இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 24, 2008

குவைத்தில் பொதுக்கழுக்கூட்டம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...,
தமுமுக குவைத் மண்டலத்தில் கடந்த 23-5-2008 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் குவைத் - மிர்காப் (சிட்டி) பகுதியில் அமைந்துள்ள ரவுண்டானா பள்ளிவாசலில் 2007-2008க்கான ஆண்டறிக்கை சமர்ப்பித்தலும், கலந்தாய்வுக்கூட்டமும் நடைபெற்றது. மண்டலத் தலைவர் அமானுல்லாஹ்-திருச்சி அவர்களின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தை துணைத்தலைவர் அப்துல் கரீம் பாபு முஹம்மதுபந்தர்(தஞ்சை) அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். அல்கிரைன் கிளை பொருளாளர் ஜாபர்கான்-கீவளுர் வரவேற்றார். தலைமையுரைக்குப்பின் மண்டலப்பொருளாளர் ஃபஜ்லுர்ரஹ்மான்-(கிராப்பட்டி)திருச்சி அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்து வரவு-செலவு கணக்குகளை உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பித்தார். இக்கூட்டத்தில் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புக்கும், அப்பாவி இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதற்கும் கண்டனம் தெரிவித்து கால்திய்யா கிளைச்செயலாளர் ஜாபர்ஸாதிக்-திருவாடானை அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இஷா தொழுகைக்குப்பின் நிறைவடைந்தது. இனி வரும் வாரங்களில் இன்ஷா அல்லாஹ் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இதே ரவுண்டானா பள்ளிவாயிலி்ல் தமுமுகவிற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மஃரிப் முதல் இஷா வரை தமுமுக நிர்வாகிகளை சந்திக்கலாம் வேண்டிய தகவல்களை பெற்றச் செல்லலாம் என்றும் அறிவுருத்தப்பட்டது.

2 comments:

Anonymous said...

Are you a muslim?

Shall I publish some serious matters?

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

Assalaamu Alaikum varah...,
Hello brother, who are you. Please introduce first. Then ask anything. Send be mail amanuallah@gmail.com

Thank Q