இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

February 24, 2009

அல்லாமா முஹம்மது இக்பால்

எழுங்கள்!
கிழக்கின் அடிவானில்
இருள் கப்பிக் கொண்டுள்ளது.
கனல் பறக்கும் நம் குரலால்
தூங்கும் சபையில் விளக்கேற்றுவோம்.
உன் முன்னே
அடர்ந்திருக்கும் இருளை அகற்று
கிழக்கிலிருந்து தோன்றும் சூரியனைப் போல் எழு!
நேற்றும் இன்றும் கதையாக கழிந்து விட்டன
நாளை உதயமாவதை எதிர்பார்த்திரு!!
போன்ற கனல் பறக்கும் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப் புகழ்ப்பெற்ற கவிஞர்களில் ஒருவர்.
இந்தியத் திருநாடு ஈன்றெடுத்த அந்த தவப் புதல்வர் கவிஞர் மட்டுமா? மிகசிறந்த தத்துவ ஞானி, அரசியல் மேதை, வழக்கறிஞர், சிந்தனையாளர் எனப் பல்வேறு தளங்களில் வலம் வந்த அந்த எழுத்துப் போராளி, தனது முதிர்ந்த சிந்தனையில் விளைந்த கருத்துக்களை கவிதை வடிவில் எழுதி அவற்றை மக்கள் மன்றத்தில் வைத்தார். வெள்ளை ஏகாதிபத்தியம் இந்திய நாட்டை அடிமைப்படுத்திய காலத்தில் தன் நாட்டையும், தான் பிறந்த மண்ணையும் நினைத்து ஆழ்ந்த கவலைக் கொண்டு, தனது கருத்துக்கள் மூலம் மக்கள் விழிப்புணர்வும், எழுச்சியும் பெறவேண்டும் என்பதற்காக ஏராளமான கனல் பறக்கும் வைர வரிகளை தனது அறிவாற்றலின் மூலம் செதுக்கி, அவை மக்களின் உதடுகளில் உச்சரிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடலாக எழுதி வெளியிட்டு, இந்திய திருநாடு வெள்ளையரை எதிர்த்து விடுதலைப் பெற வேண்டும் என்ற சுதந்திர தாகத்தை மக்கள் மனதில் விதைத்த பெருமை அல்லாமா முஹம்மது இக்பால் அவர்களையே சாரும்.
விலை மதிக்க முடியாத படைப்புகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய அல்லாமா இக்பால் 1873 பிப்ரவரி 22 இல் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவராக விளங்கியவர். ஒருநாள் பள்ளிக்கு தாமதமாக செல்ல ஆசிரியரோ அவரிடம் "நீ ஏன் தாமதமாக வந்தாய்? எனக் கேள்வி கேட்டார். அதற்கு இக்பால் அவர்களிடமிருந்து வந்த பதிலோ வித்தியாசமாக இருந்தது. ஆசிரியரையே வியப்பில் ஆழ்த்தி விட்ட அந்த பதில் என்ன தெரியுமா? "இக்பால் எப்போதுமே தாமதமாகத் தான் வரும்" என்று சொல்ல இந்த இளம் வயது மாணவரின் புத்தி கூர்மையை வியந்து பாராட்டி அவரை தட்டி கொடுத்து அனுபினாரம் ஆசிரியர்.
உண்மைதானே!
இக்பால்(புகழ்) என்பது உடனே கிடைக்கும் கடை சரக்க என்ன? அது மெதுவாகத்தானே வரும். என்ற சிந்திக்க தூண்டும் அவரதுக் கருத்துக்கள் படிப்போரை வியப்பில் ஆழ்த்தி விடும்.
மௌலான அபுல் அலா மௌதுதியின் சந்திப்பு அல்லாமா இக்பால் அவர்களின் சிந்தனையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவரது கவிதைப் பயணம் ஆன்மிக வெளிச்சம் மிகுந்த பாதையில் அமைந்தது. மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் அவர்கள், நாடு போற்றும் கவிஞராக இளம் வயதிலேயே உயர்ந்து விட்ட அவர், இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப் பணியினை தொடர்ந்து செய்த அவரது படைப்புகளில் இச்சையைத் தூண்டும் விதமான கீழ்த்தரமான கருத்துக்களை எந்த இடத்திலும் காண முடிவதில்லை.

புகழுக்கும், வார்த்தை ஜாலங்களுக்கும் ஆசைப்படாத அவர் தனது படைப்புகளில் எந்த இடத்திலும் விரசத்தை நுழைத்ததாகத் தெரியவில்லை. ஏழைகளை வதைப்போரை சாடுபவரகவும், இளைஞர்களின் எதிர்காலம் பற்றி அறிவுரைகள் வழங்குபவராகவும், தாய்மையை போற்றுபவராகவும் விளங்கிய அவர் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தால் அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியா மீட்க்கப்பட வேண்டுமென ஆர்பரித்தார். நாட்டை மீட்க போர்க்களதிற்கு திரண்டு வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்த இக்பால்.

அரபு தேசத்தைப் பற்றி குறிப்பிடும்போது "கிரேக்கர்களை பிரமிக்க வைத்த நாடு, உலகிற்கு அறிவையும், தொழிலையும் தந்த நாடு. இறைவனால் பொன்னாக்கப்பட்ட நாடு. மேலாடைகளை ரத்தினங்களால் நிரப்பிய நாடு. பாரசிக வானில் கவிஞர்களை பிரகாசிக்க செய்த வானத்தையுடைய நாடு. அதிபர் முஹம்மது நபி அவர்களுக்கு குளிர்ந்த தென்றலை அளித்த நாடு". என்றார்.

இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "ஸாரே ஜகான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.
உலகத்தில் சிறந்தது
எங்கள் இந்த தேசம்.
இந்த பூந்தோட்டம்
எங்களுடையது......... என நீண்டு செல்கின்றன பாடல் வரிகள்.
ராணுவத்தின் முழக்கமாக விளங்கும் இந்தப் பாடலின் வரிகள், இந்தியாவின் சுதந்திர மற்றும் குடியரசு தினங்களில் மட்டும் மக்களின் காதுகளுக்கு எட்டும். அவை நாள்தொறும் நாட்டில் ஒலிக்கப்பட வேண்டும். நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த சமுதாயத்தின் வாரிசுகளின் மனதில் உண்மையான வரலாறு விதைக்கப்பட வேண்டும்.
நாளைய வரலாற்றை எழுதுவது
நாமாக இருக்க வேண்டும்.
நேற்றும் இன்றும்
கதையாக கழிந்துவிட்டன.
நாளை உதயமாவதை
எதிர்பார்த்திரு!
என்ற அல்லாமா இக்பால் அவர்களின் கவிதை வரிகள் உயிரோட்டம் பெற வேண்டும்.

வாஞ்சையுடன்....
ராஜகிரி கஸ்ஸாலி

February 08, 2009

மனிதநேய மக்கள் கட்சி


கலைஞர் தொலைக்காட்சியில் மனிதநேய மக்கள் கட்சி




ராஜ் தொலைக்காட்சியில் மனிதநேய மக்கள் கட்சி


February 02, 2009

தமிழகமே திரண்டு வரட்டும்..!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஏக்கத்தை நீக்க, கண்ணீரைத் துடைக்க, புதிய வரலாறு படைக்க தாம்பரத்திற்குத் தமிழகமே திரண்டு வரட்டும்.

தமிழக மக்களின் சுகத் துக்கங்களில் பங்குகொண்டு வீரியத்துடன் செயலாற்றும் தமுமுகவிற்கு தமிழக அரசியல் வானில் திருப்புமுனைக்குரிய சிறப்பிடம் உண்டு. தமிழக அரசியல் அரங்கில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமுமுக உருவான 13 ஆண்டு காலமாக வெற்றி நடை போட்டு வருகிறது.
தமுமுக எனும் சமூக விழிப்புணர்வு இயக்கம் அரசியல், சமூக, மார்க்கத் தளங்களில் வெற்றித்தடத்தைப் பதித்தது எனினும் தமிழக மற்றும் இந்திய அரசியல் அரங்கில் ஒரு பெரும் வெற்றிடம் ஒன்று நீடித்தவண்ணம் இருந்தது.
இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றிப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அழுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அப்பழுக்கற்ற அரசியல் கட்சி தேவை என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு அனைத்து மட்டங்கüலும் பரவி இருந்தது. யாதொரு பலனும் கருதாது, மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் உறக்கம் இல்லாது, கடமையாற்றத் தங்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற ஒரு தூய்மையான அரசியல் இயக்கம் வராதா என ஏங்கியதற்கு விடை தரும் விதமாக தமுமுக எனும் மக்கள் இயக்கம் தனது அரவணைப்புடன் அரசியல் கட்சி ஒன்றைத் தோற்று விப்பதற்கான அறிவிப்பை வெüயிட்டிருக்கிறது.
தமுமுகவின் அரசியல் பிரிவிற்கான பிரகடனம் வெற்றிடத்தை நிரப்புவதற்கான முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.
வெற்றிடத்தை நிரப்புவது என்பது தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காக மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காகவும் அல்ல, உலகுக்கு ஒரு அரசியல் முன்மாதிரியை உருவாக்கும் விதமாக தமுமுகவின் அரசியல் பிரிவு அரங்கேற இருக்கிறது.
அரசியல் பிரிவு தொடங்குவதற்கு முன்பாக தமுமுக தலைவர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு அந்த ஆய்வுக்குழு தமுமுகவின் உயர்மட்டக் குழுவிடம் தனது பரிந்துரையை வழங்கியது. அதன் அடிப்படையில் 'மனிதநேய மக்கள் கட்சி' மக்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமரவிருக்கிறது இன்ஷாஅல்லாஹ்.
அரசியல் தூய்மையையும், கூர்மையையும், நேர்மையையும் கடைப்பிடித்து நிலைத்த புகழ்பெற்ற கலிபாக்கள் அபூபக்கர், உமர் (ரலி) ஆகியோரின் ஆட்சி, நிர்வாகத் திறமை கடைக்கோடி குடிமகனுக்கும் சமநீதி வழங்கியது. காந்தியடிகள் கூடக் கனவு கண்ட ஆட்சி முறை அது. அத்துணை சிறப்பு மிகுந்த ஆட்சியாளர்கüன் வழிமுறையைப் பின்பற்றி அரசியல் நெறி பேண மனிதநேய மக்கள் கட்சி (M.M.K.) சூளுரைக்கிறது.
அரசியலில் புதிய பாடத்தை இந்தத்தேசத்துக்குக் கற்பித்துத்தர தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சி தயாராக இருக்கிறது என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. இஸ்லாத்தின் அரசியல் கொள்கையென அறிஞர் அல் மவாரிதி கூறியதைப் போல மார்க்கத்தை நெஞ்சில் ஏற்றி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதைச் செயல்ரீதியாக எடுத்துக்காட்டும் மக்கள் பிரதிநிதிகளை இன்ஷா அல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சி உருவாக்கவிருக்கின்றது,
அரசியல் என்பது ஒரு தீமை. அரசியல் வாதி என்பவர் முறைகேடுகüன் மொத்த உருவம் என்ற கற்பிதங்களை உடைத் தெறியும் விதமாக அரசியல்வாதி என்பவர் இறைவனுக்கு நெருக்கமாகித் தன்னையும் தனது மக்களையும் தீமையிலிருந்து பாதுகாத்துக் கொள்வார், சிறந்த மக்கள் கூட்டத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வழங்கும் இன்ஷாஅல்லாஹ்.
1995 ஆகஸ்ட் 25ஆம் தேதி தடா என்னும் கொடும் சட்டத்தை எதிர்த்து தமுமுக செறுகளம் கண்டது. அஞ்சிய காகிதப் புலிகள் வாயடைத்து நிற்க, திரளான முஸ்லிம்களின் கூட்டத்துக்குத் தலைமை வகித்த தமுமுக அன்றிலிருந்து தமிழக முஸ்லிம்கüன் சமுதாயத்தின் முதல் நிலை சக்தியாக விளங்கி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.
உலகப் பயங்கரவாத இஸ்ரேலின் செயற்கைக்கோள் இந்திய மண்ணில் ஏவப்பட்ட போதும், அப்பாவி முஸ்லிம்கüன் மீது பயங்கரவாதப் பழிசுமத்திய போதும், மது என்ற கொடும் தீமை தலைவிரித்து ஆடும் போதும், கந்து வட்டி கொடுமைகளால் ஏழைப் பாட்டாளி வர்க்கம் வேதனையில் ஆழ்ந்த போதும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை போன்ற உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகள் அரசாங்கப் பரண்களின் தூசு படியக் கிடக்கும் போதும், உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் வர்க்கம் ஒன்று ஏய்க்கும் போதும் சமுதாயத்தின் பிரதிநிதிகள் என்று கூறிச் சட்டம் இயற்றும் அவைகளில் அமர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள், நசுக்கப்படும் உரிமைகள் முதலியவற்றை வாய்மூடி மவுனமாக அங்கீகரித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் மலையேறி விட்டது என்பதை நிரூபிக்கப் புறப்பட்டு வருகின்றது மனிதநேய மக்கள் கட்சி. ஒரு தூய்மையான, அறிவார்ந்த, செயல் திறன் படைத்த ஒரு வெகுஜன மக்கள் இயக்கம் ஒன்றுவந்து நம் ஏக்கத்தைத் தீர்க்காதா? நம் கண்ணீரைத் துடைக்காதா? என ஏங்கும் மக்களுக்காகப் புது யுகம் படைக்கப் புறப்பட்டிருக்கிறது தமுமுகவின் அரசியல் பிரிவு.
இந்தியாவை எழுச்சியுடன் கட்டமைக்க மனிதநேய மக்கள் கட்சி உறுதி ஏற்கிறது. இணைந்து பணியாற்ற மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. புதிய வரலாற்றின் முதல் அத்தியாயம் இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 7 அன்று எழுதப்படவுள்ளது. அதில் இடம்பெறத் தமிழகமே குடும்பத்துடன் திரண்டு வா என்று அழைக்கிறது மனிதநேய மக்கள் கட்சி]
மனிதநேய மக்கள் கட்சி
தொடக்கவிழா மாநாடு
நாள் பிப்ரவரி 7, 2009 (சனிக்கிழமை)
இடம் தாம்பரம், சென்னை