளர், வளநாடன் கல்வி அறக்கட்டளை குவைத்

இரண்டாம் அமர்வு
தலைமை: பொறியாளர் சகோ. சபியுல்லாஹ் தலைவர், தம்மாம் மண்டலம், சவூதி அரேபிய்யா
அரசியல்: தோழர். இராவணன் - செயலாளர், தமிழோசை கவிஞர் மன்றம் குவைத்
பொருளாதார விடுதலை: சகோ. ஜமாலுத்தீன் பாஸி, மார்க்க அழைப்பாளர், இஸ்லாமிய வழிகாட்டி மையம் குவைத்
சிறப்புரை: சகோ. ஹைதர் அலி - மாநில பொதுச்செயலாளர் தமுமுக
நன்றியுரை: பொறியாளர் சகோ. ஷானவாஸ், பொதுச்செயலாளர் குவைத் மண்டலம்.

சிறப்புச்செய்த தோழமை அமைப்புகள்:

தந்தை பெரியார் நூலகம்: தோழர். செல்லபெருமாள் அவர்கள்
தாய்மண் கலைஇலக்கியப் பேரவை தோழர்கள்
முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்ற நண்பர்கள்






விரிவான செய்திகள் விரைவில்..,

August 13, 2009

மாநாட்டிற்கான வாகன ஏற்பாடு

க்ளிக் செய்தால் பெரிதாகும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,


நாளைய மாநாட்டுக்கு சிரமின்றி வருகை தருவதற்கு தமுமுக குவைத் மண்டலத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன வசதி விவரங்கள். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும்.

வஸ்ஸலாம்.
தமுமுக குவைத் மண்டலம்.

August 08, 2009

சமூக விழிப்புணர்வு மாநாடு குவைத்-அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பிற்குரிய தமிழ் சமூகத்திற்கு,

குவைத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாபெரும் சமூக விழிப்புணர்வு மாநாடு இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் எஸ். ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இசைந்துள்ளார்கள். அது சமயம் குவைத்தில் வசிக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கு மாநாட்டு குழுவை தொடர்பு கொண்டால் உதவிகள் கிடைக்கும்.

குவைத்திற்கு வெளியே வசிக்கும் சகோதரர்கள் கவனத்திற்கு:
குவைத்தில் தங்களது நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள் யாரும் இருந்தால் அவர்களிடம் சொல்லி நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு வருகை தந்து விழிப்புணர்வை பெற்றுச் செல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
தமுமுக குவைத்

August 03, 2009

குவைத்தில் சமூக விழிப்புணர்வு மாநாடு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.., இன்ஷா அல்லாஹ்
மாநாடு வெற்றி பெற துஆ செய்யவும். இச்செய்தியை பார்க்கும் அன்பர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களது உறவினர்கள், நண்பர்கள், சகோதரர்கள், ஊர்வாசிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி கலந்து கொள்ளச்செய்து மாநாட்டை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தமுமுக குவைத் மண்டலம்

July 25, 2009

குவைத்தில் புதிய வேலைவாய்ப்புகள்

Below are this week's Hot Jobs opportunities where you can apply easily with the click of a button.
New Jobs for this Week
Q8 Media / Secretary/Receptionist [ details ]
Arab Open University / محلل مالي و مراقب موازنات [ details ] رئيس حسابات [ details ]
Al Mulla & Behbehani Motors Company / Assistant Spare Parts Manager [ details ]
Kuwait Investment Company /مساعد مدير بإدارة الأصول [ details ]
Kuwait Public Transport Company - KPTC
عامل نظافة [ details ]
مساعد ملاحظ [ details ]
ساعي – تقديم خدمات أعمال المناولة و البوفيه. [ details ]
ملاحظ [ details ]
سائق [ details ]
منجد [ details ]
فني تبريد [ details ]
حداد [ details ]
ميكانيكي [ details ]
فني إطارات [ details ]
سمكري [ details ]
سائق مهمات [ details ]
MultiTrend
منفذ تسويق [ details ]
مدير معرض [ details ]
مشرف مبيعات [ details ]
مساعد مبيعات [ details ]
Accountant [ details ]
Secretary [ details ]
Translator [ details ]
CCTV Engineer [ details ]
Creative Graphic Designer [ details ]
مدير تنفيذي [ details ]
نائب مدير مشروع [ details ]
مهندس تسعير [ details ]
مهندس معماري [ details ]
حاسب كميات [ details ]
مدير توظيف [ details ]
مدير حسابات [ details ]
محاسب مدير أول [ details ]
مدرسين الكمبيوتر [ details ]
مدرسين السكرتارية [ details ]
مدرسين اللغة الإنحليزية [ details ]
مدرسين المحاسبة [ details ]
مدرسين إدارة الأعمال [ details ]
موظفات تسويق عبرالهاتف [ details ]
موظفات اتصال [ details ]

July 16, 2009

பொக்கிஷம் என்ற பெயரில் இன்னொரு கலவர திரைப்படம்!

-இனியவன்
இயக்குனர் சேரன் இயக்கி நடிக்கும் பொக்கிஷம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.சினிமா பைத்தியங்கள் நிறைந்த தமிழகத்திற்கு புதிய திரைப்படங்கள் வெளிவருவது ஒன்றும் புதிது அல்லவே என்று நீங்கள் கேட்கலாம்.திரைப்படம்,கலை என்ற பெயரில் வியாபார வெறி பிடித்து சினிமாகாரர்கள் செய்யும் சமூக சீரழிவுகளை வன்மையாக கண்டிப்பவர்கள் நாம்.சினிமா என்னும் சீரழிவு கலாச்சாரத்தில் இருந்து தமிழ் முஸ்லிம் சமுதாயம் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்து வருகிறது.ஒரு சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் சினிமா தளத்தில் இயங்கி வருகிறார்கள்.ஒரு சில மார்க்கம் தெரிந்த முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களால் மார்க்க விசயங்களை முஸ்லிம் சமூக அவலங்களை வெகு ஜன ஊடகமான சினிமாவில் பூடகமாக கூட தெரிவிக்க முடிவதில்லை.தெரிவிக்கவும் முயலுவதில்லை.
சினிமா என்ற ஊடகத்தின் மூலம் புரட்சிகளை ஏற்படுத்திய பல திரைப்படங்கள்(உமர் முக்தார்) மனித வாழ்வின் அவலங்களை,அழகியல்களை காட்டும் அற்புதமான திரைப்படங்கள்(ஈரானிய திரைப்படங்கள்)எடுக்கப்பட்டுள்ளன.எடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த கால நிகழ்வுகள்,மக்கள் தலைவர்களின் வரலாறுகள் என திரைப்படங்கள் பல பரிணாமங்களை கொண்டவை, மக்களின் எண்ணங்களை எழுச்சி பெற வைக்கவும்,நல்லவை பக்கம் நாட்டம் பெற வைக்கவும் சுய உணர்ச்சி கொள்ள வைக்கவும் திரைப்படங்கள் பெரும் பங்காற்றுகின்றன.ஆனால் பொழுது போக்கு என்ற பெயரில் சமூக பொறுப்புகளை மறந்து வியாபார வெற்றி,பணம் என்ற குறிக்கோளுடன் மட்டுமே களமிறங்கி உள்ள நமது இந்திய குறிப்பாக தமிழ் திரைப்பட வியாபாரிகள் பெண்களின் அந்தரங்க அவயங்களை காட்டுவதிலும் காதல் என்ற பெயரில் சுய ஆசைகளை கற்பனைகளை திரைப்படங்களாக எடுப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழ் சினிமா தொடங்கியதில் இருந்து இன்று வரை காதல் என்ற ஒற்றை சொல்லை வைத்து வித்தை காட்டுவதில் சினிமாக்காரர்கள் வல்லவர்கள்.
அந்த வகையில் காதல் கதை என்ற பெயரில் சர்ச்சைக்குரிய அல்லது சர்ச்சை ஆகும் என்றே தெரிந்து எடுக்கப்பட்ட படம்தான் சேரனின் பொக்கிஷம். படத்தின் கதை இதுதான்.நாகூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான இலக்கியம் படிக்கும் நதிராவி ற்க்கும் (நடிகை பத்மப்ரியா) கப்பல் பொறியாளரான இந்து இளைஞர் சேரனுக்கும்(கதைப் பெயர் தெரியவில்லை) நடக்கும் காதல் அதை ஒட்டிய சம்பவங்கள்தான் கதை. இதில் இருவரும் கடிதம் மூலமாகவே தங்கள் காதலை பரிமாறிக் கொள்கிறார்களாம். 1970 ம் ஆண்டு கால கட்டத்தில் கதை நடப்பதாக செட்டிங் போடப்பட்டு படம் எடுக்கப் பட்டுள்ளதாம்.
மணிரத்தனம் என்ற இருட்டுப்பட இயக்குனர் பம்பாய் என்று இதேபோல்தான் முஸ்லிம் பெண் இந்து இளைனன் என்ற கான்செப்டில் ஒரு கதை எடுத்தார்.படத்தில் முஸ்லிம் பெண் கடல்புறத்தில் குலுங்க குலுங்க ஓடி வரும் காட்சியை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்.பால் தாக்கரேவுக்கு மட்டும் படத்தை போட்டு காண்பித்து அனுமதி வாங்கி வெளியிட்டார்.முஸ்லிம் சமூக பெரியவர்களுக்கோ,இயக்கங்களுக்கோ படத்தை காட்டவில்லை.ஏன் காட்ட வேண்டும் என்ற பாசிச சிந்தனைதான் அவரை அவ்வாறு செய்ய வைத்தது. விளைவு உணர்ச்சி வசப்பட்ட உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெடி குண்டுகளை மணி ரத்தினத்தின் வீட்டில் வீசினர்.நல்ல வேளையாக தப்பி பிழைத்தார் இருட்டு இயக்குனர்.இந்த வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.சிலர் சிறையில் வாடி வருகின்றனர்.மணி ரத்தினத்தின் கதை தெரிந்தும் சினிமாவை புறம் தள்ளியே வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் குணம் தெரிந்தும் தொடர்ந்து சில தமிழ் பட வியாபாரிகள் நம்மை தொந்தரவு செய்தே வருகின்றனர்.முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது,முஸ்லிம் பெண்களின் பர்தாவை பயன்படுத்தி கேவலமான செயல்களை செய்வது என பல படங்களை எடுத்து வருகின்றனர். (உதாரணம். ஒற்றன்,ஹே ராம்,இன்னும் பல).
ஏற்க்கனவே தமிழ் திரைப்படங்களின் உபயத்தால் காதல் என்ற பெயரிலும் நட்பு என்ற பெயரிலும் இளம் பெண்களும் இளைஞர்களும் வீட்டை விட்டு ஓடுதல், ரகசிய திருமணம் செய்தல், கடற்கரைகளில், பூங்காக்களில் சேட்டைகள், விடுதிகளில் லீலைகள் என தமிழ் கலாசாரத்தை வளர்த்து வருகின்றனர். இந்த படங்களின் பாதிப்புக்கள் கலாச்சார பெருமை கொண்ட தமிழக முஸ்லிம் சமூகத்தையும் மெல்ல பாதித்து வருகின்றது.ஓடிப்போகும் கலாச்சாரம் தற்ப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இது போன்ற படங்கள் சமூகத்தில் எவ்வித தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி தெரிய தேவை இல்லை. முஸ்லிம் சமூகத்து பெண்கள் மற்றும் இளைஞர்களை இது போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டியது முஸ்லிம் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை.எனவே பொக்கிஷம் போன்ற படங்கள் வெளி வரும் முன்னே திரைபடத்தை பார்த்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோர வேண்டும். மறுத்தால் திரைப்படம் வெளிவருவதற்கு கடுமையான எதிர்ப்புகளை காண்பிக்க வேண்டும்.பம்பாய் பட பாதிப்பினால் ஏற்பட்ட விளைவுகள் இந்த படத்தினாலும் ஏற்பட்டு விடக்கூடாது.
தமிழக அரசும் இவ்விஷயத்தில் உடனே கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் சட்டம் ஒழுங்கு கெட்ட பின்னர் வருந்துவதை விட முன் நடவடிக்கை எடுப்பதே சாலச் சிறந்தது.

June 19, 2009

லண்டனில் த மு மு க..!

தமிழக அளவில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று தமிழகத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக சேவை செய்து வருகின்றது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
இந்த அமைப்பின் கிளைகள் தமிழகம் மட்டுமில்லாது இந்திய எல்லையைத் தாண்டி கிழக்காசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் பிரிட்டன் வந்துள்ள த மு மு க தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ் லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். இந்த அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.

June 03, 2009

கம்ப்யூட்டர் டிசைனர்களுக்கு..!

நீங்கள் தயாரிக்கும் டிசைன்களுக்கு கிளிப்ஆர்ட், பேஜ் பார்டர், ஐகான், வெக்டர் போன்ற அனைத்து விதமான தேவைகளுக்கும் இந்த இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றது.

May 13, 2009

குவைத் தமுமுகவின் கண்டனம்


மமக பிரமுகர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்


பத்திரிகை அறிக்கை நாள்: 13.05.2009
தலைமைத் தேர்தல் ஆணையரிடம் ம.மக. நேரில் புகார், மறு வாக்குப் பதிவு நடத்தவும் கோரிக்கை.
மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட்ட பத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்ததையடுத்து ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் அங்கு சென்றுள்ளார். அப்போது திமுக குண்டர்கள் வீச்சரிவாள், கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பயணம் செய்த கார்களை
(Safari Car (Ash Colour) No.PY01 AA 1977 & Bolero Car (White Colour) No. TN 21 AX 9001) துவம்சம் செய்துவிட்டு, கார்களில் இருந்த திரு. ஜாகிர் உசேன், ஹசன், மீரான் மொய்தீன், காஜா, பாரூக், சலாவுதீன், ஹைதர் அலி, வசீம், ஜாகிர் உசேன் மற்றும் மூஸா உள்ளிட்ட நபர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எமது கட்சி வேட்பாளரைக் கண்டவுடன் அவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் மேற்கண்ட ஆயுதங்களுடன் அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். உடனே கட்சிப் பிரமுகர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற ஹைதர் அலி அவர்கள், மத்திய சென்னை தேர்தல் அதிகாரியிடம் மேற்கண்ட அசம்பாவிதங்கள் குறித்து எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார். மேலும் காவல்துறையிடமும் அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுங்கட்சியினர் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே கலவரச் சூழலை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட திமுக குண்டர்கள், மேற்கண்ட 10 வாக்குச் சாவடிகளிலும் எண்ணற்ற கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர். மேலும் கொடிய ஆயுதங்களுடன் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி பொதுமக்களை உள்ளே விடாமல் தடுத்து தொடர்ச்சியாக கள்ள ஓட்டுக்களைப் போட்டுள்ளார்கள். இதனால் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் செல்ல பயந்து தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியவில்லை. இந்த அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த ஐஸ்'ஹவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட காவல்துறையினர் மனிதநேய மக்கள் கட்சியினருக்கு எதிரான வன்முறையை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தேர்தல் அதிகாரிகளும் அலுவலர்களும் திமுகவினருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். இச்சூழ்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் வன்முறைகள் நடந்தேறிய வாக்குச் சாவடிகள் எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட பத்து வாக்குச் சாவடிகளில் மத்திய காவல் படை உதவியுடன் மறு தேர்தல் நடத்துமாறும், அதுவரை மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்குமாறும், மேலும் திமுக குண்டர்களுக்கு ஆதரவாகவும், மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட திமுக குண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறும் மாநில தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
(மு. ஜைனுல் ஆபிதீன்) செய்தித் தொடர்பாளர், ம.ம.க. செல்: 99942 92932

தேர்வு முடிவுகள் 2009..!

www.tnresults.nic.in,

www.dge1.tn.nic.in ,

www.dge2.tn.nic.in ,

www.dge3.tn.nic.in ,

www.tngde.in,

www.collegesintamilnadu.com,

www.classontheweb.com,

www.schools9.com,

www.chennaivision.com,

www.mygaruda.com,

www.tnagar.com,

www.indiacollegefinder.com,

www.chennaionline.com,

www.nakkeeran.com ,

www.getyourscore.in,

www.examresults.net,

www.webdunia.com,

www.jayanews.in, and

www.findchennai.com.

May 11, 2009

மக்களே கண்டிப்பாக வாக்களியுங்கள்..!

2009 மே 13 புதன்கிழமையன்று தமிழகம்; 39 புதுவை 1 ஆக 40 தொகுதிகளுக்குரிய மக்கள் சபை உறுப்பினர்களை (M.P.) தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் தவறாது கலந்து தங்களின் விலை மதிப்பற்ற வாக்குகளை முறையாகப் பதிவு செய்வதே கடமையாகும். இந்த மண்ணின் மைந்தர்கள்- வந்தேறிகள் அல்ல என்பதை நிலை நாட்டுவதாகும்.

அல்லாஹ்வின் உதவி அவன் நாடினால், எப்படியும் கிடைத்து விடும். அதற்காக அயோக்கியர்களை ஆதரித்துதான் முஸ்லிம்களின் நலன் நாட வேண்டும் என்ற அவசியமில்லை. ஷிர்க், ஹராமுக்கு துணை போய்தான் நமது உரிமையை பெற வேண்டும் என்றால் அத்தகைய உரிமைகளும் நமக்கு தேவையில்லை. கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதிகளுக்கு நீங்கள் அளிக்கக்கூடிய வாக்கு நாளை அல்லாஹ்விடத்தில் உங்களை கேள்விக்குரியதாக்கி விடும் என்பதை மறந்து விடாதீர்.

எனவே, 15 ஆண்டுகால தியாகவரலாற்றை கொண்டுள்ள நமது தமுமுக ஆதரவு பெற்ற சமூக ஜனநாயக கூட்டனியை வெற்றிபெறச்செய்யுங்கள். மறவாமல் இரயில் என்ஜின் சின்னத்தில் வாக்களியுங்கள். மற்ற தொகுதிகளுக்கு தமுமுக தனது அதிகாரப்பூர்வ வாரஇதழான மக்கள் உரிமையில் குறிப்பிட்டுள்ள வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.

சலிமுல்லாஹ்கானின் தேர்தல் அறிக்கை

May 09, 2009

மாபெரும் மருத்துவ முகாம்..!


குவைத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.

April 23, 2009

பாப்லர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு

15 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா தெறிவிக்கையில் :சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் 60 ஆண்டு காலமாக அரசியல் அதிகாரத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது பட்டவர்த்தனமான உண்மை. இந்தியாவில் 13.4% வாழும் முஸ்லிம்கள் சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவாத்தில் தனது சதவீதத்தில் பாதியை கூட் பெறவில்லை.அரசியல் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்கள், தலி்த்துகள், இதர சிறுபானடமையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் ரீதியில் சக்திப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் PFI செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இதற்கான முயற்சியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா எடுத்து வரும் இந்த தருனத்தில்தான் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த மக்களவை தேர்தலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நேரடியாக போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் சம்பந்தமான முக்கிய நிலைப்பாட்டை திர்மானித்தள்ளது.தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் முயற்சியாக மனித நேய மக்கள் கட்சி (MMK) தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது. இதனை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. எனவே மயிலாடுதுறை, மததிய சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதவாத ஃபாசிஸக் கட்சிகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் கடந்த இரன்டரை வருட திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி , ஏவேலை வாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு, உலமா நல வாரியம் அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டும் , கிலோ 1 ரூபாய் அரிசி, ஏழைகளுக்கு எரிவாயு இனைப்புடன் இலவச கேஸ் அடுப்பு, தமிழகத்திற்கு பயனளிக்கும் சேது கால்வாய் திட்டத்திற்கான உறுதியான முயற்சி போன்ற மக்கள் நலத்திட்டங்களை கருத்தில் கொண்டும் புதுவை உட்பட மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை கொண்ட கூட்டணிக்கு ஆதரவிளத்து வெற்றி பெறச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்து.பாரதீய ஜனதா கட்சி ஹிந்துத்துவா என்னும் அரசியல் செயல்திட்டத்துடன் செயல்படும் ஓர் அரசியல் கட்சி. ஹிந்துத்துவா என்னும் இந்த செயல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமே எதிரானதாகும். இதற்கு பா.ஜ.க நாடு முழுவதும் நடத்திய முஸ்லிம், தலித், கிருத்துவர்களுக்கு எதிரான கலவரங்களே சாட்சி. கடந்த கால பா.ஜ.க வின் ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் ஓர் இருன்ட காலமாகும்.எனவே பா.ஜ.க வை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் புறக்கணித்தது போல் ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கும் வகையில் பாரதீய ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா களமிறங்கி பா.ஜ.க வுக்கு எதிராக களப்பணியாற்றி அதனை படுதோல்வியடையச் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாலர் ஷேக் முகம்மது தெஹ்லான் பாகவி, மாறிலத் துணைத் தலைவர் ஏ.எஸ் இஸ்மாயீல் , மாநில பொதுச் செயலாளர் ஏ. ஃபக்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.--Posted By முகவைத்தமிழன்

April 13, 2009

தேர்தலுக்கு தயார்..!


உழைக்கக் காத்திருக்கும் கோடிக்கணக்கான மக்கள் இருக்கையிலே, உழைப்பிற்கு கூலி கொடுக்க அல்லாஹ் தயாராய் இருக்கும் நிலையிலே சலசலப்புகளும், முக்கல் முனகல்களும் நம்மை என்ன செய்துவிடும்.
வெற்றிடங்கள் நிரம்பிவிடும்..!
வெற்றிகள் தேடிவரும்..!!
இன்ஷாஅல்லாஹ்

April 10, 2009

ம ம க போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. மத்திய சென்னை, மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது.

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்விரண்டு கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்.

விரிவான செய்திகள் இன்ஷா அல்லாஹ்.....

இறைவனுக்கே புகழ் அனைத்தும்..!

மனிதநேய மக்கள் கட்சிக்கு திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் இடம் ஒதுக்காமல் தனித்து போட்டியிடும் வாய்ப்பை நல்கிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
எங்கள் சமுதாய பலத்தை நிரூபிக்க வாய்ப்பு நல்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு நன்றிகள் ஆயிரம்....தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மக்கள் செல்வாக்கின் பலம் தெரியாமல் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்காமல் தனது தொகுதி பட்டியலை வெளியிட்டதில் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
திமுக மற்றும் அதிமுக தொகுதி பட்டியலில் முஸ்லிம்களை முற்றிலுமாக புறக்கணித்ததற்கும், எங்களை தனித்து போட்டியிட்டு எங்கள் சமுதாயத்தின் பலத்தை அறிய வாய்ப்பு நல்கியதற்கும் முஸ்லிம் சமுதாயம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
திராவிடக் கட்சிகளின் தப்புக்கணக்கு - அதுவே முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கு வித்திட்டுள்ள ஆரம்பகணக்கு.கலைஞர் அவர்களே! எங்களை தனிமைப் படுத்தியதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியுடன் நன்றி கூறிக்கொள்கிறோம். இதற்கான விலை கொடுக்க தாங்கள் முன் வரும் போது இன்ஷா அல்லாஹ் உங்கள் கைக்கு எட்டாத தூரத்திலிருப்போம் என்பதை இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறோம்.
நீதியின் குரல்Date 10-04-2009

April 01, 2009

மனித நேய மக்கள் கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதியும், ஒரு மேல்- சபை சீட்டும் கேட்டது. ஆனால் அந்த கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே கொடுக்க தி.மு.க. தலைமை முடிவு செய்தது. இதை ஏற்க மனித நேய மக்கள் கட்சி மறுத்து விட்டது. இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதி விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெறவில்லை.

கூட்டணி குறித்து முடிவு செய்வதற்காக மனித நேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணிகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியை நீடிக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத்தின் சார்பில் அவரது பிரதிநிதிகள் ஜே.எம்.ஆருண் எம்.பி.யும், தொழில் அதிபர் பிரசிடென்ட் அபு ஆகியோர் அந்த கட்சி நிர்வாகிகளுடன் பேசினார்கள்.

தி.மு.க. கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். 2 தொகுதியும், ஒரு மேல்- சபை சீட்டும் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அவர்களிடம் தெரிவித்தனர். காங்கிரஸ் மேலிடத்தில் இது பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் குலாம் நபி ஆசாத்தும் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் இருந்தும் மனித நேய மக்கள் கட்சியை தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மனித நேய மக்கள் கட்சி தனது நிலைகுறித்து இன்று இரவு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: www.maalaimalar.com