இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

December 17, 2008

சமூக நீதி கருத்தரங்கம்

அனைவரும் வாரீர்!!
தீவிரவாதமும் பயங்கரவாதமும்.
(நிழலும் நிஜமும்)
பேரா. சுப. வீரபாண்டியன்.
(பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கி யிருக்கிறார். தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர். அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார்.)
மனித குலத்தின் இன்றைய சவால்கள்
சகோ.எம்.தமீமுன் அன்ஸாரி
(மாநில செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்)
இடம்: ஜம் இய்யதுல் இஸ்லாஹ் அரங்கம், ரவ்தா – குவைத்
நேரம்: மாலை 5:15, ஜனவரி 1, 2009.
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏனைய தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறும் நிகழ்ச்சி இது.
தமிழகத்திலும் ஃபாஸிஸ பிரிவினை வாத சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விதமாகவும், ஒடுக்கப் பட்ட சமுதாயத்தின் விழிப்புணர்வுக்காகவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது
அடுத்த நாளும் (வெள்ளிக் கிழமை) தமுமுக, குவைத் மண்டலத்தின் சார்பாக அதே அரங்கத்தில் மற்றும்ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

புஷ்ஷை செருப்பால்..!

எல்லோரும் கவலைப்படுகிறார்கள் புஷ்ஷை நோக்கி வீசிய செருப்பில் குறி தவறிபோய்விட்டதே என்று...! தோழனே! இங்கே பாதணி என்று குறிப்பிடாமல் செருப்பு என்றே விளிம்புகிறேன்.பாதணியை விட செருப்பில் வீரியம் தெறிப்பதால்..! தோழனே!உலகம் முழுவதும் மக்கள் கவலைப்படுகிறார்கள்குறி தவறிப்போய்விட்டதே என்று..! இல்லை.... இல்லை...ஒளிப்படத்தை மீண்டும் பார் புஷ் குனிந்து கொள்ள அமெரிக்க தேசிய கொடியின்மீதல்லவா பட்டு தெறித்தது...!தோழனே!எனக்கு கூட ஓர் சிந்தனை செருப்பை வீசி பார்த்து பயிற்ச்சி எடுத்திருந்திருக்கலாமே என்று..!தோழனே!நீ ஆயுதத்தால் தாக்கி இருந்தால் கூடஅவன் அன்றே இறந்திருப்பான்.செருப்படியால் அவனை வாழும் பிணமாக அல்லவா மாற்றிவிட்டாய்!தோழனே! பத்திரிக்கையாளர்களை தீவிர சோதனை செய்தது ஆயுதம் வைத்திருக்கிறீர்களா என்றுஆனால், அதை விட அதிக வலிமையுடைய எழுதுகோளையும், நாவையும், செருப்பையும் அல்லவா உங்களுடன் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்!தோழனே! எனக்கும் பாசீஸ மிருகங்களை செருப்பால் அடிக்க விருப்பமுண்டு.ஆனால் குறி தப்பாமல் இருக்க இன்றே பயிற்ச்சி எடுக்க வேண்டும்! குறி தவறினாலும் பரவாயில்லை பின்புறம் தேசீய கொடி இருக்குமல்லவா? தோழனே! உனக்கொரு செய்திஉன் வீரத்தை இணையத்தில் படித்த போது மற்றொரு செய்தியையும் கண்டேன் நடிகைக்கு கோயில் கட்டுகிறார்களாம்.என் சமூகத்திலும் இளைஞர்கள் உன்னைப் போல் என்று செருப்பைத் தூக்குவார்களோ என்ற பெருமூச்சுடன் வந்த சிந்தனையை தவீர்க்க முடியவில்லை.
தமிழச்சி

November 15, 2008

தயாராகுங்கள்..! பாபர் மஸ்ஜித் போராட்டம்

தலைவரின் சிறப்புப் பேட்டி

குவைத்தில் தமுமுக மங்காஃப் கிளை துவக்க விழா

மாநில தலைவர் பேரா. டாக்டர் M.H.ஜவாஹிருலலா அவர்கள் குவைத்தில் த மு மு க நிர்வாக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டதற்கு பிறகு முதன் முறையாக 31-10-2008 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஃபாஹில் மண்டல தமுமுக சார்பாக மாபெரும் மஙகாஃப் கிளை துவக்க விழா மஙகாஃப் தீன் மெஸ்ஸில் சிறப்பாக நடை பெற்றது.
குவைத் மண்டல துணை தலைவர் A.K.பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் J. சித்திக் அஹ்மத், அப்துல் அஜீஸ், இகபால் அஹ்மத், சலீம் ரப்பானி, நசீர் அஹ்மத் ஜமாலி, சாகுல் ஹமீது பிர்தௌசி ஆகியோர் உரையாற்றினார்கள். மஙகாஃப் கிளையின் நிர்வாகிகளாக தலைவர் J.இக்பால் அஹ்மத் திருச்சி செயலாளர் ஹஜ்ஜப்பா மேலபாளையம் தேர்ந்தெடுக்கபட்டனர்.
இந்தியா திரும்ப விமான டிக்கெட் நிதியுதவி கேடு வந்த அதிரை சகோதரர் அப்துல் மாலிக் என்பவருக்கு கூட்டத்தில் வசூல் செய்து கொடுக்கப்பட்டது.

November 12, 2008

மார்க்க எழுச்சிப் பொதுக்கூட்டம்

கடந்த 9-11-2008 அன்று திருச்சி குத்பிஷாநகர் கிளை இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பாக சகோ. கோவை. எஸ். அய்யூப் அவர்களின் சிறப்புரை நடந்தது.

November 05, 2008

சேலத்தில் முதல் முதலில் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு !!!

எல்லா புகழும் இறைவனக்கே.
தமுமுக சார்பில் நவம்பர் 2ம் தேதி சேலத்தில் முஸ்லிம்களின் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டியில் தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேசுகையில், தமுமுக, சமுதாயத்தின் முன்னேற்றத்தை மட்டுமே முன்னிலை படுத்தி செயல்பட்டு வருகிறது நாட்டில் நடக்கும்பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு, முஸ்லிம்கள் மீது பழிபோடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,என்றார். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவிதம் இடஒதுக்கீட்டை, 6 சதவிதமாக உயர்த்த வேண்டும், முஸ்லிம் களுக்கு அனைத்திந்திய அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீ வழங்க ஐக்கிய முற்போக்கு கூட'டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்லில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளுக்கு,இனி வரும் தேர்தலில்,முஸ்லிம்கள் ஆதரவு அளிக்கக் கூடாது என்று ஜவாஹிருலாஹ் பேசினார்.இதையடுத்தது. தமுமுக. பொதுச் செயலர். ஹைதர்அலி பேசுகையில், நாட'டியில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும், முஸ்லிம்களால் ஏற்படுவதாக, அரசும், ஊடகங்களும், பொய் பிரசாரம், மேற்கொண்டு வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். முழு விசாரணை நடத்தாமலே முஸ்லிம்களை, பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நிலையை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும், அப்படி, மாற்றி கொள்ளாவிட்டால், வரும் பாராளுமன்ற தேர்தலில், தமுமுக , காங்கிரஸ்க்கு எதிராக செயல்படும், மத்தியல் பா.ஜ.க. காங்கிரஸ். அல்லாது மூன்றாவாது அணியின் வெற்றிக்கு தீவிரமாக செயல்படும் என்றார்.இந்த மாநாட்டியில் தமுமுக. துனைபொதுச்செயலாளர். மெளலவி ரிபாய். மாநில செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில துனை செயலாளர் கோவை சாதிக், தலைமைகழக பேச்சாளர் ரபிக், மாநில மாணவர்அணி பொருளாளர் மாயவரம் அமீன், மாநில உலமா அணி செயலாளர் நாசர் உமரி மற்றும் பலர் உரைநிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட தலைவர். சையத் முஸ்தபா தலைமை வகித்தார்.

October 29, 2008

தமிழன் தொலைக்காட்சியில் தமுமுக நிகழ்ச்சிகள்


தமிழன் தொலைக்காட்சியில் பிளாக் அண்ட் ஒயிட் கம்யூனிகேஷன்ஸ் நிகழ்ச்சிகள்
திங்கள்: மார்க்க அரங்கம்
செவ்வாய்: மார்க்க அரங்கம்
புதன்: சமுதாய அரங்கம்
வியாழன்: வரலாற்று அரங்கம்
வெள்ளி: சென்ற வாரம்
இந்திய நேரம்: இரவு 10:30 முதல் 11:00 வரை
குவைத், சவுதி நேரம்: இரவு 8:00 முதல் 8:30 வரை
துபை, மஸ்கட் நேரம்: 9:00 முதல் 9:30 வரை
(குறிப்பு: நிகழ்ச்சிகள் இறுதிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது)

Channel Details : Tamilan channel
FREQUENCY: 3845 MHZ
SYMBOL RATE : 26043msps

POLORIZATION:Vertical

FEC : 3/4
Satellite: Insat 2E 83* east
(Asianet dish ) C band –Wide Beam

சேலம் மாவட்ட தமுமுக அழைக்கின்றது

மும்பையில் திருக்குர்ஆன் மாநாடு