இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label டிசம்பர் 6 கருப்பு தினக் கண்டன கூட்டம் குவைத் தமுமுக. Show all posts
Showing posts with label டிசம்பர் 6 கருப்பு தினக் கண்டன கூட்டம் குவைத் தமுமுக. Show all posts

December 15, 2009

டிசம்பர் 6 கருப்புதினக் கண்டனகூட்டம்






குவைத் தமுமுக ஏற்பாடு செய்த டிசம்பர் 6 கருப்பு தினக் கண்டன கூட்டம் டிசம்பர் 11, வெள்ளிக் கிழமை மாலை நடந்தது. ஃபாஹில் மண்டல பொருளாளர், அறந்தாங்கி அப்துல் அஜீஸ் அவர்கள் திருக்குர்ஆன் ஓதினார். தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவையின் தலைவர் பெரம்பலூர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில், தமுமுக சகோதரர்கள் முன்னிலையில், தமுமுக நிர்வாகக் குழு உறுப்பினர் காரைக்கால் ஷாஹுல் அவர்கள் தொகுத்து வழங்க, இஸ்லாமிய அழைப்பாளர் (அரக்கோணம்) மெளலவி. அன்ஸர் ஹுசைன் ஃபிர்தெளஸி அவர்களின் அரசியல் எழுச்சி சிந்தனையுடன் தொடங்கியது.அதன் பின் தமிழோசைப் பேச்சாளர் சகோ.இராவணன், இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் பேராசிரியர். தாஜுதீன், தமுமுக குவைத் ரிஃக்கா கிளை செயலாளர். சிதம்பரம் சாதிக், தொழிலதிபர் புரவலர் எஸ்.கே.எஸ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். மற்றும் சகோ.அபு தாஹிர் கவிதை வாசிக்க, சகோ.புதுகை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் ஒரு தீர்மானத்தையும் வாசித்தார்.
இன்றைய முஸ்லிம் சமுதாயப் பிரச்னைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் முஸ்லிம்கள் அரசு அதிகாரத்தில் தகுந்த பங்கு கொள்ளாமல் இருப்பதுதான். எனவே தமிழக முஸ்லிம் சமூகத்தின் பேரெழுச்சியான மனிதநேய மக்கள் கட்சியில் எல்லா இயக்க சகோதரர்களும் ஒன்று சேர வேண்டும். நிச்சயமாக இன்று உள்ள இயக்கத் தலைவர்கள் ஒன்று சேர மாட்டார்கள். ஏனென்றால் பிரித்தவர்களே அவர்கள் தானே. ஆனால் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் அரசியலில் மட்டுமாவது ம.ம.க எனப்படும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்று இந்த கூட்டம் தமிழக முஸ்லிம்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
சகோ.திருச்சி ஃபஜ்லுர் ரஹ்மான் அவர்கள் நன்றி கூற கண்டனக் கூட்டம் நிறைவடைந்தது.
வஸ்ஸலாம்