இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 29, 2008

மானங்கெட்ட மாப்பிள்ளைகளே..!

""திருச்சி கோட்டை கடைவீதியில் அனைத்து பொருட்களும் விற்கப்படும் பிரபல கடையில் நேற்று ஒரு இளம்பெண் ஒரு கிரெடிட் கார்டை கொடுத்து நகை வாங்கினார். கிரெடிட் கார்டை வாங்கி பரிசோதித்த கடை ஊழியர்கள் அதில் பணம் இல்லாததை கண்டுப்பிடித்தனர். அந்த பெண்ணிடம் விசாரித்த போது அது திருட்டு கிரெடிட் கார்டு என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பெண் கோட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில் அந்த பெண் பெயர் காயத்ரி ரம்யா (வயது 19). புள்ளம்பாடியை சேர்ந்த ராஜா என்பவரது மகள் என்று தெரிய வந்தது. குடும்பம் வறுமையில் வாடியதால் சிறுவயதிலேயே காயத்ரி வீட்டு வேலைக்கு சென்று விட்டார். சென்னையில் வேலைபார்த்து உள்ளார்.

இந்த நிலையில் 19 வயதான காயத்ரி தனது திருமணத்திற்கு மாப்பிள்ளைக்கு சீர்வரிசை கொடுக்க வேண்டியது இருக்குமே என்று யோசித்தார். இதனால் கிரெடிட் கார்டை திருடி கோட்டை கடைவீதியில் உள்ள பிரபல கடையில் கட்டில், டி.வி, பீரோ, பிரிட்ஜ் ஆகியவற்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கி உள்ளார்.

இதற்கிடையில் கிரெடிட் கார்டு காணாமல் போனதும் அதன் உரிமையாளர் வங்கியில் கூறி அந்த கிரெடிட் கார்டு கணக்கை முடிக்கி வைத்துள்ளார். இதை அறியாத காயத்ரி நேற்று மீண்டும் அதே கடைக்கு நகை வாங்குவதற்கு வந்தார். அப்போது தான் போலீசில் பிடிபட்டுள்ளார்.

அவரிடம் இருந்து டி.வி உள்பட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மகளின் நிலையை பார்த்து அவரது பெற்றோர் கண் கலங்கியது பார்ப்போரை நெகிழவைத்தது.""இது செய்தி. வர்ணபேதங்களை வகுத்தவர்கள். ராமர்பாலத்தை தேசிய சின்னமாக ஆக்கவேண்டும் என்றவர்கள் இந்தக் கொடுமைக்கெல்லாம் வாயை பொத்தி்க்கொள்வார்களே..!

அல்லாஹ்வோ தனது அருள்மறையில்:
"...பெண்களை தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல் அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்." (அல்குர்ஆன் - 4:24)

No comments: