இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

May 02, 2010

எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்?

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரம்பலூர் நிஸ்வான் மஹாலில் 24.10.2010 அன்று என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்னும் தலைப்பில் சமூகத்தில் குவிந்து கிடக்கும் அறிவு மற்றும் மதிப்புகளை பரப்பும் விதமாக மாபெரும் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

மாவட்ட தலைவர் மீராமைதீன் தலைமை வகிக்க, மருத்துவர் தங்கராசு, டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் ஹக்கீம் மற்றும் அற்புதரோச் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெறியாளர்களாக இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் முனைவர் ஆபிதின் அவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர் காமரர்சு அவர்கள், மற்றும் அக்ரி ஆறுமுகம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

முன்னதாக லெப்பைகுடிக்காடு மாணவரணி செயலாளர் சபீர் அஹமது வரவேற்க்க, இறுதியாக மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது இலியாஸ் அலி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உட்பட 300-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட பொருளாளர் முஹம்மது இலியாஸ், மாவட்ட செயலாளர் தாஹிர்பாஷh மேலும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் ரசீதுஅகமது, மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் தௌ.முஹம்மது ஜகரிய்யா ஆகியோர் உட்பட திரளாக பங்கேற்றனர். மற்றும் மாற்று மத சகோதரர்களும் திரளாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: