இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

January 06, 2008

சி. ஐ. டி. ஊதிய சங்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,

குவைத் நாட்டில் ததஜ செய்து வரும் அடாவடிகளால் அதிருப்தி அடைந்து வரும் பொதுமக்கள் மற்றும் நடுநிலைவாதிகள் 04-01-2008 அன்று நடந்த சம்பவத்தால் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அதன் விவரத்தை தங்களுக்கு அறியத் தருகின்றோம். தமிழகத்தில் ஆறு விதமான லீக்கர்கள் இருப்பதைப்போல் குவைத்தில் மூன்றுவிதமான ததஜ-வினர் இருக்கின்றனர். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா. அதுதான் உண்மை. ஆம், காலத்தையும், உழைப்பையும் விரயம் செய்து கதைகளையும் கற்பனைகளையும் எழுத எங்ளிடம் கம்ப்யூட்டர் ஆலிம்சாக்கள் யாரும் இல்லை. விஷயத்திற்கு வருவோம்.
சில வருடங்களுக்கு முன் குவைத்தில் முஸ்லிம்கள் ஒற்றுமைக்குழு என்று ஒன்று துவங்கப்பட்டது. அது பிறகு இஸ்லாத்தை வழிகாட்ட வேண்டி மாற்றப்பட்டது. ஆனால் அவர்கள் காட்டிய வழி பிஜெயிஸமாக இருந்தது. அவர்களோடு ஆர்வக்கோளாறு என்று அனைவராலும் அழைக்கப்படும் அபுஸாலிஹ் என்பவர் தலைமையில் ஒரு குழு இணைந்தது. தவ்ஹீத் + தவ்ஹீத் வருமானங்களும் வாசகர்களும் பெருக ஆரம்பித்தனர். கேமரா என்னுடையது, வி.சி.ஆர் உன்னடையது என்று ஒரு கூடாரத்திற்குள்ளேயே பிரிவினைகள் உருவானது. இருதியில் ஆர்வக்கோளாறு தலைமையில் அந்தக்குழுவினர் பிளாட்பாரத்திற்கு விரட்டப்பட்டனர். வழக்கம் போல் வழிகாட்டுபவர்களை பற்றிய அவதூறுகளும், குற்றச்சாட்டுகளும் ஆர்வக்கோளாறு குழுவினரால் கணிசமாக பரப்பப்பட்டது. பிறகு தான் உணர்வில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பின் மூலமும், அதன் பிறகு நடந்து வந்த சம்பவங்களும் ததஜ கூட்டத்தாரிடமிருந்து மீண்டும் ஒரு குழு தனியே பிரிந்தது. ஆனால் அனைவருடைய வருமானங்களும் பிஜேவிற்கே சென்றது. சமுதாய அப்பாவி மக்களின் உழைப்பு ஒரு குற்றவாளி கையில் சென்றடைந்தது. அதுமட்டுமல்லாமல் இருவரது பித்ரா வசூலை பொய்ப்படு்த்தி இருவருமே நோட்டீஸ் வெளியிட்டுக்கொண்டும் நாங்கள் தான் தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்று இருவருமே மார்தட்டிக்கெண்டு வந்தனர். இந்த நேரத்தில் தான் வின்டிவி வியாபாரத்திற்காக பாக்கர் அவர்கள் குவைத்திற்கு வந்து இருவரையும் அழைத்து ஒருங்கிணைக்க முயற்சித்தார். ஆனால், அது பயனில்லாமல் போய்விட்டது. இருதியில் ஆர்வக்கோளாறு குழுவினரின் எதிர்தரப்பை அங்கீகரித்து அண்னணிடமிருந்து கடிதம் வந்தது. அதை குவைத் முழுவதும் ஒட்டி வைத்தனர். இருந்தும் ஆர்வக்கோளாறு ததஜவினர் அங்கீகரித்தால் தான் ததஜவா என்று எதிர்தரப்பை கேட்டு விட்டு நீ அங்கீகரிக்கப்பட்ட ததஜ என்றால் நான் அங்கீகரிக்கப்படாத ததஜ என்று வசூலில் இறங்கினார்கள். வசூல் நேரத்தில் நடுரோட்டிலேயே முட்டிக்கொண்டார்கள். அந்த சம்பவத் திற்குபின் பணத்திற்காக இவ்வளவு கேவலாமாகவும் இறங்கிவிட்டீர்களே என்று வருத்தப்பட்டு சிலபேர் ஆர்வக்கோளாறு குழுவினருடன் இணைந்தனர். ஆனால், ஆர்வக்கோளாறு மட்டும் தனது குழுவினரை கழட்டி விட்டு ததஜ வோடு இணைந்து கொண்டது. இந்த சம்பவங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சமுதாயம் எதிர்த்து கேள்வி கேட்கவும் இல்லை, திருந்தவும் இல்லை. இதன் பிறகு இஸ்லாமிய வழிகாட்டியவர்களுக்கு ஜும்ஆ குத்பாவிற்கு பள்ளி கிடைக்கிறது. அவர்களது பிஜெ கடைகளை அங்கே பரப்பி வியாபாரம் செய்து கொள்கிறார்கள். ததஜவினரும் செய்தார்கள். கூட்டம் அதிகமாக ததஜவினருக்கு சேருகின்றது. பள்ளி வியாபாரம் தடைசெய்யப்படுகிறது. ஆனால், ததஜவினர் மட்டும் வியாபாரத்தை நிறுத்தாமல் நேற்று வரை தொடர்ந்து வந்தார்கள். நேற்று தான் அந்தச்சம்பவம் நடந்தது.
ஆம், குவைத் அரசாங்க உளவுத்துறையால் வேவு பார்க்கப்பட்டு இவர்கள் வியாபாரம் செய்வது உறுதி செய்யப்பட்டவுடன் இவர்களது டேபிளில் (மட்டுமே) வந்து என்ன இது என்றார் உளவுதுறை. தஃவா என்றார் ததஜ, எந்த லஜ்னா என்கிறார் உளவுதுறை. டிஎன்டிஜெ என்கிறார் ததஜ, சிவில் ஐடி காட்டு என்கிறது உளவுதுறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு விட்டான் சவாரி பிடித்தான் ஓட்டம் அந்த ததஜ சூரப்புலி. உடனே அருகில் இருந்த மற்றொறுவரின் சட்டையை கோர்த்து பிடித்து கொண்டு உன் சிவில் ஐடி எங்கே என்கிறது உளவுத்துறை அவர் தயங்கி தயங்கி காட்டுகிறார். அந்த சிவில் ஐடியை வாங்கி வைத்துக் கொண்டு உளவுத்துறை சொல்கிறது, ஓடிப்போனவனை கொண்டு வந்து போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டு உனது சிவில் ஐடியை வாங்கிப்போ என்று சொல்லிவிட்டு மொத்தக்கடையையும் அள்ளிக்கொண்டு வண்டியில் வைத்துவிட்டு திரும்பி வந்து எச்சரித்து விட்டு சென்றுவிட்டது. இனி திருந்துவார்களா ததஜ. பொருத்திருந்து பார்ப்போம்.
- வஸ்ஸலாம்.

January 02, 2008

நாகரீகம் என்னும் பெயரால் அநாகரீகம்

சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடந்தன. சென்னை நகர் முழுவதும் மக்கள் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி, மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள். நகரில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகவும் எழுச்சியோடு நடந்தன.

நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்திவிட்டு ஆண்களும், பெண்களும் கட்டிப் பிடித்து நடனமாடினார்கள். சில ஓட்டல்களில் டிஸ்கோ நடனம் களை கட்டியிருந்தது. சில ஓட்டல்களில் நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் குத்தாட்டம் போட்டு, கும்மாளம் போட்டார்கள்.சென்னை மைலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா நட்சத்திர ஓட்டலிலும் புத்தாண்டு விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. இங்கு சுமார் 3 ஆயிரம் பேர் ஆண்களும், பெண்களும் புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்டு, மது அருந்தி ஆட்டம் போட்டார்கள்.

50 பேர் ஆடக்கூடிய நடன மேடையில், ஒரே நேரத்தில் 150 ஆண்களும், பெண்களும் உல்லாச ஆட்டம் போட்டனர். இதனால் நடனமேடை அமைக்கப் பட்டிருந்த பலகை உடைந்து, நடனமேடை அப்படியே சரிந்தது
உற்சாக மது மயக்கத்தில் ஆட்டம் போட்ட 20 ஆண்களும், பெண்களும் நடன மேடை உடைந்த இடத்தில், நீச்சல்குளத்தில் உள்ள தண்ணீருக்குள் விழுந்தனர். இரவு 11.20 மணிக்கு இந்த (துயர..?) சம்பவம் நிகழ்ந்தது.

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில்....

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் தற்போது புதிய முறை ஜனவரி 1-ந்தேதி முதல் அமலாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக இந்த புதிய முறையை திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.பாலச்சந்திரன் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த புதிய திட்டத்தின்படி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போதே அவரது விண்ணப்பம், அவர் இணைத்து அனுப்பும் ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக சரிபார்க்கப்படும். கிளார்க் நிலையில் உள்ள ஊழியர்கள் சரிபார்த்த பின்னர் விண்ணப்பதாரர் பணம் கட்டவேண்டும். ஆனால் அவரிடம் உடனே அதற்கான ரசீது வழங்கப்படமாட்டாது. விண்ணப்பமும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணமும் ஸ்கேன் செய்யப்பட்டு அப்படியே அதற்காக நியமிக்கப்பட்டுள்ள 2 அதிகாரிகளின் பார்வைக்கு செல்லும். அவர்கள் விண்ணப்பதாரரை நேரடியாக அழைத்து அவரது முன்னிலையிலேயே விண்ணப்பத்தை சரிபார்ப்பார்கள்.

விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் எல்லாம் சரியாக இருந்தால் அதிகாரி அந்த இடத்திலேயே பாஸ்போர்ட் வழங்குவதற்கான அனுமதியை வழங்குவதாக எழுதிவிடுவார். போலீஸ் விசாரணை அறிக்கை வந்ததும் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும். எனவே அவர் மீண்டும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வரவேண்டியது இல்லை, பாஸ்போர்ட் தனக்கு வீடு தேடி வந்துவிடும் என்ற முழு திருப்தியுடன் திரும்பி செல்லலாம்.
அதே நேரத்தில் விண்ணப்ப படிவத்தில் ஏதாவது தவறு அல்லது எழுத்துப்பிழைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே விண்ணப்பதாரர் முன்னிலையில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சரி செய்ய முடியாத தவறுகள் அல்லது ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நிலுவையில் வைத்து விசாரிக்கும் பிரிவிற்கு அந்த விண்ணப்பம் அனுப்பப்பட்டு விடும்.

இதற்காக திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு என்று ஒன்றும் தனியாக தொடங்கப்பட்டு உள்ளது. அந்த பிரிவில் உள்ள ஊழியர்கள் இதனை முழு அளவில் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்த திட்டம் குறித்து திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி பாலச்சந்திரன் கூறியதாவது:- இந்த புதிய திட்டத்தின்படி விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை தாக்கல் செய்துவிட்டு 45 நிமிடத்தில் வெளியே வந்து விடலாம். அதன்பின்னர் அவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வரவேண்டியதே இல்லை. அவர் வெளியே செல்லும்போது உரிய அதிகாரி கையினால் பணம் கட்டியதற்கான ரசீதை வாங்கி கொண்டு நிம்மதியாக செல்லலாம். இதன்மூலம் விசாரணைக்காக பலமுறை அலைவது தவிர்க்கப்படும்.

காலத்தின் மீது சத்தியமாக...

December 29, 2007

மசூதிக்குள் இறந்த பன்றி வீச்சு - சந்தேகம் பணபாலு

தாராபுரம் நகராட்சி கண்ணன் நகர் பைபாஸ் ரோட்டில் மசூதி உள்ளது. நேற்று அதிகாலையில் தொழுகை நடத்த, மசூதி கேட்டை திறந்தனர். அங்கு இறந்த பன்றி கிடந்தது. தகவல் பரவியதும் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டனர்.

தகவல் அறிந்ததும் தாராபுரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மசூதிக்குள் இருந்த பன்றி உடலை அப்புறப்படுத்தினார். மசூதி பொறுப்பாளர், "பன்றியை மசூதிக்குள் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மசூதிக்குள் பன்றி வீசியதை கேள்விப்பட்ட அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் சாரைசாரையாக வந்து பார்த்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமாக இருந்தது.

அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழாமல் தடுக்க கோவை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் தாராபுரத்தில் குவிக்கப்பட்டனர். கோவில்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகம் பணபாலு: தென்னமரத்தில தேள் கொட்ட பனை மரத்தில நெறி கட்டுச்சாம். மசூதிக்குள் பன்றிய வீசிட்டு கோயில பாதுகாக்குறாங்களாம்.

December 26, 2007

பராக்.... பராக்.... நரமாமிச நரேந்திரமோடி பராக்

சபர்மதி ரயிலை எரித்த.... அந்த பழியை முஸ்லிம்கள் மீது திணித்த.... கர்பிணி வயிற்றை கிழித்த.... உள்ளிருந்த சிசுவை கொன்ற நரமாமிச வேட்டையன் நரேந்திர மோடி பராக்
சாத்தானின் வருகையால் சந்தோஷப்பட்டவர்கள்
திருச்சியில் பா.ஜ., கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்குஜராத் சட்டசபைத் தேர்தலில் பெருபான்மை தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்ததை, திருச்சி மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதை தமிழகத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடினர். திருச்சி மாவட்டத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் கட்சியின் குஜராத் வெற்றியை கொண்டாடினர். திருச்சி மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் கண்ணன் தலைமையில் ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள வழிவிடு வேல்முருகன் கோயில் அருகே கூடிய பாரதிய ஜனதாக் கட்சியினர் வெடி வெடித்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களின் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். ஜங்சன் பஸ்ஸ்டாண்ட் சென்ற கட்சியினர் அங்கும் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பின்னர் டி.வி.எஸ்., டோல்கேட், பாலக்கரை, சத்திரம் பஸ்ஸ்டாண்ட், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலும் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பாரதிய ஜனதாவினர் தங்கள் கட்சியின் குஜராத் வெற்றியை கொண்டாடினர். கொண்டாட்ட நிகழ்ச்சியில் கட்சியின் மாநில வர்த்தக அணி பொறுப்பாளர் ராஜப்பா ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் திருமால், சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியம், மகளிரணி பொறுப்பாளர் அமுதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பா.ஜ., கொண்டாட்டம் சேலம்: குஜராத் சட்டசபை தேர்தல் வெற்றியை சேலம் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக நரேந்திரமோடி முதல்வராக பொறுப்பேற்கிறார்.சேலத்தில் தலைமை தபால் அலுவலகம் முன் பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் தலைமையில் கட்சியினர் கூடினர். அங்கு, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.

சபர்மதி ரயிலில் இறந்து போன மோடியின் சூழ்ச்சி தெரியாத அப்பாவி பாஜக வினரே இந்த வெற்றிக்கான பலிகடாக்கள். இன்று பட்டாசு வெடித்து பரவசப்படும் பாஜகவினர்களே மோடியின் அற்ப சந்தோஷத்திற்காக நாளை நீங்களும் பலிகடாவாக்கப்படலாம்.

தெஹல்கா கண்டறிந்த வீடியோ ஆதாரங்களை யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. வெகுஜன மக்களால் படிக்கப்படும் எந்த நாளிதழிலும் வெளியிடவுமில்லை. குஜராத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்துவெறி பிடித்த பாஸிஸ சக்திகளின் வெறியாட்டத்தின் போது அகதிகளாக துரத்தியடிக்கப்பட்டவர்கள் இன்றுவரை எல்லையோர முகாம்களிலேயே தங்கி வருகின்றனர். காங்கிரஸும், பாஜகவும் பிரச்சாரம் செய்தது முழுக்க, முழுக்க பாஸிஸ வெறிபிடித்த இந்துக்களிடம் மட்டுமே. தேர்தலில் வாக்களிக்க வந்திருந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் மட்டுமே. ஊடகங்களின் வீடியோ பதிவுகளுக்காக இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்த இந்துக்களையே காட்டியுள்ளனர். மூன்று நாட்கள் அரசு இயந்திரத்தையே நிறுத்திவைத்து சிறுபான்மையினர் மீது கொலை வெறித்தாக்குதலை தனது தலைமையிலேயே நடத்திய அராஜக நரமாமிச நரேந்திரமோடிக்கு தேர்தலில் வெற்றி வெற்றியடைந்தது ஒரு வீரச்செயலே அல்ல.

அதுமட்டுமின்றி தேர்தல் மட்டுமே ஒரு தனி மனிதனை, ஒரு மனித மிருகத்தை எடை போடும் அளவீட்டுக்கருவியாகாது. ஏனென்றால், இந்தியாவில் தேர்தல்களின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தேர்தலுக்காகவும், தேர்தல் நேரங்களிலும் நடைபெற்று வந்த அராஜகமும், வன்முறைகளும், கலவரங்களுமே ஜனநாயகத்தை விலைபேசுகின்றது. மேலும் தேர்தல் தினத்தன்று பிற்பகல் நேரங்களே வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்கின்றது. அமைதிப்பூங்காவான தமிழகத்தின் தேர்தல்களங்களே அனலை பறக்கவிடும் போது, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை குத்திக்கிழித்து உள்ளிருக்கும் சிசுவை தீயிலிட்டதையும், கணவர் மற்றும் தந்தை கண்ணெதிரே பெண்களைக் கதற கதற கற்பழித்ததையும் உலகுக்கே மறைத்ததையும், உள்ளுக்குள் பெருமை பொங்க புளங்காங்கிதம் அடைந்து பரவசப்பட்டு ஆனந்தத்தில் கொக்கரிக்கும் கொடுங்கோலர்கள் வாழும் குஜராத்தின் தேர்தல்களம் என்ன பாடுபட்டதோ தெரியவில்லை. இவர்களின் இந்த சந்தோஷம் அரவாணி கற்பம் தரித்ததைப்போல் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல்தான் உண்மை ஜனநாயகம் மோடிக்கு ஒருநாளும் வெற்றியைத் தராது என்பது புத்தியில்லாதவனும் விளங்கிக்கொள்ளும் நிதர்சனம். அதைவிடுத்து இந்த வெற்றிக்காக இனிப்பு வழங்குவது, வெடி வெடிப்பது எல்லாம் அரவாணியின் ஆதாரமில்லா சந்தோஷத்தை தான் காட்டுகிறதே தவிர வேறில்லை. அல்லாஹ் அறிவீனர்களின் கண்களை திறக்கட்டும்.

December 17, 2007

கலைஞர் டிவியில் நன்றி அறிவிப்பு மாநாடு

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...,



19-12-2007 புதன் 20-12-2007 வியாழன் ஆகிய இரண்டு நாட்களும் மாலை 5 மணிக்கு கலைஞர் டி.வி.யை பார்க்கத் தவறாதீர்கள். 2007 நவம்பர் 24 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் த.மு.மு.க. நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு ஒளிபரப்பாகிறது.

தமுமுக - குவைத் மண்டலத்தின் வாழ்த்துக்கள்

December 13, 2007

மீண்டும்....கொடுத்த வாக்கை காப்பற்றிய முதல்வர்


... யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ,(அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான். (3:76 )

December 12, 2007

குவைத்தில் நடந்த கண்டனக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...,

பாபர் மசூதி வழக்கு நிலுவை மற்றும் இலுவையை கண்டித்து தமிழகம் முழுவதும் நீதிமன்ற முற்றுகை போராட்டம் நடத்த தமுமுக ஏற்பாடு செய்தது. அதேபோல், குவைத்திலும் மண்டல தலைமையும் கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.

மேடையில் வீற்றிருக்கும் மண்டலத்தலைவர் சகோ. அமானுல்லாஹ், மண்டலச்செயலாளர் சகோ. ஷநவாஸ் மற்றம் சிறப்பு விருந்தினர் தோழர். ஆர். கே. சரவணன்-(CPI).












குவைத் மண்டலத்தலைவர் சகோ. அமானுல்லாஹ் அவர்களின் வரவேற்புடன் துவங்கியது கண்டனக்கூட்டம்.

மண்டலச்செயலாளர் சகோ. ஷாநவாஸ் அவர்களின் தலைமையுரையின் போது..

பொதுமக்களில் ஒரு பகுதியினர்.

துணைச்செயலாளர் முஹம்மது இக்பால் அவர்கள் கண்டனத்தை முன் மொழிகிறார்.

கண்டனக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர். ஆர்.கே. சரவணன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.





இணைச்செயலாளர் சகோ. முபாரக்அலி அவர்களின் நன்றியுரையுடன் கண்டனக்கூட்டம் இனிதே நிறைவடைகிறது. அல்ஹம்துலில்லாஹ்...,