இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 26, 2010

உண்டு உறைவிடப்பள்ளி அமைக்க விருப்பமா?: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி: 'பள்ளி செல்லாக்குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப்பள்ளி அமைத்து செயல்பட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என திருச்சி கலெக்டர் சவுண்டையா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக 2010-2011ஆம் ஆண்டில் முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியாபுரம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, மணிகண்டம் ஆகிய ஒன்பது வட்டார வளமையங்களில் பள்ளி செல்லாக்குழந்தைகளுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களுடைய முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான தணிக்கை அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் அறிக்கை ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகம், மதுரை ரோடு, திருச்சி-8 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ.தேர்வுக்கு பயிற்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஆர்வமுடையோர் tmmk@tmmk.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

April 24, 2010

அல்லாஹ்வின் பெயரால் அணிதிரள்வோம்

வாழ்க்கை முழுவதும் போராடிய குனங்குடி ஹனிபா அவர்களுக்காக அல்லாஹ்வின் பெயரால் அணிதிரள்வோம் தலைநகர் சென்னையிலே..!


April 06, 2010

பாலிடெக்னிக் கல்லூரிகள் விவரம்: இணையதளத்தில் வெளியீடு

தமிழகத்தில் 383 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 22 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்; 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள். மீதமுள்ளவை தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள். பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர முடியும். எந்தக் கல்லூரியிலும் சேருவதற்கு முன், அக்கல்லூரியில் உள்ள வசதிகளை மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. ஒரு கல்லூரியில் சேருவதற்கு முன், மாணவர்கள் நேரடியாக அக்கல்லூரிக்கு சென்று அங்குள்ள வசதிகள் குறித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகள் பற்றிய விவரங்களை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தனது இணையதளத்தில் (
www.tndte.com) வெளியிட்டுள்ளது. இதில், கல்லூரியில் பெயர், முதல்வர் பெயர், விலாசம், தொலைபேசி எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கல்லூரி எவ்வளவு பரப்பளவில் அமைந்துள்ளது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெயர், அவர்களது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகிய விவரங்களும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் கல்லூரியில் இணையதள வசதி உள்ளதா, நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள் உள்ளன, விடுதி வசதி உள்ளதா, என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., வசதிகள் உள்ளனவா என்ற விவரங்களும் இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அக்கல்லூரியில் படித்த மாணவர்களில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, எத்தனை நிறுவனங்கள் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு வளாக நேர்காணலுக்கு வந்துள்ளன என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அக்கல்லூரியில் பாடப் பிரிவு வாரியாக தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதம்: தமிழக பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீத விவரமும், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் (
www.tndte.com) வெளியிடப் பட்டுள்ளன. இதில், எந்தெந்தக் கல்லூரியில் எந்தெந்த பாடப்பிரிவுகளில் எவ்வளவு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் அக்கல்லூரியில் பயிற்சி எவ்வாறு உள்ளது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். கடந்த 2007, 08, 09ம் ஆண்டுகளில் பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களில், ஒவ் வொரு கல்லூரியிலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரங்களும், 2009 - 10ம் கல்வியாண்டில், 2, 4, 6, 8வது செமஸ்டர் தேர்வுகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.