இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 30, 2008

அதே...தமுமுக இணையதளம்

தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மீ்ண்டும் புதுவேகத்தில், அதே முகவரியில் தமுமுக இணையதளம்

July 28, 2008

அல்-உம்மா பாட்ஷா மகள் திருமணம்

பாட்ஷாவின் மகள் முபக்தீராபானுவுக்கும், பொள்ளாச்சி- கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஜபருல்லாவின் மகன் ஜாகிர்உசேனுக்கும் திருமணம் நடந்தது. நேற்று இத்திருமணம் போத்தனூர் ரோடு பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, நேற்று காலை கோவை சிறையிலிருந்து பாஷாவும், அவரது மகன் சித்திக் அலியும் போலீஸ் பாதுகாப்புடன், உக்கடம்-பிலால் நகர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து போத்தனூர் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மணமக்களை வாழ்த்தினர். இத்திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். மகள் திரு மணத்திற்காக பாட்ஷாவுக்கு வழங்கப்பட்ட நான்கு நாள் பரோலில், மூன்று நாட்கள் நேற்றுடன் முடிந்தது.

குவைத்தில் வேலை வாய்ப்புகள்

Arabia Insurance Company
Consultants/Personal Lines
Ali Alghanim & Sons.
Foreman – HVAC
Draftsman – Electrical Works
Mechanical Engineer - Plumbing & Fire Fighting
Foreman – Plumbing & Fire Fighting
Draftsman – HVAC
Mechanical Engineer - HVAC
Draftsman – Plumbing & Fire Fighting Hasan Optical Co

Optician

Asst. Opticicann

Al Rai

Sales Women

Gynecologist

Dermatologist

Telecom Engineer & Technicians

Ophthalmology

Urology

Marketing Offiicer

Medical Representative

Kuwait Network Engineer

Medical record clerks

Network Technicians

Pediatrician

Network Engineer

Secretary

www.q8cv.com

தமுமுக இணையதளம்...இதோ

தமுமுகவின் இணையதளம் புதிய www.tmmk.info என்ற தற்காலிக முகவரியிலிருந்து கிடைக்கும். படித்து பயன்பெறவும்.

July 27, 2008

உணர்வாய் உன்னை..! அல்ஹம்துலில்லாஹ்..!!

(கிளிக்கி பார்க்கவும்)

ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி மற்றும் இஸ்லாமிய சிறப்பு ஒலி - ஒளி நிகழ்ச்சி அனைவரையும் அன்போடு அழைக்கிறது தமுமுக - குவைத் மண்டலம்

July 26, 2008

ரயில்வே பணி வாய்ப்புகள்..!

சென்னை ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆர்.ஆர்.பி. வெளியிட்டுள்ளது.
பணியிட விபரங்கள் செக்ஷன் இன்ஜினியர்: காலியிடங்கள்: 30தகுதிகள்: மனுபாக்சரிங் / மெக்கட்ரானிக்ஸ்/இன்டஸ்ட்ரியல்/மெக்கானிக்கல்/டூல் அண்ட் மெஷினிங்/ ஆட்டோமொபைல்/ புரடக்ஷன்/ எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிகல் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
செக்ஷன் இன்ஜினியர்: டீசல் எலக்ட்ரிகல் பிரிவு காலியிடங்கள்: 5தகுதிகள்: எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் ஒன்றில் பட்டப்படிப்பு தகுதி.
செக்ஷன் இன்ஜினியர்: டிராக் மெஷின் பிரிவு காலியிடங்கள்: 5 , தகுதிகள்: மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/புரடக்ஷன் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு தகுதி.
மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி./ஓ.பி.சி. பிரிவினருக்கு வழக்கமான மத்திய அரசு வயது சலுகைகள் உண்டு. இவை தவிர பிற பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் இன்ஜினியர் டபிள்யூ.எஸ். 57 இடங்களும், சி அண்ட் டபிள்யூ. 2 இடங்களும், மெக்கானிக்கல் டிசைன் 10 இடங்களும், டிராக் மெசின் 17 இடங்களும் சிக்னல் 54 இடங்களும் உள்ளன.இவற்றுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும். கிராஜூவேட் தகுதிக்கான காலியிட விபரம் டிராபிக் அப்ரென்டிஸ் 6, அசிஸ்டண்ட் ஸ்டேஷன் மாஸ்டர் 5, குட்ஸ் கார்ட் 51 மற்றும் மெடலர்ஜிகல் அசிஸ்டண்ட் 3 இடங்கள் இருக்கின்றன. பி.எஸ்சி. தகுதியிடங்கள் இவை.
விண்ணப்பிக்கும் முறை:
முழு விபரங்களையும் சென்னை ஆர்.ஆர்.பியின் http://www.rrbchennai.net என்னும் இன்டர்நெட் தளத்தில் பார்த்துக் கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை தபால் மூலமாக விண்ணப்பப் பதிவுத் தாளுடன் அனுப்ப வேண்டும்.
பதிவுத் தாள் மற்றும் கட்டணம் அனுப்பும் முகவரி:
Assistant Secretary,Railway Recruitment Board,5, Dr. P. V. Cherian,Crescent Road,Behind EthirajCollege, Egmore,Chennai – 600 008.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் :ஆகஸ்ட் 11, 2008.

வக்ப் வாரியத்தில் வேலைவாய்ப்பு:

வக்ப் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ஜான் பிலிப்போஸ் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு வக்ப் வாரிய தலைமை நிர்வாக அலுவலரால் அறிவிக்கப்பட்ட தற்காலிக இளநிலை உதவியாளர் பணிக் காலியிடங்களுக்கு உத்தேச சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணி காலியிடங்களுக்கு முஸ்லிம் ஆண் மனுதாரர்கள் மட்டுமே தகுதியானவர்கள். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 31.7.2007 அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வேறு எந்த சலுகையும் கிடையாது. இப்பணி காலியிடங்களுக்கு 31.12.97 வரை பதிவு செய்த பட்டதாரி முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஆண் மனுதாரர்கள் மட்டும் தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விபரத்தை வரும் 29ம் தேதி மதியம் 2.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் வந்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

July 22, 2008

IDMK சொல்வது என்ன..?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.,

அண்ணே....... ஐடிஎம்கே அண்ணே உங்க கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானாக, வயிற்றெரிச்சலில் பாலை ஊற்றுவானாக, உங்களோட இணையதளத்தை தற்போது தான் பார்த்தேன். கட்டுரைகள் தான் 20 முறை ஏற்றியிருக்கின்றீர்களே தவிர மற்ற எல்லா லிங்குகளும் Under Construction ஆக தான் இருக்கின்றது. இணையத்தையே நீங்கள் இனிமேல் தான் முறைப்படுத்த வேண்டும். இதற்கிடையில் சமுதாயத்தை எங்கே முறைப்படுத்துவீர்கள். அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லையே. அதனால, தமுமுகவிற்கு பலத்தை குடுறா அல்லாவே, இஸ்லாமிய எதிரிகள இல்லாம ஆக்குடா அல்லாவே, சமூகத்துக்கள் மார்க்கத்தின் பெயரால் குழப்பம் செய்பவர்களை திருத்துடா அல்லாவே, தமுமுக சரியா செயல்படல திராவிட கட்சிகளிடம் எங்கே விலை போயிருவாங்கலோன்னு பயந்து அவசரப்பட்டு ஐடிஎம்கேவ ஆரம்பித்தது தவறுதான் அல்லாவே, இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் ஐடிஎம்கேவ கலைச்சிட்டு மமுகவோடு சேர்ந்து புதிய எழுச்சியுடன் கூடிய மலர்ச்சியை உருவாக்கனும்டா அல்லாவே, சமுதாயத்தின் பெரிய தலைகளுக்குள் இருக்கும் ஈகோ, பிரஸ்டீஜ், ஆணவம், திமிரு, நயவஞ்சகம், இன்னும் இதுபோன்று இறையும், மறையும் மறுக்கும் தீய குணங்களை இல்லாமல் ஆக்குடா அல்லவேன்னு துஆ செஞ்சிட்டு இருங்க. உங்கள் துஆ பரக்கத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

// இந்திய தேசிய மக்கள் கட்சியை ஆரம்பித்த பிறகு முன்னேற்றம் என சமுதாயத்தை பின்னேற்ற அரசியல் குழப்பத்தை மீண்டும் துவக்கி இருக்கின்றனர். //

கண் முன்னே நடந்த வரலாற்றை இப்படி திருப்புகிறார்களே இவர்களா நாளைய சந்ததிக்கு இந்திய சுதந்திர தியாக வரலாற்றை கொடுப்பார்கள். 1995ல் இருந்து சமுதாயப்பணியில் களம் கண்ட தமுமுக 2004லில் அரசியல் களம் காண புதிய உத்வேகத்துடன் அன்றிலிருந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் அரவணைத்து செல்ல துவங்கிவிட்டது. 2008 பிப்ரவரி மாதமே நிலையான அரசியல் கட்சி துவக்குவதற்காக செயற்குழு கூடி முடிவெடுக்கப்பட்டு பொது மக்களிடம் அது பற்றி கருத்துக்கணிப்பும் கேட்கப்பட்டது. http://www.tmmkonline.org/tml/others/108632.htm
இதையெல்லாம் கூட அறியாமல் IDMK ஆரம்பித்த பிறகு தான் எல்லாம் என்று சொல்வது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பது சொல்லித்தெரியவில்லை. 06-04-2008 அன்று கட்சியை ஆரம்பித்துவிட்டு 22-09-2008ல் அடுத்தவர்களை விமர்சிக்க ஆரம்பித்து விட்டது. அந்தப்பக்கம் முஸ்லீம் லீக்கும் குய்யோ முறையோ என்று கூக்குரலிட ஆரம்பித்து விட்டது. அருமையான ஆலோசனை வழங்கி எங்களை அவ்வப்போது சீர்படுத்திக்கொண்டிருக்கும் இது போன்ற விமர்சனங்கள் வரவேற்கின்றோம். 15 ஆண்டு காலமாக சாதித்து விட்டு சாதனைகளங்களை கடந்து ஒரு வாழ்வுரிமை போராட்டத்திற்கு தயாராகின்ற நேரத்தில், இது வரை சமூகக்களத்தையே கண்டிராத, எந்தவித ஆர்ப்பாட்டம், போராட்டம், பிரச்சனைகளை எதிர்கொள்ளல், அதற்கு தீர்வுகளை காணுதல், நெருக்கடிகளை எதிர்கொள்ளல், சிறைக்கொட்டடிகளை சகித்தல் இப்படி எதையுமே கண்டிராத ஒரு அரசியல் கட்சி, சாடுவதை மட்டும் சமுதாயம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா. இருதியாக, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி சமுதாயத்திற்காக தாங்கள் ஏதேனும் செய்யவிரும்பினால் தமுமுகவுடன் இணைந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த சமுதாயத்திற்கு நன்மை செய்ய விரும்புகிறீர்களோ அதே சமுதாயத்திற்க்காகத்தான் தமுமுகவும் இதுவரை பல தியாகங்களை செய்து விட்டு அடுத்த கட்டத்திற்காக தயாராகிறது. இந்தப் பயணம் தொடங்குவதற்குள் வந்து சேர்ந்து விடுங்கள். இல்லையேல் யாருக்காகவும் இந்த பயணம் தடைபடாது. இன்ஷா அல்லாஹ்.

இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்¢ அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் - 2:207 )
வஸ்ஸலாம்

July 21, 2008

துஆ செய்கின்றோம்..!

ஐ. உஸ்மான்கான் தகப்பனார் மரணம்.
நெல்லை மாவட்ட த.மு.மு.க. செயலாளரும், குவைத்தில் தத்தளிக்கும் 9 தமிழர்களுக்காக இன்று வரை தமுமுக - குவைத் மண்டலத்துடன் இணைந்து போராடிக்கொண்டு இருப்பவருமான சகோ. ஐ. உஸ்மான் கான் (9443310150) அவர்களின் தகப்பனார் காலமனார். அவரது ஜனாஸா இன்று (21.07.08 திங்கள்) அஸரில் திருநெல்வேலி டவுண் ஜாமிஆ பள்ளி கபரஸ்தானில் இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்னாரது மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோமாக..!.
'அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான், பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான், பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை' எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்- 45:26)