இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

June 30, 2008

குரல் கொடுத்த திருவாரூர் மாவட்டம்

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சித்ரவதைக்கு ஆளாகும் தமிழர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.எச்.நூர்தீன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம்.முஜிபுர்ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.குத்புதீன், முகமதுஅன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைச் செயலாளர் ஜே.ஹாஜாகனி சிறப்புரை யாற்றினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் (திருவாரூர், கடலூர் மாவட்டம்) இருந்து குவைத்திற்கு வேலைக்காக சென்ற தமிழர்கள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பரிதவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குவைத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று இது தொடர்பாக புகார் மனுக்கள் அளித்தும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும், பாதிக்கப்பட்டவர்கள் மீது எவ்வித கவனமும் செலுத்தாமலும் இருக்கும் இந்திய தூதரகத்தை இந்நிர்வாகக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் பிற நாட்டின் தூதரகம் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களை மீட்பதற்காகவும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், துரித முறையில் செயல்படுவது போல் நம் நாட்டின் தூதரகம் பாதிக்கப்பட்ட நம் நாட்டின் மக்களுக்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மேற்படி விஷயத்தில் தமிழர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மாநில அரசும், மத்திய அரசும் தலையிட்டு பாதிக்கப்பட்ட தமிழர்கள் உடனே தாயகம் திரும்புவதற்கும், அவர்கள் உரிய நிவாரணம் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பு: மேற்குறிப்பிட்டுள்ள தீர்மானங்களை குவைத் தமுமுக வழி மொழிகிறது.

பிளஸ் 2 படித்தவர்களுக்கும் இனி வேலை :

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிரம்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களுக்கும் இனிமேல் யோகம் அடிக்கப் போகிறது. இவர்களுக்கு கம்ப்யூட்டர் நிறுவனங்கள், பயிற்சி அளித்து, வேலை வழங்க திட்டமிட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்பது தான், இன்றைய இளைஞர்களின் கனவு. கை நிறைய சம்பளம் கிடைப்பதால், வேலைக்கு சேர்ந்த ஒரு சில ஆண்டுகளிலேயே ஆடம்பரமான வீடு, அழகான கார் என, அனைத்து வசதிகளையும் அடைந்து விட முடிகிறது. ஆனால், அது தொடர்பான மேற்படிப்பு படித்தவர்களுக்கு மட்டுமே, கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் மற்றும் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை இருந்தது. ஆனால், சென்னையை மையமாக கொண்டு செயல்படும் லேசர் இன்போசிஸ்டம் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களுக்கும் தங்கள் நிறுவனத்தில் வேலை அளிக்க முன்வந்துள்ளது. படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்களில் திறமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வழங்க திட்டமிட்டுள்ளது. இதுபற்றி, அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுரேஷ் காம்நாத் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் ஆபீஸ் பாய் பணியில் சம்பத்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ளார். அவருக்கு, கற்கும் ஆர்வம் அதிகம் இருந்தது. இதையடுத்து, அலுவலக பணி முடிந்ததும் தினமும் சில மணி நேரம் அவருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்தோம். மிக விரைவாக கற்றுக் கொண்டார். தற்போது, மற்ற ஊழியர்களுக்கு சவால் விடும் வகையில் வேலை செய்கிறார். இப்போது, அவர் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஆக பணிபுரிந்து வருகிறார். இதுபோல், வறுமை காரணமாக பள்ளி படிப்போடு படிப்பை நிறுத்தியவர்களில் திறமையாளர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு, பயிற்சி அளித்து வேலை வழங்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு சுரேஷ் காம்நாத் கூறினார்.
இதுபோல, மேலும் சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தவர்களுக்கு பயிற்சி அளித்து, வேலை வழங்க திட்டமிட்டுள்ளன. இதுபற்றி தகவல் தொழில்நுட்ப நிறுவன வட்டாரங்கள் கூறுகையில்,"இன்ஜினியரிங் முடித்துவிட்டு புதிதாக பணியில் சேருவோருக்கு கூட, முதல் மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஏராளமான சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. பிளஸ் 2 படித்தவர்களில் திறமையானவர்களை அடையாளம் கண்டு, சற்று கூடுதலான பயிற்சி அளிப்பது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு லாபகரமாக அமையும்' என கூறின.

June 19, 2008

குவைத்தில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் கூட..!

கிரீன் கார்டு வாங்கித் தருவதாக வேலைக்கு அழைத்துச் செல்லப் பட்ட 100 தமிழர்கள் உட்பட 550 இந்தியர்கள், அமெரிக்காவில் தவித்து வருகின்றனர். ஒரு மாதமாக வாஷிங்டனில் உள்ள தூதரகம் முன்னபாக இவர்கள் உண்ணாவிரதம் இருந்த போதிலும், இவர்களை இந்திய தூதர் ரோனன் சென் கண்டுகொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளதால், இப்பிரச்னை, பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு தற்போது கொண்டு செல்லப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த திவான் அசோசியேட்ஸ் என்ற ஒரு ஏஜென்சி, "எச் 2பி' விசா மூலம் அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகவும், அங்கு நிரந்தரமாக குடியுரிமை பெறும் வகையில் கிரீன் கார்டு வாங்கித் தருவதாகவும் விளம்பரம் செய்திருந்தது. இதற்காக, ஒவ்வொருவரிடமும் ஐந்து முதல் எட்டு லட்ச ரூபாய் வரை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது. டெக்சாஸ் அருகே உள்ள, "சிக்னல் இன்டர்நேஷனல்' என்ற கப்பல் கட்டும் கம்பெனியில் பணியில் அமர்த்தப்பட்டனர். "எச் 2பி' விசா பெற்றிருப்பவர்கள் தற்காலிகமாக மட்டுமே அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். இந்த விசாவைக் கொண்டு கிரீன் கார்டு வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் வரை மோசடி செய்துள்ள விவகாரம் தெரியவந்தவுடன் தாங்கள் மோசம் போய்விட்டதாக தொழிலாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்த 550 பேரில் 100 பேர் வரை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்த மோசடி விவகாரம் தெரிந்தும் வேறுவழியில்லாமல் 100 பேர் இன்னும் அந்த கம்பெனியில் பணியில் உள்ளனர். இன்னும் 100 பேர், வேறு வேலைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென போராட்டத்தில் குதித்தனர். இதற்காக, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கடந்த மே 14ம் தேதியிலிருந்து ஜூன் 11ம் தேதி வரை இவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது, தினமும் காலையும் மாலையும் இந்திய தூதர் ரோனன் சென், காரில் இவர்களை கடந்து சென்றுள்ளார். ஆனால், என்ன ஏது என்று கேட்கவில்லை. தங்களது பிரச்னையை மனுவாக கொடுக்கப் போன போது, தனது புரோட்டகாலில் இது வராது என்று ரோனன் சென் மறுத்துவிட்டதாக தெரிகிறது. அந்நாட்டு பார்லிமென்ட்டான அமெரிக்கன் காங்கிரசைச் சேர்ந்த 18 எம்.பி.,க்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளனர். இருப்பினும் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி., கார்வேந்தன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த எம்.பி., செபஸ்டியன் பால் ஆகிய இருவரும், அமெரிக்கா சென்று இந்த தொழிலாளர்களை சந்தித்துப் பேசியுள்ளனர். இவர் களது பிரச்னை குறித்து ரோனன் சென்னை சந்தித்து விளக்கியுள்ளனர். இவர்களது பிரச்னையை உடனடியாக கவனிக்க வேண்டுமென்றும் இந்த விஷயம் குறித்து பார்லிமென்ட்டில் பிரச்னை கிளப்பப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, ரோனன் சென் இந்த விஷயத்தில் நியாயம் இருப்பதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் எம்.பி.,க் களிடம் தெரிவித்தார். டில்லி திரும்பிய கார்வேந்தனும், செபஸ்டியன் பாலும், நிருபர்களிடம் நேற்று இதை தெரிவித்தனர். மோசடியில் ஈடுபட்ட திவான் அசோசியேட்ஸ் நிறுவனம் மீது மும்பை போலீசார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்றும், இது குறித்து அமெரிக்காவில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு பாதிக்கப் பட்ட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் உரிய உதவிகளை இந்திய தூதரகம் செய்திட வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தப் படும் என தெரிவித்தனர். - தினமலர்.


குவைத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்திய தூதரகமும் இதே நிலையில் தான் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் அந்நிய செலவாணி மட்டும் வேண்டும் அவர்களது பிரச்சனைகளில் அரசு தலையிடாதா. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டால் மட்டும் தான் பாராளுமன்றம் வரை போகுமா..? அமெரிக்காவில் பாதிக்கப்பட்டால் தான் பிரதமரிடம் வலியுறுத்தப்படுமா..? தமிழகத்தின் எல்லா செய்திதாள்களுக்கும், எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் குவைத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக குரல் கொடுக்க சொல்லி செய்திகள் அனுப்பி இதுவரை தனியாவே போராடி வருகின்றோமே தவிர தூதரகத்தின் - அரசின் எந்த நடவடிக்கைகளும் வெளிவரவில்லை. இதை படிக்கும் அன்பர்கள் தங்களுக்கு தெரிந்த பத்திரிக்கைகளுக்கு அனுப்பி நிவாரணம் கிடைக்க ஆவணச்செய்யுமாறு குவைத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பாக குவைத் தமுமுக கேட்டுக்கொள்கின்றது.

June 12, 2008

ஃபீ ஸபீலில்லாஹ்- அல்லாஹ்வுக்காக

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
http://www.kumudam.com/magazine/Reporter/2008-06-15/pg11.php
கொடுமைக்கார முதலாளியிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றிய குவைத் தமுமுக..! விரிவான செய்திக்கு இந்த வார குமுதம் ரிப்போர்டர் பார்க்கவும் அல்லது மேலுள்ள சுட்டியை தட்டவும்.

June 09, 2008

வேண்டுகோள் - நிறைவேறுமா...?

இங்கே ஒரு நண்பர் சவூதியில் பணி புரிபவர் தாயகத்தோடு சென்று விட காத்திருக்கும் இவர் தமிழத்தி்ல் வேலை தேடி சமூகத்திடம் விண்ணப்பித்திருக்கின்றார். இவரது மின்னஞ்சலிலிருந்து வந்துள்ள கோரிக்கை கீழே தரப்பட்டுள்ளது.

Dear Brother,
Assalamu Alaikkum,
I am Taj deen .I did see your mail. Now I am working in K.S.A. I am finding the good job in India at Tamil Nadu. If you find good job in India plz forward to my mail. My contract will finish until October. After vocation I am not come back to K.S.A .
Vassalam

தமிழ்நாட்டிலிருந்து இவ்வலைப்பக்கத்தை காணும் சகோதரர்கள் இவருக்காக உதவி புரியவும். அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக..!

இவரது மின்னஞ்சல்: thajudheen_80@yahoo.com

தொலைபேசி: 00966504375026

நண்பரது சுயவிவரப்பட்டியல் (BIO - DATA) தேவைப்படுவோர் tmmkkwt@gmail.com என்ற மின்னஞ்சலையோ அல்லது அவரையோ தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கப்படும்.

வஸ்ஸலாம்

June 07, 2008

குவைத்தில் பிரபல நிறுவனங்களில் பணிகள்:

Major Company
Brand Manager
Account Director
Account Manager
PR Manager
Sales Executives
*****************************


Major Organization
DIRECTOR OF PLANNING AND ASSESSMENT
*****************************



شركة بيوتات البحر للتجارة العامة والمقاولات
Executive Secretary
*****************************
Snam National General Trading Co.



Sales Executive
*****************************
Training Center
CELTA Instructor
*****************************
Major Company
Solutions Analyst
معد دراسات جدوى
منتج افلام وثائقية وفلاشات إعلامية
مدير مشروع - ممثل للمالك
كاتب دراسات إعلامية أكاديمية
CIVIL ENGINEER
Application Analyst/Developer
مدير معارض ومؤتمرات
قائم بالدراسات الإعلامية الميداني
Plant Manager
Chief Accountant
Sales Engineer
Planning Engineer
Professional Painters
Purchase Assistant
Production Engineer
Site Engineer
CNC Operators
Professional Upholsterer
Production Manager
*****************************
Alico AIG Life
Insurance Sales Consultants
*****************************

சிறுபான்மையினருக்கு தொழில் கடன்:

விண்ணப்பம் வரவேற்பு: தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு "டாம்கோ' நிறுவனத்தின் தனிநபர் கடன் திட்டம் மூலம் கடன் அளிக்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுகடன்கள் வழங்கப்படுகின்றன. சிறுபான்மை சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. பயனாளிகள் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்ஸி இனத்தை சேர்ந்தர்களாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப் பகுதியினராக இருந்தால், ரூ.39 ஆயிரத்து 500க்கு மேற்படாமலும், நகர பகுதியினராக இருந்தால், ரூ.54 ஆயிரத்து 500க்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப படிவம் மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் கிடைக்கும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு அல்லது இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.தேர்வுக்குழுவின் ஒப்புதல் மற்றும் வங்கி பரிந்துரை ஆகியவற்றை பெற்று, "டாம்கோ' ஆணை பிறப்பித்து வங்கி மூலம் கடன் வழங்கும். திட்ட மதிப்பு ரூ. ஒரு லட்சத்துக்கு உட்பட்டிருப்பின் தகுதியின் அடிப்படையில் "டாம்கோ' ஒப்புதல் வழங்கும். ரூ. ஒரு லட்சத்துக்கு மேற்படின் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி கழகத்தின் முன்னுரிமை பெற்று கடன் வழங்கப்படும். தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவர்கள், கடன் பெற்று பயனடைய வேண்டுமென விரும்புகின்றோம்.