இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 17, 2008

உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்

கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே...!

பெருமையடித்து, திரிந்து கொண்டிருக்கும் சிலர்களுக்காக அல்லாஹ்வின் வசனத்திலிருந்து சில எச்சரிக்கைகள் : -

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்) கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்-57:23 )

ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர். (அல்குர்ஆன்-7:133)

சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்: 'நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!' (அல்குர்ஆன்-7:48)

பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்-8:47)

சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக அறிவான் (ஆணவங்கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்-16:23)

'ஆகவே, நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அங்கே என்றென்றும் தங்கியிருங்கள்' (என்றும் மலக்குகள் கூறுவார்கள் ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது. (அல்குர்ஆன்-16:29)

மேற்குறிப்பிட்டுள்ள வசனங்கள் வியாழக்கிழமை விண்டிவியில் பினாத்தியவர்களுக்கு உள்ளச்சத்தை ஏற்படுத்தவும், அல்லாஹ் அவர்களுக்கு உண்மை தவ்ஹீதை விளங்க வைக்கவுமே.
வேலிக்கு ஓணாண் சாட்சி என்று சொல்வழக்கு ஒன்று உள்ளது. அதுபோல இருந்தது தொங்கு மீசை வைத்தவரின் வாக்குமூலம்.
குவைத்தில் கூனிமேட்டார்களின் விலகலும், கடையநல்லூரார்களின் கடிதமும் உண்மை எழுச்சியை பயாஸ்கோப் வைத்து காட்டியது.

2:9 (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள், ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.


2:42 நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.

என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

No comments: