இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label வந்தேறிகளா ஆரியராமர் பாபர் மசூதி இராமாயணம். Show all posts
Showing posts with label வந்தேறிகளா ஆரியராமர் பாபர் மசூதி இராமாயணம். Show all posts

September 18, 2007

ராமர் பற்றிய சர்ச்சைக்குரிய மனு - புது ஐடியா

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் ஆன, ராமர் பற்றிய சர்ச்சைக்குரிய மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. சேதுசமுத்திர திட்டத்துக்கு, மாற்றுப் பாதை பற்றி பரிசீலிக்கவும் தயார் என்றும் அறிவித்து உள்ளது. -இது பத்திரிக்கைச் செய்தி.
கற்பனை கதாபாத்திரங்களுக்காக பல கோடி ரூபாய் இலாபம் தரக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை முடக்குவது உண்மையான வந்தேறிகளா? இல்லை இந்திய நாட்டின் குடிமகன்களா? என்பதில் சந்தேகம் எழுகிறது. 850 ஆண்டுகாலம் இந்திய நாட்டை ஆண்டதற்கான ஆதாரங்கள் இன்றும் பசுமை மாறாமல் வானளாவி நிற்கின்றது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கூட இதே ஆரிய ராமரின் பெயரால் ஓர் அயோக்கியத்தனத்தை அரங்கேற் றினார்கள். 15 ஆண்டுகள் கழித்து இவர்களின் கற்பனை கதைகளை கலாச் சாரமாக்க மீண்டும் ஒரு நாடகத்தை தயாரித்து வருகிறார்கள். இந்தியா ஜனநாயக நாடு, மதச்சார்பற்ற நாடு. இதில் இந்து மதத்தின் மீது மட்டும் கரிசனம் காட்டுவது ஏன். வந்தேறிகளால் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பகரமாக ராமர் பாலத்தை இடித்தே ஆக வேண்டும். கொளுத்தப்பட்ட கிறுத்துவப் பாதிரியாருக்கு பகரமாகவும் ராமர் பாலத்தை இடித்தே ஆக வேண்டும். 100 சதவீதம் வந்தேறிகளால் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி. காவி பயங்கரவாதிகளால் சாம்பலாக்கப்பட்ட பாதிரியார். அதற்கு பதிலாக 3.5 + 3.5 எங்களுக்குள்ள பங்கில் பாலத்தை இடித்து கொள்கிறோம்.

இன்னும் அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்தோமானால், இன்று ராமர் பாலம் என்று வந்தேறிகளால் கூறப்படும் அந்த இடம் 1,40,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒரே சமதளமாக குறுக்கே கடல் நீர் புகாமல் விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக இருந்தது. இந்திய வம்ச வழி வந்த எங்கள் முப்பாட்டனார் மஸ்தான் கொள்ளு தின்ன ராவுத்தர் அவர்கள் இலங்கையில் திருமணம் முடித்தார். அப்போது அவருக்கு சீதனமாக வழங்கப்பட்டதே அந்த இடம். அப்போது இலங்கையை ஆண்டு வந்த இவர்களால் இராவணன் என அழைக்கப்படும் மன்னர் நிலவழங்கி பாண்டியன் என்பவரின் பண்ணை நிலத்திற்கு அடுத்ததாக எங்கள் முப்பாட்டனாரின் நிலம் இருந்தது. சீதையின் அழகில் மயங்கிய மன்னன் நிலவழங்கி பாண்டியன் சீதையை திருமணம் செய்ய வேண்டி காட்டுக்கு புறப்படுகிறான். வழியில் எங்கள் முப்பாட்டனார் நிலத்தை கடந்து செல்ல அனுமதிக்காக காத்திருக்கும் போது மன்னருக்கும் அவரின் பரிவாரங்களுக்கும் விருந்து தருவதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது எங்களது முப்பாட்டனாரும், மன்னர் நிலவழங்கி பாண்டியனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எங்கள் முப்பாட்டனார் மன்னரிடம், "மன்னா சீதைக்கு சிவபெருமான் ஒரு வரம் தந்துள்ளார் அது பற்றி தாங்களுக்கு ஏதும் விபரம் தெரியுமா?", என்று கேட்டார். அதற்கு மன்னரோ, "அப்படியா அது பற்றி எனக்கேதும் தெரியாது நண்பா..! கொஞ்சம் விளக்குங்களேன்", என மன்னர் கேட்டதற்கு முப்பாட்டனாரோ, "அதாவது சீதையின் விருப்பமில்லாமல் யாரேனும் அவரை தீண்டினால் தீண்டியவர் தலை வெடித்து சிதறிவிடும் என்பதே அந்த வரம்", என்று முப்பாட்டனார் விளக்கினார். விருந்தை முடித்துக் கொண்டு கிளம்பிய மன்னர் காட்டுக்கு வந்து சீதையை எந்த வித வற்புறுத்தலும் இன்றி சீதையின் எதிர்ப்பும் இன்றி மன்னரின் தலையும் வெடிக்காமல், அவரது தொடையின் மீதமர்ந்து மகிழ்ச்சியோடு இலங்கை வந்து சேர்ந்தார். (அப்படியென்றால் சிவன் கொடுத்த வரம் பொய்யா) மீண்டும் மூன்று மாத இடைவெளியில் ராமர் அங்கு வருகிறார். இல்லாத கடல் மீது பாலம் கட்ட வானர சேனைகள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. அவர்களுக்கு உதவிய அணிலின் முதுகில் ராமரால் கோடு போடப்படவும் இல்லை. சமதளப்பரப்பில் நடந்தே ராமர் வந்தார் எங்கள் முப்பாட்டனார் வசம் அனுமதி பெற்று நிலத்தை கடந்து இலங்கைக்குள் சென்றார்கள். மன்னரைக்கொன்று சீதையை திரும்ப அழைத்துச் சென்றார்கள். கட்டிய மனைவியை அத்துவானக்காட்டில் கோடு போட்டு வைத்து விட்டு கணவன் சென்றுவிட்டான். அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து தன் தாயின் அரவணைப்பில் வைத்தான் மன்னன் நிலவழங்கி பாண்டியன்.

மொத்தம் நான்கு முறை இந்தியா – இலங்கை தரைப்பகுதியை கடந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒருமுறை கூட பாலம் தேவைப் படவில்லை. இவர்களின் முதல் இராமாயணத்தில் இந்த நிகழ்வுகளெல்லாம் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்கள். நாசாவிலிருந்து எடுத்த புகைப்படம் என்னவென்றால் எங்கள் முப்பாட்டனார் மஸ்தான் கொள்ளு தின்ன ராவுத்தரின் மகனார் மஸ்தான் எள்ளு தின்ன ராவுத்தர் அவர்கள் காலத்தில் இந்த ராமர்-ராவணர் சண்டையெல்லாம் முடிந்து விட்டதால் போரடிக்கும் நேரத்தில் விளையாடுவதற்காக கோல்ப் மைதானம் ஒன்றை உறுவாக்கினார். பல அடி உயரத்தில் பல கிலோ மீட்டர்கள் நீளத்தில் ராட்சத மைதானம் அது. அதுதான் பாலம் போல் தெரிந்திருக்கிறது. பிறகு 40,000 வருடங்களுக்கு முன் நம் நெஞ்சை விட்டு நீங்காத அந்தச் சம்பவம் ஆம், கடல் கொந்தளிப்பு, இலங்கைக்கும்-இந்தியாவிற்கும் இடையே இறைவனால் பேடப்பட்ட பெருந்திரை. அந்த கொந்தளிப்பின் போது முப்பாட்டனாரின் நிலப்பத்திரம், மூலப்பத்திரம், அவரின் மாமனாரின் உயில், முதல் இராமாயணத்தின் நகல் எல்லாமே அடித்துச் சென்று விட்டது. இன்றும் கூட இந்திய-இலங்கை வான் எல்லையில் பறக்கும் போது கடல் பகுதியை பார்த்தால் ஆங்காங்கே கோல்ப் விளையாட்டு மைதானங்கள் இருப்பது தெரியவரும். வரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்களான இவர்களின் இந்த இராமாயணம் இரண்டாவதாக 25,000 ஆண்டுக்கு முன்பு வால்மீகி அவர்களால் எழுதப்பட்டது. வால்மீகி காலத்திலெல்லாம் இந்தியாவும்-இலங்கையும் பிரிந்து 15,000 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தது. வால்மீகி காலத்தில் இந்தியா-இலங்கை நடுவே கடல்நீர் இருந்ததால் லாஜிக் இடிக்கக்கூடாது என்பதற்காக இலங்கைக்கு பாலம் கட்டி போனதாக கதையில் எழுதி விட்டார். ஒரு பேச்சுக்கு பாலம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் காவிகளின் சுயலாபத்திற்காக நாங்கள் பாபர் மஸ்ஜிதை இழந்தோமல்லவா அதுபோல மக்களின் பொதுலாபத்திற்காக இவர்கள் பாலத்தை இழக்கட்டுமே. அதுவன்றி பாலம் தான் முக்கியமெனக் கருதினால் முதலில் பாபர் மஸ்ஜிதை கட்டி கொடுத்துவிட்டு பிறகு பாலத்தை பாதுகாக்கட்டும். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்காக யார் எங்களிடம் மன்னிப்பு கேட்டார்கள்?. இனி இவர்கள் மன்னிப்பு கேட்டால் நாங்களும் கேட்போம் இல்லாத பாலத்தை இடித்துவிட்டு.
நன்றி.