இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

March 17, 2008

அரசுக்கு தமுமுக இரண்டு மாதம் அவகாசம்


மார்ச் 16 அன்று கடையநல்லுரில் பாளை அப்துல்ரஷீது வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும் உடனடியாக கருணை தொகையை வழங்கிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இதில் தமுமுக தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், துணை பொது செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மாநிலத் துணைச் செயலாளர் மைதீன் சேட்கான் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட தலைவர் ரபீக், மாவட்ட செயலாளர் உஸ்மான்கான், மாவட்ட பொருளாளர் செய்யது அலி, உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
பாளை அப்துல்ரஷீது வழக்கில் உண்மை குற்றவாளிகளை வெளிக்கொணருவும், அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை ரூ.2 லட்சத்தை உடனடியாக வழங்கிடவும் அரசிற்கு இரண்டு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. அரசு மேலும் காலதாமதப் படுத்தினால் தமுமுக கடுமையான போராட்டங்களில் ஈடுபடும் என அரசிற்கு இப்பொதுக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்தது. இப்பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

No comments: