இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

August 27, 2011

July 12, 2011

தமுமுக அமைப்புத் தேர்தல் ஆணையர் ஹாஜா நஜ்முதீன் மறைந்தார்

வேதாளை ஹாஜா என்று த.மு.மு.க.வில் அறியப்பட்ட கழகத்தின் தேர்தல் ஆணையர் ஹாஜா நஜ்முதீன் 11.7.2011 அன்று காலமானார், (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).

தமுமுகவின் துவக்கக் காலம் முதலே சமுதாயப் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டிய சகோதரர் வேதாளை ஹாஜா, கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

வடசென்னை மாவட்டத் துணைத் தலைவராக இருந்தார். இந்தியன் இஸ்லாமிக் மிஷனின் மேலாளராகவும் பிறகு, மக்கள் உரிமையின் மேலாளராகவும் பணியாற்றி, மாநில அமைப்புத் தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டார். சகோ.ஜுல்ஃபிகார் தலைமையில் மாநிலம் முழுவதும் அமைப்புத் தேர்தல்களை நடத்தி முடிக்க வேதாளை ஹாஜா உறுதுணை புரிந்தார்.

பொருளாதார நெருக்கடி, உடல்நலக் குறைவு இவற்றிக்கு மத்தியில் கழகப் பணிகளில் முழு ஆர்வம் காட்டி வந்தார். இவருக்கு நான்கு மகள்கள், ஒருவர ஆலிமா, ஒருவர் இளம் அறிவியல் விலங்கியலில் தங்கப்பதக்கம் வென்று முதுநிலை அறிவியலும் முடித்துள்ளார்.

கழகப்பணிகளுக்கு மத்தியில், குடும்பப் பொறுப்பையும் சிறப்புர கவனித்துள்ள இச்சகோதரர், திடீர் மாரடைப்பால் மரணித்துள்ளார். மறைவுச் செய்தி கேட்டு கழகத் தலைவரும் ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினருமான பேரா.டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வேதாளைக்கு விரைந்தார்.

தமுமுக மாநிலச் செயலாளர் மௌலா எம்.நாசர், ம.ம.க அமைப்புச் செயலாளர் மண்டல்ம் ஜெய்னுலாபிதீன் மற்றும் ராம நாதபுரம் சுற்றுப்புற மாவட்ட நிர்வாகிகள் நல்லடக்கத்திற்குச் சென்றனர்.

பேரா.ஜவாஹிருல்லாஹ் ஜனாஸா தொழுகை நடத்தினார். திரளான மக்கள் ஜனாசத் தொழுகையிலும், நல்லடக்கத்திலும் பங்கேற்றனர்.

March 01, 2011

குவைத்தில் நடந்த சிறப்புப்பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..,

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை தமுமுக உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு மாதமாக தமுமுக குவைத்மண்டலத்தின் சார்பாக தீர்மாணிக்கப்பட்டு பிப்ரவரி மாதத்தின் 4 வாரங்களும் பொதுககூட்டங்கள் நடத்தப்பட்டது. நான்கு கூட்டடங்களும் முர்காப் பகுதியின் மன்னு ஸல்வா உணவகத்தில் வாரந்தோறும் மாலை 6.30 மணிமுதல் 9.30 மணிவரை நடந்தது.

தேர்தல் நெருங்கி வரும் இச்சமயத்தில் தொடர் நிகழ்ச்சியாக வாராவாரம் இன்ஷா அல்லாஹ் அதே இடத்தில் அதே நேரத்தில் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்த நிர்வாகத்தினால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தியை படிக்கும் ஒவ்வொறுவரும் குவைத்தில் வசிக்கும் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இன்னும் தத்தமது ஜமாஅத்துக்களைச் சார்ந்தவர்களை தவறாமல் கலந்து கொள்ளச்செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

வஸ்ஸலாம்
தமுமுக குவைத் மண்டலம்
www.q8tmmk.blogspot.com
+965 97493869 - 99851036 - 55428835 - 99108754 - 99369743








January 30, 2011

தமுமுகவின் சிறப்புப்பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 04-02-2011 அன்று குவைத் சிட்டியில் மிர்காப் பகுதியில் மன் அல் ஸல்வா உணவகத்தில் மாலை 6:30 மணியளவில் தமுமுக குவைத் மண்டலத்தின் ஏற்பாட்டில் அதிர வைக்கும் சிறப்புப் பொதுக்கூட்டம் தமுமுக செயல்வீரர்களுக்காகவும். உறுப்பினர்களுக்காகவும், ஆதரவாளர்களுக்காகவும், சமூக ஆர்வலர்களுக்காகவும் நடத்தப்படுகிறது. தாயகத்தில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழுவில் எடுத்த முடிவுகள் பற்றியும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்படும்.

இத்தகவலை படிக்கும் தமுமுக ஆர்வலர்கள் யாவரும் குவைத்தில் வசிக்கும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தி தவறாமல் கலந்து கொள்ளச்செய்யவும் அரங்கத்தில் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறும். மக்கள் உரிமை சந்தாவும் சேர்க்கப்படும்.

வஸ்ஸலாம்
நிர்வாகிகள்
தமுமுக குவைத் மண்டலம்
(+965) 97493869, 99851036, 55428835
tmmkkwt@gmail.com

விடுதலைப்பொன்விழா ஆண்டு



குவைத் நாட்டில் இந்த வருடம் விடுதலை பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் மின்விளக்குகளும் அலங்காரத் தோரணங்களும். குடிமக்களுக்கு எண்ணற்ற சலுகைகளும் அள்ளி வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இந்த வருடம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்து மன்னரின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் புகைப்படம் தொடரும் பதிவுகளில்...

January 09, 2011

ஆம்புலன்ஸ் உருவான வரலாறு:

இன்று ஆம்புலன்ஸ் தினம்
உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என "மினி மொபைல் ஆஸ்பத்திரி'யாக வலம் வருகிறது.

இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் "இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் "108' என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப, "108' ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. "108'ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான இந்த ஜனவரியில், 8 ம் தேதியான இன்று தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

உயிர்காக்கும் இந்த உன்னத செயலுக்கு இறைவனிடம் கூலியை எதிர்பார்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் அர்பணிப்பு எண்ணிக்கை 100ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. அனைத்து சமுதாய இயக்கங்களுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பில் தமுமுக மிகச்சிறந்து முன்உதாரணமாக விளங்குகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே..!