இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

December 17, 2008

சமூக நீதி கருத்தரங்கம்

அனைவரும் வாரீர்!!
தீவிரவாதமும் பயங்கரவாதமும்.
(நிழலும் நிஜமும்)
பேரா. சுப. வீரபாண்டியன்.
(பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கி யிருக்கிறார். தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர். அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார்.)
மனித குலத்தின் இன்றைய சவால்கள்
சகோ.எம்.தமீமுன் அன்ஸாரி
(மாநில செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்)
இடம்: ஜம் இய்யதுல் இஸ்லாஹ் அரங்கம், ரவ்தா – குவைத்
நேரம்: மாலை 5:15, ஜனவரி 1, 2009.
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏனைய தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறும் நிகழ்ச்சி இது.
தமிழகத்திலும் ஃபாஸிஸ பிரிவினை வாத சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விதமாகவும், ஒடுக்கப் பட்ட சமுதாயத்தின் விழிப்புணர்வுக்காகவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது
அடுத்த நாளும் (வெள்ளிக் கிழமை) தமுமுக, குவைத் மண்டலத்தின் சார்பாக அதே அரங்கத்தில் மற்றும்ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

புஷ்ஷை செருப்பால்..!

எல்லோரும் கவலைப்படுகிறார்கள் புஷ்ஷை நோக்கி வீசிய செருப்பில் குறி தவறிபோய்விட்டதே என்று...! தோழனே! இங்கே பாதணி என்று குறிப்பிடாமல் செருப்பு என்றே விளிம்புகிறேன்.பாதணியை விட செருப்பில் வீரியம் தெறிப்பதால்..! தோழனே!உலகம் முழுவதும் மக்கள் கவலைப்படுகிறார்கள்குறி தவறிப்போய்விட்டதே என்று..! இல்லை.... இல்லை...ஒளிப்படத்தை மீண்டும் பார் புஷ் குனிந்து கொள்ள அமெரிக்க தேசிய கொடியின்மீதல்லவா பட்டு தெறித்தது...!தோழனே!எனக்கு கூட ஓர் சிந்தனை செருப்பை வீசி பார்த்து பயிற்ச்சி எடுத்திருந்திருக்கலாமே என்று..!தோழனே!நீ ஆயுதத்தால் தாக்கி இருந்தால் கூடஅவன் அன்றே இறந்திருப்பான்.செருப்படியால் அவனை வாழும் பிணமாக அல்லவா மாற்றிவிட்டாய்!தோழனே! பத்திரிக்கையாளர்களை தீவிர சோதனை செய்தது ஆயுதம் வைத்திருக்கிறீர்களா என்றுஆனால், அதை விட அதிக வலிமையுடைய எழுதுகோளையும், நாவையும், செருப்பையும் அல்லவா உங்களுடன் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்!தோழனே! எனக்கும் பாசீஸ மிருகங்களை செருப்பால் அடிக்க விருப்பமுண்டு.ஆனால் குறி தப்பாமல் இருக்க இன்றே பயிற்ச்சி எடுக்க வேண்டும்! குறி தவறினாலும் பரவாயில்லை பின்புறம் தேசீய கொடி இருக்குமல்லவா? தோழனே! உனக்கொரு செய்திஉன் வீரத்தை இணையத்தில் படித்த போது மற்றொரு செய்தியையும் கண்டேன் நடிகைக்கு கோயில் கட்டுகிறார்களாம்.என் சமூகத்திலும் இளைஞர்கள் உன்னைப் போல் என்று செருப்பைத் தூக்குவார்களோ என்ற பெருமூச்சுடன் வந்த சிந்தனையை தவீர்க்க முடியவில்லை.
தமிழச்சி