இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 16, 2008

திறன் வளர்க்கும் பயிற்சி திட்டம்..!

(இந்த படத்தின் மீது கிளிக்கவும்)

தாங்களும் பயன்பெறுங்கள்..., சகோதரர்களுக்கும் பரப்புங்கள்.

வல்லம் மாநாடு - சொல்வதென்ன..?

பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) எனபவரின் யோக்கியதையையே புரிய முடியாத இவர்களுக்கு சத்தியம் எது? அசத்தியம் எது? என்ற விளக்கம் எப்படி புரிந்து கொள்ள முடியும். மாநாடு பற்றிய விளம்பரம் செய்தவதில் மாதக்கணக்கில் கவனம் செலுத்திய இவர்கள் குறைந்த பட்சம் 15 நாளாவது மாநாட்டு அரங்கத்திலே கவனம் செலுத்தியிருக்கலாம். உண்மையிலேயே பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) மிகவும் புத்திசாலி மட்டுமல்ல சாமார்த்தியசாலியும் கூட. எந்த அளவுக்கு தொண்டர்களை முட்டாளாக்க முடியுமோ அந்த அளவுக்கு முட்டாளாக்கி வைத்திருக்கிறார். ததஜ தொண்டர்கள் அடிமட்ட மடையர்கள் என்பதை வெளியிலிருந்து யாரும் நிருபிக்க வேண்டிய அவசியமில்லை அவ்வப்போது அவர்களே (ததஜ தொண்டர்கள்) 'அடிமட்ட மடையர்கள்' என்று நிருபித்துக்கொண்டுவருகிறார்கள்.

மற்றவர்களுக்கெல்லம் கணக்கு தெரியாது இவர்களுக்கு மட்டும்தான் கணக்கு தெரியும் என்கிற நினைப்பு இவர்களுக்கு. தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களும் (6 அல்லது 7 கோடி மக்களும் மத வேறுபாடின்றி) வல்லம் மாநாட்டிலே இருந்தார்கள், அன்றைய தினம் வல்லம் தவிர தமிழகத்தின் மற்றப்பகுதிகளில் மனித நடமாட்டம் இல்லை, அரசியல்வாதிகளுக்கும் மற்ற அமைப்பு தலைவர்களுக்கும் மாநாட்டு அழைப்பு கொடுக்கததால் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனிமையில் கோட்டையில் இருந்து என்ன செய்வது என்று நினைத்து அன்றைய தினம் டெல்லிக்குப்போய்விட்டார் என்று பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) சொன்னாலும் எந்தவித மறுப்புமின்றி நம்பி, அதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அவர்கள் 'அடிமட்ட மடையர்கள்' என்று நிருபித்துக்கொள்ள ததஜ தொண்டர்கள் தயார்.

எப்படிப்பட்ட குறைகள்தான் மாநாட்டிலே இருந்தாலும், ததஜ தொண்டர்களின் குடும்பப்பெண்கள் மாநாட்டிலே இயற்கை தேவைகளை நிறைவுசெய்வதில் எப்படிப்பட்ட கஷ்டத்தை அனுபவித்திருந்தாலும், நாகூர் தர்ஹா குளத்திலே பெண்கள் குளிப்பதை தரங்கெட்ட மனிதர்கள் பார்த்து ரசிப்பதைப்போல ததஜ தொண்டர்களின் குடும்பப்பெண்கள் ததஜ தொண்டர்களின் கண் முன்னாலேயே அந்நிய ஆடவர்களால் ரசித்து இடிக்கப்படுவதைப்பார்த்தும், ஊர்வலம், ஆர்பாட்டகோஷம் என்று சொல்லி ததஜ தொண்டர்களின் கண் முன்னாலேயே அவர்களின் மனைவிகள் அந்நிய ஆடவர்களால் இழுக்கப்படுவதும், அவர்களின் மனைவிகள் இடுப்பை - அவர்கள் விடும் குரல் சத்தத்தை ரசிப்பதும் வெளிப்படையாக தெரிந்தாலும் இவை நம் ஷரிஅத் சட்டத்திலே இல்லையே என்ற விபரம் அவர்களுக்கு இல்லாததால் அது பற்றிய அபாயம் அவர்களுக்கு தெரியவில்லை.

இது பற்றிய ஷரிஅத் சட்டத்தை பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) சொல்லித்தரவில்லை. இது பற்றிய ஷரிஅத் சட்டத்தை சொல்லிவிட்டால் கூட்டம் காண்பிக்க முடியாது என்பதை பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) தெளிவாக உணர்ந்திருப்பதால் சொல்லிக்கொடுக்கவில்லை. ததஜ தவிர்த்த மற்ற தமிழக முஸ்லிம்கள் அந்தோ பரிதாபம் என்று நம் சமுதாயப்பெண்களா இவர்கள் - மேற்கத்திய கலாச்சரத்தைவிட மேற்கத்திய ஐரோப்பிய பெண்களைவிட கேவலமாக போய்விட்டார்களே, கணவனுக்கு மட்டுமே (நான்கு சுவருக்கு மத்தியில்) காட்டவேண்டிய உடல் அழகை கணவன் முன்னாலேயே வீதியில் வந்து காட்டுகிறார்களே, கட்டிய மனைவிக்கு முன்னாலே அடுத்தவளின் இடுப்பை பார்க்கக்கூடிய அளவிற்கு தரங்கெட்டுவிட்டார்களே என்று நொந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ததஜ தொண்டர்களின் கருத்தோ எப்படியிருக்கிறது என்றால் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய விழிப்புணர்வு என்கிறார்கள். இது விழிப்புணர்வு என்றால் தர்ஹாவிலே ஆணும் பெண்ணும் கலந்து ஜியாரத் செய்கிறார்களல்லவா அதுவும் விழிப்புணர்வுதானே. மக்காவில் மட்டும் ஆணும் பெண்ணும் கலந்து இபாதத் செய்யவில்லையா என்று இவர்கள் கேட்கலாம் ஏன் என்றால் இவர்கள் முட்டாள்கள்தானே நிச்சயம் கேட்பார்கள். அப்படி இவர்கள் கேட்டால் மற்ற இடங்களிலும் ஆணும் பெண்ணும் கலந்து இபாதத் செய்ய குர்ஆன்-ஹதிஸ் ஆதாரம் கேளுங்கள். அப்படி அவர்கள் ஆதாரம் கொடுத்தால் தர்ஹாவிலே ஆணும் பெண்ணும் கலந்து ஜியாரத் செய்கிறார்களல்லவா அதுவும் கூடும் என்றாகிவிடும். அல்லாஹ் நம் சமுதாயத்தை காப்பாற்றுவானாக.

முகமது இலியாஸ்
சென்னை

July 15, 2008

இன்னுமா இந்த அவலம்? - அபு நூறாவுக்கு

எங்கயாவது இருவரோ, இரு குழுக்களோ, இரு இயக்கத்தினரோ, இரு சமய பிரவினரோ, இரு மார்க்க சகோதரரோ இணைந்து விட்டாலோ அல்லது சமாதானமாகிப்போனாலோ அபுநூறா மாதிரி ஆட்களுக்கு எங்கயோ வலிப்பு ஏற்பட்டு விடுகிறது. நான்கு கிராமத்து மக்கள் எதன் பெயராலோ ஒன்று கூடியதும் இவர்களுக்கு என்னதான் ஆகுமோ தெரியவில்லை. யாரிடமாவது காட்டி கொடுத்து, போட்டு கொடுத்து விட்ட பிறகு தான் தூக்கமும் நிம்மதியும் வரும் போலிருக்கின்றது. எதன் பெயராலோ இஸ்லாமியர்களிடம் நட்பாக இருப்பது பிடிக்கவில்லையோ அல்லது இவர்களுக்கு அரசியல் பண்ண வழி இல்லாததாலோ தெரியவில்லை. எதார்த்தத்தை உணர்ந்து வாழ கற்றுக்கொள்ளட்டும். எதார்த்தம் இஸ்லாத்திற்கு விரோதமாக இருக்கும்பட்சத்தில் மெல்ல மெல்ல திருத்திக்கொள்ளலாம். வளைக்கிறேன் பேர்வழின்னு ஒடித்து விடாதீர்கள்.
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்... (அல்குர்ஆன் - 2:272)

இஸ்லாம் அமைதியான மதம் : தலாய்லாமா

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புத்த மதத் துறவி தலாய்லாமா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். கருத்தரங்கிற்கு பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு தலாய்லாமா பதிலளித்தார். அமெரிக்கர்களுக்கு எதிராக முஸ்லீம் இனத்தவர்கள் கொலைவெறித் தாக்குதல்களை நடத்திவருகின்றனரே என்று கேட்டதற்கு ஒரு நாட்டை மட்டும் மையமாக வைத்து ஒரு மதத்தை மதிப்பிடக்கூடாது, ஏனெனில் இஸ்லாம் மதம் அமைதியான மதம் என்று அவர் கூறியுள்ளார்.

July 14, 2008

ஆம்புலன்ஸ்க்கு உதவுங்கள்..!

குவைத்தில் தொடர்பு கொள்ள விட்டுக்கட்டி நகர பொருப்பாளர் மஸ்தான் தொலைபேசி - +965 - 9382025

July 12, 2008

வாழ்வு தரும் சிவில் இன்ஜினியரிங்

அந்தஸ்து, பெருமை, விளம்பரம், இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், எந்தத் துறை கிடைக்கிறதோ, அதில் சேர்ந்து சிறப்பாகப் பயின்று, பணிபுரிந்தால், உங்கள் எதிர்காலம் பிரகாசமாக விளங்கும். நம்முடைய வாழ்வுடன் நெருங்கிய தொழில் சிவில் பொறியாளரின் சேவைகள். இந்தியாவில், தென்கிழக்கு ஆசியநாடுகளில், ஆப்ரிக்காவில், வளைகுடா நாடுகளில், மத்திய கிழக்கு அரபுநாடுகளில், அடுத்த பத்து வருடங்களுக்கு, உயர்தர வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கும் வருமானம் உள்ள பிரிவுதான் Civil Engineering.

Civil படித்துவிட்டு, என்னமாதிரி வேலை செய்யலாம்? பலருக்கு இந்தக் கல்வியின் கவனம் திரும்பாதது, அறியாமையின் அவதாரம். சிவில் இன்ஜினியர் என்றால் வீடுகட்டுபவர், அல்லது கஙிஈ போன்ற துறைகளில் வேலை செய்பவர் என்ற ஒரு தலைப்பட்சக்கணிப்பு உள்ளது. இது தவறு. சிவில் இன்ஜினியர் பல வேலைகளைப் பார்க்க முடியும்? என்ன மாதிரி ?
கட்டடம் அமைக்கவுள்ள தேவைகளை, பொருட்களை நிர்ணயம் செய்யும் அளவாளர் (Quantity Surveyor), நிலம் அளவு நிர்மாணிப்பவர் (Land Surveyor), கட்டடம், இடம் வடிவம் செய்பவர் (Design Engineer), இடப் பொறியாளர் (Site Engineer), திட்ட மேலாளர் (Project Manager), பாலம்கட்டும் பொறியாளர் (Bridges Engineer), சாலைப் பொறியாளர் (Road Engineer), போக்குவரத்துப் பொறியாளர் (Transport Engineer) கடல் வாழ் கட்டடம் அமைப்பவர் (Marine Construction), பூகோள-நுணுக்க பொறியாளர் (Geo Technical Engineer), கடலைத்தூற்றி நிலமாக்கும் பொறியாளர் (Reclamation Engineer), ஒப்பந்த மேலாளர் (Contract Manager) வாணிப மேலாளர் (Commercial Manager), உற்பத்தியாளர் (Producer), ஒப்பந்தக்காரர் (Contractor), யோசனை - டிராயிங், கட்டட சூப்பர்விசன் செய்பவர் (consultant) இப்படிச் சொல்லில் அடங்காத எண்ணற்ற சேவைகளைப் புரியலாம்.

"Quantity Surveyor" படிப்பு பற்றிபார்க்கலாம். தகுதி BE Civil Engineering. or DCE (Diploma in Civil, with 3 years experience) துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் இவர்களின் குறைந்த பட்ச சம்பளம் Rs.2லட்சம் அதிக பட்சம் Rs.4லட்சம் மாதம். QS/ QC என அழைக்கப்படும் பொறியாளர்களுக்கு என்ன வேலை ?

திட்டம் சம்பந்தப்பட்ட, வடிவங்களைப் படித்து சரிசெய்தல் (Review), கட்டடம், திட்டம், சம்பந்தப்பட்ட, புனரமைப்பு வேலைகளைப் படித்தல். கட்டமைப்பு வசதிகளை, படித்து அதுசம்பந்தப்பட்ட , சாலைகள், தெருக்கள், கழிவுநீர் வசதி, குடிநீர்வசதி, Gas Connection, போன்றவற்றை ஆய்ந்து, ஒப்பந்தக்காரர்களின் விலை தயாரித்தல். மனிதவளம், பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு, திட்டம் தயாரிப்பது., செய்யத்தக்க செயல் முறைகளைக் கையாளும் விதம் (Feasibility Studies), தயாரிப்பது, ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கோப்புகளையும், பத்திரங்களையும் பார்த்தல், வேலைக்குப் பேசப்பட்ட ஒப்பந்தத் தொகைகளை, வேலைகளுக்கு ஏற்ப வேலைகளை முடித்ததிற்கு ஏற்றவாறு, பணம் செட்டில் செய்தல், பட்ஜெட் விபரங்களை தயாரித்தல், ஒப்பந்ததாரர்களின் முடிவான கணக்குகளை செட்டில் செய்தல், மதிப்பிடுசெய்து, ஒப்புக் கொள்ளப்பட்ட வேலையின் விலையில் மாற்றங்கள் இருந்தால், அதற்கான வழி முறைகளை ஆராய்ந்து சிபாரிசு செய்தல், வேலைநடக்கும் இடங்களுக்கு (Field Visit) சென்று திட்டங்களையும், அதன் முன்னேற்றங்களையும், மற்றபடி, Mechanical/Electrical வேலைகளின் பிறசேவைகளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கோப்புகளைத் தயாரித்து யோசனை வழங்குதல்.
மேற்சொன்ன வேலைகளுக்கான தகுதிகள்:- BE Civil/Diploma Civil, நாட்டில் உள்ள கட்டட வேலைகளின் விபரம், பொருட்களின் தரம், விலை சந்தையில் உள்ள மாற்றங்கள், ஒப்பந்தக்காரர்களின் விபரங்கள் தகுதிகளை அறிதல் மனிதவளம் செலவுகளைச் கணக்கிடுதல் வேண்டும். மற்றநாடுகளான, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா பல்கலைக்கழகங்களில், Bachelor degree in Quantity Survey சொல்லித் தருகிறார்கள்.

BE Civil படித்து, இதேவேலையை எடுத்துக் கொள்ளலாம். Indian Quantity surveyors Association (IQSA) என்ற அமைப்பில் மாணவர்கள் தொடர்பு கொண்டு, வேலைவாய்ப்புகளை, படிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம். WEBSITE ல் IQSA சென்று பார்த்தால் விபரங்கள் மேலும் அறியலாம்.
வெளிநாடுகளில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆதலால் இத்தகைய பணிபுரியும் பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்களிடமிருந்து "கையூட்டு' பெற மாட்டார்கள். இயல்பாக இந்தத் தொழிலுக்கு நுழைபவர்களிடம் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும். (Intergrity)

BE Civil/Diploma Civil பயிலும் மாணவர்கள் செய்ய வேண்டியது!

QS சம்பந்தப்பட்ட விபரங்களை, கணினி வெப் மூலம் தெரிந்து கொள்ளவும். Charted Institute of Building (CIOB), Royal Institution of Charted Surveryors (RICS). National Institue of Construction Management and research (NICMAR) போன்ற அமைப்புகளின் செயல் பாடுகளைத் தீவிரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுது, நண்பர்கள் மூலம், கட்டட வேலைகள் நடக்கும், இடத்திற்குச் சென்று பார்வையிடலாம். கொத்தனார், தச்சர், பிட்டர் போறவர்களிடம் அடிக்கடி உரையாடி, அனுபவரீதியான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகள், கட்டாயமாக, பீல்டு விசிட் ஏற்படுத்த வேண்டும். கட்டட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, பயிற்சிகளை அளிக்க வேண்டும். Building Materials கட்டடப் பொருட்கள் இயந்திரங்கள், இதில்உள்ள நவீன வளர்ச்சி பற்றி சந்தைக்குச் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தயவு செய்து, படிக்கும் பொழுது பணத்தாசை கொள்ளாதீர்கள்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் நல்ல போதனைகளையும், ஒழுக்கங்களையும் வளர்கக வேண்டும். படிப்பு, கல்வி, வளர்ச்சிகளை, கடுமையாக எடுத்துக் கொண்டுவிட்டால், முன்னேறலாம் தம்பி! உன்வேலைக்கு வெளிநாடு செல்ல வேண்டியதில்லை! சொந்த மண்ணில் சுதந்திரப்புருஷர்களாக, செயல்படலாம். உனக்குதேவை, உன் மனதை ஒரு முனைப்படுத்து எந்தப்படிப்பாகயிருந்தாலும் நிச்சயம் உன்னால் முடியும் ! வெற்றி உமக்கே! இன்ஷா அல்லாஹ்.

July 08, 2008

தமிழக அரசியலில் தமுமுக

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,

திருச்சியில் தமிழக அரசியலில் தமுமுக பொதுக்கூட்டம் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஜுலை 6 அன்று 'தமிழக அரசியலில் தமுமுக பொதுக்கூட்டம்' நடைபெற்றது.
இந்தப் பொதுக் கூட்டத்தில் தமுமுக தலைவர் டாக்டர். பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைது, மவ்லவி அலி அக்பர் உமரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்தப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமை தாங்கினார். இப்பொதுக்கூட்டத்தில் ஏராளனமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குறிப்பு: செயற்குழுவில் புதிய அரசியல் கட்சியாக
மக்கள் முன்னேற்றக் கழகம்
உருவாக்குவது என்றும், அதன் கொடி கறுப்பு வெள்ளை கறுப்பு வண்ணமாகவும் இருக்கும் என்றும் மிகுந்த உற்சாகத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டது.

July 07, 2008

இந்தோ-திபெத் போலீஸ் படையில் பணியிடங்கள்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பை மத்திய துணை ராணுவ போலீஸ் படையான இந்தோ திபெத் போலீஸ் படை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட மாநில காலியிடங்களுக்கு அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் 207 காலியிடங்கள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 6000 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:

  • ஆகஸ்ட் 1, 2008 அன்று 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வழக்கமான மத்திய அரசு வயது சலுகைகள் தரப்படும்.
  • 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தது 170 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். சாதாரண நிலையில் மார்பளவு 80 செ.மீட்டரும் விரிவடையும் நிலையில் 85 செ.மீட்டரும் இருப்பது முக்கியம்.
  • சிறப்பான கண் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
உடல் தகுதித் தேர்வு, உடற் திறனறியும் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவை மூலமாக தேர்வு செய்யப் படுவீர்கள். ஆறரை நிமிடங்களில் 1.6 கி.மீட்டர் ஓடுவது, 3 அடி 6 இன்ச் உயரத்தை 3 வாய்ப்புகளில் தாண்டுவது, 3 வாய்ப்புகளில் 11அடி நீளம் தாண்டுவது ஆகியவை உடற்திறனறியும் தேர்வில் நடத்தப்படும்.

எழுத்துத் தேர்வு:

பொது அறிவு, அடிப்படைக் கணிதம், ஆங்கில மொழித் திறன் மற்றும் பகுத்தாராயும் திறன் ஆகியவற்றில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். என்.சி.சி., ஸ்கவுட் மற்றும் கைட் ஆகியவற்றில் இருந்திருப்போருக்கு சிறப்பு மதிப்பெண்கள் தரப்படும். மருத்ததுவத் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.50. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது. இதை டிடியாகவோ போஸ்டல் ஆர்டராகவோ அனுப்ப வேண்டும். தகுதிகள், திறன்கள் போன்ற அனைத்துக்குமான சான்றிதழ்களின் அட்டெஸ்டட் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் 2 சுய முகவரியிட்ட உறைகளை இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:
DIG, SHQ (L&C), ITB Police, Seema Nagar, POAirport,
Chandigarh (UP) Pin-160003.
முழு விபரங்களை
http://www.itbpolice.nic.in, http://www.itbp.gov.in இன்டர்நெட் தளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் ஆகஸ்ட் 14, 2008.

கல்விக் கடன் பெறும் முறை

திருச்சி மாவட்ட கலெக்டர் சவுண்டையா வெளியிட்ட அறிக்கை: திருச்சி மாவட்டத்தில் அரசுடைமை மற்றும் தனியார் வங்கிகளின் 200 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் அனைத்தும் தத்தம் சேவை பகுதிகளில் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன்கள் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகின்றன. அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள வங்கி கிளைகளை அணுகி கல்விக் கடனுதவி பெறலாம். மாணவர்கள் வங்கி கிளைகளை கல்விக் கடனுக்காக அணுகும் போது பின் ஆவணங்களுடன் செல்ல வேண்டும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மார்க் பட்டியல், மாறுதல் அத்தாட்சி, சேர இருக்கும் கல்வி நிறுவனத்தின் அனுமதி அட்டை, முழு படிப்பிற்கான கல்விக் கட்டணம், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஐந்து நகல்கள்.

இந்திய மெடிக்கல் கவுன்சில், அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தில் அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்புகள், மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், நர்சிங் படிப்புகள், பி.எட்., படிப்புகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமையின் படியும், தகுதியின் அடிப்படையிலும் அந்தந்த வங்கிககளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கல்விக் கடன்கள் வழங்கப்படும். வங்கிகளுக்கு கல்வி கடன்களை வழங்குவது பற்றி ஆலோசனை கூறவும், கல்வி நிறுவனங்களின் தகுதி மற்றும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஆகியவற்றை பற்றியும் தெரிந்து கொள்ளவும் மாவட்ட அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான குழுவுக்கு கலெக்டர் தலைவராக இருப்பார். முன்னோடி வங்கி மேலாளர், மாவட்டத்தில் அதிக கிளைகளை கொண்டு வங்கிகளின் மண்டல மேலாளர்கள், முதன்மைக் கல்வி அலுவலர், அண்ணா பல்கழைக்கழக பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர், அரசு ஆசிரியர் பயிற்சி நிலை முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

July 06, 2008

கழகத்தின் மாநில செயற்குழு.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழுக்கூட்டம் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள எஸ்.எம்.ஹெச். பேலசில் ஜுலை 4 அன்று நடைபெற்றது.

செயற்குழுவில் பொதுச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலளார் ரிபாயி உள்பட செயற்குழு உறுப்பினர்கள் 150 பேர் பங்குக் கொண்டார்கள்.
தமுமுகவின் கொள்கை விளக்கப்பாடலான தமுமுக தலைமையிலே என்ற ஒலிநாடா கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான சைய்யது நிசார் அஹ்மது வெளியிட்டார்.

இச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1) புதிய அரசியல் கட்சி (மக்கள் முன்னேற்றக் கழகம்)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் புதியதொரு அரசியல்கட்சியை தொடங்குவதென்றும் இது தொடர்பாக மாநில தழுவிய மாநாட்டை நடத்தி புதிய கட்சியையும் அதன் நிர்வாகிகளையும் அறிவிப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது. இதற்கு மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் பெயரிடப்படுகிறது.

2) முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவிற்கு இரங்கல்.
3) அமெரிக்காவுடன் அணு உடன்பாடு வேண்டாம்.
4) உடனடியாக மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பதவிகளில் முதல் கட்டமாக 10 சதவீத தனி இடஒதுக்கீட்டை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளிக்க வேண்டும்.
5) எட்டாண்டுகளுக்கும் மேலாக தமிழகச் சிறைகளில் இருக்கும் ஆயுள்கால முஸ்லிம் சிறைவாசிகளை, அண்ணா பிறந்தநாளையொட்டி, மற்ற கைதிகளை விடுதலை செய்வதுபோல, விடுதலை செய்ய வேண்டும்.
6) விசாரணைக் கைதியாக பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் குணங்குடி ஆர்.எம்.ஹனிபா அவர்களை உடனடியாக பிணையில் விடுவிக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும்.
7) முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்ட தனி இடஒதுக்கீட்டில் நிலவிய ரோஸ்டர் குழப்ப முறையை தமுமுகவின் கோரிக்கையை ஏற்று நிவர்த்தி செய்த தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களுக்கு இச்செயற்குழு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

8) தமுமுகவின் சமூக சேவைகளை அங்கீகரிக்கும் பொருட்டு இரண்டு ஆம்புலென்ஸ்களை தனது சொந்த செலவில் வழங்குவதாக அறிவித்து, அறிவித்தபடியே வழங்கியற்காக இச்செயற்குழு தனது நன்றியை டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

9) புதுவை மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதில் ஆளுக்கட்சி காங்கிரஸ் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது.எதிர்வரும் புதுவை சட்டமன்ற தேர்தலில் புதிய நிலைபாட்டை எடுக்கவும் தமுமுக தயங்காது.

10) வேலூர் கோட்டை பள்ளிவாசலை தொழுகைக்காக திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11) தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அளித்துள்ள 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழகத்தில் சில மேல்நிலைப் பள்ளிகளும் உயர்கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த மறுத்து வருகின்றன. தமிழக அரசு இத்தகைய கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கோருகின்றது.
12) கடுமையான விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13) தமிழக அரசு இக்கல்வி நிறுவனங்களில் உள்ள 50 சதவிகித இடங்களை கவுன்சிலிங் மூலம் அந்தந்த சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
14) 2007 ஆகஸ்ட் 14 அன்று தென்காசியில் நடந்த ஆறு படுகொலை நடந்த பிறகு தென்காசியில் அப்பாவிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்.
15) தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம் பெண்கள் நல்வாழ்வு சங்கத்தை அமைக்க உத்தரவிட்டது. இந்த சங்கத்திற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு இணையாக அரசும் நிதி அளிக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது தமிழக அரசு இச்சங்கத்திற்கு பொதுமக்களுக்கு எவ்வளவு நன்கொடை அளித்த போதினும் தமிழக அரசின் பங்களிப்பு ரு5 லட்சத்திற்கு மேல் அளிக்கப்பட மாட்டாது என்று வரம்பு அமைத்திருப்பது வருந்தத்தக்கது.முன்பு போல் பொதுமக்கள் அளிக்கும் நன்கொடைக்கு இணையாக தொகை அளிக்கப்பட வேண்டும்.

16) பல பள்ளிக்கூட முதல்வர்கள் சிறுபான்மை மாணவர்களின் உதவி தொகை விண்ணப்பத்தை மேலதிகாரிகளுக்கு அனுப்புவதற்கே மறுத்து வருகிறார்கள். தமிழக பள்ளிக்கல்வி துறை இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
17) தமுமுகவின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாக பொறுப்பாளர்கள் கட்டாயம் மக்கள் உரிமையின் நேரடி சந்தாதரர்களாக இருக்க வேண்டும் என்று இச்செயற்குழு தீர்மரணிக்கிறது.

18) நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகள் நடைபெறும் போது முஸ்லிம்கள் மீது பழிப்போடும் போக்கு தொடருகின்றது. பல அப்பாவி முஸ்லிம்கள் கைதும் செய்யப்படுகிறார்கள். ஆனாலும் குண்டுவெடிப்புகள் தொடர்கின்றன. இந்நிலையில் இந்து தற்கொலை படை அமைக்கப்பட வேண்டும் என்று குண்டு வெடிப்புகள் நடத்த வேண்டும் என்று பயங்கரவாதத்தை துண்டியுள்ள பால் தாக்கரேவை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுச் செய்வதுடன் ஜெய்பூர் உள்ளிட்ட வெடிகுண்டு வழக்குகள் குறித்து இவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
19) மதுவினால் நிகழ்ந்துவரும் கொடுமைகளைக் கருத்தில் கொண்டு தமிழகமெங்கும் பூரண மதுவிலக்கை செயல்படுத்தி மதுவில்லாத தமிழகம் என்ற பெருமையை உருவாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
20) கடந்த 10.12.2000 அன்று நெல்லை பாளையங்கோட்டையில் கிரஸண்ட் நகர் பள்ளிவாசலில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட புனியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்திற்கு வழங்குவதாக அறிவித்த 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை பல முறை தமிழக அரசுக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இறுதி கோரிக்கை என்றும், இக்கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், விரைவில் நெல்லை மாவட்டத்தில் தமுமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இச்செயற்குழு எச்சரிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

http://tmmk.in/news/999791.htm