இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

April 23, 2009

பாப்லர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு

15 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா தெறிவிக்கையில் :சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் 60 ஆண்டு காலமாக அரசியல் அதிகாரத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது பட்டவர்த்தனமான உண்மை. இந்தியாவில் 13.4% வாழும் முஸ்லிம்கள் சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவாத்தில் தனது சதவீதத்தில் பாதியை கூட் பெறவில்லை.அரசியல் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்கள், தலி்த்துகள், இதர சிறுபானடமையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் ரீதியில் சக்திப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் PFI செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இதற்கான முயற்சியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா எடுத்து வரும் இந்த தருனத்தில்தான் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த மக்களவை தேர்தலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நேரடியாக போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் சம்பந்தமான முக்கிய நிலைப்பாட்டை திர்மானித்தள்ளது.தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் முயற்சியாக மனித நேய மக்கள் கட்சி (MMK) தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது. இதனை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. எனவே மயிலாடுதுறை, மததிய சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதவாத ஃபாசிஸக் கட்சிகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் கடந்த இரன்டரை வருட திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி , ஏவேலை வாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு, உலமா நல வாரியம் அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டும் , கிலோ 1 ரூபாய் அரிசி, ஏழைகளுக்கு எரிவாயு இனைப்புடன் இலவச கேஸ் அடுப்பு, தமிழகத்திற்கு பயனளிக்கும் சேது கால்வாய் திட்டத்திற்கான உறுதியான முயற்சி போன்ற மக்கள் நலத்திட்டங்களை கருத்தில் கொண்டும் புதுவை உட்பட மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை கொண்ட கூட்டணிக்கு ஆதரவிளத்து வெற்றி பெறச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்து.பாரதீய ஜனதா கட்சி ஹிந்துத்துவா என்னும் அரசியல் செயல்திட்டத்துடன் செயல்படும் ஓர் அரசியல் கட்சி. ஹிந்துத்துவா என்னும் இந்த செயல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமே எதிரானதாகும். இதற்கு பா.ஜ.க நாடு முழுவதும் நடத்திய முஸ்லிம், தலித், கிருத்துவர்களுக்கு எதிரான கலவரங்களே சாட்சி. கடந்த கால பா.ஜ.க வின் ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் ஓர் இருன்ட காலமாகும்.எனவே பா.ஜ.க வை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் புறக்கணித்தது போல் ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கும் வகையில் பாரதீய ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா களமிறங்கி பா.ஜ.க வுக்கு எதிராக களப்பணியாற்றி அதனை படுதோல்வியடையச் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாலர் ஷேக் முகம்மது தெஹ்லான் பாகவி, மாறிலத் துணைத் தலைவர் ஏ.எஸ் இஸ்மாயீல் , மாநில பொதுச் செயலாளர் ஏ. ஃபக்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.--Posted By முகவைத்தமிழன்

No comments: