இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

September 18, 2007

தம்மம்பட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்

இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மத மோதலால், தம்மம்பட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியின் போது, தம்மம்பட்டி மசூதி அருகே விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடந்தது. இதை, முஸ்லிம்கள் எதிர்த்தனர். அதிகாரிகள் பேச்சு நடத்தி சுமுகமாக தீர்வு கண்டனர். இப்பிரச்னை முடிந்த நிலையில், புதிய பிரச்னை எழுந்தது. தம்மம்பட்டி பஸ்நிலையம் அருகே, "வெங்கடேஷ்வரா' என்ற பெயரில் ஓட்டல் உள்ளது. இதன் உரிமையாளர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது என்று பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகராறு செய்தவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தடியடியை கண்டித்து, சாலை மறியல் நடந்தது. போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தி மறியலை கைவிட செய்தனர். பதட்டம் காரணமாக தம்மம்பட்டி வெறிச் சோடிக் கிடக்கிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிக்கின்றனர்.

No comments: