இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 25, 2008

சங்பரிவார சதியில் சத்திரமனை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாநில செயலாளர் சகோ.ஹைதர்அலி அவர்களுக்கு தமுமுக - குவைத் மண்டலத்திலிருந்து எழுதுவது பெரம்பலூர் மாவட்டத்திற்கு அருகிலுள்ளது சத்திரமனை என்ற சிற்றூர். மக்கள்தொகையில் பகுதிக்கு மேல் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரே ஒரு பள்ளிவாயில் உள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பாக ஒரு சுப்ஹ் நேர தொழுகை முடிந்து மக்கள் வெளிவ ரும் போது இந்துக்கள் அனைவரும் பள்ளிவாயிலை சுற்றி முற்றுகையிட்டுள்ளனர். என்னஏதென்று ஜமாஅத்தார்கள் விசாரிக்கும் போது (இது கொசுறுச்செய்தி:பள்ளியின் பின்புறத்தில் இடப்பக்கமாக இந்துக்கள் வழிபட கோவில் ஒன்று இருக்கின்றார்கள். அக்கோயிலுக்கு செல்லும் வழியாக பள்ளிவாயிலின் இடப்பக்கசுற்றுச்சுவருக்கும் அருகிலுள்ள விவசாய நிலத்திற்கும் இடையிலுள்ள 25அடி பாதையை தான் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள். எந்தப்பிரச்சனையும் இல்லை.) ஆனால், தற்போது அந்தப்பாதை போதவில்லை அதனால் பள்ளிவாயிலின் சுற்றுச்சுவரை ஒரு 10அடி உள்பக்கம் தள்ளிவைத்து கொண்டால் வசதியாக இருக்கும் என முற்றுகையிட்ட இந்துக்கள் கூறியுள்ளார்கள். அதற்கு ஜமாஅத்தார்கள் மறுக்கவே சுற்றுச்சுவரை இடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிறகு ஆர்.டி.ஓ. மற்றும் ஆர்.ஐ க்கு கம்ப்ளைண்ட் கொடுத்து அவர்கள் வந்து அளந்து பார்க்கையில் பொதுப்பாதையாக இன்றுவரை பயன்படுத்தி வந்த அந்த இடமும் பள்ளிக்குத்தான் சொந்தம். ஆதாரப்படி கோவிலுக்கென்று ஆரம்பகாலத்திலிருந்தே தனியாக ஒரு பாதையே இருக்கின்றது. வீண்வம்பு செய்யாதீர்கள் என சமரசம் செய்துவிட்டு அதிகாரிகள் சென்று விட்டார்கள். இந்த பிரச்சனைக்கு பின்னால் மத்திய மந்திரி அ. ராசாவும் அவரது அண்ணனும் இந்துக்களை துண்டிவிட்டு கொண்டுள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க 23-5-2008 அன்றிலிருந்து திருவிழா செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை அறிந்த விடுமுறையில் சென்றிருந்த தமுமுக சகோதரர்கள் மறுநாள் சனிக்கிழமை சாமி ஊர்வலமாக சென்று கோவிலுக்குள் வைக்க வேண்டும் என்று இந்துக்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து காவல்துறை மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு தகவல் தந்து அவர்களை அதிகாலையிலேயே வரவழைத்திருந்தார்கள். திட்டப்படி அனைவரும் வந்து சேர இந்துக்களோ சாமி சிலையை எடுத்துக்கொண்டு பள்ளிவாசல் இடத்தின் வழியாக செல்ல முற்படுகையில் முஸ்லிம்கள் தடுத்திருக்கின்றனர். பிரச்சனை ஆகவும் காவல் துறை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து விட்டு கோவிலுக்கு செல்வதற்கான உரிய வழியை பயன்படுத்துங்கள் இந்த வழி இஸ்லாமியர்களுடையது என தடுத்து அந்த பாதையிலேயே காவல்ர்கள் தடுத்து பாதுகாத்திருக்கிறார்கள். ஆனால்,
இந்துக்களோ காவல்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள். பிறகு கூட்டத்தை கலைக்க காவலர்களும் லத்திசார்ஜ் செய்துள்ளார்கள். பிறகு சாமிசிலையை பாதியிலேயே இறக்கிவிட்டு இந்துக்கள் மத்திய மந்திரி ராஜாவுக்கு போன் செய்து விசயத்தை சொல்லவும் அவரோ மாவட்ட கலெக்டர் அனில் மேஷராம் அவர்களுக்கு சொல்லி கலெக்டரே வந்துவிட்டார். பிறகு கலெக்டர் வந்த பிறகு காவல்துறை உண்மையை எடுத்து சொன்னபோது கலெக்டர் மீண்டும் ராஜாவை தொடர்பு கொண்டுவிட்டு அவரது தலைமையிலேயே தடையை மீறி பள்ளிவாசலின் பாதையிலேயே ஊர்வலத்தை நடத்தி சாமி சிலையை கோவிலுக்கு வைத்து விட்டு இஸ்லாமியர்களிடம் வந்து இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை அரசு செலவிலேயே கட்டித்தருகிறோம். ஏதாவது பிரச்னை பண்ணீங்க எல்லாத்தையும் தூக்கி உள்ள வச்சிருவேன் என்பது போல மிரட்டிவிட்டு 144 தடைஉத்தரவை அமல் படுத்தி சென்று விட்டார். காவல்துறையினரிடம் ஏன் உண்மை சொல்லி தடுக்கவில்லை என்று மக்கள் கேட்ட போது நாங்கள் என்ன செய்யமுடியும் கலெக்டரே முன்னின்று இதை செய்வாரு என்று யாருக்கு தெரியும் என்று கையை விரித்து விட்டார்கள். வழக்கம் போல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ராஜா பெரம்பலூருக்கு வருவது வழக்கும். அவ்வாறு நேற்றும் வந்திருந்த போது சத்திரமனையிலுள்ள திமுக ஒன்றிய பொருப்பிலுள்ள இஸ்லாமிய சகோதரர்கள் சென்று சந்தித்த போது அவர்களுக்கு அவ்வளவு தைரியம் வந்துவிட்டதா நான் பாத்துகிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டாராம். இதற்கிடையில் பா.ஜ.கவிலிருந்து 20 பேர் பெரம்பலூரிலிருந்து வந்து இந்துக்களுக்கு தைரியம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். இஸ்லாமியர்களைப்பார்த்து தகாத வார்த்தைகளிலில் ஏசிவிட்டும் சென்றார்கள். இப்படியாக இருக்கிறது நிலைமை.
நான் ரிபாய் அவர்களுக்கும் போன் செய்து சொல்லியிருந்தேன். தாங்கள் உடனடியாக நல்ல முடிவை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
வஸ்ஸலாம்
தமுமுக - குவைத்

No comments: