இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

November 24, 2009

குவைத் தமிழ் சகோதரர்களை அழைக்கிறது குவைத் தமுமுக :

சமுதாயப் பணியில் பங்கு கொள்ள குவைத் தமிழ் சகோதரர்களை அழைக்கிறது குவைத் தமுமுக :
புரவலர் எஸ்.கே.எஸ் முன்னிலையில், தமுமுக பொதுச் செயலாளர் S.ஹைதர் அலி அவர்களின் ஆலோசனைப் படி அண்மையில் குவைத் மண்டல நிர்வாகத்தில் சில சீர் அமைப்புப் பணிகள் செய்யப் பட்டது. அதன்படி புதிய கிளைகள் குவைத்தின் எல்லா பகுதிகளிலும் ஆரம்பிக்க இன்ஷா அல்லாஹ் முடிவு செய்யப் பட்டது. புதிய மண்டல நிர்வாகம் தேர்ந்தெடுக்கப் படும் வரை குவைத் வாழ் தமிழ் சகோதரர்கள் கீழ் கண்ட மொபைல் எண்களைத் தொடர்பு கொள்ளவும். அப்துல் அஜீஸ் 99489481 முஜிபுர் ரஹ்மான் 99851036 ஷாஹுல் ஹமீத் 99776532 ஷாநவாஸ் 99147292 அமானுல்லாஹ் 97493869
கடந்த இரண்டு மாதங்களில் அஹ்மதி, ஜிலிப் சுவைக் ஆகிய இரண்டு முக்கிய பகுதிகளில் கிளைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. ஏனைய பகுதிகளில் உறுப்பினர்கள் சேர்ப்பு, மற்றும் மக்கள் உரிமை பத்திரிக்கை விற்பனையும் முடுக்கி விடப் பட்டுள்ளன.. புதிய சமூக எழுச்சியான " மனிதநேய மக்கள் கட்சி " குவைத் வாழ் தமிழ் மக்களிடமும், ஏனைய இயக்க சகோதரர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அரசியலில் இழந்த உரிமையை மீட்டு எடுக்கவும், அனைத்து தமிழ் முஸ்லிம்களுக்கும் இது இன்ஷா அல்லாஹ் கலங்கரை விளக்கமாக அமையும் என்பதும் குவைத் வாழ் தமிழ் சகோதரர்களின் ஒரு மித்த கருத்தாய் உள்ளது.

No comments: