இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

October 28, 2007

ஹிந்து, முஸ்லிம் மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதல்

ஹிந்து, முஸ்லிம் மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால், சேலம் கிச்சிப்பாளையத்தில் நேற்று இரவு பதட்டமான சூழல் நிலவியது.

கிச்சிப்பாளையத்தில் கடம்பூர் முனியப்பன் கோயில் உள்ளது. ஐநூறுக்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பத்தினர் வசிக்கும் இப்பகுதியில், பத்து முஸ்லிம் குடும்பத்தினரும் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் இங்குள்ள முஸ்லிம் குடும்பத்தினர் சேர்ந்து மதரஸா பள்ளியெழுச்சி ஒன்றை துவங்கியுள்ளனர். ரம்ஜான் முதல் அதை மசூதியாக மாற்றம் செய்தனர். அதனால் வெவ்வேறு இடத்தில் இருந்தும் முஸ்லிம் மக்கள் அங்கு வந்து செல்ல துவங்கினர். அதற்கு, அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்னை பற்றி இரு தரப்பினரும், நேற்று இரவு கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர்.போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசினர். பேச்சு நடந்த வந்த முஸ்லிம்கள், "அந்த இடம், மதரஸா பள்ளியெழுச்சியாகவே செயல்படும்' என்று உறுதியளித்து சென்றனர். இப்பிரச்னையால், நேற்று இரவு கிச்சிப்பாளையத்தில் பதட்டமான சூழல் நிலவியது.
செய்தி:தினமலர்

No comments: