இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label தமுமுக பொதுக்கூட்டம் முஸ்லிம். Show all posts
Showing posts with label தமுமுக பொதுக்கூட்டம் முஸ்லிம். Show all posts

July 10, 2007

பொதுக்கூட்டம்

கடந்த 11-5-2007 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு சரியாக குவைத் மண்டலத்தின் பொதுக்குழு கூட்டம் முர்காப் சிட்டியில் அமைந்துள்ள ரவுண்டானா பள்ளிவாசலில் நடைபெற்றது. கோடைவிடுமுறையின் துவக்கமாதலால், விடுமுறைக்கு தாயகம் செல்பவர்கள் பயணம் சொல்லிக் கொள்ளவும், அவர்களை வழியனுப்பி வைக்க வந்தவர்களும் என ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு துணைத்தலைவர் அப்துல்கரீம் பாபு - முஹம்மதுபந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். மண்டலத்தலைவர் அமானுல்லா அவர்களின் முன்னுரையோடு ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்தில் காலசூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப் போருக்காக அரசாங்கம் அளித்திருக்கும் பொது மன்னிப்பைப் பற்றியும் அறிவுறுத்தப்பட்டது. இப்பொதுமன்னிப்பின் காலக்கெடு மே மாதம் 1ஆம்தேதி முதல் ஜுன் மாதம் 31ஆம் தேதி வரையாகும். உதவி தேவைப்படுவோருக்கு விவரங்கள் தரப்பட்டன. மேலும், எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் பற்றியும் அமையவிருக்கும் புதிய நிர்வாகிகள் தமுமுகவை இதைவிட சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்லவும், தீவிர அரசியலில் ஈடுபட்டு நமக்கான வாழ்வாதார உரிமைகளை பெற்றுத் தரவும், சிறைவாசிகள் அனைவரும் பூரண விடுதலையடையவும் நாமனைவரும் துஆ செய்யவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 2006 - 2007க்கான ஆண்டறிக்கையை மண்டலபொருளாளர் சத்ருத்தீன் அவர்கள் மக்கள் மத்தியில் சமர்பித்து தமுமுகவின் தூய்மையை நிரூபித்து விட்டு தனது பணிச்சுமையால் பொருளாளர் பொருப்பிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். அதையொட்டி புதிய பொருளாளாராக சகோ.பஜ்லுர்ரஹ்மான் - திருச்சி அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். மேலும், மக்கள்உரிமை இதழுக்கு வருட சந்தா சேகரிக்க தீர்மானிக்கப்பட்டது. நெல்லை-தாழையூத்து பகுதியின் முன்னாள் தொண்டரணி செயலாளரும், குவைத் - அபாஸிய்யா கிளைத்தலைவருமான சகோ. பீர்மரைக்காயர் அவர்களின் நன்றியுரையோடு இரவு 8:30க்கு கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.