இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label மமக வேட்பாளர் ராசிபுரம் வேட்புமனு. Show all posts
Showing posts with label மமக வேட்பாளர் ராசிபுரம் வேட்புமனு. Show all posts

July 20, 2010

ராசிபுரத்தில் மமக வேட்பாளர் கடத்தல்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 1-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ம.ம.க சார்பில் மஹாலெட்சுமி என்ற பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அவருக்கு அமோக ஆதரவு பெருகியது. இங்கு இவருக்கும், திமுக வேட்பாளருக்கும் இடையேதான் போட்டியாக இருந்தது.

இந்நிலையில் பயந்துபோன திமுகவினர், கோழைத்தனமாக மஹா லெட்சுமியையும், அவரது கணவரையும் இரவோடு இரவாக கடத்தி சென்றனர். இச்செய்தியறிந்த நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட ம.ம.க நிர்வாகிகள் ராசிபுரம் சென்று மறியலில் ஈடுபட்டனர்.

மஹாலெட்சுமியையும், அவரது கணவரையும் கொலை மிரட்டல் விட்ட திமுகவினர், கடைசி நேரத்தில் அவர்களை மிரட்டி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, யாருக்கும் தெரியாமல் கூட்டி சென்று வேட்பு மனுவை வாபஸ் வாங்க வைத்திருக்கின்றனர்.தேர்தல் களத்தை நேரடியாகவும், நேர்மையாகவும் சந்திக்க திராணியற்ற திமுக கோழைகள் குறுக்கு வழியில் கோழைத்தனமாக செயல்படுகின்றனர். இதுதான் நெஞ்சுக்கு நீதியோ... www.tmmk.in