இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

November 15, 2008

தயாராகுங்கள்..! பாபர் மஸ்ஜித் போராட்டம்

தலைவரின் சிறப்புப் பேட்டி

குவைத்தில் தமுமுக மங்காஃப் கிளை துவக்க விழா

மாநில தலைவர் பேரா. டாக்டர் M.H.ஜவாஹிருலலா அவர்கள் குவைத்தில் த மு மு க நிர்வாக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டதற்கு பிறகு முதன் முறையாக 31-10-2008 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஃபாஹில் மண்டல தமுமுக சார்பாக மாபெரும் மஙகாஃப் கிளை துவக்க விழா மஙகாஃப் தீன் மெஸ்ஸில் சிறப்பாக நடை பெற்றது.
குவைத் மண்டல துணை தலைவர் A.K.பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் J. சித்திக் அஹ்மத், அப்துல் அஜீஸ், இகபால் அஹ்மத், சலீம் ரப்பானி, நசீர் அஹ்மத் ஜமாலி, சாகுல் ஹமீது பிர்தௌசி ஆகியோர் உரையாற்றினார்கள். மஙகாஃப் கிளையின் நிர்வாகிகளாக தலைவர் J.இக்பால் அஹ்மத் திருச்சி செயலாளர் ஹஜ்ஜப்பா மேலபாளையம் தேர்ந்தெடுக்கபட்டனர்.
இந்தியா திரும்ப விமான டிக்கெட் நிதியுதவி கேடு வந்த அதிரை சகோதரர் அப்துல் மாலிக் என்பவருக்கு கூட்டத்தில் வசூல் செய்து கொடுக்கப்பட்டது.

November 12, 2008

மார்க்க எழுச்சிப் பொதுக்கூட்டம்

கடந்த 9-11-2008 அன்று திருச்சி குத்பிஷாநகர் கிளை இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பாக சகோ. கோவை. எஸ். அய்யூப் அவர்களின் சிறப்புரை நடந்தது.

November 05, 2008

சேலத்தில் முதல் முதலில் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு !!!

எல்லா புகழும் இறைவனக்கே.
தமுமுக சார்பில் நவம்பர் 2ம் தேதி சேலத்தில் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டியில் தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேசுகையில், தமுமுக, சமுதாயத்தின் முன்னேற்றத்தை மட்டுமே முன்னிலை படுத்தி செயல்பட்டு வருகிறது நாட்டில் நடக்கும்பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு, முஸ்லிம்கள் மீது பழிபோடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,என்றார். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவிதம் இடஒதுக்கீட்டை, 6 சதவிதமாக உயர்த்த வேண்டும், முஸ்லிம் களுக்கு அனைத்திந்திய அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீ வழங்க ஐக்கிய முற்போக்கு கூட'டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்லில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளுக்கு,இனி வரும் தேர்தலில்,முஸ்லிம்கள் ஆதரவு அளிக்கக் கூடாது என்று ஜவாஹிருலாஹ் பேசினார்.இதையடுத்தது. தமுமுக. பொதுச் செயலர். ஹைதர்அலி பேசுகையில், நாட'டியில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும், முஸ்லிம்களால் ஏற்படுவதாக, அரசும், ஊடகங்களும், பொய் பிரசாரம், மேற்கொண்டு வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். முழு விசாரணை நடத்தாமலே முஸ்லிம்களை, பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நிலையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும், அப்படி, மாற்றி கொள்ளாவிட்டால், வரும் பாராளுமன்ற தேர்தலில், தமுமுக , காங்கிரஸ்க்கு எதிராக செயல்படும், மத்தியல் பா.ஜ.க. காங்கிரஸ். அல்லாது மூன்றாவாது அணியின் வெற்றிக்கு தீவிரமாக செயல்படும் என்றார்.இந்த மாநாட்டியில் தமுமுக. துனைபொதுச்செயலாளர். மெளலவி ரிபாய். மாநில செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில துனை செயலாளர் கோவை சாதிக், தலைமைகழக பேச்சாளர் ரபிக், மாநில மாணவர்அணி பொருளாளர் மாயவரம் அமீன், மாநில உலமா அணி செயலாளர் நாசர் உமரி மற்றும் பலர் உரைநிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட தலைவர். சையத் முஸ்தபா தலைமை வகித்தார்.