இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 03, 2008

சுத்தியல் ஒடிந்தது! சத்தமும் முடிந்தது!

என்ற உவமைக்கு சமமாக அவ்வப்போது ஓங்கியும் அடுத்தவர்களின் பொய்களை தாங்கியும் வெளிவரக்கூடிய ப்ளாக் ஸ்பாட் செய்திகளையும் கள்ள நோட்டீஸ்களையும் கண்டு துவண்டு விடாமல்களத்தில் நிற்கும் ததஷ வினருக்கு எதிராக புதிய தொரு புனையல் வெளிவர இருக்கின்றது. நிகழ்ச்சியை ஜாக்கின் ஓட்டையில்லா துப்பாக்கியும் ஒருநாள் பெருநாள் என ஓங்கி ஒலித்து ஒரே பெருநாளுக்கு இரண்டு இடங்களில் குத்பா ஓதி தனது (ஊருக்குமட்டும் உபதேச) நிலையை தெளிவுபடுத்திய அஷ்ஷ்ஷ்ஷேஹ் ரஹ்மதுல்லா இம்தாதி தெகுத்து வழங்க இருக்கின்றாராம். அதன் வினியோக உரிமையை வழக்கம்போல் அவதூறுகளால் பரப்புவதன் மூலம் அறியப்பட்டவரும் அட்ஜஸ்ட்மெண்ட் அறிஞனுமாகிய முகவரியற்ற ரைஸூத்தீன் வாங்கியிருக்கின்றார். கும்பகோணம் பேரணிக்காகவும் சிறை நிரப்பும் போராட்டத்திற்காகவும் தயாரான பெண்களை கேலிசெய்து தெருவில் பெண்களை கண்டால் தனது நிலை எப்படியிருக்கும் என்பதை தெளிவுபடுத்தியவர். (குறிப்பாக இவரது மெயில் முன்னாள் சகாக்களால் பரப்பப்படும்). (தமுமுகவின் செய்தி தமுமுக கிறுக்குக் தளத்தில் வரும்முன் தனது புளுகு ஸ்பாட்டில் எழுதிவிடும் ரைஸுத்தீன் சமீபத்தில் பாண்டிச்சேரியில் வாத்தியார் நடத்திய பேரணியை தனது புளுகு ஸ்பாட்டில் வெளியிடாததை கவனித்தபோது நமது புருவங்கள் உயர்ந்தன!
ததஜ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பெண்களை கேலி செய்துவிட்டு இப்போது இந்த செய்தியைப்போட்டால் வசமாக மாட்டிவிடுவோம் என தன் வாழ்நாளில் முதன் முதலாக சிந்தித்ததன் விளைவுதான் அந்த செய்தியை பிரசுரிக்காததற்கு காரணம் என்பதை புரிந்துகொண்டோம்.
நிகழ்ச்சியின் விளம்பர உரிமையை குவைத் தமுமுக நிர்வாகம் எடுத்துக்கொண்டுள்ளது.
இன்ஷா (ஒருவேளை) வெளிவரும் அந்த ஆஹா ஓஹேவைப் பார்த்து அவர்களாகவே காறித்.....காணாமல் போவதை எண்ணினால் பரிதாபமாகத்தான் இருக்கின்றது. தான் சொல்லப்போகும் தகவல்கள் உண்மையானது தான் என்ற உறுதி ரஹ்மதுல்லா இம்தாதியிடம் இருந்தால் தனது கூற்றை நிரூபிப்பதற்காக எதிரணியடன் மக்கள் முன்னிலையில் தனது ஆதாரங்களை சமர்ப்பிப்பார். இல்லையென்றால் முழுப்பொய்யனின் முதல் முகவரியாக தன்னை அடையாளம் காட்டிவிடுவார். எது எப்படியோ! மாநாட்டுக்கு முன் இவர்களின் கடைச்சரக்குகளை விரிப்பதன் மூலம் மாநாட்டுக்குவருகை தருபவர்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும் என்பதால் எந்த ஒரு ததஜவினரும் கலக்கமடையப்போவதில்லை!
சும்மாயிருந்தவன் கண்ணில் சுண்ணாம்பு இருக்கின்றது எனக்கூறி விளம்பரம் அடைய நினைக்கும் கூட்டங்கள்யாவும் தானாகவே அழிந்துவிடும்.
ததஜவிடம் இருப்பது சுத்தியல் அல்ல! அது தேவையின்றி ஆப்பு வைக்கவும் நினைக்காது!
ததஜவிடமிருப்பது சத்தியம்!! எனவே அதன் சத்தம் ஒருபோதும் ஓய்வதில்லை!
பி. கு. : வசைபாடும் வாலிபனை தெரியாது என்ற ரீதியில் குவைத் தமுமுக தனது வலைப்பதிவில் அபு நுறாவுக்காக விளக்கம் ஒன்றையும் வெளியிட்டு பயங்கரமான ஆய்வுகளையும் அடுக்கியிருந்தார்கள். எவனாவது எழுதிவிடும் எருக்கைகளை தனது வலைதளத்தில் அடுக்கிவிட்டு பின்னர் தக்க பதில்கிடைத்தால் முதலைக்கண்ணீர் வடிக்கும் குவைத் தமுமுக நிர்வாகிகள் இப்போதும் வரிந்துகட்டி வழுக்கிவிழப்போகின்றார்கள் என்பதில் ஐயமில்லை!
வசைபாடும் வாலிபனை தெரியாது என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூற முடியுமா என இவர்களிடம் நாம் கேட்கமாட்டோம். ஆணையிட்டாலும் இட்டுவிடுவார்கள். அன்று பெருந்தலைவர்கள் ஆணையிட்டதை காலில் போட்டு மிதித்துவிட்டு இன்று அரசியலுக்காக அலைந்து கொண்டிருக்க அவர்களது ச்சீள்(பொய்) ஆணையிடத் தயங்கமாட்டார்கள் என்பதால் காலம் கனியும் போது வசைபாடும் வாலிபனுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு அம்பலப்படும். இன்ஷா அல்லாஹ். அன்புடன் அபுநூறா.
*******************************************************************
மேலுள்ளது அபுநூறா தமுமுக குவைத் மண்டலத்திற்கு மெயில் அனுப்பியது. வசைபாடும் வாலிபர் சங்கத்தை எங்களுக்கு தெரியாது என பதிவில் குறிப்பிட்டுள்ளதாக கூறியிருக்கும் அபுநூறாவே இப்படித்தான் குர்ஆன் ஹதீஸையும் விளங்கி தலைவனுக்கு கட்டுப்பட்டு அவரின் ஸ்பெஷல் ஸ்லோகன் "அப்படித்தான் வெளங்கிக்கணும்" என்று விளங்கிக் கொண்டதற்கு நன்றி. வ.வ.ச.வை தெரியாது என்று எங்கும் குறிப்பிடவில்லை. அன்றும் தெரியும் இன்றும் தெரியும் இதற்கு முஹாபலா தேவையில்லை. ஒவ்வொறு வார்த்தையையும் யோசித்து அல்லாஹ் பார்க்கி்ன்றான் என்ற அச்சத்தோடுதான் எழுதுகிறோம். உங்களை விட அதிக தவ்ஹீது பிடிப்போடு உள்ளோம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா. ஆனால், அது அல்லாஹ்விற்கு தெரியும். வஸ்ஸலாம்.

3 comments:

முகவைத்தமிழன் said...

பி.ஜே யோடு கைகோர்த்து பணி செய்ய காத்திருக்கின்றேன் - மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Unknown said...

சரியான மஹ்ரம் இல்லாதவர்கள் ஹஜ்ஜூக்கு செல்வதிலிருந்து கூட விலக்களிக்கப்பட்டிருக்க தமுமுக, ததஜ ஆகிய நீங்கள் நம் பெண்களை இப்படி அலைக்கழிப்பது எப்படி சரியாகும்.

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

அன்பு நண்பர் சுல்தான் அவர்களுக்கு..., நம் பெண்கள் என்பதில் எனது தாய், சகோதரி, மனைவியும் அடங்கும். இவர்கள் தான் அண்ணே எப்ப சாவான் தின்னை எப்ப காலியாகும் என்று இருக்கிறார்களே. வீட்டில தனியா பொம்பளைங்கள விடுறதுக்கே பயமா இருக்குள்ள. குடும்பத்துக்குள்ளேயே புகுந்து கும்மி அடிப்பவர்களை என்ன செய்வது. பிரார்த்தனையை தவிர...