எங்கயாவது இருவரோ, இரு குழுக்களோ, இரு இயக்கத்தினரோ, இரு சமய பிரவினரோ, இரு மார்க்க சகோதரரோ இணைந்து விட்டாலோ அல்லது சமாதானமாகிப்போனாலோ அபுநூறா மாதிரி ஆட்களுக்கு எங்கயோ வலிப்பு ஏற்பட்டு விடுகிறது. நான்கு கிராமத்து மக்கள் எதன் பெயராலோ ஒன்று கூடியதும் இவர்களுக்கு என்னதான் ஆகுமோ தெரியவில்லை. யாரிடமாவது காட்டி கொடுத்து, போட்டு கொடுத்து விட்ட பிறகு தான் தூக்கமும் நிம்மதியும் வரும் போலிருக்கின்றது. எதன் பெயராலோ இஸ்லாமியர்களிடம் நட்பாக இருப்பது பிடிக்கவில்லையோ அல்லது இவர்களுக்கு அரசியல் பண்ண வழி இல்லாததாலோ தெரியவில்லை. எதார்த்தத்தை உணர்ந்து வாழ கற்றுக்கொள்ளட்டும். எதார்த்தம் இஸ்லாத்திற்கு விரோதமாக இருக்கும்பட்சத்தில் மெல்ல மெல்ல திருத்திக்கொள்ளலாம். வளைக்கிறேன் பேர்வழின்னு ஒடித்து விடாதீர்கள்.
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்... (அல்குர்ஆன் - 2:272)
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்... (அல்குர்ஆன் - 2:272)