இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 11, 2007

ஜனநாயகத்தை தேடிய தீவிரவாதத்தின் பயணங்கள்..!

ஜனநாயகம் - இது மக்களால், மக்களில், மக்களுக்காக தேர்வு செய்யப்படும் தலைமை. தலைமைகள் என்ன ஆரோக் கியமாகவா இருக்கின்றது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங் களிலும் பதவி வகிப்பவர்களுக்கு குறைந்த பட்ச தகுதி என்னவென்றால், அவர் மீது ஏதாவது ஒரு வகையிலாவது கிரிமினல் வழக்கு பதிவாகி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது. நம் நாட்டில் இதுவரை நடந்த தேர்தல்களைக் கருத்தில் கொண்டால், கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு மேல் எங்கும் ஓட்டு பதிவானது கிடையாது. ஆக, 40 சதவீதம் பேர்கள் தேர்தல்முறையை விட்டே விலகி நிற்கின்றார்கள். மீதி 60 சதவீதம் பேர்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளரைத் தேர்வு செய்கின்றார்கள். குறைந்தது மூன்று கட்சிகள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால், சராசரியாக ஒரு கட்சிக்கு 20 சதவீத ஓட்டு என்றால், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஓட்டளித்தவர்கள் 20 சதவீதம் என்றாகின்றது. ஆக, ஜனநாயகம் என்பது 80 சதவீதம் பேர் வெறுப்பில் 20 சதவீதம் பேரின் விருப்பம் நிறைவேறுகின்றது.
இதுதான் ஜனநாயகம் என்றால், முரண்பாடுகள் தான் முதலாக அமையும். ஏனெனில், அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றோம் என்று வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பது என்பது, அறுதிப் பெரும்பான்மையின் வெறுப்பில் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்று தான் அர்த்தமாகின்றது.
ஜனநாயகப்படி தேர்வு செய்யப்பட்ட அரசுகள், நாடுகள் சந்தித்த பிரச்னைகள், அங்கே ஜனநாயகம் இல்லை, மக்கள் அவதிப்படுகின்றார்கள், அவர்களுக்கு சுவாசத்தை மீட்டுத் தரப் போகின்றோம் என்றார்கள். ஆப்கானில் தேர்தல் நடந்தன. வாக்குப் பெட்டிகள் பாக்கிஸ்தானில் இருந்து, வாக்குச் சீட்டுகள் முத்திரையிடப்பட்டபடி ஆப்கான் வந்து சேர்ந்தன. என்ன ஆச்சரியம்..! ஜனநாயகத் தேர்தலில் கர்சாய் வெற்றி பெற்று விட்டார்.
மிக நீண்ட நாட்கள் கழித்து ஈராக்கில் ஜனநாயக அடிப்படையில் தேர்தல். வேட்பாளரே முன் வந்து நான் தேர்தலில் நிற்கவில்லை என்று அறிவித்த அதிசயம் அங்கு நிகழ்ந்தது. சரி.., மற்ற நாடுகளாக இருந்தால் அங்கு சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடக்கும். கண்காணிப்பு இருக்கும். ஆனால், ஈராக்கில் அவர்களுக்கு அனுமதி இல்லை.
அதிகம் பேசிய அல் ஜஸீரா தொலைக்காட்சி நிலையம் பூட்டப்பட்டது, ஏன்..? நிருபர்களும் கூட நிரந்தரமாக உலகத்தை விட்டே அனுப்பப்பட்டு விட்டார்கள். காரணம்.., அங்கு ஜனநாயகம் இல்லை.
யுக்ரைனில் ஜனநாயம் என்ற போர்வையில் ரஷ்யா ஒரு அணியிலும், மேற்கத்திய நாடுகள் ஒரு அணியிலும் ஒரு நாட்டின் இறையாண்மையை, மக்களை துண்டாக்கி பண பலமும், படை பலமும், மீடியா பலமும் பொருந்திய மேற்கத்திய நாடுகள் தனது ஆதிக்கத்தில் என்றும் போல் தக்கவைத்துக் கொண்டது.
நமது பக்கத்து நாடு.., நேபாளம். மன்னராட்சி அறிமுகம். பத்திரிக்கைகளுக்கு வாய்ப்பூட்டு..! என்ன செய்ய.., அமெரிக்கா மன்னராட்சிக்கு மலர்வளையம் வைக்கின்றது, நவீன ஆயுதங்கள் இறக்குமதியாகின்றன.
பங்களாதேஷில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை நிலவுகின்றது. மன்மோகன் சிங் குதிக்கின்றார். சார்க் மாநாட்டுக்கு நான் போக மாட்டேன். ஜனநாயகம் மலர வேண்டும். நல்ல காரணம், நல்ல நோக்கம் தான். என்ன செய்ய கொள்கைப் பிடிப்பு தளர்கின்றதே..?
சற்று எட்ட தூரத்தில் பர்மா..! இராணுவ ஆட்சி.., ஜனநாயகத்திற்குப் போராடும் ஒரு பெண்மணி, வீட்டுக் காவலில்.., சார்க் மாநாட்டுக்குப் போகாத மன்மோகன் சிங்கின் அமைச்சர், இராணுவ ஆட்சி நடக்கும் பர்மாவிற்கு ஒப்பந்தம் போடப்போகின்றார், ஏன்.., பர்மா, பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்கு எண்ணெய்க் குழாய் பதிப்பதற்கான ஒப்பந்தத்திற்காக..! ஏன்..! அங்கு விளையும் ஓபியம் என்ற கஞ்சா தான் இன்றைக்கு உலக வல்லரசின் உளவுத் துறைக்கே தீணி போடுவதாக வேறு பிரச்சாரம் அந்த நாட்டிலேயே வெகுவேகமாக நடக்கின்றது. அதன் முன்னாள் தலைவரே அதனை ஒப்புக் கொண்டுள்ளார். மனித விரோத, சர்வாதிகார இராணுவ ஆட்சியுடன் எப்படி ஒப்பந்தம் போடுகின்றோம்.
ஆனால் பக்கத்தில் பாகிஸ்தானில் மட்டும் ஜனநாயகம் இன்னும் மலரவில்லை என்று தினம் அரைப்பக்கத்துக்கு செய்தி வாசிக்கின்றோம்.., முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் ஜனநாயகமோ..?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசூலா அதிபர் அவ்வப்பொழுது அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப் படுகின்றார். அவரைக் கவிழ்ப்பதற்கான அத்தனை முயற்சிகளும் செய்யப்படுகின்றன.
கியூபா.. பிடரல் காஸ்ட்ரோ.., அவரையும் மக்கள் நேசிக்கின்றார்கள். இருந்தும் என்ன? நான் நேசிக்கவில்லையே..! என்கிறார்.., பின்னே என்ன அங்கும் தீவிரவாதத்திற்கு பயிற்சி.., ஆயுத சப்ளை.. என்ற குற்றச்சாட்டு.
இப்படியே போய்.., இப்பொழுது ஈரான், சிரியா அடுத்த இலக்காக குறி வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆளில்லாத விமானம் ஈரானின் மீது பறந்து கொண்டு எங்கே ஆதாரம் கிட்டதா என்று அலைகின்றது. அந்நிய நாட்டின் வான் எல்லை மீறப்படுகின்றது. அந்நிய நாட்டின் இறையாண்மை தூக்கி எறிப்படுகின்றது.
மேலே உள்ள ஆதாரங்களின் மீது சற்று கவனத்தைத் திருப்பினால், அதிகாரத் தோரணையுடன் ஆட்சியில் வீற்றிருக்கும்.., சுருங்கச் சொன்னால் நாட்டின் உயர்அந்தஸ்தில் இருந்து கொண்டு தடி எடுத்தால் அது நிர்வாக யுக்தி, அரசியல் சாணக்கியம். அதேநேரத்தில் அதிகாரம் இல்லாத ஏன்.., தனிநபர் ஆயுதம் எடுத்தால் தான் என்றில்லை.., வீட்டில் ஆடு அறுக்க கத்தி வைத்திருந்தாலும் அது தீவிரவாதம்.
பக்கத்து நாட்டின் மீது போட்டுத் தாக்க ஒரு நாடு அணுஆயுதம் தயாரித்தால் அது ராஜ தந்திரம்.., ஆனால் தனி மனிதன் வெடிக்காத பட்டாசை கையில் வைத்திருந்தால் அது தீவிரவாதம். இப்பொழுது புரிகின்றதா.., ஆட்சி, அதிகாரம், ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு ஒரு சமூகத்தின் மீது அராஜகம் கட்டவிழ்த்து விடப்படும். ஆனால், அந்த சமூகம் எந்தவித உணர்ச்சியையோ எதனையும் அது வெளிக்காட்டக் கூடாது. புழுப் பூச்சியை குச்சியால் நிமிண்டினால் கூட சற்று அது உணர்ச்சியைக் காட்டும், ஆனால், மனிதன்.., காட்டக் கூடாது. அதிலும் முஸ்லிம் காட்டவே கூடாது.
ஆப்கானில், பாலஸ்தீனில், ஈராக்கில், செசன்யாவில்.., காஷ்மீரில்.., தாய்லாந்து, என்று நீங்கள் எங்கு திரும்பினாலும் முஸ்லிம்கள் மீது சொல்லொண்ணா படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும், அந்த சமூகம் உணர்ச்சியற்ற ஜடமாக உலா வர வேண்டும் என்பது விபரீதமானதொரு எதிர்பார்ப்பு..
இவ்வளவு ஏன் இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் ஜெர்மனியில் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் ஹிட்லர் அரிதப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அதுவே இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த காரணிகளில் ஒன்றாகவும் அமைந்தது. இரண்டாம் உலகப் போருக்கு ஹிட்லர் மட்டும் காரணமல்ல, மாறாக சோவியத்தின் சர்வாதிகாரியான ஸ்டாலினும் கூட காரண கர்த்தாவாகவே இருந்தார். இன்னும் தொழில்முறைப் போட்டி யாளராக ஜெர்மனியை வரித்தெடுத்துக் கொண்ட யூதர்களும், அவர்களுடன் இணைந்து கொண்ட அமெரிக்கர்களும் காரணகர்த்தாக்களாவர். இன்னும் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா வரைக்கும் பரவியிருந்த சாம்ராஜ்யம் எங்கே அஸ்தமித்து விடுமோ என்று பயந்த பிரிட்டனும் இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாகும்.
ஆக, உலகத்தை நடுநடுங்க வைத்த கோடிக்கணக்கான மக்களைப் பழி எடுத்த இரண்டாம் உலக மகா யுத்தத்தை யார் ஆரம்பித்து வைத்தது என்றால், ஜனநாயகம் என்ற பெயரிலும், கம்யூனிஸம் என்ற பெயரிலும், முதலாளித்துவம் என்ற பெயரிலும், வியாபாரம் என்ற போர்வையிலும், பாஸிஸம், நாஜிஸம் என்ற பெயரிலும் இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் உள்ள மக்களையும் தங்களது கைப்பிடிக்குள் போட்டுக் கொள்ள முயன்ற ஆதிக்கவாதிகள் தான்.
ஹிட்லர் முஸ்லிம்களுடன் நட்புரிமை பாராட்டி வந்ததும், முஸ்லிம்கள் ஹிட்லரின் அணியில் சேர்ந்து கொண்டதும் வரலாற்றுத் தவறல்ல, மாறாக முஸ்லிம்கள் மீது சொல் லொண்ணா அடக்குமுறைகளை பிரிட்டனும், அமெரிக்காவும் இன்னும் ஆப்பிரிக்கப் பிரதே சத்தில் ஃபிரான்ஸும், இவர்களுடன் யூத சதிகளும் இணைந்து கொள்ளவே இவர்கள் அனைவ ருக்கும் எதிரான முகாமில் இருந்த ஹிட்லருடன் முஸ்லிம்கள் இணைந்து கொள்ள வேண்டிய தேற்பட்டது.
ஆனால், வரலாறு நெடுகிலும் எந்தவொரு போர்ப் பிரகடனத்தையும் முஸ்லிம்கள் யார் மீதும் சுமத்தியது கிடையாது. அவ்வாறிருக்க முஸ்லிம்கள் மீது ஏன் இவர்கள் போர் பிரகடனம் அறிவித்தது போல் நடந்து கொள்கின்றார்கள், தீவிரவாதிகள் என்று கூறுகின்றார்கள், குவாண்டனாமோ, அபூகிரைப் சித்ரவதை முகாமில் வைத்து சித்ரவதைகளைச் செய்கின் றார்கள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றார்கள்.
ஹிட்லரை மேற்க்கத்திய நாடுகள் எதிர்த்ததற்கு காரணம், ஜனநாயக முறையிலான தேர்தலில் அவர் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை ஆரம்பித்தார். இரண்டாவது, ஜெர்மனி மக்களுக்கு இரண்டு உத்ரவாதங்களைத் ஹிட்லர் தந்தார், ஒன்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இரண்டாவது அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ வசதி. மூன்றாவது, தேக்கமற்ற சமூக வளர்ச்சிக்கு நிறைவான மனித வளம். இந்த மூன்று காரணிகளும் தான் ஜெர்மன் மீது போர்ப் பிரகடனம் செய்ய வைத்தன.
உண்மையில் ஹிட்லரை விட உன்னதமான ஜனநாயகம் இஸ்லாத்தில் தான் இருக்கின்றது. இரண்டாவது, இஸ்லாம் தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர் களையும், ஏற்றுக் கொள்ளாதவர்களையும் சமமாகப் பார்க்கக் கூடியதொரு உண்மையான ஜனநாயகக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. அது ஆட்சிக்கு வந்த போதெல்லாம் ஏனைய கொள்கையினர் சுதந்திரமாக வாழ்ந்தனர், சுதந்திரமாக தங்களுடைய வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டனர். மூன்றாவதாக, அதனிடம் மற்ற சமுதாயத்தினரை விட நிறைவான மனித வளம் இருக்கின்றது. அந்த மனித வளத்தை முழுமையான முன்னேற்றப் பாதையின் கீழ் கொண்டு செல்வதற்கான பொருளாதாரக் கொள்கையும் அதனிடம் இருக்கின்றது. ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரியாக அல்ல, மாறாக, நடுநிலையான சமுதாயத்தை அமைப்பதற்குத் தேவையான சமூக நீதி அதனிடம் இருக்கின்றது. எனவே, தான் தங்களது சுரண்டலுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க யாரும் இருக்கக் கூடாது என்று இன்றைய அமெரிக்காவும், பிரிட்டனும், அவர்களுடன் இணைந்து தோளோடு தோளாக நின்கின்ற யூதர்களும் நினைக்கின்றார்கள்.
ஏனெனில், இறுதி வரைக்கும் முஸ்லிம்கள் அடிமை வாழ்வு வாழ மாட்டார்கள். அவர்களின் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் அடக்குமுறைக்கு எதிராகப் போர் தொடுப்பார்கள். அவர்கள் படைத்தவனுக்கு மட்டுமே அடிமைகளாக இருப்பதில் சந்தோஷம் அடைபவர்கள். பனி படர்ந்த சைபீரிய மரணப்படுகொலை முகாம்.., வருடம் 1941, தார்த்தாரிஸ்தான் மற்றும் புகராவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் அந்த முஸ்லிம்கள். தங்களது தலைக்கு மேலாக கத்தி தொங்கிக் கொண்டிருந்த நிலையிலும் மறைமுகமாக அந்த முகாம்களில் தொழுகையை நிறைவேற்றிய வண்ணம் அவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்ற செய்தியைப் படிக்க முடிகின்றது.
இன்றைக்கும் அவர்களது இளவல்கள் தான் செசன்யாவில் ரஷ்யாவோடு போர் தொடுத்து வருகின்றார்கள். உலகத்தின் பார்வையில் தீவிரவாதிகளாக..!
நாடு என்ற அளவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய நாடுகளில் தங்களது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பொம்மைகளை ஆட்சி பீடத்தில் அமர்த்தி வைத்திருந்தாலும், மக்களின் கொள்கைத்தாகம் அவ்வப்பொழுது அங்கும் இங்கும் வெடித்து வருவதனை இவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே, உலகத்தின் பார்வையில் இந்த முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, அவர்களை உலக சமூக வாழ்விலிருந்து தனிமைப்படுத்தி அவர்களை மக்கள் தொடர்பிலிருந்து முதலில் விடுவித்து, பின்னர் அவர்களை கொள்கையற்றவர்களாக, தங்களது வாழ்க்கைப் போராட்டத்திற்காக கொள்கையை விற்றுவிடக்கூடியவர்களாக முஸ்லிம்களை ஆக்கி விட வேண்டும் என்று ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றிணைந்து பாடுபட்டு வருகின்றன. அதற்காக தங்களது அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றன.
அவர்களது சுயலாபத்திற்காக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷர்ரப்பிற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள், நேபாள மன்னருக்கு வெஞ்சாமரம் வீசுவார்கள், பர்மாவின் இராணுவ ஆட்சியாளருக்கு காவல் பூனையாக இருப்பார்கள், ஆனால் அவர்கள் சுயலாபம் பாதிக்கப்பட்டால் பிடல் காஸ்ட்ரோ ஒரு முள்ளாகக் கருதப்படுவார். தாலிபான்கள் கரையான் புற்றுக்களாகச் சித்தரிக்கப்படுவார்கள்.
ரஷ்யாவை எதிர்க்க ஆயுதமாகப் பயன்பட்ட பின்லாடன் அப்போது விடுதலை வீரர், இப்போது தேடிக் கொல்ல வேண்டியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்.
யூதர்களைப் படுகொலை செய்தார் என்பதனால் ஹிட்லரை அழித்ததில் நியாயம் இருக்கின்றது. சைபீரிய மரணப் படுகொலை முகாம்களில் மனித நர வேட்டை நடத்தியது ரஷ்யா என்பதனால் அதனை அழித்ததிலும் நியாயம் இருக்கின்றது. முஸ்லிம்கள் யாரை எதனை அழித்தார்கள்? எதற்காக இந்த வெறியாட்டம் நடக்கின்றது?
அமெரிக்காவுக்குச் சொந்தமான பியர்ள் ஹார்பர் துறைமுகத்தை ஜப்பானியர்கள் ஆக்கிரமித்தார்கள் என்பதற்காக ஹிரோஷிமா - நாகஸாகியில் அணு குண்டுகளைப் போட்டோம் என்றாலும்.., வாதத்திற்காக தலையை ஆட்டி வைக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் அமெரிக்காவின் எந்த ஹார்பரையும் அழிக்கவில்லை,
செப்டம்பர் 11 தாக்குதல் கூட, அதன் விசாரணை அறிக்கையின் உண்மை என்னவென்பதே யாருக்கும் தெரியவில்லை. சம்பவம் நடந்த பொழுது ஸவூதி அரேபியாவின் பெயர் அதிகம் அடிபட்டது. சமீபத்தில் ஸவூதியின் தலையீடு இதில் இல்லை என்று அமெரிக்காவே கூறி விட்டது. பின்னர்.., முஸ்லிம்களின் மீது ஏனிந்தப் போர்..!
அது தான் மிகப் பெரிய சூட்சுமம். எந்தக் கொள்கையையும் உறுதியோடு எதிர்க்கும் உள வலிமை அவர்களிடம் உண்டு. எனவே, எப்பொழுது எந்தக் கொள்கை அரியணை ஏறினாலும் அதன் அடக்குமுறைக்கு முதல் எதிர்ப்பு முஸ்லிம்களிடத்திலிருந்து தான் வரும். அதனை இஸ்லாம் என்ற கொள்கை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் என்ற உண்மை முஸ்லிம்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, இந்த ஏகாதிபத்தியத் தீவிரவாதிகள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.
அவர்கள் முதலில் முஸ்லிம்கள், இஸ்லாத்தைக் கொள்கையாகப் பின்பற்றுபவர்கள்.., சுய ஆதிக்கம், சுய லாபம் என்ற மனித விரோதசக்திகளுக்கு எதிராக அவர்கள் போர் தொடுத்திருக் கின்றார்கள். அதற்கு அவர்களது கொள்கை ஊட்டமளிக்கின்றது.
ஆனால், ஜனநாயகம் - தீவிரவாதம் போன்ற எதிலும் தலையிடாத நிலைப்பாட்டில் இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் மிகப் பெரிய ஆதிக்க சக்தியாகவோ அல்லது பொருளாதார சக்தியாகவோ அல்லது இராணுவ வலிமை மிக்க சக்தியாகவோ சமீப கால வரலாற்றில் என்றுமே அவர்கள் தங்களை இனங்காட்டிக் கொண்டதில்லை. பின்னர் ஏன் அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகின்றார்கள்.
ஆதிக்கச்சக்திகளோ.., ஜனநாயகம் என்ற பெயரில் போலி நாடகம் ஆடுகின்றன. அவர்களது வாயில் ஜனநாயகம் என்று வந்தால், அவர்களது சுய லாபம் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். அவர்களது வாயில் தீவிரவாதம் என்று வந்தால் எங்கோ அவர்களது சுய லாபம் ஆட்டம் காண்கின்றது என்று அர்த்தம்.
சுய ஆதிக்கமும், சுய லாபமும் மனித சமூகத்திற்கு எதிரானது..! அதனை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால், மனித விரோதிகள் என்பவர்கள் யார்..!? மனித குலத்திற்கு எதிரி யார் என்பதை இப்பொழுது புரிந்திருப்பீர்கள். தீவிரவாதம் என்றால் என்ன என்பதையும் இப்பொழுது புரிந்திருப்பீர்கள்..!

1 comment:

Unknown said...

This is good information of about now islam .insha allah i would like to read the messge in all muslim candidates