இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

September 19, 2007

குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் பருவ மழையின் தீவிரம் இருந்தது. குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலையில் மழை விட்டு விட்டு பெய்ததால் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி முதல் பாலத்தை தொட்டுக் கொண்டு தண்ணீர் விழுந்தது. அருவியில் கற்கள், மரக்கிளைகள் வந்து விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

No comments: