இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 11, 2008

எதார்த்தமாக ஒரு ஒப்பிடல்

மக்கள் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக அவர் மிகவும் எதிர் பார்த்த பகுதிகளில் இருந்து மக்கள் குறைவாகவே வந்திருந்தனர் உதாரனமாக முத்துப்பேட்டையில் இருந்து சுமார் 500 பேர் மட்டும், அதிராம்பட்டினத்தில் இருந்து 250 பேர், பொதக்குடியில் இருந்து 1 கார் மட்டும், பண்டாரவடையில் இருந்து 2 வேன்கள், திருவாருரில் இருந்து சுமார் 100 பேர் என் மிகக ஏமாற்றமளிக்கும் வகையிலேயே கூட்டம் வந்திருந்தது.

9 ம் தேதி இரவில் இருந்து 10 ம் தேதி இரவு சுமார் 10.00 மணி வரை வல்லத்துக்குள் தரை மார்க்கமாக நுலைந்த வாகனங்களின் எண்ணிக்கை கீழ் வருமாறு :

வேன்கள் (அனைத்து வகை) - 308 (1 வேனுக்கு 8 முதல் 12 பேரே அமாந்து வந்துள்ளனர்)
பஸ்கள் (அனைத்து வகை) - 172 (1 பஸ்சுக்கு 25 முதல் 40 பேர் வரை வந்துள்ளனர்)
சுமோ வகை கார்கள் - 78
ஸகார்பியோ இன்ன பிற வகை கார்கள் - 40
அம்பாசடர் கார்கள் - 79
மோட்டார் பைக் 2 சக்க வாகனங்கள் - 264
மொத்தமாக 10ம் தேதி மாலை வரை வந்த கூட்டம் சுமார் 13,000 த்தல் இருந்து 17,000 ம் வரையே. இந்த கூட்டத்திற்கே பந்தலில் முறையான வசதிகள் செய்யப்படவில்லை.

இடையில் பென்களின் ஊடே மாநாட்டிற்கு வந்திருந்த சில இளைஞர்கள் புகுந்து சில்மிசங்களில் ஈடுபட்டதால் அமளி ஏற்ப்பட்டது உடனே திரு. பாக்கர் அவர்களும், திரு. பி.ஜே அவர்களும் மைக்க பிடித்து உடணடியாக பென்களின் ஊடே ஊடுருவி உள்ள ஆன்கள் வெளியேறுமாறு தொடாந்து அறிவித்த வண்ணம் இருந்தனர்.

நொருங்கி விழுந்த காபா செட்....

சென்டிமென்டாக டச்....

இமாம் புகாரி (ரஹ்) இப்னு தைமியா(ரஹ்) என இவர்களுக்கு அடுத்தபடியாக பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் பெயரை குறிப்பிட்டு மாபெரும் மார்க்க அறிஞர் என அவரின் பிறந்த வருடமும் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது பலரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பி.ஜே மாநாட்டிற்கு ஒரு லட்சத்திற்கு அதிகமாக மக்கள் வந்திருப்பதாக தனது சுருதியை குறைத்து (10 லட்சம் என ஏற்கனவே பலமுறை அடித்து விட்டவர்) வாசித்தார் ஆனால் விடாத இந்தியா டைமஸ் நிருபர் ஒரு லட்சம் என்கின்றிர்கள் வந்திருப்பது மிக குறைவாக உள்ளதே என்றதற்கு மழுப்பினார். பின்னர் மற்றொரு நிருபர் நேற்று வேலுர் கோட்டையில் தமுமுக வினர் தொழுகை நடத்த திரண்டு நடத்திய போராட்டத்தையும்

அங்கு கூடிய மக்களையும் சுட்டிக் காட்டி கேள்விகளை எழுப்பினார் ஒரு இடத்தில் கூட ஏகத்துவத்தை நிலைநாட்டவும், இஸ்லாத்தை பற்றிய எழுச்சியை மக்களிடையே ஏற்படுத்தவும் என கூறவில்லை. இறுதியாக மற்றோர் ஆங்கில பத்திரிகை நிருபர் தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இம்மாநாடு குறித்து கருத்து தெறிவிக்கையில் "இது பொழுது போக்கிற்காக" நடத்தப்படும் நிகழச்சி (It is an entertainment gathering) என்று கூறியுள்ளார் இது குறித்து தங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு மழுப்பலாகவே ஏதோ சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார். தென்மாவட்டங்களில் இருந்து அதிகமாக கூட்டம் வரவில்லை வந்த சில வாகனங்களையும் திருச்சியிலேயே நிறுத்தி வைத்துள்ளதாக தகவல், இங்கு இட வசதி இல்லை என்ற காரனத்தினால் பலர் திரும்பி சென்று கொண்டுள்ளனர், பெரும் தூரங்களில் இருந்த வந்திருந்த பென்கள் தங்குவதற்கும், இயற்கை உபாதைகளை நிறைவேற்றுவதற்குதம் கூட மறைவான இடம் இல்லை.

நுறு (100) ஏக்கர் பந்தல் கதை அம்பேலாகி விட்டது.


இது மக்ள் கற்பித்த பாடமா? இல்லை தற்பெருமைக்கு இறைவனால் வைக்கப்பட்ட ஆப்பா? ....

எனினும், த.த.ஜ.வினர் பொய்க் கணக்குகளை, புள்ளி விபர மோசடிகளை இன்றும் அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பக்தர்கள் அறிந்து கொள்ளுங்கள்.

செய்தி தொடரும்...

No comments: