இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

March 30, 2008

ஐ.டி. நிறுவனங்கள் சந்திக்கும் பயோடேட்டா பிரச்னை

இந்திய ஐ.டி. நிறுவனங்கள் தற்போது சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளுல் ஒன்று பொய் தகவல்களோடு கூடிய பயோடேட்டா தான்.
பொதுவாக ஐ.டி. நிறுவனங்களின் தொடக்க வேலைகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் தங்களது திறன்களைப் பற்றி தரும் பயோ டேட்டாக்களை எப்படி வடிகட்டி உண்மையை சரி பார்ப்பது என்பது இந்த நிறுவனங்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. அனுபவம் தொடர்பாகவே பொதுவாக பொய்கள் கூறப்படுவதாக ஐ.டி. நிறுவனங்கள் கருதுகின்றன.
புதிதாக ஒருவரை பணிக்கு எடுத்துக் கொள்ளும் போது இதை உறுதி செய்து கொள்வது அடிப்படையான பிரச்னையாக இருக்கிறது. இப்படி பொய் தகவல்களை தந்திருப்பவரை பணிக்கு எடுத்துக் கொள்ளும் போது அவர்களிடமிருந்து பெறப்படும் சேவையும் தரமில்லாததாக அமைகிறது.
இதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஏற்கனவே விப்ரோ போன்ற நிறுவனங்கள் இறங்கி விட்டன.
வேலைக்கு திறன் வாய்ந்தவர்களை எடுத்துக் கொள்வதை அவுட்சோர்சிங் செய்வதற்கான கணக்கீடுகளை ஏற்கனவே ஐ.டி. நிறுவனங்கள் செய்து வருகின்றன.

No comments: