இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 09, 2010

சபீருல்லா ஐஏஎஸ் தேர்வில் வெற்றி

சேலம்,​​ மே 7: சேலத்​தைச் சேர்ந்த ஆசி​ரி​யர் தம்​ப​தி​ய​ரின் மகன் சபீ​ருல்லா ​(30) ​ ஐஏ​எஸ் தேர்​வில் வெற்றி பெற்​றுள்​ளார்.​
÷ஐ​ஏ​எஸ் தேர்வு ​(2009) முடி​வு​கள் வியா​ழக்​கி​ழமை வெளி​யி​டப்​பட்​டன.​ இதில் நாடு முழு​வ​தும் ​ 875 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​னர்.​ இதில் தமி​ழ​கத்​தில் இருந்து 127 பேர் தேர்வு பெற்​றுள்​ள​னர்.​ சேலம் அம்​மாப்​பேட்டை வித்யா நக​ரைச் சேர்ந்​த​வர் ஐ.கரா​மத்​துல்லா ​(67).​ கன்​னங்​கு​றிச்சி உயர்​நி​லைப் பள்​ளி​யில் ஆசி​ரி​ய​ரா​கப் பணி​யாற்றி ஓய்வு பெற்​ற​வர்.​ இவ​ரது மனைவி மெஹ​தாப் பேகம் ​(65).​ சேலம் சாரதா கல்​லூ​ரி​யில் வேதி​யி​யல் துறைத் தலை​வ​ராக பணி​யாற்​றி​ய​வர்.​
÷இ​வர்​க​ளுக்கு அமெ​ரிக்​கா​வில் மென்​பொ​ருள் பொறி​யா​ள​ரா​கப் பணி​யாற்​றும் இப்​ரா​ஹிம் ​(32),​ பெத்​த​நா​யக்​கன்​பா​ளை​யத்​தில் ஆசி​ரி​யை​யா​கப் பணி​யாற்​றும் ஆயிஷா ​(33),​ பெங்​க​ளூர் ஐ.பி.எம்.​ நிறு​வ​னத்​தில் பணி​யாற்​றும் முக​மது ஒய்.சபீ​ருல்லா ​(29) ஆகிய மூன்று குழந்​தை​கள் உள்​ள​னர்.​
÷ச​பீ​ருல்லா சேலம் செயின்ட் ஜான்ஸ் பள்​ளி​யில் 1998-ல் பள்​ளிப் படிப்பை முடித்​து​விட்டு கோவை பிஎஸ்ஜி கல்​லூ​ரி​யில் பி.இ.​ ​(எலெக்ட்​ரி​கல் மற்​றும் எலெக்ட்​ரா​னிக்ஸ்)​ படித்​துள்​ளார்.​ படிப்பை முடித்த பிறகு டாடா கன்​சல்​டன்ஸி நிறு​வ​னத்​தில் வேலைக்கு சேர்ந்​தார்.​
÷ஆ​னால் அதை ராஜி​நாமா செய்​து​விட்டு எம்.பி.ஏ.​ படிப்​ப​தற்​காக கர்​நா​ட​கத்​தின் மணிப்​பால் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் சேர்ந்​துள்​ளார்.​ எம்.பி.ஏ.​ முடித்த இவர் இப்​போது பெங்​க​ளூ​ரு​வில் ஐ.பி.எம்.​ கணினி நிறு​வ​னத்​தில் நிதி ஆலோ​ச​க​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​
÷வே​லைக்​குச் சென்று விட்டு வந்து பகுதி நேர​மா​கப் படித்து முதல் முயற்​சி​யி​லேயே ஐ.ஏ.எஸ்.​ தேர்​வில் நாட்​டில் 55-வது இடம் பிடித்து சபீ​ருல்லா வெற்றி பெற்​றுள்​ளார்.​ சபீ​ருல்​லா​வுக்கு ஆசியா யாஷ்​மின் ​(25) என்​ப​வ​ரு​டன் திரு​ம​ணம் நடை​பெற்​றுள்​ளது.​ பி.இ.,​​ எம்.எஸ்.​ படித்​துள்ள இவர் தனி​யார் கல்​லூ​ரி​யில் விரி​வு​ரை​யா​ள​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​
÷இது குறித்து சபீ​ருல்​லா​வின் தந்தை கரா​மத்​துல்லா கூறும்​போது,​​ டாடா நிறு​வ​னத்​தில் நல்ல வேலை​யில் இருந்த சபீ​ருல்லா மேலும் படிக்க வேண்​டும் என்ற ஆவ​லில் ராஜி​நாமா செய்​து​விட்டு வந்​து​விட்​டார்.​ பின்​னர் எம்.பி.ஏ.​ படித்து ஐ.பி.எம்.​ நிறு​வ​னத்​தில் பணி​யில் சேர்ந்​தார்.​
÷தி​ன​மும் வேலை விட்டு வந்​த​தும் அதி​காலை 2 மணி வரை கண்​வி​ழித்து படித்து வந்​தார்.​ இப்​போது பெங்​க​ளூ​ரு​வில் இருக்​கும் அவர்,​​ ஐ.ஏ.எஸ்.​ தேர்​வில் வெற்றி பெற்​றது குறித்து மகிழ்ச்சி தெரி​வித்​துள்​ளார்.​ அவ​ரது வெற்​றிக்கு பெற்​றோ​ரா​கிய நாங்​க​ளும்,​​ அவ​ரது மனை​வி​யின் ஒத்​து​ழைப்​புமே கார​ணம் என்று தெரி​வித்​துள்ள அவர்,​​ மக்​கள் சேவை புரி​வதே இனி தலை​யாய கடமை என்​றார் அவர்.​

1 comment:

ஷர்புதீன் said...

"மக்​கள் சேவை புரி​வதே இனி தலை​யாய கடமை என்​றார் அவர்.​"

athuthaan ini payamaai irukkirathu....