இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

March 30, 2008

யூனியன் பாங்க் அறிவித்துள்ள 1000 கிளார்க் பணியிடங்கள்

முன்னணி பொதுத் துறை பாங்குகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாகவுள்ள ஆயிரம் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் கிளார்க் பணிக்கான நேர்முகத் தேர்வை நடத்தியிருக்கும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா மீண்டும் ஆயிரம் இடங்களை அறிவித்திருப்பதால் போட்டித் தேர்வு எழுதும் எண்ணற்ற இளைஞர்களுக்கு இது மற்றுமொரு நல்ல செய்தியாக அமைகிறது. இனி இது பற்றிய விபரங்கள்

காலியிட விபரம்:
ஆந்திரா 56, குஜராத் 82, கேரளா 61, ம.பி. 68, மகாராஷ்டிரா 72, மும்பை 60, உ.பி., 207 மற்றும் தமிழகம் 78, கர்நாடகா 39 மற்றும் மே. வங்கம் 38. குறைந்தது 38 காலியிடங்கள் இருக்கும் மாநிலங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இவை கூடவோ குறையவோ செய்யலாம்.
எந்த மாநிலத்தின் காலியிடத்துக்காக விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநில மொழியில் பேச, எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அந்த மாநிலத்தில் உருவாக்கப்படும் போட்டித் தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வை எழுத முடியும்.

தகுதிகள்:

  • பிப்ரவரி 29, 2008 அன்று 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வழக்கமான மத்திய அரசு வயது சலுகைகள் தரப்படும்.
  • பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி அல்லது +2ல் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
  • அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து குறைந்தது 60 மணி நேர கம்ப்யூட்டர் படிப்பைப் படித்திருக்க வேண்டும். ஆபீஸ் ஆட்டோமேஷன் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்தத் தகுதிகளை பிப்ரவரி 29, 2008 அன்று பெற்றிருப்பது முக்கியம்.

தேர்வு முறை:

  • இதற்கான போட்டித் தேர்வில் அப்ஜக்டிவ் மற்றும் விரிவாக விடையளிக்கும் தாள்கள் இடம் பெறும். இதில் தகுதி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
  • அப்ஜக்டிவ் தாளில் ரீசனிங், நியூமரிகல் எபிலிடி, கிளரிக்கல் ஆப்டிடியூட், ஆங்கிலத் திறன் ஆகியவற்றில் கேள்விகள் அமையும்.
  • தலா 50 கேள்விகள் இவற்றில் கேட்கப்படும். கணிதம் மற்றும் ரீசனிங்கிற்கு தலா 75 மதிப்பெண்களும் பிற 2 பகுதிகளுக்கு தலா 50 மதிப்பெண்களும் தரப்படும். ஆங்கிலத்தில் பாஸ் செய்தால் போதும்.
  • தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
  • ஒரு மணி நேரத்தில் விரிவாக விடையளிக்கும் பகுதிக்கு விடையளிக்க வேண்டும்.
  • தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பக் கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.75. டிடியானது யூனியன் பாங்க் ஆப் இந்தியா ரெக்ரூட்மென்ட் புராஜக்ட் என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுக்கப்பட வேண்டும்.
  • டிடியின் பின்புறம் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவை தவறாமல் எழுதப்பட வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தையும் முழு விபரங்களையும் பாங்கின் http://www.unionbankofindia.co.in இன்டர்நெட் தளத்திலிருந்துடவுண்லோடு செய்து கொள்ளலாம். மேலும் இவற்றை எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழிலும் பார்த்துக் கொள்ளலாம். இதை கடைகளிலிருந்தும் பெறலாம்.
  • பிறந்த தேதி, தகுதிகள், திறன்கள், ஜாதி போன்றவற்றுக்கான சான்றிதழ்களின் அட்டெஸ்டட் நகல்களை இணைத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பமானது சாதாரண தபால் மூலமாகத் தான் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

UNION BANK CLERICAL RECRUITMENT PROJECT – 2008,

Post Office Box No.7647,

Malad (West) Post Office,

MUMBAI 400064.

No comments: