இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையம். Show all posts
Showing posts with label குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையம். Show all posts

December 17, 2008

சமூக நீதி கருத்தரங்கம்

அனைவரும் வாரீர்!!
தீவிரவாதமும் பயங்கரவாதமும்.
(நிழலும் நிஜமும்)
பேரா. சுப. வீரபாண்டியன்.
(பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கி யிருக்கிறார். தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர். அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார்.)
மனித குலத்தின் இன்றைய சவால்கள்
சகோ.எம்.தமீமுன் அன்ஸாரி
(மாநில செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்)
இடம்: ஜம் இய்யதுல் இஸ்லாஹ் அரங்கம், ரவ்தா – குவைத்
நேரம்: மாலை 5:15, ஜனவரி 1, 2009.
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏனைய தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறும் நிகழ்ச்சி இது.
தமிழகத்திலும் ஃபாஸிஸ பிரிவினை வாத சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விதமாகவும், ஒடுக்கப் பட்ட சமுதாயத்தின் விழிப்புணர்வுக்காகவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது
அடுத்த நாளும் (வெள்ளிக் கிழமை) தமுமுக, குவைத் மண்டலத்தின் சார்பாக அதே அரங்கத்தில் மற்றும்ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.