இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 18, 2008

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி மரியம் பர்சானா

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற தமிழக பெண்களில் சென்னையைச் சேர்ந்த பர்சானா முதலிடம் பெற்றுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது சாதிக்-பாத்திமா சாதிக் தம்பதியரின் மகள் மரியம் பர்சானா சாதிக் (வயது 25). இவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 30-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் இவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

ராயபுரம் கெவின்ஸ் பள்ளியில் ஆரம்ப படிப்பையும், ஆயிரம் விளக்கு சர்ச் பார்க் கான்வென்டில் மேல்நிலைப் படிப்பையும் முடித்தார். அதன்பின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம். பட்டமும், தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் எம்.காம். பட்டமும் பெற்றார்.

அவரது ஆசைக்கு தந்தை சாதிக் தூண்டுகோலாக இருந்தார். பர்சானாவின் சகோதரர் முகமது உசேன் சாதிக்கும் தங்கையின் கனவை நனவாக்க பக்கபலமாக இருந்தார்.

அவருக்கு வெற்றி எளிதாக கிடைத்து விடவில்லை. முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வி அடைந்தார். அடுத்த முறையில் மெயின் தேர்வு வரை மட்டுமே அவரால் செல்ல முடிந்தது. ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயற்சியில் இறங்கினார். 3-வது வாய்ப்பில் வெற்றிக்கனி கிடைத்தது. 2007-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். இறுதி தேர்வில் அகில இந்திய அளவில் 30-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

தனது சாதனை குறித்து பர்சானா கூறியதாவது:- கலெக்டர் ஆக வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. ஒரு கலெக்டருக்கு சமுதாயத்தில் அளிக்கப்படும் மதிப்பும், மரியாதையுமே நானும் அந்த பதவிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பொது அறிவுதான் அடிப்படை தேவை. இதற்காக டி.வி.யில் செய்தியை தவறாமல் கேட்பேன். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முதலில் தன்னம்பிக்கை வேண்டும். நல்ல வழிகாட்டுதல் தேவை. அத்துடன் ஒரே மனதுடன் திட்டமிட்டு படிக்க வேண்டும். அப்படி படித்தால் யார் வேண்டுமானாலும் இந்த தேர்வில் வெற்றி பெற்று விடலாம். இவ்வாறு பர்சானா கூறினார்..

பர்சானாவின் தந்தை சாதிக்கின் இயற்பெயர் சக்திவேல் நாடார். பல ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார். இதனால், தனது பெயரை சாதிக் என்று மாற்றிக்கொண்டார். இதேபோல், பல்லவி என்ற தனது பெயரை மரியம் பர்சானா சாதிக் என்று பர்சானா மாற்றிக் கொண்டார்.

இந்த வெற்றியை, இஸ்லாம் இவர்களுக்கு கொடுத்திருக்கின்றது..!

No comments: