பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) எனபவரின் யோக்கியதையையே புரிய முடியாத இவர்களுக்கு சத்தியம் எது? அசத்தியம் எது? என்ற விளக்கம் எப்படி புரிந்து கொள்ள முடியும். மாநாடு பற்றிய விளம்பரம் செய்தவதில் மாதக்கணக்கில் கவனம் செலுத்திய இவர்கள் குறைந்த பட்சம் 15 நாளாவது மாநாட்டு அரங்கத்திலே கவனம் செலுத்தியிருக்கலாம். உண்மையிலேயே பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) மிகவும் புத்திசாலி மட்டுமல்ல சாமார்த்தியசாலியும் கூட. எந்த அளவுக்கு தொண்டர்களை முட்டாளாக்க முடியுமோ அந்த அளவுக்கு முட்டாளாக்கி வைத்திருக்கிறார். ததஜ தொண்டர்கள் அடிமட்ட மடையர்கள் என்பதை வெளியிலிருந்து யாரும் நிருபிக்க வேண்டிய அவசியமில்லை அவ்வப்போது அவர்களே (ததஜ தொண்டர்கள்) 'அடிமட்ட மடையர்கள்' என்று நிருபித்துக்கொண்டுவருகிறார்கள்.
மற்றவர்களுக்கெல்லம் கணக்கு தெரியாது இவர்களுக்கு மட்டும்தான் கணக்கு தெரியும் என்கிற நினைப்பு இவர்களுக்கு. தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களும் (6 அல்லது 7 கோடி மக்களும் மத வேறுபாடின்றி) வல்லம் மாநாட்டிலே இருந்தார்கள், அன்றைய தினம் வல்லம் தவிர தமிழகத்தின் மற்றப்பகுதிகளில் மனித நடமாட்டம் இல்லை, அரசியல்வாதிகளுக்கும் மற்ற அமைப்பு தலைவர்களுக்கும் மாநாட்டு அழைப்பு கொடுக்கததால் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனிமையில் கோட்டையில் இருந்து என்ன செய்வது என்று நினைத்து அன்றைய தினம் டெல்லிக்குப்போய்விட்டார் என்று பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) சொன்னாலும் எந்தவித மறுப்புமின்றி நம்பி, அதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அவர்கள் 'அடிமட்ட மடையர்கள்' என்று நிருபித்துக்கொள்ள ததஜ தொண்டர்கள் தயார்.
எப்படிப்பட்ட குறைகள்தான் மாநாட்டிலே இருந்தாலும், ததஜ தொண்டர்களின் குடும்பப்பெண்கள் மாநாட்டிலே இயற்கை தேவைகளை நிறைவுசெய்வதில் எப்படிப்பட்ட கஷ்டத்தை அனுபவித்திருந்தாலும், நாகூர் தர்ஹா குளத்திலே பெண்கள் குளிப்பதை தரங்கெட்ட மனிதர்கள் பார்த்து ரசிப்பதைப்போல ததஜ தொண்டர்களின் குடும்பப்பெண்கள் ததஜ தொண்டர்களின் கண் முன்னாலேயே அந்நிய ஆடவர்களால் ரசித்து இடிக்கப்படுவதைப்பார்த்தும், ஊர்வலம், ஆர்பாட்டகோஷம் என்று சொல்லி ததஜ தொண்டர்களின் கண் முன்னாலேயே அவர்களின் மனைவிகள் அந்நிய ஆடவர்களால் இழுக்கப்படுவதும், அவர்களின் மனைவிகள் இடுப்பை - அவர்கள் விடும் குரல் சத்தத்தை ரசிப்பதும் வெளிப்படையாக தெரிந்தாலும் இவை நம் ஷரிஅத் சட்டத்திலே இல்லையே என்ற விபரம் அவர்களுக்கு இல்லாததால் அது பற்றிய அபாயம் அவர்களுக்கு தெரியவில்லை.
இது பற்றிய ஷரிஅத் சட்டத்தை பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) சொல்லித்தரவில்லை. இது பற்றிய ஷரிஅத் சட்டத்தை சொல்லிவிட்டால் கூட்டம் காண்பிக்க முடியாது என்பதை பி.ஜைனுல் ஆபிதின் (ததஜ தலைவர்) தெளிவாக உணர்ந்திருப்பதால் சொல்லிக்கொடுக்கவில்லை. ததஜ தவிர்த்த மற்ற தமிழக முஸ்லிம்கள் அந்தோ பரிதாபம் என்று நம் சமுதாயப்பெண்களா இவர்கள் - மேற்கத்திய கலாச்சரத்தைவிட மேற்கத்திய ஐரோப்பிய பெண்களைவிட கேவலமாக போய்விட்டார்களே, கணவனுக்கு மட்டுமே (நான்கு சுவருக்கு மத்தியில்) காட்டவேண்டிய உடல் அழகை கணவன் முன்னாலேயே வீதியில் வந்து காட்டுகிறார்களே, கட்டிய மனைவிக்கு முன்னாலே அடுத்தவளின் இடுப்பை பார்க்கக்கூடிய அளவிற்கு தரங்கெட்டுவிட்டார்களே என்று நொந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ததஜ தொண்டர்களின் கருத்தோ எப்படியிருக்கிறது என்றால் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய விழிப்புணர்வு என்கிறார்கள். இது விழிப்புணர்வு என்றால் தர்ஹாவிலே ஆணும் பெண்ணும் கலந்து ஜியாரத் செய்கிறார்களல்லவா அதுவும் விழிப்புணர்வுதானே. மக்காவில் மட்டும் ஆணும் பெண்ணும் கலந்து இபாதத் செய்யவில்லையா என்று இவர்கள் கேட்கலாம் ஏன் என்றால் இவர்கள் முட்டாள்கள்தானே நிச்சயம் கேட்பார்கள். அப்படி இவர்கள் கேட்டால் மற்ற இடங்களிலும் ஆணும் பெண்ணும் கலந்து இபாதத் செய்ய குர்ஆன்-ஹதிஸ் ஆதாரம் கேளுங்கள். அப்படி அவர்கள் ஆதாரம் கொடுத்தால் தர்ஹாவிலே ஆணும் பெண்ணும் கலந்து ஜியாரத் செய்கிறார்களல்லவா அதுவும் கூடும் என்றாகிவிடும். அல்லாஹ் நம் சமுதாயத்தை காப்பாற்றுவானாக.
முகமது இலியாஸ்
சென்னை