இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 10, 2007

குவைத் தமுமுக-வின் முதலாம் ஆண்டு விழா..!

குவைத் நாட்டில் தமுமுகவின் பணிகளை சிறப்புறச் செய்ய கடந்த 2005 டிசம்பர் 09 ஆம் தேதியில் தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டி பணிகள் முடுக்கிவிடப்பட்டது. தாங்கள் யாவரும் அறிந்ததே. அதன் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு கடந்த 2006 டிசம்பர் 08 ஆம் தேதியில், குவைத்தின் நகரப்பகுதியான முர்காப் என்னுமிடத்தில் தஞ்சை உணவகத்தில் மிகச்சரியாக மாலை 05:00 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கியது. நிகழ்ச்சியை பொதுக்குழு உறுப்பினரான சகோ. கா. அப்துல் ரஹ்மான்-பெரம்பலூர் அவர்கள் தொகுத்து வழங்கினார். ஹால்திய்யா கிளை தலைவர் சகோ. முஹம்மது இப்ராஹிம்-சென்னை அவர்கள் கிராஅத்துடன் துவக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் சகோ. ஜ.முஹம்மது இக்பால்-பெரம்பலூர் அவர்கள் தலைமை யேற்றார். தலைமையுரையில் குவைத் தமுமுகவின் முதல் ஆண்டின் சாதனைகளான தங்களது செயல்பாடுகளை மக்கள் மத்தியில் அழகுற எடுத்து வைத்தார். சிறப்புரையாக குவைத்தின் மூத்த மார்க்க அழைப்பாளர் பேரா. தாஜீத்தீன்-புதுஆத்தூர் அவர்கள் உலக அரங்கில் இஸ்லாமியர்களின் நிலை பற்றியும், இளம் மார்க்க அழைப்பாளர் சகோ. முஹம்மதலி ரஷாதி-பாண்டி அவர்கள் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் நிலை பற்றியும் அரங்கம் அதிர வீரவுரையாற்றினார்கள். துணைத்தலைவர் அப்துல்கரீம்பாபு-முஹம்மது பந்தர் அவர்கள் குவைத்தில் இதுவரையுள்ள தமுமுக கிளை நிர்வாகிகளையும், அன்று புதிதாக துவங்கப்பட்ட பயான், சால்மிய்யா, சல்வா கிளைகளின் நிர்வாகிகளையும் அறிமுகப் படுத்தி வைத்து வாழ்த்தினார். மண்டலத்தலைவர் அமானுல்லாஹ்-திருச்சி அவர்களின் நன்றியுரையாற்றினார். இரவுச் சிற்றுண்டியுடன் விழா இனிதே நிறைவுற்றது.

No comments: